கர்நாடகாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் கடும் மோதல் – சமூக வலைதளங்களில் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதால் சர்ச்சை

பெங்களூரு: கர்நாடக கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக இருப்பவர் ரூபா ஐபிஎஸ். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி ச‌சிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் ஷாப்பிங் சென்றதாக புகார் எழுப்பியதால் ரூபா பிரபலமானார். இந்நிலையில் ரூபா ஐபிஎஸ் நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ரோஹினி சிந்தூரி, மைசூரு மாவட்ட ஆட்சியராக இருந்த போது அப்போது அமைச்சராக இருந்த ம.ஜ.த. கட்சியை சேர்ந்த‌ … Read more

சிவசேனா வழக்கு: உத்தவ் மேல்முறையீடு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் மனு நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் ஆணையத்தை எதிர்த்து உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்கப்படுகிறது.  

அதிர்ச்சி! ஐபோன்க்காக டெலிவரி பாய் கொலை!!

பணம் இல்லாமல் ஆன்லைனில் ஐஃபோன் ஆர்டர் செய்து, அதைக் கொண்டு வந்த டெலிவரி பாயை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் நாயக் என்பவர் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார். அவரை திடீரென காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 8ஆம் தேதி … Read more

ஆண், பெண் இருவருக்கும் சமமான திருமண வயதை நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘தற்போது நமது நாட்டில் ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும், பெண்களுக்கான திருமண வயது 18 என்றும் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். எனவே, ஆண்களுக்கு இணையாக பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்த வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு … Read more

உரிமை மீறல் தொடர்பாக 12 எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநிலங்களவை தலைவர் பரிந்துரை

டெல்லி: உரிமை மீறல் தொடர்பாக 12 எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கார் பரிந்துரை செய்துள்ளார். 12 எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க உரிமை மீறல் பற்றி விசாரிக்கும் குழுவுக்கு அவர் பரிந்துரை செய்துள்ளார். மாநிலங்களவையில் பட்ஜெட் தொடரின்போது 12 எம்.பிக்களும் அமளியில் ஈடுப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் – முழு விவரம்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யு) பல்கலைக்கழக மாணவர் பேரவைக்காக ‘டெப்ளாஸ்’ என்ற பெயரில் ஓர் அலுவலகம் அதன் வளாகத்தில் உள்ளது. இதில், மாணவர்கள் தங்களுக்காக அவ்வப்போது திரைப்படங்கள், முக்கிய ஆவணப்படங்களை திரையிடுவது உண்டு. ‘ஜானே பி தோ யாரோ’ எனும் இந்தி படத்தை ‘110 பிளவர்ஸ்’ எனும் மாணவர் அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திரையிட்டனர். இதற்காக அங்கு சுவரில் இருந்த மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட சுமார் 30 … Read more

8th Pay Commisson: 44% ஊதிய உயர்வு, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 7வது ஊதியக் கமிஷனுக்குப் பிறகு, 8வது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமைக்க உள்ளது. இது ஒரு முக்கிய காரணியாக இருக்க, இன்னும் பல காரணங்களால் அடுத்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என நம்பப்படுகிறது. இதனுடன், ஃபிட்மென்ட் ஃபாக்டரைத் தவிர வேறு ஒரு சூத்திரம் மூலம் ஊதியம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். பழைய ஊதியக் … Read more

போதைப்பொருள், கள்ளநோட்டு வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 72 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

டெல்லி: நாடு முழுவதும் 72 இடங்களில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள், கள்ளநோட்டு கடத்தல்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ சோதனை நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள ரவுடிகளையும், அவர்களுடன் தொடர்பில் உள்ள பயங்கரவாத கும்பலை பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், பிலிபிட்டில் … Read more

கணவரையும், மாமியாரையும் வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த பெண்!!

கணவரையும், மாமியாரையும் கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் ஒளித்து வைத்த பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் நரேங்கி பகுதியைச் சேர்ந்த சங்கரி டே என்பவரின் மகன் அமர்ஜோதி டே-வுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கலீடா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஏழு மாதங்களுக்கு முன்பு தனது கணவர் மற்றும் மாமியார் காணவில்லை என கலீடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் … Read more

கேபிள் துருப்பிடித்திருந்ததால் மோர்பி பாலம் அறுந்தது – விசாரணை குழு அறிக்கையில் தகவல்

காந்திநகர்: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு தீபாவளியன்று மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இந்த பாலத்தில் கூடினர். இதனால் பாலம் அறுந்து விழுந்ததில், 141 பேர் உயிரிழந்தனர். அதன்பின் பாலத்தை பராமரிக்கும் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க 5 பேர் … Read more