ராகுலின் குரலை ஒடுக்க பாஜக சதி; நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்: அபிஷேக் மனு சிங்வி பேட்டி

டெல்லி: ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெரிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலர் … Read more

கர்நாடக எம்எல்ஏ.க்களில் 95%-க்கு மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள்: ஏடிஆர் அறிக்கை

பெங்களூரு: கர்நாடகா எம்எல்ஏ.க்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள், 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என அசோஷியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஆர் என்ற இந்த அமைப்பு தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் நிலவரம், வெற்றி வாய்ப்பு, எம்எல்ஏக்கள் கல்வித் தகுதி, சொத்து மதிப்பு, கிரிமினல் வழக்கு பின்னணி ஆகியன பற்றிய தகவல்களைப் பகிரும். அந்த வகையில் விரைவில் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகாவில் எம்எல்ஏக்கள் பற்றி … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: ஏன் இவ்ளோ அவசரம்? இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்!

வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருந்தவர் ராகுல் காந்தி. கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதற்கான பிரச்சாரத்தில் தான் பேசியது தனக்கே வினையாக வந்து முடியும் என நினைத்திருக்க மாட்டார். பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் திடீரென இப்படி ஒரு அதிரடி நடந்துள்ளது. மோடி அவதூறு பேச்சு ”அதெப்படி மோசடி பேர் வழிகள் அனைவரும் மோடி என்ற பெயரை தங்கள் பின்னால் வைத்திருக்கின்றனர்?” எனப் பேசி … Read more

“2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும்..” – பிரதமர் மோடி..!

2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்க, மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக,  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஒரே உலகம் காசநோய் மாநாட்டில், காசநோயற்ற பஞ்சாயத்துகளை உருவாக்கும் முன்னெடுப்பு பணிகளை, பிரதமர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 2050ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிக்க உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த இலக்கை இந்தியா அடைய வேண்டும் என்றும், அதற்கு பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் … Read more

அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளது: காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி பேட்டி

டெல்லி: அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். நாட்டில் அச்ச உணர்வை உருவாக்க பாஜக அரசு முயற்சி செய்வதாகவும். ராகுல் காந்தி தகுதி நீக்கம் என்பது திட்டமிட்ட நடவடிக்கை என அவர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.  

அவதூறு வழக்கு எதிரொலி: ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு

அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது எம்.பி. பதவியை மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி?” எனப் … Read more

சிறை தண்டனை விதிப்பு எதிரொலி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் … Read more

ராகுல் காந்தி பதவி நீக்கம்; லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் வழக்கு நியாபகம் இருக்கா?

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தேசிய அளவில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. இது பழி வாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. அதேசமயம் எல்லா விஷயங்களும் சட்டத்தின் படியே நடைபெற்று வருவதாக பாஜக தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தற்போது ராகுல் காந்திக்கு முன்னால் இரண்டே வாய்ப்புகள் தான் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் சிறை மோடி குறித்த அவதூறு பேச்சால் கிடைத்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய … Read more

ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம்

கொல்கத்தா: ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாற்றியுள்ளனர் என மம்தா தெரிவித்தார்.

‘அல்லாவே ராமரை அனுப்பி வைத்தார்’ – பாக். எழுத்தாளரை மேற்கோள்காட்டி பேசிய ஃபரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை

உத்தம்பூர்: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃப்ரூக் அப்துல்லா ஆற்றிய உரை ஒன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. “கடவுள் ராமரை அல்லாவே அனுப்பி வைத்தார்” என்று பாகிஸ்தான் எழுத்தாளர் ஒருவர் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்ததை மேற்கோள்காட்டி ஃபரூக் அப்துல்லா பேசியதே இந்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. காஷ்மீரின் உத்தம்பூர் நகரில் ஃபரூக் அப்துல்லா பேசுகையில், “நான் இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கடவுள் ராமர் முழுக்க முழுக்க இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவர் இல்லை. … Read more