ஜீவனாம்சம் விவகாரம்.. கூலிப்படையை ஏவி 2வது மனைவி கொலை.. உளவுப் பிரிவு அதிகாரி கைது..!

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் விஜால்பூர் ஸ்ரீநந்தநகர் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி பெண்ணின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் சில ஆண்டுகளாக அந்த குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மணீஷா தூதெல்லா (47) என்பது தெரியவந்தது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதில், கலீலுதீன் சையது என்ற தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், மணீஷாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து … Read more

மத்தியப் பிரதேசம் | பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய் 30, மிராஜ் 2000 போர் விமானங்கள் விபத்து

மொரீனா: மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம் என்றும் இன்னொன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் என்பதும் பாதுகாப்புப் படையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு விமானங்களும் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ பகுதியில் மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கிவிட்டப்பட்டுள்ளன. விபத்து நடந்த … Read more

Army Plane Crashed: இந்திய விமானப்படையின் சுகோய் விமானங்கள் விழுந்து நொறுங்கி விபத்து!

பரத்பூர்: ராஜஸ்தானில், இந்திய விமானப்படையின் சுகோய் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏற்பட்ட விபத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சுகோய், மிராஜ் 2000 ராணுவ ஜெட் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக இராணுவ வட்டாரங்களும் உறுதிபடுத்தின. ஜெட் விமானத்தின் சிதைவுகளும், விமானம் எரியும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின்றனா.  விபத்து தொடர்பான செய்தியை பரத்பூர் மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் உறுதிப்படுத்தினார். அதன்பிறக்கு, ராணுவத்தின் ஜெட் விமான விபத்து குறித்து, பாதுகாப்பு வட்டாரங்களும் உறுதிப்படுத்தின.  ராஜஸ்தான் விமான விபத்து விபத்து நடைபெற்ற இடத்திற்கு … Read more

புதுச்சேரிக்கு ரூ.11,600 கோடிக்கு முழு பட்ஜெட்டை மார்ச் மாதமே தாக்கல் செய்ய திட்டக்குழு முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2023 – 2024ம் நிதியாண்டிற்கு ரூ.11,600 கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்க திட்டக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வழக்கமாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி 2023-2024 ஆண்டின் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை … Read more

பெங்களூரு | விமானநிலையத்தை சுற்றி 10 கி.மீ. சுற்றளவில் இறைச்சி விற்க தடை: ஏரோ இந்தியா கண்காட்சியை முன்னிட்டு நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் “ஏரோ இந்தியா 2023” கண்காட்சி நடைபெற இருப்பதை முன்னிட்டு, யலஹங்கா விமானநிலையத்திலிருந்து 10 கி.மீ., சுற்றளவிற்கு இறைச்சி, அசைவ உணவு விற்பனை செய்ய தடைவிதித்து, ப்ரூஹட் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள யலஹங்கா விமானநிலையத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 14 வது “ஏரோ இந்தியா 2023” கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதனால், விமானநிலையத்தைச் சுற்றி 10 கி.மீ., தூரத்திற்கு இறைச்சி … Read more

BREAKING NEWS: இரு போர் விமானங்கள் விபத்து: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

மத்திய பிரதேசத்தில் இரண்டு போர் விமானங்கள் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் மத்திய பிரதேச மாநிலம் மொரீனா அருகே விபத்துக்குள்ளானது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பயிற்சி நடந்து கொண்டிருந்த குவாலியர் விமான தளத்தில் இருந்து இரண்டு விமானங்களும் புறப்பட்டன. இரு விமானத்தின் விமானிகளும் நல் வாய்ப்பாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் விமானப் படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்கு உள்ளானது.

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்க, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். பாதுகாப்பு குளறுபடியால் நேற்றைய நடைப்பயணம் தொடங்கிய உடனேயே ரத்து செய்யப்பட்ட நிலையில், அமித்ஷாவுக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த இரண்டு நாட்கள் நடைப்பயணத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால், ஸ்ரீநகரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் முடியும் வரை தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். Source link

இந்திய விமானப்படையின் 3 போர் விமானங்கள் அடுத்தடுத்து விபத்து

ராஜஸ்தான்: மத்திய பிரதேச மாநிலம் மொரீனா என்ற பகுதியில், இந்திய ராணுவத்தின் சுகோய்-30 மற்றும் Mirage 2000 ரக போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மேலும்  ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது

12 கி.மீ. இழுத்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு – குஜராத் கார் உரிமையாளர் கைது

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு அருகே உள்ளது பல்சானா. இங்குள்ள நெடுஞ்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. மோட்டார் சைக்கிளில் சென்றவர் காருக்கு அடியில் சிக்கி கொண்டார். எனினும் கார் நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து 12 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்டு அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீஸார் நடத்திய விசாரணையில், காருக்கு அடியில் சிக்கி உயிரிழந்தவர் பெயர் சாகர் பாட்டில் … Read more

ராகுல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கக்கோரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்

டெல்லி: ராகுல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கக்கோரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ்  தலைவர் மல்லகார்ஜுனே கார்கே கடிதம் எழுதியுள்ளார். ஸ்ரீநகரில் நாளை மறுநாள் நடக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடிய பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான பாதுகாப்புக் குறைபாடு குறித்து நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஸ்ரீ ராகுல் காந்தியின் பாதுகாப்பு விவரங்களுக்கு பொறுப்பான பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், யாத்திரை … Read more