திருவள்ளுவருக்கு மோடி புகழாரம்

புதுடெல்லி: திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த ஞானி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். இயல்பாகவே பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.  இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் … Read more

இனி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம்..!!

கொரொனோ தொற்று பரவும் அபாயம் இருப்பதால் கேரளாவில் மீண்டும் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் திரையரங்குகள், கடைகளில் சானிடைசைர்களை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த கட்டுப்பாடுகள் … Read more

ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பிரிவு அக்னி வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: இளைஞர்கள் அவசியம் திருக்குறள் படிக்க வலியுறுத்தல்

புதுடெல்லி: ராணுவத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அக்னி வீரர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம்தேதி ‘அக்னிபாதை’ திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய வற்றில் 17.5 வயது முதல் 21 வயது கொண்டவர்கள் சேர்க்கப்படுவர். அவர்கள் பயிற்சி காலத்தையும் சேர்த்து 4 ஆண்டுகள் அக்னி வீரர்களாக முப்படைகளில் பணியாற்றுவர். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பீரங்கி … Read more

வெளிநாடுகளில் படிக்க செல்லும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு

புதுடெல்லி: வெளிநாடு படிப்புக்கு செல்ல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் முன்பு மாநிலத்தில் போதுமான அதிகாரிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு வெளிநாட்டில் படிக்கும் விடுப்புக்கான ஒப்புதல் வழங்கும் முன்பு மாநில அரசிலும், ஒன்றிய அரசின் பணியிலும்  போதுமான எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் உரிய … Read more

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை தொடங்கியது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இவிஎம்) பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களை (ஆர்விஎம்) அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்காக எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் ஆர்விஎம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 72 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். ஆர்விஎம் எந்த வகையிலும் இணையத்துடன் இணைக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதையடுத்து ஆர்விஎம் குறித்து செயல் … Read more

ஐதராபாத்தின் 8வது நிஜாம் துருக்கியில் காலமானார்

திருமலை: ஐதராபாத்ததை ஆட்சி புரிந்து வந்த 8வது நிஜாம் துருக்கியில் காலமானார். அரசு மரியாதையுடன் ஐதராபாத்தில் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஐதராபாத்தை ஆட்சி புரிந்து வந்த 8வது நிஜாம் மீர் முகரம் ஜா(86), துருக்கியில் உள்ள  இஸ்தான்புல்லில் கடந்த சனிக்கிழமை  வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டு அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு இன்று ஐதராபாத்தில் … Read more

8வது வந்தே பாரத் ரயில் தொடக்கம்

ஐதராபாத்: செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது 8வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையாகும். இந்த ரயில் தெலங்கானா மற்றும் ஆந்திராவை சுமார் 700 கிலோமீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரயில் சேவை இது. இந்த வந்தே பாரத் விரைவு ரயில் ஆந்திராவில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் … Read more

கொச்சி பல்கலைக்கழகம் அனுமதி மாதவிலக்கு நாட்களில் மாணவிகளுக்கு விடுமுறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மாணவர் சங்கக் கூட்டமைப்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தின. இந்நிலையில் மாணவர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மாதவிலக்கு நாட்களில் மாணவிகளுக்கு விடுமுறை வழங்க கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு..!

டெல்லியில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு, பாஜகவினர் சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்து பூ தூவி வரவேற்பு அளித்தனர். பாஜகவின், 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று துவங்கிய நிலையில், பட்டேல் சவுக் பகுதியிலிருந்து துவங்கி, நாடாளுமன்றம் இருக்கும் வீதி வரை பிரதமர் பேரணியாக சென்றார். காரின் கதவினை திறந்து வைத்துக் கொண்டு, அதில் நின்றபடி பயணித்த பிரதமர் மோடி, தொண்டர்களின் வரவேற்பை கையைசத்து ஏற்றுக் கொண்டார்.  Source link

போதுமான தண்ணீர் இல்லாததால் கங்கை ஆற்றில் தரைதட்டிய ‘கங்கா விலாஸ்’

சாப்ரா: கடந்த வெள்ளியன்று தனது பயணத்தை தொடங்கிய மூன்றாவது நாளில், எம்வி கங்கா விலாஸ் கங்கை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சிக்கிக்கொண்டது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து ஆறுகளின் வழியாக சுமார் 3200 கி.மீ தூரம் செல்லும் உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் பயணத்தை பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உலகின் நீண்ட தூர ஆற்று வழி சொகுசு கப்பலான கங்கா விலாஸ் மூன்றாவது நாளான நேற்று பீகாருக்குள் … Read more