மோடி படத்தைக் கிழித்த வழக்கில் குஜராத் காங். எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம்!

பிரதமர் நரேந்திர மோடி படத்தைக் கிழித்த காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம் விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவர் போராட்டத்தின்போது துணைவேந்தர் அறைக்குள் நுழைந்து, அவரது மேசையில் இருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை கிழித்தெறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்த் படேல் என்பவருக்கு ரூ.99 அபராதம் விதித்துள்ளது குஜராத் நீதிமன்றம். இந்த வழக்கில் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வி.ஏ.தாதால் தீர்ப்பளித்துள்ளார். சட்டப்பிரிவு 447-ன்கீழ் குற்றவியல் அத்துமீறல் என்ற வகையில் … Read more

ஒரு தொடக்கத்தை உருவாக்க அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்..!!

மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் லக்கன் சிங் யாதவின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கலந்து கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ. பாய் வீரேந்திரா பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வை எதிர்த்து போராட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். 2024ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சி போராட்டத்துக்கு நிதிஷ் குமார் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சூனிய வேட்டையின் … Read more

மக்கள்தொகை – காவல் துறையினர் விகிதத்தில் பின்தங்கிய பிஹார், மேற்கு வங்கம்; தமிழகத்திலும் குறைவே

புதுடெல்லி: மக்கள்தொகை – காவல் துறையினர் விகிதாச்சாரத்தில் பிஹாரும், மேற்கு வங்கமும் பின்தங்கி இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு எத்தனை காவல் துறையினர் இருக்க வேண்டும், அதாவது அரசு அனுமதித்துள்ள எண்ணிக்கை எத்தனை, உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்த புள்ளி விவரத்தை காவல் துறை ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான அரசு அமைப்பு சேகரித்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி சேகரிக்கப்பட்ட … Read more

தொடர் போராட்டங்களை அறிவித்தது காங்கிரஸ்

டெல்லி: நாளை முதல் காங்கிரஸ் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளது என காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து மாநில தலைநகரங்களிலும் அம்பேத்கர், காந்தி சிலை முன்பு நடத்தப்படும். நாளை முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நாடு முழுவதும் ஜெய் பாரத் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும். ஏப்ரல் 3ம் தேதி முதல் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது எனவும் கூறியுள்ளார்.

டெல்லியில் தலைப்பாகை இல்லாமல் நடந்துசென்ற அமரித்பால் சிங்.. வெளியான புதிய சிசிடிவி காட்சி

போலீசாரால் தேடப்பட்டு வரும் பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், தற்போது தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் … Read more

பிபிசியின் பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கம்

புதுடெல்லி: பிபிசி செய்தி நிறுவனத்தின் பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பிபிசி செய்தி நிறுவனம் தனது செய்திகளை சமூக வலைதளமான ட்விட்டர் மூலமும் பகிர்ந்து வருகிறது. பஞ்சாபி மொழியில் பிபிசி வெளியிடும் செய்திகளை பகிர்வதற்காக bbcnewspunjabi என்ற பெயரில் கணக்கு வைத்துள்ளது. இந்நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்று அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு விடுத்த சட்டப்படியான வேண்டுகோள் குறித்த தகவல்களை ட்விட்டர் இதுவரை பகிரவில்லை. பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதியான அம்ரித்பால் சிங்கை கைது செய்ய … Read more

கேரளா லாட்டரி முடிவுகள், முதல் பரிசு ரூ 75 லட்சம்..யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Stree Shakti Lottery SS-357 லாட்டரி டிரா முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. கேரள மாநில லாட்டரி துறையின் கோர்கி பவனில் மதியம் மூன்று மணிக்கு நடைபெற்றது. முதல் பரிசு SW 104268 டிக்கெட்டுக்கும், இரண்டாம் பரிசு SV 407794 டிக்கெட்டுக்கும் கிடைத்துள்ளது, இதன் முழு முடிவு இன்று மாலை 5 மணிக்குள் லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 40 ரூபாய் மதிப்பிலான ஸ்த்ரீசக்தி லாட்டரியின் முதல் பரிசாக 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசாக … Read more

இறுதி வாய்ப்பு: உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி.. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்..!!

டெல்லி: உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக சென்ற சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். போர் இன்னும் நிறைவடையாத சூழலில் அவர்கள் தங்களது படிப்பினை தொடர முடியாத … Read more

#BIG NEWS : பான் – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!

பான் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். இந்நிலையில், வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்ற நிதி களை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும். இதனையடுத்து, பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை அவகாசம் அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, பான்-ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2023 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. Source link

மக்களே உஷார்..!! இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிப்பு…!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு பிறகு இந்தியாவில் தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 78 சதவீதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1807 புதிய கொரோனா வகை வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை … Read more