அரசு ஊழியர்களுக்கு இன்னைக்கே சம்பளம்… பிகார் அரசு செஞ்ச சர்ப்ரைஸ் ஏற்பாடு!

பக்ரீத் பண்டிகை விடுமுறையை எதிர்நோக்கி அரசு ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கான விடுமுறை நாளை (ஜூன் 28 – வியாழன்) வருகிறது. இடையில் வெள்ளி மட்டும் விடுப்பு எடுத்து கொண்டால் மொத்தம் 4 நாட்கள் வரிசையாக விடுமுறை கிடைத்து விடும். இதை பக்காவாக பிளான் போட்டால் சிறப்பாக கொண்டாடி தீர்த்துவிடலாம் என்ற கனவில் பலரும் இருக்கின்றனர். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி இந்நிலையில் அரசு ஊழியர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒரு விஷயத்தை பிகார் … Read more

மணப்பெண்ணின் தந்தை கொலை… பக்கத்து வீட்டுக்காரர் செய்த சம்பவம் – திருமணத்தில் கொடூரம்!

கேரள மாநிலம் கல்லம்பலம் அருகே திருமணத்திற்கு முன் மணப்பெண்ணின் தந்தை, அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் பேச்சு எதிரொலி | பொது சிவில் சட்டத்தை தீவிரமாக எதிர்க்க முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் முன்மொழிவை தீவிரமாக எதிர்ப்பது என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவெடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த வாரியத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை வலியுறுத்திய சில மணி நேரத்தில் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் அவசரக்கூட்டம் ஆன்லைனில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் சாதி, மதம், வழிபாடுகளைப் பொருட்படுத்தாமல், … Read more

அரசு பள்ளி ஆசிரியராக சூப்பர் வாய்ப்பு… எந்த மாநிலமா இருந்தாலும் ஓகே தான்… பிகார் அரசு சர்ப்ரைஸ்!

ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தை சேர்ந்தவருக்கே அரசு வேலைகளில் முன்னுரிமை அளித்து வருகிறது. இதன்மூலம் சொந்த மாநில மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் மூலம் வேறு மாநிலங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் பிகார் மாநில அரசு பெரிதும் கவனம் ஈர்க்கும் சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. பிகார் அரசு அதிரடிஅதாவது, பிகாரில் மட்டுமே வசிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் அளிக்கப்படும் குடியிருப்பு சான்றை தூக்கி ஓரம் … Read more

கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதிலும் சிக்கல்

பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பொழியாததால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கர்நாடகாவில் பெரும்பாலும் ஆண்டுதோறும் மே மாத இறுதி வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு மே மாதத்தில் கோடை மழையும், ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பொழியவில்லை. தென்மேற்கு பருவமழை ஒரு மாதத்துக்கும் மேலாக தாமதமாகியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வறட்சி நிலவுகிறது.இதனால் ஆறுகளில் இருந்து நீர்வரத்து முற்றிலுமாக … Read more

நட்டநடு ரோட்டில் திடீரென சரிந்து விழுந்த இரும்பு தூண்.. நூலிழையில் தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி!

கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகர் பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். கர்நாடகாவின் வர்த்தக மையமாகவும் சுற்றுலாத் தளமாகவும் உள்ள ஹூப்ளியில் சாலைகளும் எப்போதும் பிஸியாகவே இருக்கும். இந்நிலையில் நேற்று பகல் ஹூப்ளியின் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட இரும்பு தூண் திடீரென சரிந்து விழுந்தது. ஏராளமான பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்லும் அந்த சாலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் இருப்பு துண் சரிந்து விழுந்தது. அப்போதுதான் சாலையை கடக்க அந்த தூணிற்கு அருகே … Read more

காவடி யாத்திரை வழித்தடங்களில் திறந்த வெளியில் இறைச்சிகளை விற்க தடை: யோகி ஆதித்யநாத்

காவல் நிலையங்கள், வட்டம், மாவட்டம், எல்லை, மண்டலம் மற்றும் பிரிவு நிலைகளில் பணியமர்த்தப்பட்ட மூத்த அதிகாரிகள் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் பிற முக்கிய நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆதித்யநாத் அறிவுறுத்தினார்.  

மாநிலங்களவையில் காலியான இடங்களுக்கு ஜூலை 24-ல் தேர்தல்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் டெரிக் ஓ பிரையன், டோலா சென், பிரதீப் பட்டாச்சார்யா, சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி, சுகேந்து சேகர் ராய், குஜராத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தினேஷ் ஜெமால்பாய் அனவாடியா, லோகன்ட்வாலா ஜுகல் சிங் மாதுர்ஜி, கோவாவில் வினய் டெண்டுல்கர் ஆகிய 10 எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து இந்த இடங்களுக்கு ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 13-ம் தேதி தொடங்கும் … Read more

ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்தபடி ஒரே நாளில் 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போபால் ராணி கமலபதி-ஜபல்பூர், கஜூராஹோ-போபால்-இந்தூர், மட்கான் (கோவா)-மும்பை, தார்வாட்-பெங்களூரு மற்றும் ஹாதியா-பாட்னா ஆகிய 5 வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். முக்கிய வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்கள் சேவை தொடங்கி … Read more

Tomato Price Hike: தக்காளி விலை தாறுமாறாக ஏறியது ஏன்? – இதுதான் காரணமா…!

Tomato Price In India: நாடு முழுவதும் தக்காளியின் விலை எகிறியுள்ள நிலையில், அதன் விலை எதனால் இப்படி அதிகரித்திருக்கிறது, அது எப்போது குறையும் என்பதை இதில் காணலாம்.