ரோகிணி ஐஏஎஸ்சுக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் பதிவிட ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு தடை: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு எதிராக மீடியா மற்றும் சமூகவலைத்தளங்களில் எந்த கருத்தும் பதிவு செய்யக்கூடாது என்று ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபாவுக்கு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்து விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. கர்நாடக மாநில அரசு துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மவுதிகல் இடையில் கடந்த 4 நாட்களாக மீடியா மற்றும் சமூகவலைத்தளங்களில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவுகள் … Read more

சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பு – நிலையான வளர்ச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நாம் ஒவ்வொருவரின் கூட்டுப்பொறுப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலக நிலையான வளர்ச்சி 22 வது உச்சிமாநாட்டின் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதுஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பாகும். இதனை உணர்ந்து, சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்தியா அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவே புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களை கண்டறியும் பணியில் இந்தியா முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளது. நகர்ப்புற சவால்களுக்கு … Read more

சட்டீஸ்கரில் காங்கிரஸ் மாநாடு இன்று துவங்குகிறது: தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் இன்று காங்கிரஸ் மாநாடு துவங்க உள்ளது. இதில்,எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரஸ் கூட்டணி திட்டம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். ராஜஸ்தான் முதல்வர் … Read more

பாஜக மீது மம்தா பேனர்ஜி குற்றச்சாட்டு…!

மேகாலயா தேர்தலில் தனித்து களம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் தேசிய மக்கள் கட்சி பற்றி தனது விமர்சனத்தையும், பாஜக மீதான விமர்சனத்தையும் முன் வைத்தார். அவர் கூறுகையில், வெளியில் இருந்து வரும் யாரையும், உங்கள் மீது குடியுரிமை திருத்த சட்டத்தையோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ திணிக்க அனுமதிக்காதீர்கள் என குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், மேகாலயாவில் எந்த வளர்ச்சியும் … Read more

கர்நாடகாவை கலக்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எ.ஸ் அதிகாரிகளின் குழாயடி சண்டை…!

கர்நாடகாவில் இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி, பல ஊழல்களில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ரூபா மீது ரோகிணி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உயர் அதிகாரிகள் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததையடுத்து, இருவரையும் கர்நாடக அரசு காத்திருப்பு பட்டியலில் வைத்தது. இந்த நிலையில் ரூபா தனது முகநூல் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், ரோகினி சிந்துரிக்கு எதிராக நான் எழுப்பிய ஊழல் விவகாரத்தில் … Read more

நாடு முழுவதும் என்ஐஏ சோதனை – 6 காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கைது

புதுடெல்லி: என்ஐஏ நடத்திய சோதனையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21-ம் தேதி டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் யூனியன் பிரதேசம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 76 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ் பவானா, பாம்பிகா உள்ளிட்ட சமூக விரோத கும்பல்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் … Read more

திருப்பதியில் மார்ச் மாதத்திற்கான ரூ.300 டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு

திருமலை: திருப்பதியில் மார்ச் மாதத்திற்கான ரூ.300 டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்  ஆன்லைனில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மேலும், மே மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் இன்று மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதேபோல், … Read more

குருவாயூர் கோவில் கஜரத்னம் பத்மநாபனுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி ..!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவில் கஜரத்னம் பத்மநாபனுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது. குருவாயூர் கோவில் தேவஸ்தான ரெஸ்ட் ஹவுஸ் அலுவலகத்தில் முன்பாக குருவாயூர் பத்மநாபன் நினைவு உருவச்சிலை அமைந்துள்ளது. இவற்றின் முன்பாக குருவாயூர் கோவில் வளர்ப்பு யானைகள் நினைவஞ்சலி செலுத்தின. தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். தேவஸ்தான வளர்ப்பு யானைகள் முகாமில் இந்திரசென் யானையின் தலைமையில் வளர்ப்பு யானைகளான கோபிகண்ணன், அக்‌ஷய்கிருஷ்ணன், தேவதாஸ், ராதாகிருஷ்ணன் ஆகிய யானைகள் குருவாயூர் பத்மநாபனுக்கு துதிக்கை … Read more

சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையிலும் துறைமுகத்தை வாங்கியுள்ள அதானி குழுமம்..!!

அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் (Hindenburg Research) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையால், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ஒரே மாதத்தில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளன. குறிப்பாக, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமெண்ட்ஸ், அதானி பவர், அதானி வில்மர், ஏசிசி ஆகிய அதானி குழுமத்தின் நிறுவனங்களின் பங்குகள் இன்று வரை சரிவைச் சந்தித்து வருகின்றனர். பிப்ரவரி 22-ம் தேதி … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் – கேஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத் துறை விசாரணை

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் … Read more