நீட் – தமிழக அரசு பழைய மனுவை திரும்பப்பெற அனுமதி!!

நீட் விவகாரத்தில் அதிமுக அரசு தாக்கல் செய்த ரிட் மனுவை திரும்பப்பெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப் பெற தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். கிராம பகுதிகளில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வால் பாதிப்படைவதாகவும் நீட் … Read more

தெலங்கானா மாநில பஸ் நிறுத்தத்தில் மாரடைப்பால் மயங்கிய இளைஞரை காப்பாற்றிய காவலர் – சுகாதாரத் துறை அமைச்சர் பாராட்டு

ஹைதராபாத்: பஸ் நிறுத்தத்தில் வெயிலில் பஸ்ஸுக்காக காத்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையில் சரிந்தார். அவரை அங்கிருந்த போக்குவரத்து காவலர் சிபிஆர் சிகிச்சை செய்து காப்பாற்றினார். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தெலங்கானா மாநிலத்தில் பகலில் உச்சி நேரத்தில் வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில், நேற்று காலை எல்.பி நகர் பகுதியை சேர்ந்த பாலராஜு (32) என்பவர் ஹைதராபாத் ராஜேந்திர நகர் ஆரம்கர் கூட்டு ரோடு பகுதியில் உள்ள ஒரு பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, பாலராஜுவுக்கு … Read more

மீண்டும் வருகிறதா Old Pension Scheme? ரயில்வே ஊழியர்கள் வைத்த கோரிக்கை!!

ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து சமீபத்திய நாட்களில் பல வித விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இதனிடையே, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பல்வேறு அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன. ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்கமான இந்திய ரயில்வேயின் தேசிய கூட்டமைப்பு (என்எப்ஐஆர்) அதன் 236வது செயற்குழு கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) ரத்து செய்யவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) … Read more

மேகாலயா எல்லை மார்ச் 2 வரை மூடல்

ஷில்லாங்: மேகாலயா எல்லையை மார்ச் 2ம் தேதி வரை மூடும்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேகாலயாவின் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், மார்ச் 2ம் தேதி வரை மேகாலயா எல்லையை மூட இந்திய தலைமை  தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி எப்.ஆர்.கார்ரோங் கூறியதாவது, “மேகாலயாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி … Read more

தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற ஆம் ஆத்மி 4 மாநிலங்களில் போட்டி

புதுடெல்லி: இந்த வருடம் 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் அடுத்த வருடம் மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாக கருதப்படுகிறது. இதனால் இந்த 9 மாநிலங்களில் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி, அருகிலுள்ள பஞ்சாபிலும் போட்டியிட்டு அம்மாநிலத்தை கைப்பற்றியது. கோவா மற்றும் குஜராத்திலும் போட்டியிட்ட இக்கட்சி அங்கு கணிசமான வாக்குகளை பெற்றது. எனவே இந்த … Read more

10 மூட்டை வெங்காயம் விற்பனை – விவசாயிக்கு கிடைத்ததோ 2 ரூபாய்க்கு காசோலை..!

மகாராஷ்ட்ர மாநிலம் சோலாப்பூரில் விவசாயி ஒருவர் பத்து மூட்டை வெங்காயம் விற்ற தொகையாக 2 ரூபாய்க்கு காசோலை கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கட்டணத்தைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையாக இரண்டு ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வெங்காயம் விலை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் வெங்காய மண்டியில் குவிண்டால் 100 ரூபாய்க்கு விலை பேசப்பட்டது. 2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்ட அந்த விவசாயி பத்து மூட்டை வெங்காயத்தைக் கட்டிக் கொண்டு 70 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த … Read more

கொரோனா தடுப்பூசியால் நாட்டில் 34லட்சம் உயிரிழப்புகள் தடுப்பு: ஸ்டான்ட்போர்ட் பல்கலை. ஆய்வில் தகவல்

புதுடெல்லி: நாட்டில் கொரோனா தடுப்பூசியால் 34லட்சம் உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழகம்  கொரோனா காலத்தில் இந்திய அரசு செயல்படுத்திய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையானது பொருளாதாரத்தை சரிசெய்தல்: இந்தியாவின் தடுப்பூசி மற்றும் அது தொடர்பான பிரச்னைகளின் பொருளாதார பாதிப்பு மதிப்பீடு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் … Read more

அதிர்ச்சி! ஜிம்மில் சுருண்டு விழுந்து உயிரிழந்த போலீஸ்!!

காவல்துறை அதிகாரி ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் செகந்தராபாத் ஆசிப் நகர் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த விஷால் என்பவர், ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார். அவர் வழக்கம்போல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாரடைப்பால் … Read more

மனிதனுக்கு மரணம் எப்போ வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. அந்த வீடியோவில் மணமகனுக்கு உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பூசுகின்றனர். திருமண சடங்கின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த வைபவத்தில் குடும்பத்தினர் கலந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது உறவினர் ஒருவர் மணமகனுக்கு மஞ்சள் பூச வருகிறார். மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து மஞ்சள் பூசும்போதே திடீரென அவர் சரிந்து கீழே விழுந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்பி பார்த்திருக்கின்றனர். ஆனாலும் பலன் … Read more

மோர்பி பால விபத்து எதிராலி – குஜராத்தில் பழைய பாலங்களை புதுப்பிக்க ரூ.550 கோடி ஒதுக்கீடு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் மச்சு நதி மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் அறுந்து விழுந்தது. இதில் குழந்தைகள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். நாட்டில் அண்மைக்காலத்தில் நடந்த மோசமான பேரிடர் சம்பவமாக இது கருதப்படுகிறது. இப்பாலத்தின் சீரமைப்பு பணியை, சுவர் கடிகாரங்கள் மற்றும் இ-பைக்குகள் தயாரிக்கும் ஓரேவா நிறுவனம் மேற்கொண்டது. சீரமைப்பு பணிக்கு பிறகு மோர்பி நகராட்சியின் தகுதிச் சான்றிதழை பெறாமலேயே பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் திறக்கப்பட்ட … Read more