பெங்களூருவில் தண்ணீர் பிரச்சினை… பெருசா தவிக்க விடும் பருவமழை… சிக்கலில் பொதுமக்கள்!

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியது. இதற்கு பிபோர்ஜாய் புயலின் தாக்கம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலான மழை கிடைக்கவில்லை. ஒருபுறம் கர்நாடகா முழுவதும் நல்ல மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் நீர்நிலைகளை கவனித்தால் போதிய அளவில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. தென்மேற்கு பருவமழை இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ஆய்வாளர் பிரசாத்திடம் கேட்கையில், கர்நாடகா முழுவதும் பருவமழை பெய்துள்ளது. இருப்பினும் வழக்கமான மழைப்பொழிவை அளித்ததா? … Read more

இமாச்சலப்பிரதேசத்தில் கன மழை | திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200 பேர் தவிப்பு

மண்டி: இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள பாகிபுல் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் 200 பேர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் மண்டி – குலு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டி மாவட்டத்தின் ஆட் அருகில் உள்ள கோடிநாலாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் சாலைகள் … Read more

ஒடிசாவில் மீண்டும் பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… பலர் பலியான சோகம்!

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சிக்னல் இன்டர்லாக்கிங் பிரச்சினை காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் உண்மையை கண்டறியும் வகையில் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு சிறிய ரயில் விபத்துகள் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டு பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. ஒடிசா பேருந்து விபத்து அந்த வரிசையில் ஒடிசாவில் நிகழ்ந்துள்ள பேருந்து விபத்து மீண்டும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. நேற்று … Read more

இனி நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம்; சாலையில் அல்ல: மல்யுத்த வீராங்கனைகள்

புதுடெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான தங்கள் போராட்டம் இனி நீதிமன்றத்தில் நடக்கும் என்றும் சாலையில் அல்ல என்றும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பிரபல மல்யுத்த வீராங்கனைகளான சாக்சி மாலிக், வினேஷ் போகத், உள்ளிட்ட 6 பேர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த … Read more

புதிதாக 5 வந்தே பாரத் ரயில்கள்… பெங்களூருவுக்கும் உண்டு.. நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு 5 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று காலை இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடியை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் பாஜக தலைவர்கள் பலர் டெல்லி விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றனர். அமெரிக்கா வருமாறு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து கடந்த 20 ஆம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் அமெரிக்கா சென்றார். … Read more

உடலுறவு குறித்து முடிவெடுக்கும் திறன் 16 வயது சிறுமிக்கு உள்ளது: உயர்நீதிமன்றம்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய மனு நீதிபதி டபிள்யூ. டியெங்டோ பெஞ்ச் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

பாஜவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ‘தேசபக்தி ஜனநாயக கூட்டணி’ சிம்லா கூட்டத்தில் முடிவு?

புதுடெல்லி: பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள கூட்டணிக்கு “தேசபக்தி ஜனநாயகக் கூட்டணி” என்று பெயரிட பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான இறுதி முடிவு ஷிம்லாவில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பலம் பொருந்திய பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போதே ஒன்றிணையத் தொடங்கியுள்ளன. அதற்கு அச்சாரமான முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் நிதிஷ் குமார், … Read more

பசுபதிநாதர் கோவிலில் இருந்து மாயமான 10 கிலோ தங்கம்… CIAA தீவிர விசாரணை!

நேபாளத்தின் காத்மாண்டுவில் அமைந்துள்ள பசுபதிநாதர் கோவிலில் இருந்து 10 கிலோ தங்கம் மாயமான சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை பெற்ற 13 சர்வதேச விருதுகள்

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 13 நாடு களின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு: தீவு நாடான பப்புவா நியூ கினி, பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் மிக உயரிய கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹு’ விருதை வழங்கியது பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி’ பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. கடந்த மே மாதம், பலாவ் நாட்டின் அதிபர் சுராங்கல் எஸ். விப்ஸ் … Read more

அமெரிக்கா, எகிப்து நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி. தலைநகர் புதுடெல்லி திரும்பிய அவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக-வை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் … Read more