மக்களவை தேர்தலில் முஸ்லிம்களை கவர ‘மோடி மித்ரா’ சான்றிதழ் வழங்கும் பாஜக

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களைக் கவர ’மோடி மித்ரா (மோடியின் நண்பன்)’ எனும் பெயரில் பாஜக நாடு முழுவதிலும் சான்றிதழ்களை வழங்குகிறது. இந்த வகையிலான முதல் கூட்டம், உத்தரபிரதேச மாநிலம் தியோபந்த் நகரில் ஜூன் 22-ல்நடைபெற்றது. இதற்கு, உலகப்புகழ் பெற்ற தாரூல் உலூம் மதரஸா உட்பட நூற்றுக்கணக்கான மதரஸாக்கள் அங்கு இருப்பது காரணம் ஆகும். இங்குள்ள முஸ்லிம்களையும், மவுலானாக்களையும் பாஜக அழைத்திருந்தது. இதில் பங்கேற்ற முஸ்லிம்களில் முக்கியமானவர்கள் தேர்வு செய் யப்பட்டு அவர்களுக்கு, ‘மோடி மித்ரா’ சான்றிதழ் … Read more

ரேஷன் கார்டுக்கு வந்த புது அப்டேட்… இலவச அரிசிக்கு பதில் காசு… ரூட்டை திரும்பிய கர்நாடகா!

கர்நாடகா மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அதன்பிறகு முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் வெற்றி பெற தேர்தல் வாக்குறுதிகளும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதுவும் 5 பிரதான வாக்குறுதிகள் கர்நாடகா மக்களை பெரிதும் ஈர்த்தது. சிக்கலில் அன்ன பாக்யா திட்டம்அதில் அன்ன பாக்யா என்ற பெயரில் BPL எனப்படும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு 5 … Read more

நித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் வழிகளை கண்டறிய வேண்டும் – மத்திய அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தல்

அகமதாபாத்: சாமியார் நித்தியானந்தாவின் சீடராக சென்ற சகோதரிகளான இரண்டு பெண்களையும் மீட்டுத்தரக்கோரி அவரது தந்தையின் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நீதிபதி உமேஷ்திரிவேதி அடங்கிய அமர்வு முன்னிலையில் நே்ற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது,அந்த பெண் சகோதரிகள் ஏன் இந்திய தூதரகத்திலிருந்து வீடியோகான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் பேச விரும்பவில்லை என்று கேள்விஎழுப்பினார். இதற்கு அந்த பெண்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிபி நாயக், தந்தையைப் பார்த்துஅந்தப் பெண்கள் பயப்படுவதாகவும், அப்படி … Read more

பக்ரீத் பண்டிகை விற்பனை! ஆட்டின் விலை ரூ 8 லட்சம்! 200 கிலோ எடை கொண்ட ஸ்பெஷல் ஆடு

Bakrid 2023:  இறைவனின் தூதரான நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் தியாகத் திருநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாளை பக்ரீத் பெருநாள்

பெங்களூருவில் 1 கிலோ தக்காளியின் விலை ரூ.100-ஐ தொட்டது: தமிழகத்திலும் விலை அதிகரிக்க வாய்ப்பு

பெங்களூரு: பெங்களூருவில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100-ஐ தொட்டதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடகாவில் வறட்சி நிலவுவ‌தால் சில வாரங்களாக தக்காளி, பீன்ஸ், கேரட், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்தது. கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.50-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தக்காளி அதிகமாக விளையும் கோலார் மாவட்டத்தில் திடீரென மழை பெய்தது. இதனால் தக்காளி சேதமடைந்து, அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.மார்க்கெட், … Read more

பொது சிவில் சட்டம்… வலியுறுத்தும் பிரதமர் மோடி… எதிர்க்கும் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்!

நாட்டிலுள்ள முஸ்லிம்களின் மிகப்பெரிய மத அமைப்பான அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் ஒரு கூட்டத்தை நடத்தி, பொது சிவில் சட்டத்தை (யுசிசி) தொடர்ந்து எதிர்த்துப் போராட முடிவு செய்தது.

“பெரும்பான்மை அரசால் பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது” – ப.சிதம்பரம்

புதுடெல்லி: “கொள்கையால் வழிநடத்தப்படும் பெரும்பான்மை அரசு, பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. அது மக்களிடம் பிரிவினையை அதிகப்படுத்தும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், ப.சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பொது சிவில் சட்டத்தை வலியுறுத்திப் பேசும்போது பிரதமர் மோடி … Read more

ஆபத்தில் மும்பை… அச்சுறுத்தும் மழை.. ஆரஞ்ச் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

தென்னிந்திய மாநிலங்களில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை தற்போது வடமாநிலங்களிலும் பரவியுள்ளது. 62 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மும்பை மற்றும் டெல்லியில் ஒரே நாளில் கடந்த ஞாயிற்றுக் கழிமை பருவமழை தொடங்கியது. தொடங்கிய வேகத்திலேயே வேலையை காட்ட தொடங்கியுள்ளது தென்மேற்கு பருவமழை. இமாச்சலில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியப் … Read more

Dress Code: கர்நாடாகவைப் போலவே கேரளாவில் கல்வியில் புகும் ஹிஜாப் பிரச்சனை

Kerala HIjab Row: ஹிஜாப் சர்ச்சை கேரளாவின் மருத்துவக் கல்லூரிகளில் தொடங்க வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது. திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள ஆபரேஷன் தியேட்டர் உடையை மாற்ற வேண்டும் என 7 மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராகுல் காந்தி குறித்து ட்வீட்: பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது வழக்குப் பதிவு

புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குறித்து ட்விட்டரில் பதிவிட்டது தொடர்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா மீது பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் பாபு பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் அமித் மாளவியா மீது கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153A, 120b, 505(2), 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு … Read more