ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸிலிருந்து விலகல்

புதுடெல்லி: இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான் 2001ல் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்ததற்குக் காரணம் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே. அனைவரையும் உள்லடக்கிய தேசிய மறுமலர்ச்சியைக் காண வந்தேன். அத்தகைய கொள்கையின் மீது ஈர்ப்பு கொண்டே வந்தேன். … Read more

ஓபிஎஸ் மனு தள்ளுபடி; கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

டெல்லி: கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி ஜூலை 11ல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனிநீதிபதி, ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்று … Read more

ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதி 5 பெண்கள் உயிரிழப்பு

மன்யம்: ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டம், கூனேரு – சொள்ளபதம் நெடுஞ்சாலையில், நேற்று மதியம் பார்வதி புரத்திலிருந்து ராய்காட் பகுதிக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்குநேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பெண்கள் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கோமராடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் … Read more

கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிக் கிடந்த தாய், மகன் மீட்பு

ஹரியானா மாநிலம் குருகிராமில் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகனை போலீசார் மீட்டனர். சுஜன் மாஜி – முன்முன் மாஜி தம்பதியினர் தங்கள் மகனுடன் வசித்து வந்தனர்.   கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டபின் அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றுவந்த தன் கணவனை முன்முன் மாஜி வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அதே பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து மகனுடன் தனியாகத் தங்கத் தொடங்கிய முன்முன் மாஜி, வீடியோ கால் மூலமாக மட்டுமே கணவருடன் … Read more

13 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் எம்பிக்களுக்கு ஆண்டுதோறும் சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகின்றது. 2023ம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா விருது பெறும் எம்பிக்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா, மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 13 எம்பிக்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்,‘‘சன்சத் ரத்னா விருது பெறும் எம்பிக்களுக்கு … Read more

பிரதமர் மோடியுடன் ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு – இந்தியாவுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க ஆர்வம்

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று சந்தித்து பேசினார். இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவு குறித்து இருவரும் விவாதித்தனர். படம்: பிடிஐசர்வதேச நிதி நிறுவனமான ஆசிய வளர்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஏடிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் … Read more

கொள்ளை அடிக்க கோவிலுக்கு வந்து திருடனை அடித்து கொலை செய்த பாதுகாவலர்

ஐதராபாத் அருகே கொள்ளை அடிக்க கோவிலுக்கு வந்த திருடன், அங்கிருந்த பாதுகாவலர் கட்டையால் அடித்ததில் உயிரிழந்தான்.  குஷாய்குடாவை சேர்ந்த கட்டம் ராஜூ என்ற கொள்ளையன் அதே பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்குள் கொள்ளை அடிப்பதற்காக புகுந்துள்ளான். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைக்கும் போது உண்டான சப்தத்தால் அங்கு வந்த பாதுகாவலர் ரங்கையா தடுக்க முயன்றுள்ளார். அப்போது இருவருக்கும் நடந்த சண்டையில் அருகில் இருந்த கட்டையை எடுத்து ராஜூவின் தலையில் பலமாக தாக்கியதில் உயிரிழந்தான். Source link

பாஜவின் வெற்றிக்காக திரிணாமுல் போட்டி: மேகாலயாவில் ராகுல் குற்றச்சாட்டு

ஷில்லாங்:  பாஜவுக்கு உதவுவதற்காகவே மேகாலயா  தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேகாலயாவில் வரும் 27 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்டார். ஷில்லாங்கில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் அவர்  பேசியதாவது: பாஜ-ஆர்எஸ்எஸ் அமைப்பு தங்களுக்குதான் எல்லாம் தெரியும், எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறது. அதனால், யாரையும் மதிக்காமல் அவர்கள் செயல்படுகின்றனர். அவர்களை எதிர்த்து … Read more

ஊழல் தடுப்பு என்ற பெயரில் அரசியல் உளவு பார்த்ததாக புகார் – சிசோடியா மீது புதிய வழக்கு பதிவு செய்கிறது சிபிஐ

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் துணை முதல்வரான மணிஷ் சிசோடியாவின் நிர்வாகத்தில் டெல்லியின் விஜிலன்ஸ் துறை செயல்படுகிறது. இதன் சார்பில் கடந்த 2015-ல் ‘ஃபீட்பேக் யூனிட் (எஃப்.பி.யு)’ எனும் புதிய பிரிவை அவர் தொடங்கினார். இதன் சார்பில் டெல்லியில் நடைபெறும் ஊழல்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அவர் அறிவித்தார். ஆனால் இந்த எஃப்.பி.யு ஆம் ஆத்மியின் அரசியல் ஆதாயத் … Read more

கொரோனா பயம்… 3 ஆண்டுகளாக வெளியே வரவே இல்லை… நடுங்கவைக்கும் சம்பவம்!

ஹரியானா குருகிராமின் சக்கர்பூர் பகுதியை சேர்ந்தவர் சுஜன் மாஜி. இவர், தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி குறித்து, சக்கர்பூர் காவல்நிலையத்தில், அளித்த புகார் அதிர்ச்சிக்கரமான சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.  அதாவது, கொரோனா தொற்று பரவல் மீதான அதீத அச்சம் காரணமாக, சுஜன் மாஜியின் மனைவி முன்முன் மாஜி, பள்ளி மாணவனான தனது மகனுடன் கடந்த மூன்று வருடங்களாக வீட்டிலேயே தன்னை தானே பூட்டிக்கொண்டு, அடைப்பட்டிருப்பது அவர் கணவர் அளித்த புகார் … Read more