பீதியை கிளப்பும் H3N2 வைரஸ் ! அறிகுறிகளும் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளும்!

H3N2 வைரஸ்: இந்தியாவில் வைரஸ் காய்ச்சலின் (H3N2) தொற்று பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் காரணமாக, கர்நாடகா மற்றும் ஹரியானாவிலும் தலா ஒருவர் இறந்து விட்டனர். இதுவரை, நாட்டில் 90 க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், நாட்டில் சிகிச்சையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. H3N2 வைரஸால் இறப்புகள்  பதிவாகியுள்ள நிலையில், மக்கள் மனதில் பலவிதமான கேள்விகளும் அச்சங்களும் எழத் தொடங்கியது. … Read more

டெல்லியில் காற்றின் தரம் மிதமான நிலைக்கு சென்றதால் கட்டுப்பாடுகள் தளர்வு..!!

டெல்லி: டெல்லி, டெல்லி என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் மிதமான நிலைக்கு சென்றதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 213 புள்ளிகளில் இருந்து 119 புள்ளிகளாக குறைந்து பதிவாகியுள்ளது.

“சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” – வீடியோவை பதிவிட்டு பிரசாந்த் கிஷோர் கேள்வி

பாட்னா: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது” என்று பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ‘நாம் தமிழர்’ பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் பேசிய வீடியோ ஒன்றை பகிந்துள்ளார். அதில், “வட இந்தியர்களைப் … Read more

பகலில் விவசாயிகள் இரவில் துப்பாக்கி ஏந்திய போராளிகள்; காஷ்மீர் ரிப்போர்ட்.!

ஒன்றிய அரசாங்கம் காஷ்மீரில் மக்களிடம் ஆயுதங்களை கொடுத்து, அவர்களே அவர்களை தற்காத்து கொள்ள சொல்வதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதற்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்கள் ஒன்றிய பாஜக அரசால் கட்டுப்படுத்தப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆளும் ஒன்றிய அரசுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டால் மிரட்டப்பட்டு, வணிகவரித்துறை ரெய்டுகள் நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். மேலும் பல ஊடக நிறுவனங்கள் பாஜகவின் … Read more

மதுபானக் கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள் அமலாக்கத்துறை காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள் அமலாக்கத்துறை காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை நேற்று கைது செய்த நிலையில் அவரை காவலில் விசாரிக்க டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக டெல்லி துணை முதல்வராக இருந்த சிசோடியா கைது செய்யப்பட்டார்.

லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான நிலமோசடி வழக்கு | 24 இடங்களில் அமலாக்கத்துறை  சோதனை

புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான நிலமோசடி வழக்கில், அவரது மகன், மகள்கள் ஆகியோரின் வீடுகள் உள்பட மொத்தம் 24 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். நிலமோசடி குற்றச்சாட்டு தொடர்பாக பிஹார் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியதைத் தொடந்து, அவர்களது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். லாலுவின் மகள்களான ராகினி யாதவ், சந்தா யாதவ், ஹேமா யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் டெல்லியில் தொடங்கியது, எஸ்சிஓ தலைமை நீதிபதிகள் மாநாட்டை பாக். புறக்கணிப்பு: சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

புதுடெல்லி: டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைமை நீதிபதிகள் மாநாடு தொடங்கிய நிலையில், பாகிஸ்தானின் தலைமை நீதிபதி பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான்,  கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள்  உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய  நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22வது  உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் … Read more

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் பாதுகாப்பு: பிரதமர் மோடியிடம் ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதி

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதியளித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இருநாட்டு பிரதமர்களும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இரு நாடுகளுக்கும் இடையே உள்ள … Read more

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பீகாரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ அபு டோஜனா இல்லம், லாலுவின் மகள் மிசா பார்தியின் டெல்லி வீடு என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அரசு வேலைக்காக நிலம் லஞ்சமாக பெறப்பட்டதான வழக்கில், லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியிடம் இரு தினங்களுக்கு முன்பு … Read more

'காங்கிரஸ் ஆட்சியில் குறைவான மின்சாரம் வழங்கியதே மக்கள்தொகை அதிகரிக்கக் காரணம்'- அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேச்சு

பெங்களூரு: மின் தட்டுப்பாடு காரணமாகவே மக்கள் தொகை அதிகரித்துள்ளது என ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் தற்போது நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள சூழலில், பாஜகவும், காங்கிரசும் போட்டி போட்டு களத்தில் இறங்கியுள்ளனர். காங்கிரசு மின்சாரம், கல்வி உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பிரச்சாரம் செய்து … Read more