புதிய வந்தே பாரத் ரயில் திருப்பதியில் ஏப்.8-ல் தொடங்குகிறது

திருப்பதி: ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் விசாகப்பட்டினம் – செகந்திராபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த பொங்கல் பண்டிகை முதல் தொடங்கி வைத்தார். இந்நிலையில், திருப்பதி – ஹைதராபாத் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க தென் மத்திய ரயில்வே துறை முடிவு செய்தது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி திருப்பதியில் இருந்து வந்தே பாரத் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான … Read more

ராகுல் காந்தி ட்விட்டரில் பரபரப்பு மாற்றம்; இனி வெறும் எம்.பி அல்ல…!

வயநாடு மக்களவை தொகுதி எம்.பியாக இருந்த ராகுல் காந்தி அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள ‘Bio’-வில் Dis’Qualified MP எனப் பதிவிட்டுள்ளார். அதாவது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி எனக் குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிகள் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன

ஏப்ரல் 1 முதல் மாற்றங்கள்: 2022-23 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில திங்களே உள்ளது. இதனுடன், பல புதிய விதிகள் புதிய நிதியாண்டு மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்தும் பொருந்தும். இந்த விதிகள் சாமானியர்களையும் பாதிக்கப் போகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஏப்ரல் 1, 2023 முதல் நிகழும் புதிய மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த மாற்றங்கள் நிதி பரிவர்த்தனைகள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை. ஏப்ரல் 1, 2023 முதல் எந்த விதிகள் மாறப் … Read more

36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்: இஸ்ரோ தலைவர் தகவல்

ஹரிகோட்டா: இன்று, ISROவின் LVM3 ஏவுகணை வாகனம், அதன் ஆறாவது தொடர்ச்சியான வெற்றிகரமான விமானத்தில், One Web Group நிறுவனத்தைச் சேர்ந்த 36 செயற்கைக்கோள்களை 87.4 டிகிரி சாய்வுடன் 450 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இதன் மூலம், 72 செயற்கைக்கோள்களை ஒரு வலையிலிருந்து குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தத்தை NSIL வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள SDSC-SHAR இல் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி 09:00:20 மணிக்கு மொத்தம் 5,805 கிலோ … Read more

சிறுபான்மையினர் நல நிதியில் வெறும் 14% மட்டுமே செலவு! மத்திய அமைச்சரின் பதிலால் அதிர்ச்சி!

சிறுபான்மையினர் நலத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 14 சதவிகிதம் மட்டுமே செலவினம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் நலத்திட்ட நிதி பற்றி கேள்வி எழுப்பிய எம்பி சு.வெங்கடேசன்! நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன் எம். பி (சி.பி.எம்) சிறுபான்மை மக்கள் நலனுக்கான திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகள், அதற்காக தற்போதுவரை செலவிடப்பட்ட தொகை பற்றிய கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார். அவர் எழுப்பிய கேள்வியில், ”கடந்த … Read more

36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க்-3 இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துக்கு சொந்தமான 36 செயற்கைக் கோள்கள், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகின்றன. இந்திய விண்வெளி ஆய்வுநிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதில், வணிகரீதியான செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி … Read more

36 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம். மார்க் – 3 ராக்கெட்..!

36 இணைய தளசேவை செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் – 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறு வனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஏவ, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி கடந்த அக்டோபரில் 36 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. அதை தொடர்ந்து 2வது கட்டமாக எஞ்சிய செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. 640 டன் எடையுடன் இந்தியாவிலேயே … Read more

அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன்வருவோர் இறைவனுக்கு ஒப்பானவர்கள்: பிரதமர் மோடி

டெல்லி: அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன்வருவோர் இறைவனுக்கு ஒப்பானவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். ராமநவமி, ரமலான் உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸின் உண்ணாவிரதத்துக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தடையை மீறி போராட்டம்

டெல்லி: வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அமைதி வழியில் ‘சத்தியாகிரக’ உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி ராஜ்காட் பகுதியில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பித்துள்ளனர். இருந்தும் காவல் துறையின் தடை உத்தரவை மீறி பிரியங்கா … Read more

ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்

டெல்லி: டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ள நிலையில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி காந்திசமாதி முன்பாக மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ்  தலைவர்கள் உண்ணாவிரதம் செய்யவுள்ளனர். டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக தொடங்கியது. போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா … Read more