ரயில்வே ஸ்டேஷனில் இனி இந்த வேலையை செய்தால் ஃபைன் கட்டனும், எச்சரிக்கும் அரசு

ரயில் டிக்கெட்: இரயில்வே என்பது இந்தியாவில் போக்குவரத்துக்கான ஒரு வழியாகும், இதன் மூலம் ஏராளமான மக்கள் பயணிக்கின்றனர். நாட்டில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பாதையில் பயணிக்கின்றனர். அதே நேரத்தில், ரயில்வே டிக்கெட் முன்பதிவு செயல்முறையும் முன்பை விட எளிதாக உள்ளது. இதனிடையே இருப்பினும், இனி ரயில் நிலையத்திற்குச் செல்லும் முன், சில விதிகளை மனதில் கொள்ள வேண்டும். இந்த விதிகள் பின்பற்றப்படாவிட்டால், நீங்கள் அபராதம் கொடுக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ரயில் நிலையத்திற்குச் செல்லும்போது என்ன … Read more

பொன். மாணிக்கவேல் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: தன் மீது ஐகோர்ட் தெரிவித்த கருத்துகளை நீக்கக் கோரி பொன். மாணிக்கவேல் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கருத்துக்களை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாட பொன். மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது. பொன். மாணிக்கவேல் மனுவை மெரிட் அடிப்படையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபானம், காண்டம், 15 படுக்கைகள் : பள்ளிக்கு சீல் ..!!

பள்ளி ஒன்றில் திடீர் சோதனையின் போது மதுபானம் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக் குழுவின் உறுப்பினரும், மாவட்ட ஆட்சியருமான நிவேதிதா சர்மா கூறியதாவது,”வழக்கமான ஆய்வுக்காக நாங்கள் அங்கு சென்றபோது, ​​பள்ளியின் இரு மூலைகளும் உள்ளிருந்து எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டோம். அங்கு ஒரு அறையில் மது பாட்டில்கள், … Read more

சாவர்க்கரை குறிப்பிட்ட ராகுல் | “குதிரைப் பந்தயத்துக்கு ஏன் கழுதையை இழுக்கிறீர்கள்?” – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரச்சினையை நீதிமன்றம் வாயிலாக அணுகாமல் சாவர்க்கர் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவது ஏன் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை ராகுல் காந்தி சட்டபூர்வமாகத்தான் அணுக வேண்டும். வீர் சாவர்க்கர் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவதை விடுத்து ராகுல் காந்தி நீதிமன்ற நடவடிக்கையை நீதிமன்றம் வாயிலாகவே அணுக வேண்டும். ஆனால், … Read more

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு..!!

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசப்பட்டது. போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளி, போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இடஒதுக்கீடு பிரிக்கப்பட்ட விதத்தில், தங்களின் பங்கு குறைக்கப்பட்டதாக பஞ்சாரா சமூகத்தினரின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில் ஷிமோகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இட ஒதுக்கீடு தொடர்பாக எடுத்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக – காங்கிரஸ் உறுப்பினர்கள்!

ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை என தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய அலுவலில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ‘ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை’ எனக்கூறி, பேரவையில் இருந்து … Read more

மீனவர்களின் பாதுகாப்புக்கு க்யூஆர் கோடுடன் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: மீனவர்களின் பாதுகாப்புக்காக க்யூஆர் கோடுடன் பிரத்யேக பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது என மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. “தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை விரைந்து பெற வசதியாக மீனவர்களுக்கு பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்கப்படுமா? அவர்களுக்காக அமல்படுத்தப்படும் நல்வாழ்வுத் திட்டங்கள் என்ன?” என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா … Read more

அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற ஜி20 அமைப்பு தொடர்பான முக்கியக் கூட்டத்தை சீனா புறக்கணித்து விட்டதாக தகவல்!

அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற ஜி20 அமைப்பு தொடர்பான முக்கியக் கூட்டத்தை சீனா புறக்கணித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திபெத்தின் ஒரு அங்கமாக கூறி அருணாசல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமான பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இதை இந்தியா ஏற்கவில்லை. ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள நிலையில், நாட்டின் 50 முக்கிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இடாநகரில் முக்கிய கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. Source link

ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!

டெல்லி: ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை வழக்கம்போல் 11 மணிக்கு தொடங்கின. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி சார்ந்த எம்.பி.க்கள், ராகுல் காந்தி தகுதி நீக்கம்தொடர்பாக தங்களது கருத்துக்களை பேசவேண்டும். மேலும், அவையை ஒத்திவைத்து விட்டு இது குறித்து விவாதிக்க வேண்டும். நாடாளுமன்ற மக்களவையில் இருந்து ராகுல் காந்தி அரசியல் கால்புணர்ச்சி காரணமாக நீக்கப்பட்டுள்ளார் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இது அரசியல் முக்கியத்துவம் … Read more

அம்ரித்பால் சிங் விவகாரம் – தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 7 பிரிவினைவாதிகள் கைது

சண்டிகர்: பஞ்சாப் போலீஸார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது அமைதியை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 353 பேரில் இதுவரை 197 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் கிரிமினல் குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (என்எஸ்ஏ) 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நிரபராதிகள் யாரும் துன்புறுத்தப்படுவதையோ அல்லது கைது செய்யப்படவில்லை என்பதையோ உறுதிசெய்ய வேண்டும் என மாநிலத்தின் அனைத்து மூத்த காவல்துறை … Read more