இந்திய ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் சீன செல்போன்களை பயன்படுத்த தடை

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் 11 கம்பெனிகளின் சீன செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா இடையிலான கல்வான் பள்ளத்தாக்கு மோதல்  சம்பவத்திற்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாச்சலப்பிரதேசம் தவாங் செக்டாரில் சீன  ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அப்போது, இரு தரப்பினரிடையே மோதல்  ஏற்பட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான ராணுவ ரீதியிலான பதற்றம்  நிலவிவரும் சூழலில், சீனத் தயாரிப்பு … Read more

டெல்லிக்கு அடுத்தபடியாக காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா, மும்பை

புதுடெல்லி: டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு லாப நோக்கமின்றி செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில் நாட்டின் 6 பெரு நகரங்களில் காற்று மாசு பற்றி ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள 6 பெருநகரங்கள் வெவ்வேறு புவி-காலநிலை மண்டலத்தில் அமைந்திருந்தாலும், நடந்து முடிந்த குளிர் காலத்தில் காற்று மாசு (PM2.5) அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருந்துள்ளது. இதில் … Read more

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிசோடியாவை அடுத்து கவிதாவை கைது செய்ய அமலாக்கத் துறை திட்டமா?

நாளை மறுநாள் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதாக தெலுங்கானா முதலமைச்சரின் மகளான கவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கப்படுவதாக கவிதா தெரிவித்துள்ளார். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இன்று ஆஜராகுமாறு கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஆனால் கூடுதல் அவகாசம் கோரி தாம் நாளைமறுநாள் ஆஜராகப் போவதாக கவிதா தெரிவித்துள்ளார். ஹைதராபாதில் உள்ள கவிதாவின் இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கவிதாவை கைது … Read more

அசாமில் பாக். ஏஜென்டுகளுக்கு சிம் கார்டு விற்ற 5 பேர் கைது: 18 மொபைல், 136 சிம் கார்டு பறிமுதல்

கவுகாத்தி: அசாமில் பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு சிம் கார்டு விற்றதான குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அசாமில் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை வாங்கி பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு விற்பதாக ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, நாகோன் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாம், உத்தின், ரஹ்மான், ஜமான் மற்றும் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த பாருல் உள்ளிட்ட 5 பேரை … Read more

குஜராத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி | பார்வையாளர்களாக மாறிய இரு நாட்டு பிரதமர்கள்

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டு வருகின்றனர். அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று(மார்ச் 9) தொடங்கியுள்ளது. இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ்-ம் தற்போது பார்வையிட்டு வருகின்றனர். இரு நாடுகளும் … Read more

4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸி. பிரதமர் அல்பானிசுக்கு டிவிட்டரில் மோடி வரவேற்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிசை டிவிட்டரில் வரவேற்றுள்ள பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக ஆவலுடன் இருப்பதாக கூறி உள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் வந்தடைந்த அவர் அங்குள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று பிரதமர் மோடியும், அல்பானிசும் அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா, … Read more

பஞ்சாப்பில் பகீர் சம்பவம்!! கனடா குடியுரிமை பெற்ற இளைஞர் குத்திக்கொலை!!

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங் (24). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கனடா சென்றார். அங்கு வசித்து வந்த பிரதீப் சிங் கனடா நாட்டு குடியுரிமை பெற்றார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதீப் சிங் கனடாவில் இருந்து இந்தியா வந்துள்ளார். குருதாஸ்பூரில் உள்ள தனது கிராமத்திற்கு வந்த அவர் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஹொலா மஹொலா சீக்கிய மத கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதீப் சிங் நேற்று … Read more

பிரதமர் மோடி முன்னிலையில் 2-வது முறையாக திரிபுரா முதல்வராக பதவியேற்றார் மாணிக் சாஹா

புதுடெல்லி: திரிபுரா மாநிலத்தில் 2-வது முறையாக பாஜக சார்பில் மாணிக் சாஹா முதல்வராகப் பதவியேற்றார். வடகிழக்கு மாநிலமான திரிபுரா இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்பட்டது. அங்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சி காலம் முடிவடையும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி … Read more

தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா டெல்லி அமலாக்கத்துறை அலுவலத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவரை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு  தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராம்சந்திர பிள்ளை … Read more

பெண்களுக்கு மேலும் அதிகாரம் – மகளிர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வாழ்த்து செய்தியில், பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்க மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும் என்றார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சர்வதேச மகளிர் தினத்தில், நமது பெண் சக்திகளின் சாதனைகளை பாராட்டுகிறேன். இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை நாம் மிகவும் போற்றுகிறோம். பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்க மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும். … Read more