இந்தியாவிற்கு எதிராக பேசவில்லை.. தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன்.. கைது நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டேன் – ராகுல்

  அவதூறு வழக்கில் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு எனது லண்டன் பேச்சு குறித்து, நாடாளுமன்றத்தில், மத்திய அமைச்சர்கள் தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர் – ராகுல் அதானியுடன், குஜராத் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் இருந்து மோடி நட்பு பாராட்டி வருகிறார் – ராகுல் எந்த நடவடிக்கையை கண்டும் அஞ்சப்போவதில்லை; தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருப்பேன் – ராகுல் லண்டன் பேச்சு குறித்து நான் மன்னிப்புக் கேட்க பாஜகவினர் கோரினர்; அதுபற்றி … Read more

36 செயற்கைகோளுடன் LVM3-M2 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது!!!

பெங்களூரு : LVM3-M2 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது. நம் நாட்டுக்கு தேவையான செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் விண்ணில்நிலைநிறுத்துகிறது. இதில் வணிகரீதியான செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமே விண்ணில் ஏவப்பட்டன.பிஎஸ்எல்வி ராக்கெட்டில் அதிகபட்சம் 1,750 கிலோ வரை மட்டுமே செயற்கைக்கோள்களை ஏவ முடியும். ஆனால், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை … Read more

“ராகுல் காந்தி தகுதி நீக்கம் முழுக்க முழுக்க சட்டப்படி நடந்தது”– எல்.முருகன் கருத்து

“தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று காலை திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு, தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோயில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். இதைத் தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு … Read more

குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி தானாக பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தானாக பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை.அடுத்து, சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் என்பவர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ”மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8(3)ன்படி குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகளின் பதவி, தீர்ப்பு வந்ததும் தானாகவே … Read more

பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாக குடும்பத்தினர் தகவல்!

பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மேலும் சில நாட்களுக்கு அவருக்கு பூரண ஓய்வு தேவைப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய மொழிகள் பலவற்றில் பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மேலும் ஓரிரு நாட்களுக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் குடும்பத்தினர் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை மார்ச் 27ம் தேதி ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு மார்ச் 27ம் தேதி ஆன்லைனில் வெளியிடும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.www.tirupahtibalaji.ap.gov.in என்ற இணையதளதத்தில் 27-ம் தேதி காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ராகுல்காந்தி தகுதி நீக்கம்: வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்குமா ஆணையம்?

நேற்றைய தினம் வயநாடு எம்பி ராகுல்காந்தி, எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் எம்.பி.யாக இருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் பேசிய ராகுல்காந்தி, ‘ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்?’ என்று பேசியிருந்தார். இதையடுத்து குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ … Read more

இந்தியாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 1,590 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 1,590 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 8,601 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே … Read more

ராகுல் காந்தி குறி வைக்கப்பட்டது எதனால்? பின்னால் இருப்பது யார்? மோடியின் கண்களில் பயம்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “லண்டன் பேச்சு குறித்து நான் மன்னிப்பு கேட்க பாஜகவினர் கோரினர். இந்தியாவிற்கு எதிராக நான் பேசியதாக மத்திய அமைச்சர் கூறும் எனது லண்டன் பேச்சுக்களை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். லண்டன் பேச்சு குறித்து பேச அனுமதி கேட்டதற்கு மக்களவை சபாநாயகர் மறுத்துவிட்டார். அதானாயின் போலி நிறுவனங்களுக்கு 20,000 கோடி ரூபாய் யாருடைய பணம். அது எங்கிருந்து வந்தது? அதானியின் போலி நிறுவனங்களுக்குச் … Read more

தகுதிநீக்கத்தை கண்டு ஒருபோதும் நான் அஞ்சமாட்டேன்: டெல்லியில் ராகுல்காந்தி பேட்டி

டெல்லி: அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என்பதே எனது கேள்வி, கேள்வி கேட்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்.ஜனநாயகத்துக்கான மக்கள் குரலாக தொடர்ந்து எனது குரல் ஒலிக்கும்.அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி வெளிநாடு சென்றபோதெல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினேன். எனது பேச்சுகள் அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.