வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகி தமிழக போலீசில் 10 நாளில் ஆஜராக உத்தரவு: டெல்லி ஐகோர்ட் அதிரடி

புதுடெல்லி: வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ராவ் பத்து நாட்களில் தமிழகத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது.  வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர்  பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் … Read more

அதானி குழுமம்- ஹிண்டன்பர்க் விவகாரத்தை விசாரிக்க நிபுணர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்..!!

அதானி குழுமம்- ஹிண்டன்பர்க் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சப்ரே தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழுவில், கே.வி.காமத், நந்தன் நீலகேனி, முன்னாள் நீதிபதிகள் ஓ.பி.பட், ஜே.பி.தேவ்தத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிபுணர் குழு பங்குச்சந்தையின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிமுறைகளையும், தற்போது பங்குச்சந்தைகளுக்கு உள்ள கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் பரிந்துரைகளை அளிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிபுணர் குழு இரண்டு … Read more

தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஐஏஐ) ஆகியவை இணைந்து, தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் நடுத்தர ரக ஏவுகணையை (எம்ஆர்எஸ்ஏஎம்) வடிவமைத்தன. இதை பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையின் திறனை பரிசோதிக்க இந்திய கடற்படை திட்டமிட்டது. இதன்படி ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து எம்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை நேற்று ஏவப்பட்டது. அப்போது ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை எட்டியதாகவும் இந்த சோதனை வெற்றி பெற்றதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. … Read more

கட்டணம் ரூ.490 கட்டிய பிறகும் கேரள அமைச்சர் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு

திருவனந்தபுரம்:  கேரள விவசாயத்துறை அமைச்சராக இருப்பவர்  பிரசாத். இவரது சொந்த ஊர் ஆலப்புழா அருகே உள்ள நூரநாடு ஆகும். இங்கு  அவருக்கு சொந்தமாக ஒரு வீடும் உள்ளது. அமைச்சரான பிறகு திருவனந்தபுரத்தில்  உள்ள அரசு இல்லத்தில் குடியேறினார். ஆகவே சொந்த வீட்டில் தற்போது வேறு  யாரும் இல்லை. இந்த வீட்டுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை  வரும் மின் கட்டணத்தை அமைச்சர் பிரசாத் ஆன்லைன் மூலம் செலுத்துவது வழக்கம்.  கடந்த பிப்ரவரி மாத கட்டணமான ரூ.490ஐ வழக்கம்போல ஆன்லைனில் … Read more

கூட்டணி ஆட்சியில் பாஜக – நாகாலாந்து, மேகாலயா முதல்வர்கள் பதவியேற்பு

கோஹிமா/ ஷில்லாங்: நாகாலாந்து முதல்வராக நெய்பியூ ரியோ, மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா நேற்று பதவியேற்றனர். இருவிழாக்களிலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றனர். வடகிழக்கு மாநிலங்களான திரிபுராவில் கடந்த பிப்.16-ம்தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் கடந்த பிப்.27-ம்தேதியும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன. 3 மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்டன. நாகாலாந்தின் 60 தொகுதிகளில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)25, கூட்டணி கட்சியான பாஜக 12 இடங்களில் வெற்றி … Read more

குஜராத்தில் ரூ.425 கோடி ஹெராயின் பறிமுதல்

கட்ச்: ஈரானிய  படகில் கடத்த முயன்ற ரூ. 425 கோடி மதிப்பிலான ஹெராயினை இந்திய கடலோர  காவல்படை அதிகாரிகள் குஜராத்தில் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். குஜராத்  மாநில தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,  இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து இரண்டு ரோந்து கப்பல்கள் அரபிக்கடலில்  கண்காணிப்பு பணியை மேற்கொண்டன. கட்ச் மாவட்டம் ஓகா கடற்கரையில் இருந்து  சுமார் 340 கிமீ தொலைவில் உள்ள இந்திய கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான  வகையில் … Read more

அதானி மீது காங். குற்றச்சாட்டு மக்களை பலிகொடுத்து பாஜவுக்கு தேர்தல் நிதி

புதுடெல்லி:  காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதானி குழுமத்தின் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டில் சீன நிறுவனங்கள் உட்பட ஆசிய முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.7,200 கோடி வெளிநாட்டு கடனை திரட்டியது. இதற்கு, மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வழங்கப்பட்ட மின் விநியோக உரிமை உள்ளிட்ட முக்கிய பங்கு பத்திரங்களை அதானி குழுமம் அடமானமாக வைத்துள்ளது.  மும்பையில் 3ல் 2 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் அதானி நிறுவனம் கடனை செலுத்த … Read more

கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டு வாலிபர் கொலை: சிவகங்கையை சேர்ந்தவர் கைது

திருவனந்தபுரம்: கர்நாடக  மாநிலம் மங்களூருவில் இருந்து 2 நாட்களுக்கு முன் இரவு திருவனந்தபுரத்திற்கு  மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. இரவு சுமார் 10.30  மணியளவில் இந்த ரயில் கோழிக்கோடு அருகே கொயிலாண்டி என்ற இடத்தை தாண்டி  சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் ஒரு பெட்டியில் பயணம் செய்து  கொண்டிருந்த 2 வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கண்ணிமைக்கும்  நேரத்தில் அவர்களில் ஒருவர் இன்னொருவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி  விட்டார். அதைப் பார்த்த சக … Read more

3 பயிற்சி கப்பல்கள் மற்றும் 70 பயிற்சி விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு ரூ.6,800 கோடியில் 70 பயிற்சி விமானங்களும், கடற்படைக்கு ரூ.3,100 கோடியில் 3 பயிற்சி கப்பலும் வாங்க சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 70 எச்டிடி-40 ரக விமானங்கள் வாங்க எச்ஏஎல் நிறுவனத்துடனும், 3 பயிற்சி கப்பல்களை தயாரிக்க எல் அன்ட் டி நிறுவனத்துடனும் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று ஒப்பந்ததத்தை இறுதி செய்தது. இதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது. … Read more

ஜம்மு நகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவில் ஒருவர் பலி

ஜம்மு: ஜம்மு நகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் படுகாயமடைந்தனர்.  காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்துக்கு அருகிலுள்ள செர்ரி கிராமத்தில் ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி  ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.