அமெரிக்காவில் பரபரப்பு: இந்திய பத்திரிகையாளர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதல் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதக் கொள்கைகள் தலைதூக்கின. இதையடுத்து அவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை செய்தியாக்கிக் கொண்டிருந்த பிடிஐ செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் லலித் குமார் ஜா … Read more

டெல்லி ராஜ்காட்டில் சத்தியாகிரக போராட்டம் எங்கள் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள்!.. 32 ஆண்டுக்கு முன் நடந்ததை கூறி பிரியங்கா காந்தி உருக்கம்

புதுடெல்லி: எங்கள் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள் என்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி உருக்கத்துடன் பேசினார். டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் சார்பில் இன்று நடந்த சங்கல்ப் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், ‘கடந்த 1991ம் ஆண்டில் நடந்த சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். என் தந்தையின் (ராஜீவ் காந்தி) இறுதி ஊர்வலம் தீன் மூர்த்தி பவனில் இருந்து புறப்பட்டு சென்றது. எங்களது தாய் (சோனியா), எனது சகோதரர் … Read more

கர்நாடக தேர்தல் 2023: முஸ்லீம் இடஒதுக்கீடு ஜீரோ… சுர்ருனு எகிறிய பஞ்சமாசாலி லிங்காயத்துகள்!

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு அதிரடியாக சில நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அதில், முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் EWS எனப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீட்டில் மாற்றம் இந்த பிரிவிற்கு மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது. இதில் பிராமணர்கள், வைஷ்யர்கள், முதலியார்கள், ஜெயின் … Read more

எங்கு சென்றாலும் சரக்கு கிடைக்கவில்லை; பீகார் முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்!.. குஜராத்தில் இருந்து போதை ஆசாமி மிரட்டல்

பாட்னா: பீகாரில் மதுபானம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த ஒருவர், அம்மாநில முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம் என்று மிரட்டல் விடுத்தார். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அங்கித் குமார் என்பவர், குஜராத் மாநிலம் சூரத்தில் பணியாற்றி வருகிறார். மது அருந்தி பழகிய அவர், ஹோலி பண்டிகையின் போது குஜராத்தில் இருந்து தனது கிராமத்திற்கு வந்தார். பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால், அவருக்கு மது கிடைக்கவில்லை. மேலும் பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்திய முதல்வர் நிதிஷ் … Read more

காயத்தை குணப்படுத்தியவரை விட்டு பிரியாத கொக்கு.. விபரீதத்தில் முடிந்த மனிதநேய செயல்!

சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் கான் குர்ஜர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தோட்டத்தில் கொக்கு வகையை சார்ந்த சாரசு கொக்கு என்றழைக்கப்படும் பறவை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்ததை அவர் பார்த்துள்ளார். அதனை மீட்ட அவர், உடல்நலன் தேர்ச்சி பெறவும் உதவியுள்ளார். அதன் காயம் சரியானதும் பறந்து செல்லும் என … Read more

‘மோடி ஒரு கோழை.. இதை நான் மீண்டும் மீண்டும் சொல்வேன்..’ – பிரியங்கா காந்தி ஆவேசம்.!

எனது சகோதரனின் உண்மையை கண்டு அஞ்சும் பிரதமர் மோடி ஒரு கோழை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு பேசியதால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த 23ம் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்பி தகுதி பறிக்கப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. மக்களவை பிரதிநிதித்துவ சட்டத்தின் மூலம் தகுதி … Read more

உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஜம்முகாஷ்மீரில் அமைப்பு.. விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது – மத்திய ரயில்வே அமைச்சர்

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல் மற்றும் கவுரி இடையே 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆற்றின் மட்டத்திலிருந்து ஆயிரத்து 178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இப்பாலம் ஈபிள் கோபுரத்தை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டிராலியில் சென்று ஆய்வு செய்ததோடு, விரைவில் ரயில் … Read more

ராகுல் விஷயத்தில் ஒருங்கிணையும் எதிர்கட்சிகள்; காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணியா?.. கெஜ்ரிவால் கருத்தால் டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: ராகுல் விஷயத்தில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைவதால், கெஜ்ரிவாலின் கருத்தால் காங்கிரஸ் – ஆம்ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், ராகுல்காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸ் – ஆம்ஆத்மி கட்சிகள் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக … Read more

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது: பிரதமர் மோடி

99-வது மனதின் குரல் வானொலி உரையில் உடல் உறுப்பு தானம், சூரிய சக்தி பயன்பாடு, பல்வேறு துறைகளில் இந்திய நாட்டை சேர்ந்த பெண்களின் செயல்பாடு, காசி தமிழ் சங்கமம், அம்பேத்கர், ரமலான், ராம நவமி, காஷ்மீர், கரோனா என பல விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அவரது உரை விவரம்: “எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களை மீண்டும் ஒருமுறை மனதார வரவேற்கிறேன். இன்று இந்த உரையாடலைத் தொடங்கும் வேளையில், என் … Read more

5 மாதங்களில் இல்லாத அளவுக்கு எகிறிய கொரோனா; 3ம் அலை பராக்..!

கடந்த 149 நாட்களில் இல்லாத அளவில் இந்தியாவில் ஒரே நாளில் 1,890 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது மொத்தம் 9,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இந்தியாவில் ஒரே நாளில் 2,208 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரே நாளி 1,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கொரோனா 3ம் அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் … Read more