சொத்துவரியை உயர்த்தமாட்டோம் என்ற வாக்குறுதியை தி.மு.க. மீறிவிட்டது- ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான 8 மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்களான விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ். … Read more

குண்டர் சட்டத்தில் கைதான பப்ஜி மதனுக்கு தேவைப்பட்டால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள பப்ஜி மதனுக்கு தேவைப்பட்டால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இது ஒரு சாதாரண வழக்கு; இதற்காக மதன் 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார் என மதன் தரப்பு தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.          

ஐ.டி., – பி.டி., துறையில் கர்நாடகா தான் முதலிடம்! அமைச்சர் அஸ்வத் நாராயணா உறுதி

பெங்களூரு : ”அண்டை மாநிலங்களின் தனித்துவத்தை கர்நாடகா குறைத்து மதிப்பிடுவதில்லை. அதேவேளையில், உலக அளவில் போட்டியிடுவதில் நம்பிக்கை கொண்டுள்ளது,” என ஐ.டி., – பி.டி., துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா உறுதிபட தெரிவித்தார்.பெங்களூரிலிருந்து ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் தெலுங்கானாவுக்கு இடம் மாறியதை, அம்மாநில அமைச்சர் ராமாராவ் வரவேற்றிருந்தார். நம்பிக்கை இது குறித்து கர்நாடக மாநில ஐ.டி., – பி.டி., துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா நேற்று கூறியதாவது:அண்டை மாநிலங்களின் தனித்துவத்தை கர்நாடகம் குறைத்து மதிப்பிடுவதில்லை. அதே வேளையில், … Read more

ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. ஐரோப்பாவின் அடுத்த அதிரடி திட்டம்..!

ரஷ்ய படைகள் பின் வாங்கியதாக கூறப்பட்ட உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு காயங்களுடன் பலரின் உடல்கள் கிடப்பதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ரஷ்ய படைகள் அவர்களை சித்ரவதை செய்து கொன்றுள்ளதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றசாட்டினை மறுத்துள்ள ரஷ்யா இது குறித்தான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. தங்கம் விலை சற்றே குறைவு.. முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தான்.. எவ்வளவு … Read more

மாணவர் சேர்க்கைக்கு ரூ.1.5 லட்சம் லஞ்சம்! – கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை

சென்னைக்கு அருகில் உள்ள நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு, தனது மகனைச் சென்னை அசோக் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்க விண்ணப்பித்திருந்தார். அப்போது அந்த பள்ளியின் முதல்வராக இருந்த ஆனந்த், மாணவரைச் சேர்க்க 1.5 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். மாணவரைப் பள்ளியில் சேர்க்கும்போது ஒரு லட்சம் ரூபாயும், அதன்பின், 15 நாள்களுக்குப் பிறகு மீதமுள்ள 50 ஆயிரத்தை வழங்கும்படியும் தெரிவித்துள்ளார். ஆனந்த் ராஜேந்திரன் பள்ளி முதல்வர் லஞ்சம் … Read more

சடலங்களையும் விட்டுவைக்காத கொடூரம்: அம்பலமான ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம்

உக்ரைன் தலைநகர் பகுதியில் இருந்து வெளியேறும் ரஷ்ய துருப்புகள், உக்ரேனிய மக்களின் சடலங்களில் வெடிகுண்டை புதைத்துவிட்டு போயுள்ளது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்தலாம் என ரஷ்ய துருப்புகள் திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், மிக அருகாமையில் வைத்தே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதும், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, உடல்களை பிளந்து, வெடிகுண்டை நிரப்பிச் சென்றுள்ள காட்டுமிராண்டித்தனம் தற்போது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக … Read more

பாரத_கவுரவ_ரெயில் திட்டம்: கோவை-ஷீரடி இடையே முதல் தனியார் ரெயிலுக்கு மத்தியஅரசு அனுமதி…

கோவை: பாரத_கவுரவ_ரெயில் திட்டத்தின்படி,  கோவை-ஷீரடி இடையே முதல் தனியார் ரெயிலுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஐஆர்சிடிசி ராமாயாணா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கி வரும் நிலையில், தற்போது தெற்கு ரயில்வேயில் இருந்து, முதல் ரயிலாக கோவை ஷீரடி ரயில் சேவை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் முதல் பாரத் கவுரவ் ரயில், தெற்கு ரயில்வேயின் கோயம்புத்தூர் – ஷீரடி பிரிவில் இயக்கப்படுகிறது. இந்த  கோயம்புத்தூர்-ஷீரடி ரயில் சேவை பிரிவு மே … Read more

விநோதமான பாதிப்பால் 9-ம் வகுப்பு மாணவி அவதி- கண்ணில் இருந்து எறும்பு வெளியேறும் மர்மம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியர் காண்டீபன் பூங்கொடி. இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகள் ஷாலினி (வயது14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஷாலினி பிறந்து 13 ஆண்டுகள் மற்ற பிள்ளைகளை போலவே இயல்பான நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென கடந்த ஒரு ஆண்டாக அவரது வலதுபுற கண் வீக்கமடைந்தது. பின்னர் நாளடைவில் கண்களிலிருந்து தொடர்ச்சியாக நாளொன்றுக்கு 15 க்கும் மேற்பட்ட எறும்பு போன்ற புழுக்கள் … Read more

100%-150% சொத்துவரி உயர்வு வெறும் 7% வீடுகளுக்கு மட்டும் தான்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: 100%-150% சொத்துவரி உயர்வு வெறும் 7% வீடுகளுக்கு மட்டும் தான் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சொத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்தார். 1989-ம் ஆண்டில் இருந்த பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் பரிந்துரையின் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.         

எல்லை பாதுகாப்பு படை பங்களிப்பு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம்| Dinamalar

பெங்களூரு : ”நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதிலும், தேசிய பேரிடர்களின் போதும் எல்லைப் பாதுகாப்புப் படை முக்கிய பங்காற்றியுள்ளது,” என கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம் கொண்டார்.பெங்களூரு எலஹங்காவிலுள்ள எல்லை பாதுகாப்பு பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று ஏற்றுக் கொண்டார். பின் அவர் பேசியதாவது:எல்லைப் பாதுகாப்புப் படை நாட்டின் முதல் பாதுகாப்பு படையாகவும், உலகின் மிகப்பெரியதாகவும் உள்ளது.டிசம்பர் 1, 1965ல் இப்படை உருவாக்கப்பட்டது. 1971ல் … Read more