ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். நேற்று இரவு முதல் திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். கடந்த பல வருடங்களுக்கு முன்பே இங்கு பொங்கலிடுவதற்காக 15 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் குவிந்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. உலகிலேயே … Read more

“நாட்டு நலனுக்காக நாளை முழுவதும் பிரார்த்தனை செய்யப் போகிறேன்” – அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது நாளை முழுவதும் நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்யப் போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (மார்ச் 7) வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நாட்டில் நடக்கும் விவகாரங்கள் மிகவும் கவலையளிக்கிறது. அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் அறிந்தததே. ஆனால், மணிஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின் ஆகிய … Read more

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக சேவை செய்து வரும் பெண்களை பாராட்டி பரிசு வழங்கிய நீதிபதி

ஸ்ரீகாளஹஸ்தி : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக சேவை செய்து வரும் பெண்களை பாராட்டி நீதிபதி பரிசு வழங்கினார்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தி நீதிமன்றத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, தனக்கென தனி பாணியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி  பலருக்கு முன்மாதிரியாக சமூக சேவை செய்து வரும் பெண்களை நீதிபதி பேபி ராணி பாராட்டி சான்றிதழ்களையும் நினைவு  பரிசுகளையும்  வழங்கினார். இதன்பின் நீதிபதி பேபி ராணி பேசியதாவது:பெண்கள் தினத்தை முன்னிட்டு சட்ட … Read more

உ.பி.யில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் கொலை வழக்கில் மற்றொரு குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

பிரயாக்ராஜ்: உ.பி.யில் எம்எல்ஏ கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ் பால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி நேற்று அதிகாலையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ல் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால், மர்ம நபர்கள் சிலரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மாஃபியாவாக இருந்து அரசியல்வாதியாக மாறியவரும் சமாஜ்வாதி முன்னாள் எம்.பி.யுமான அத்திக் அகமது, அவரது சகோதரரும் முன்னாள் எம்எல்ஏவுமான காலித் அசீம் மற்றும் … Read more

5வது முறையாக நெய்பியூ ரியோ முதல்வராக பதவியேற்றார்: நாகாலாந்தில் முதன்முறையாக எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டசபை!!

கொஹிமா: நாகாலாந்தில்,நெய்பியூ ரியோ 5வது முறையாக முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் இல.கணேசன்,ரியோவுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். கொஹிமா நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், தடிதுய் ரங்காவ், ஜெலியாங், யாந்துங்கோ பாட்டன்ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஜி கைடோ அயே, ஜேக்கப் ஜிமோமி, கேஜி கென்யே, பி பைவாங் கொன்யாக், மெட்சுபோ ஜமீர், டெம்ஜென் இம்னா அலோங், சிஎல் ஜான், சல்ஹவுடுவோனுவோ க்ரூஸ் மற்றும் பி பாஷாங்மோங்பா சாங் ஆகியோர் சட்டமன்ற … Read more

திறன்மிகு இளைஞர்களால் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை

அகமதாபாத்: குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்தில் குஜராத் அரசு ஏற்பாடு செய்திருந்த “ரோஜ்கார் மேளா” என்ற வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. பல துறைகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு திறன்மிகு பணியாளர்களை அதிக எண்ணிக் கையில் உருவாக்க வேண்டியது தற்போது அவசியமாகி உள்ளது. நமது … Read more

மேகாலயா முதலமைச்சரமாக கான்ராட் சங்மா பதவியேற்பு

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜக கூட்டணி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 அமைச்சர்களுக்கு கவர்னர் பாகுசவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தேசிய மக்கள் கட்சியைச் … Read more

லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வரும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பா 48 மணி நேரத்தில் சரணடைய நீதிமன்றம் உத்தரவு..!!

பெங்களூரு: லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வரும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பா 48 மணி நேரத்தில் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பாவுக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம், போலீசில் சரணடைய உத்தரவிட்டுள்ளது. பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பா, கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரின் மகன் பிரசாந்த் மதல் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்காளராக பணியாற்றி … Read more

பிரதமர் மோடியால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியா வசம் வந்துவிடும் – ஹரியாணா அமைச்சர் பேச்சு

சண்டிகர்: பிரதமர் மோடியால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓகே) இந்தியா வசம் வந்துவிடும் என்று ஹரியாணா மாநில அமைச்சர் கமல் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹரியாணா மாநிலம் ரோஹ்டாக் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்கள். இதற்கான குரல்கள் அங்கு ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. பிரதமர் மோடியின் நல்லாட்சி காரணமாக அடுத்த இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் … Read more

ரயில் டிக்கெட்டுடன், இனி இந்த விஷயமும் இலவசமாகக் கிடைக்கும்

இந்திய இரயில்வே: இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே மூலம் பயணம் செய்வது மிகவும் எளிதானது மற்றும் மலிவானது. அதே நேரத்தில், இந்திய ரயில்வேயால் நீண்ட தூரப் பயணங்களையும் எளிதாக முடிக்க முடியும். அதே நேரத்தில், ரயில்வே மூலம் பல முக்கிய வசதிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றைப் பற்றி மக்களுக்குத் தெரியாது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்… இந்த வசதி கிடைக்கும் ரயில் பயணத்திற்கான ரயில் டிக்கெட் எடுத்து ரயில் நிலையத்தை … Read more