கூகுளில் வேலை வாங்குவது ஈஸி… ஆனால் இதுதான் ரொம்ப கஷ்டம் – மன வலியை பகிர்ந்த இளைஞர்!

இளைஞர் ஒருவர், தான் கூகுள் நிறுவனத்தின் நேர்காணலில் எப்படி தேர்ச்சி பெற்றதையும், ஆனால் பெங்களூரு வாடகை வீட்டுக்காக அதன் உரிமையாளர் நடத்திய நேர்காணலில் தோல்வியடந்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் அனுபவ பகிர்வு தற்போது வைரலாகி வருகிறது. ரிபு தமன் படோரியா என்ற அந்த இளைஞர், பெங்களூரு வாடகை வீட்டின் உரிமையாளருடன் நடந்த நேர்காணல் அனுபவத்தை LinkedIn-இல் பகிர்ந்து கொண்டார்.  கடந்த ஆண்டு, அவர் அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து பெங்களூரு சென்றார். கொரோனா தொற்றை தொடர்ந்து, அவர் அங்கு … Read more

தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய விமானத்தை மீட்பது எப்படி..? – தேசிய பாதுகாப்பு படையினர் பயிற்சி

தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய விமானத்தை மீட்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் கடத்தல் எதிர்ப்புப் படையினர் ஜம்முகாஷ்மீரில் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டனர். ஜம்முவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தை தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது போன்றும், அந்த விமானத்தை மீட்க காஷ்மீர் போலீசார், இந்திய விமானப்படை உள்பட பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அனைத்து துறையினருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி விமானத்தை மீட்பது … Read more

பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் அமல்படுத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் கட்கரி

டெல்லி: பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கட்கரி கூறியுள்ளார். சுங்க வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியிலிருந்து 3 ஆண்டுகளில் 1.40லட்சம் கோடியாக உயரும் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு; எனக்கு எந்த கவலையும் இல்லை" – ராகுல் காந்தி பேட்டி

“பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு ;எனக்கு எந்த கவலையும் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி குஜராத் நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் … Read more

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம்: பாஜக

பாட்னா: பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை பாஜக மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நேற்று பறிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி – தொழிலதிபர் அதானி இடையே உள்ள … Read more

கர்நாடகா தேர்தல்: பாஜகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்; முஸ்லீம்களுக்கு கல்தா.!

கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அவற்றை தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சமூகங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தேசிய தலைவர்கள் முகாம் கர்நாடகாவில் மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அங்கு அரசியல் கட்சிகள் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவின் சார்பில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் தேசிய தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: தாவணகெரேவில் பிரதமர் மோடி பேச்சு

கர்நாடக: கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை என்று தாவணகெரேவில் பிரதமர் மோடி கூறியுள்ளார். சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக மாநிலத்தை பாதித்துள்ளது என்று நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இரட்டை இயந்திர ஆட்சியை மீண்டும் கொண்டு வர கர்நாடகா நடவடிக்கை எடுத்துள்ளது.காங்கிரஸ் கட்சியினர் ‘மோடி தேரி கபர் குதேகி’ என்கிறார்கள் ஆனால் கர்நாடக மக்களுக்கு ‘மோடி தேரா கமல் கிலேகா’ கனவு இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது என்று பிரதமர் … Read more

லிங்காயத்துகளின் வாக்கு வங்கியை ஈர்க்க எடியூரப்பாவின் வீடு தேடி சென்ற அமித் ஷா: விஜயேந்திரா மூலமாக பூங்கொத்தை பெற்றார்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பெங்களூருவில் உள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை வீடு தேடி சென்று சந்தித்தார். அவரை வ‌ரவேற்கும் விதமாக எடியூரப்பா வழங்கிய பூங்கொத்தை ஏற்க மறுத்த மறுத்த அமித் ஷா, அதை எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவிடம் கொடுக்கச் சொல்லி பெற்றுக்கொண்டார். கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் … Read more

ஒரு மணி நேரம் தேவையற்ற மின்பயன்பாட்டை தவிர்த்திடுக : பூமிநேரம் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் பிரம்மாண்ட மணற்சிற்பம்!!

புபனேஸ்வர் : பூமிநேரம் கடைப்பிடிப்பு தினத்தை முன்னிட்டு ஒடிசா கடற்கரையில் பிரம்மாண்ட மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, பூமிநேரமானது இன்று, அதாவது ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை … Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவு ..!!

தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் அதற்கான முறையான பரிசோதனைகள் ஏதும் நடக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை ஒப்பிட்டளவில் திருப்திகரமாக இல்லை என்றும் கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது. இன்று ஒரு நாள் மட்டுமே கொரோனா பாதிப்பு 1500-ஐ தாண்டியது, இதனால் மாநில அரசுகளுக்கு … Read more