370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் முதல்முறையாக அந்நிய நேரடி முதலீடு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக நேரடி அந்நிய முதலீட்டில் புதிய கட்டிடங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு கடந்த 2019ம் ஆண்டு  நீக்கப்பட்டது. அதன் பிறகு ஜம்மு காஷ்மீரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அதன்ஒரு பகுதியாக, நேரடி அந்திய முதலீட்டின்கீழ், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வணிக வளாகமும், பன்னோக்கு கோபுரமும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை … Read more

பஞ்சாபில் பிரிவினைவாத தலைவர் தப்பியோட்டம்: 100 பேர் கைது; பதற்றத்தால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு

சண்டிகர்: பஞ்சாபில் பிரிவினைவாத தலைவர்அம்ரித்பால் சிங் (30) தப்பியோடிவிட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து கடந்த 2021-ம்ஆண்டு செப்டம்பரில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பை தொடங்கினார். டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில்அவர் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டார். எதிர்பாராதவிதமாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஹரியாணாவில் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் … Read more

தொழிலதிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.36 லட்சம் பணம் உட்பட 80 சவரன் நகைகள் கொள்ளை

புதுச்சேரியில் தொழிலதிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 36 லட்சம் ரூபாய் பணம் உட்பட 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரெயின்போ நகரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் இரவு தனது வீட்டருகே இருந்த போது, அங்கு காரில் வந்த மர்மநபர்கள் சிலர் முகவரி கேட்பது போல நெருங்கி கத்தியைக்காட்டி வீட்டினுள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரை தாக்கி வீட்டிலிருந்த 36 லட்சம் ரூபாய் பணத்தையும், 80 சவரன் நகைகளையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து … Read more

'தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுக' :அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகள் வெளியீடு!!

டெல்லி : நாடு முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் காணப்படுவதால் திருத்தப்பட்ட விதிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மராட்டியம், குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ள புதிய அறிக்கையில், பரிசோதனை, கண்காணிப்பு, மருத்துவம், குணப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி என 5 அடிப்படை அம்சங்களை … Read more

விலாசம் கேட்பதுபோல் நடித்து தொழிலதிபர் வீட்டில் 36 லட்சம் பணம் 80 சவரன் நகை கொள்ளை

புதுச்சேரியில் வீட்டு வாசலில் நின்றிருந்த தொழிலதிபரிடம் விலாசம் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி வீட்டிற்குள் புகுந்து ரூ.36 லட்சம் பணம் மற்றும் 80 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி ரெயின்போ நகர் 6-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (60). மதுபானக் கடை மற்றும் இறால் பண்ணை வைத்திருக்கும் தொழிலதிபரான இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பு … Read more

பயிற்சி விமான விபத்து பெண் பைலட் உட்பட 2 பேர் உயிரிழப்பு

போபால்: உ.பி ரேபரேலியில் இந்திரா காந்தி தேசிய பிளையிங் அகாடமி செயல்படுகிறது. அகாடமியை சேர்ந்த பயிற்சி விமானம் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவின் பிர்ஸி விமான தளத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தை இமாச்சலை சேர்ந்த பயிற்சியாளர் மோகித் தாக்குரும் (25), குஜராத்தை சேர்ந்த பயிற்சி விமானி மகேஸ்வரியும் (20) இயக்கினர். அப்போது ம.பி. கிர்னாபூர் பகுதியில் விமானம் வனப்பகுதி யில் விழுந்து நொறுங்கியது. இதில் 2 விமானிகளும் உயிரிழந் தனர். இருவரது உடல்களையும் மத்திய பிரதேச போலீஸார் … Read more

புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

இளைஞர்களை உலகளாவிய குடிமக்களாக மாற்றும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் பேசிய அவர், கல்வியின் நோக்கம் ஒருவரை முழுமையான மனிதனாக வேண்டும் என்பதால் புதிய கல்விக் கொள்கை அதனைச் செய்யும் என்றார். மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் உள்பட அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். Source link

2024ல் பாஜவை வீழ்த்துவதில் பிராந்திய கட்சிகளே முக்கிய பங்கு வகிக்கும்: அகிலேஷ் கணிப்பு

கொல்கத்தா: ‘வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிப்பதில் பிராந்திய கட்சிகளே முக்கிய பங்கு வகிக்கும்’ என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். உபி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ்  அளித்த பேட்டி : பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகிய ஒவ்வொருவரும் எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வரும் நாட்களில் பாஜவை எதிர்த்து போராடக் … Read more

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதாக பேச்சு: வீட்டுக்கு சென்று ராகுலிடம் டெல்லி போலீஸ் விசாரணை

புதுடெல்லி: ‘பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாகி வருகின்றனர்’ என்று பேசிய ராகுல் காந்தியிடம் விவரங்கள் சேகரிக்க அவரது வீட்டுக்கு டெல்லி போலீஸார் நேற்று சென்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நடத்தினார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் யாத்திரையை முடித்தார் ராகுல். அப்போது நகரில் அவர் பேசும்போது, ‘‘நாட்டில் பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்’’ என்று தெரிவித்தார். இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு … Read more

டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் ஏப்ரல் 10-க்குள் அறிமுகம்… ரயில்வேத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடத்தில் அடுத்த மாதம் 10ந்தேதிக்கு முன்பாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்திய ரயில்வே மாற்றங்களைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 8ஆண்டுகளில் ரயில்வேயை நவீன மயமாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இன்னும் 4 ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில் தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்ய முடியும் என்றார். Source link