டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அமித்ஷாவுடன் ஆளுநர் சந்தித்துள்ளார்.

‘2 ஆண்டு சிறை; 1 மாதம் ஜாமீன்…’ நீதிமன்ற தீர்ப்பும், ராகுல் காந்தியின் எதிர்வினையும்!

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிராக, சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பின்னர் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, “எல்லா … Read more

“பஞ்சாப் போலீஸார் கூறும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கிறது” – அம்ரித்பால் சிங்  தப்பிச் சென்றதில் மாநில காங்கிரஸ் சந்தேகம்

சண்டிகர்: பஞ்சாபில் ‘அனந்த்பூர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில், தீவிரவாத குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸார் கடந்த 5 நாட்களாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தப்பிச் சென்ற பைக் தாராபூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் தேடுவதை அறிந்த அம்ரித்பால் சிங் கடந்த சனிக் கிழமை மாலை குருத்வாரா ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்து அவர் பைக் ஒன்றில் மாறு வேடத்தில் தப்பிச் சென்றுள்ளார். அவரை விரட்டிச் சென்ற போலீஸார் … Read more

ஒரே ஒரு மெசேஜ் தான், 7 லட்சம் அபேஸ்: மும்பையில் மோசடி மன்னர்கள் கைவரிசை

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்திய பெண்ணுக்கு வங்கி கணக்கில் இருந்து 7 லட்சம் ரூபாய் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், நமக்கு பல வழிகளில் உதவும் தொழில்நுட்பத்தில் உள்ள விபரீதமான பக்கவிளைவுகளை மீண்டும் ஒரு முறை தோலுறித்துக் காட்டியுள்ளது.  மும்பை அந்தேறி பகுதியை சேர்ந்த 65 வயதான பெண்ணின் கணவரது செல்போன் எண்ணுக்கு மின்சார கட்டணம் செலுத்தும் படி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ‘நீங்கள் மின் கட்டணம் செலுத்த தவறினால் உங்கள் மின் … Read more

இந்தியாவில் விரைவில் 6ஜி தொலை தொடர்பு சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு!!

டெல்லி: இந்தியாவில் 6ஜி தொலை தொடர்பு சேவைகளுக்கான சோதனை தொடங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2030க்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாட்டு சோதனை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பாக செயல்திட்டங்களை உருவாக்க கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில், பல்வேறு துறை அமைச்சகங்கள், துறைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய … Read more

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 5 அடுக்குத் திட்டங்களைப் பின்பற்ற மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நாட்டில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் சோதனை செய்தல், கண்காணித்தல், சிகிச்சையளித்தல், கோவிட் நடைமுறையை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 அடுக்குத் திட்டங்களைக் … Read more

நள்ளிரவு 2 மணிக்கு பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த வீடு.. அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் பலி..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ராமஜோகி பேட்டையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஒரு வீட்டில் குடும்பத்தினர் பிறந்த நாள் விழா கொண்டாடி விட்டு படுத்துத் தூங்கிய நிலையில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 2 பேரை … Read more

திடிரேன பற்றி எரிந்த குழந்தைகள் ஐசியூ: நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின

திருச்சூர்: திருச்சூர் மருத்துவமனையில் குழந்தைகள் ஐசியூவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின. கேரளா மாநிலம் திருச்சூரின் ஒளரி பகுதியில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குழந்தைகள் ஐசியூவில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், அருகிலுள்ள பிரசவ வார்டுக்கும் மளமளவென புகை பரவியது. இதில் நல்வாய்ப்பாக தீ விபத்து ஏற்பட்டவுடன் குழந்தைகள் ஐசியூவில் இருந்த 7 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். பின்னர், பிரசவ அறையில் இருந்த 2 … Read more

திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் ரூ.4,411 கோடிக்கு ஒப்புதல்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நேற்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில்செய்தியாளர்களிடம் கூறியதாவது, “2023-24-ம் நிதியாண்டுக்கான திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் ரூ. 4411.68 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடந்த பிப்ரவரி 15-ம் தேதியே அறங்காவலர் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது ஆந்திராவில் மேலவை தேர்தல் நடைமுறைகள் காரணமாக தேவஸ்தான பட்ஜெட் குறித்து அறிவிக்க இயலவில்லை. வரும் … Read more

தேர்தல் ஸ்கெட்ச்: 4 மாநிலங்களில் பாஜக அதிரடி… புதிய தலைவர்கள் நியமனம்!

டெல்லியில் இருந்து பாஜக தேசிய தலைமை இன்று (மார்ச் 23) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மூன்று மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜக அதிரடி இதுதொடர்பான பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிடப்பட்ட அறிவிப்பில், டெல்லி பாஜகவின் செயல் தலைவராக இருந்த விரேந்திர சச்தேவா அம்மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக … Read more