2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தகுதி நீக்கம் – மக்களவை செயலகம் அறிவிப்பு..!

பிரதமர் குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு, சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 102 (1) e-ன் படி, இரண்டாண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர். அதன்படி, வயநாடு தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்தி, தீர்ப்பு வெளியான நேற்றைய தேதியிலிருந்து … Read more

திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார்: உத்தவ் தாக்கரே கண்டனம்

டெல்லி: திருடனை திருடன் என்று அழைப்பது நாட்டில் குற்றமாகிவிட்டது என்று மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார். ராகுல் தகுதி நீக்கம் நாட்டில் சர்வாதிகாரம் முடிவதற்கான தொடக்கப் புள்ளி இது. நாட்டின் அரசமைப்புகள் அனைத்தும் அழுத்தத்தில் உள்ளன என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்

ராகுல் காந்தி தகுதி நீக்கம்… மோடிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு!!

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 2019இல் பிரச்சாரத்தில், நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!

ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை. … Read more

எம்.பி பதவி பறிப்பு: ராகுல் காந்திக்கு முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

புதுடெல்லி: ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிப்பதன் மூலம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தீர்ப்பின் பின்னணி: கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று … Read more

ராகுல் காந்தி எம்பி பதவி நீக்கம்; அடுத்து அவர் என்ன செய்வார்.?

ராகுல் காந்தி தகுதி நீக்கம் மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் 2019 அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் இன்று அறிவித்தது. சூரத் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், லோக்சபா செயலகம், ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து, அவரது தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்தது. அந்த இடத்திற்கான சிறப்புத் தேர்தலை எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் … Read more

ராகுல்காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை! வைகோ கண்டனம்!

மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும். இதைக் காரணம் காட்டி, 24 மணி நேரத்திற்குள், ராகுல்காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கிவிட்டதாக மக்களவையில் மிருகத்தனமாக பெரும்பான்மை கொண்டிருக்கின்ற … Read more

நாட்டின் குரலுக்காக நான் போராடுகிறேன்; நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்க நான் தயார் என்று ராகுல் காந்தி டிவீட்

டெல்லி: நாட்டின் குரலுக்காக நான் போராடுகிறேன்; நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்க நான் தயார் என்று ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார். எம்.பி. பதவியில் இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி டிவீட் செய்தார். 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.   

ராகுல் காந்தி தகுதி நீக்கம் | “சர்வாதிகாரம், ஜனநாயகப் படுகொலை, வரலாற்றின் கரும்புள்ளி” – எதிர்க்கட்சியினரின் எதிர்வினைகள்

புதுடெல்லி: பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று (மார்ச் 23) தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ராகுல் காந்தி இன்று (மார்ச்.24) எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து போட்டியிட்டு எம்.பி.யானார். இந்நிலையில், ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. … Read more

சட்டத்திற்கு மேலானவரா ராகுல் காந்தி.? – ஒன்றிய அமைச்சர் கேள்வி.!

சட்டத்திற்கு மேலானவராக ராகுல் காந்தி தன்னை கருதிக் கொள்வதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி சர்ச்சை காங்கிரஸ் கட்சியின் துடிப்பான தலைவர் ராகுல் காந்தியை சுற்றி எப்போதும் பரபரப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என அவர் இங்கிலாந்தில் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர் இந்தியா வந்ததும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச அனுமதி … Read more