”புரியாத இந்தி மொழியில் ஏன் வாசிக்கிறீர்கள்?” மேகாலய ஆளுநரின் உரைக்கு எம்.எல்.ஏ எதிர்ப்பு!

மேகாலயா மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, அம்மாநில ஆளுநர் இந்தியில் உரையாற்றியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. 60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும்கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், … Read more

கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000-க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தினசரி பாதிப்பு ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பதிவாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது … Read more

தலைநகரில் மீண்டும் நிலநடுக்கம்… மக்கள் பீதி!!

நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று இரவு ஆப்கானிஸ்தான் பைசாபாத் பகுதியில் இருந்து 133 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே சுமார் 156 கிலோமீட்டர் தொலைவுக்கு உருவான நிலநடுக்கம் அது. நிலநடுக்ம் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாது சீனா, துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானில் … Read more

பில்கிஸ் பானு வழக்கு: சிறப்பு பெஞ்ச் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: குஜராத் கலவரத்தின்போது தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க சிறப்பு அமர்வினை அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி. பத்ரிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தாவிடம் புதன்கிழமை தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த விசாரணையின்போது, “இது அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய … Read more

வழக்கறிஞர் ஜான் சத்தியனை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: வழக்கறிஞர் ஜான் சத்தியனை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐகோர்ட் நீதிபதியாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை அரசு நிறுத்தி வைத்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். வழக்கறிஞர் ஜான் சத்தியனை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க 2022 பிப்ரவரி 16-ல் முதலில் கொலீஜியம் பரிந்துரைத்தது.  

“இந்திய டிஜிட்டல் தொழில்நுட்பம் எளிதானது, பாதுகாப்பானது, வெளிப்படையானது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: “இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் எளிதானது; பாதுகாப்பானது; வெளிப்படையானது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 6ஜி தகவல் தொழில்நுட்ப தொலைநோக்குத் திட்ட அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். டெல்லியில் நடைபெற்ற இதற்கான விழாவில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சர்வதேச தகவல் தொழில்நுட்ப பொதுச் செயலாளர் டொரீன் போக்தன் மார்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, … Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர். இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் விஷப் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்கள். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார்.

லண்டனில் நடந்த சம்பவத்திற்கு இந்தியா கொடுத்த பதிலடி! பஞ்சாப்பில் நடப்பதுதான் என்ன?

டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு, இன்று பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டுள்ளன. காலிஸ்தான் ஆதரவு அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் தே’ பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். அவர்மீது 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், அவரை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். லண்டனில் இந்திய தேசியக்கொடியை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் … Read more

சட்டப் பிரிவு 370 மீண்டும் அமலானால் மட்டுமே பேரவைத் தேர்தலில் போட்டி: மெகபூபா முஃப்தி உறுதி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், ”ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப்படும் வரை சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். எனது இந்த முடிவு முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால், எனக்கு இது உணர்வுபூர்வமானது. … Read more

டெல்லியில் மீண்டும் நில அதிர்வு: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

டெல்லி: டெல்லியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் 2.7 ரிக்டர் அளவில் மீண்டும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.