எதிர்கட்சிகளின் முழக்கம் காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..!

டெல்லி: எதிர்கட்சிகளின் முழக்கம் காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியதில் இருந்தே உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்து அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரம் ஆகிய பிரச்னைகளை எழுப்பி இரு தரப்பும் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்நிலையில், இன்றும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 9ம் நாளாக முடங்கியது. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு … Read more

லண்டனில் இந்திய தூதரகம் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் – டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு

புதுடெல்லி: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கடந்த 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுவாழ் பஞ்சாபியர்களில் சிலர் முயன்று வருகின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு ஆதரவாக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வந்தார். சீக்கிய மத போதகரான அவர் மீது இருந்த வழக்குகள் தொடர்பாக அவரை … Read more

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கனை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கனை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.காரைக்கால் ஆட்சியராக இருந்த முகமது மன்சூர் புதுச்சேரி வணிகத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது: காங்., திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி 14 எதிர்க்கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்கிறது. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுவில், சிபிஐ, அமலாக்கத் துறை, போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை மட்டும் குறிவைத்து செயல்படுவதாகவும், பாஜகவில் இணையும் தலைவர்கள் மீதான வழக்குகள் அடிக்கடி கைவிடப்படுகிறது அல்லது முடித்துவைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், … Read more

ஜம்மு காஷ்மீரில் 700 மில்லியன் டாலர் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறுகின்றன – தஸ்லீமா அக்தார்

ஜம்மு-காஷ்மீர் தற்போது வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாக, ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான தஸ்லீமா அக்தார் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு ஜம்மு காஷ்மீர்  தயாராகி வருவதாகவும், புதிய நிர்வாகத்தின் கீழ் நகராட்சிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு 700 மில்லியன் டாலர் மதிப்புடைய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த தஸ்லீமா, தீவிரவாதம் … Read more

புதுச்சேரி கிராமப்புறங்களில் இருந்து நகரப்பகுதிக்கு ரூ.500 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: கிராமப்புறங்களில் இருந்து நகரப்பகுதிக்கு குடிநீர் தரும் திட்டம் ரூ.500 கோடியில் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி நகரப்பகுதி, கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் புதுச்சேரியில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை ?

புதுவை சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில்: ”சுற்றுலா மற்றும் ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற புதுவை மாநிலத்தில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த விளையாட்டில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மூழ்குவதும், அதன் காரணமாக பணத்தை இழந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டுக்களை வீடுகளில் இருந்து தான் விளையாடுகிறார்கள். அதை ‘கூகுள் பிளே ஸ்டோர்’ மற்றும் ‘ஆப்பிள் … Read more

துப்பாக்கி முனையில் மிரட்டி திருடிய பைக்கில் தப்பித்த அம்ரித்பால் சிங்

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை, போலீஸார் கடந்த 6 நாட்களாக தேடி வருகின்றனர். தேடுதல் வேட்டை தொடங்கிய கடந்த 18-ம் தேதி ஜலந்தரின் ஷாகோட் சுங்கச்சாவடி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். மெர்சிடஸ் எஸ்யூவி வாகனத்தில் முன் இருக்கையில் அம்ரித்பால் சிங் அமர்ந்துள்ளார். அதன்பின் அவர் மாருதி பிரஸ்ஸா வாகனத்தில் வேறு உடையில் இருக்கிறார். அதன்பின் உடையை மாற்றிவிட்டு பேண்ட், சட்டை அணிந்து தலைப்பாகையை மாற்றி மோட்டார் … Read more

ஆட்டம் காட்டும் XBB.1.16 வைரஸ்: இந்தியாவில் எகிறும் பாதிப்பு; மீண்டும் கலக்கம்!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில் ஒமிக்ரான் வகையை சேர்ந்த XBB.1.16 வைரஸின் தாக்கம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு மிக மோசமான நிலையோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. கடந்த மூன்று மாதங்களில் 344 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஒமிக்ரான் வகை மாதிரி அதன் அடிப்படையில் மகாராஷ்டிராவில் 105, தெலங்கானாவில் 93, கர்நாடகாவில் 57, குஜராத்தில் 54, டெல்லியில் 19 என ஒமிக்ரான் வகை புதிய … Read more

அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் அசாம் மாநில சிறைக்கு மாற்றம்..!

பஞ்சாபில் தேடப்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் சிலர் சிறையில் இருந்து தப்பிச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, அம்ரித் பாலின் கூட்டாளிகள் பலத்த பாதுகாப்புடன் அஸ்ஸாமில் உள்ள திப்ரூகர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நூற்றுக்கணக்கான அம்ரித்பால் ஆதரவாளர்கள் அஜ்னாலா காவல் நிலையத்தில் உருவிய வாள்களுடன் புகுந்து, கடத்தல் வழக்கில் கைதாகி லாக்கப்பில் இருந்த ஒருவரை விடுவித்த சம்பவம் போல மீண்டும் நடக்க வாய்ப்பிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் … Read more