கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றனர். ஆளும் பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகின்றனர். அதேபோல் … Read more

வடகிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி ஏப்ரலில் தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: வடகிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட அதிநவீன விரைவு ரயிலை ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ரயில்வே அமைச்சகம் கடந்த 2019-ல் அறிமுகம் செய்தது. இதன் முதல் சேவையை, புதுடெல்லி – வாரணாசி இடையே பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ல் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு … Read more

எம்.பி, எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் பதவியை தன்னிச்சையாக தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(3)- ஐ எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எம்.பி, எம்.எல்.ஏ-க்களை தன்னிச்சையாக தகுதிநீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 8(3), அதிகாரத்தை மீறிய ஷரத்து என்றும், இது எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் பேச்சு சுதந்திரத்தை குறைப்பதுடன், அவர்களின் கடமையை தடுக்கும் வகையில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், கடந்த 2013-ல்  உச்சநீதிமன்றத்தால் சட்டப்பிரிவு 8(4) ரத்து … Read more

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சோகாதாரத்துறை கடிதம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சிலதினங்களாக அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பதிப்பில் 6.3 % தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே … Read more

கர்மவினை அவரை திருப்பித் தாக்கியுள்ளது: ராகுலின் தகுதி நீக்கம் குறித்து அஸ்ஸாம் முதல்வர் கருத்து

குவாஹாட்டி: “தகுதி நீக்கத்திற்கு எதிரான அவசரச்சட்ட மசோதாவை ராகுல் காந்தியே கிழித்துப் போட்டார். அவருடைய கர்மவினை அவரைத் திருப்பி தாக்கியுள்ளது. இதில் எங்களுடைய தவறு என்ன இருக்கிறது?” என்று அஸ்ஸாம் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்டியில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தகுதி நீக்க விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த 2013-ம் ஆண்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்படும் உறுப்பினர்கள், உடனடி தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு … Read more

கூகுளில் வேலை வாங்குவது ஈஸி… ஆனால் இதுதான் ரொம்ப கஷ்டம் – மன வலியை பகிர்ந்த இளைஞர்!

இளைஞர் ஒருவர், தான் கூகுள் நிறுவனத்தின் நேர்காணலில் எப்படி தேர்ச்சி பெற்றதையும், ஆனால் பெங்களூரு வாடகை வீட்டுக்காக அதன் உரிமையாளர் நடத்திய நேர்காணலில் தோல்வியடந்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் அனுபவ பகிர்வு தற்போது வைரலாகி வருகிறது. ரிபு தமன் படோரியா என்ற அந்த இளைஞர், பெங்களூரு வாடகை வீட்டின் உரிமையாளருடன் நடந்த நேர்காணல் அனுபவத்தை LinkedIn-இல் பகிர்ந்து கொண்டார்.  கடந்த ஆண்டு, அவர் அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து பெங்களூரு சென்றார். கொரோனா தொற்றை தொடர்ந்து, அவர் அங்கு … Read more

தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய விமானத்தை மீட்பது எப்படி..? – தேசிய பாதுகாப்பு படையினர் பயிற்சி

தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய விமானத்தை மீட்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் கடத்தல் எதிர்ப்புப் படையினர் ஜம்முகாஷ்மீரில் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டனர். ஜம்முவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தை தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது போன்றும், அந்த விமானத்தை மீட்க காஷ்மீர் போலீசார், இந்திய விமானப்படை உள்பட பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அனைத்து துறையினருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி விமானத்தை மீட்பது … Read more

பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் அமல்படுத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் கட்கரி

டெல்லி: பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கட்கரி கூறியுள்ளார். சுங்க வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியிலிருந்து 3 ஆண்டுகளில் 1.40லட்சம் கோடியாக உயரும் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு; எனக்கு எந்த கவலையும் இல்லை" – ராகுல் காந்தி பேட்டி

“பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு ;எனக்கு எந்த கவலையும் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி குஜராத் நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் … Read more

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம்: பாஜக

பாட்னா: பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை பாஜக மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நேற்று பறிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி – தொழிலதிபர் அதானி இடையே உள்ள … Read more