ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத் துறை தொடர்பான கோரிக்கை கடிதம் வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தலின்படி, இன்று (06.01.2023) டெல்லியில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத் துறை தொடர்பான கோரிக்கை கடிதம் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தரக் கோருதல்2. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவுதல்3. கோயம்புத்தூரில் புதிய … Read more

டெல்லி மேயர் தேர்தல்: ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட ஆம் ஆத்மி – பாஜக கவுன்சிலர்கள்!

டெல்லியில் இன்று நடைபெற மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. 15 ஆண்டுகால பாஜகவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி. 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சி தேர்தலில் பாஜக இரண்டாம் இடத்தை பிடித்தது இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் இன்று மாநகராட்சி … Read more

காங்கிரஸ் வளர்த்தெடுத்த ஜனநாயகத்தால் தான் மோடி பிரதமரானார்; கார்கே பேச்சு.!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ யாத்ரா” மூலம் ஈர்க்கப்பட்ட 1,000 கி.மீ.க்கும் அதிகமான நடைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநிலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய இந்த அணிவகுப்பு, மாநில தலைநகரில் இருந்து சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள “மந்தர்” மலைகளுக்கு அருகில் தொடங்கப்பட்டது. இந்த மலைகளானது இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது கட்சியின் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்முறையாக பீகாருக்கு வருகை தந்த … Read more

ஜம்மு – காஷ்மீரில் செயல்பட்ட டி.ஆர்.எப் அமைப்புக்கு தடை: உள்துறை அமைச்சகம் அதிரடி

புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீரில் செயல்பட்ட டி.ஆர்.எப் என்ற அமைப்புக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததால் அந்த அமைப்புக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான  தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டி.ஆர்.எஃப்) என்ற அமைப்பினர், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக உளவுத் தகவல்கள் உறுதி செய்தன. அதையடுத்து அந்த அமைப்புக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜம்மு காஷ்மீரில் … Read more

உ.பி மக்களை வாட்டும் குளிர்! ரத்தம் உறைதல், ரத்த அழுத்தத்தால் ஒரே நாளில் 25 பேர் பலி!

உத்திரபிரதேசத்தில் கடுமையான குளிர் காரணமாக ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 மணிநேரத்தில் 700க்கும் அதிக இதய நோயாளிகள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் கடுமையான குளிருக்கு ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் கடும் குளிர் அதிகரித்து வருவதால், மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக நேற்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். லக்னோவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இன்று காலையில் 7 … Read more

அமித்ஷா என்ன ராமர் கோயில் பூசாரியா?- காங்கிரஸ் தலைவர் கேள்வி.!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில், ராமர் கோவில் கட்ட, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. மேலும், அயோத்தியில் வேறொரு இடத்தில் மசூதி கட்ட முஸ்லீம் சமூகத்தினருக்கு இடம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட … Read more

விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால் விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை: விமானபோக்குவரத்துத்துறை எச்சரிக்கை

டெல்லி: விமானத்தில் ஒழுங்கீனமாக  நடந்துகொள்ளும் பயணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால் விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானபோக்குவரத்து ஒழுங்குமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் மற்றொரு நபர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான பயணத்தின் போது தவறாக நடக்கும் பயணிகள் மீது விமானத்தின் பைலட் மற்றும் பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ரூ.20 கோடி கொடுத்து ’நாய்’ வாங்கிய பெங்களூரு தொழிலதிபர்! அப்படி என்ன ஸ்பெஷல்!

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ. 20 கோடி கொடுத்து நாய் ஒன்றை வாங்கியிருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. வீட்டு விலங்குகளை வளர்ப்பதில் பலருக்கு அலாதி பிரியம் உண்டு. அதில் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான சதீஷ், அதிக நாய்களை வாங்கி வளர்த்து வருகிறார். அதிலும் அவர் சமீபத்தில் 20 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கியிருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடபோம்ஸ் கென்னல்ஸ் என்ற பெயரில் நாய் விற்பனை கடை வைத்திருக்கிறார், சதீஷ். இவர், இந்திய … Read more

நாட்டின் மொத்த செல்வத்தில் 50%, 100 பேரிடம் உள்ளது: ராகுல் காந்தி!…

நாட்டின் மொத்த செல்வத்தில் 50 சதவீதம் 100 பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், … Read more

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஷங்கர் மிஸ்ரா பணியில் இருந்து டிஸ்மிஸ்!

ஏர் இந்தியா விமானத்தில் மது போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சிக்கிய நபர், தாம் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் … Read more