மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் நாக்பூர் அலுவலகத்திற்கு தொலைபேசியில் மிரட்டல்

நாக்பூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் நாக்பூர் அலுவலகத்திற்கு இன்று மூன்று முறை தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்டிராவின் நாக்பூரைச் சேர்ந்தவர் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. இங்கு இவருக்கு அலுவலகம் உள்ளது. இந்நிலையில், இந்த அலுவலகத்தின் தொலைபேசி எண்ணுக்கு இன்று காலை 11.30 மணிக்கும், 11.40 மணிக்கும் தொலைபேசி மூலம் பேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை காவல் ஆணையர் … Read more

மக்களின் கனவு தவிடுபொடியாகிறது!.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்போது பஞ்சாப்பில் உள்ளது. இன்று லூதியானாவிலிருந்து கபுர்தலாவிற்கு ராகுல்காந்தி செல்கிறார். இந்நிலையில் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், ‘தற்போதைய ஒன்றிய பாஜக அரசால், நிரந்தர பொருளாதார நெருக்கடியை நாடு சந்திக்கும். இளைஞர்களிடையே வேலையின்மை, கடுமையான விலைவாசி உயர்வு, விவசாய துறையில் கடுமையான நெருக்கடி, நாட்டின் செல்வத்தை பெருநிறுவனங்கள் கைப்பற்றுதல் ஆகியன அதிகரித்துள்ளன. மக்கள் தங்களது வேலைகளை இழந்து வருவதால் அவர்களின் வருவாய் வெகுவாக குறைந்து வருகிறது. அவர்களின் … Read more

’பீஷ்மரைப் போன்ற தீர்க்கமானவர்கள் நீங்கள்…’ – ராணுவ வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

உத்தராகண்ட்: பீஷ்மரைப் போன்ற தீர்க்கமானவர்கள் என்று ராணுவ வீரர்களைப் பாராட்டியுள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். ஆண்டுதோறும் ஜனவரி 14-ஆம் தேதியன்று முன்னாள் படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர், “இந்திய புராணத்தில் பீஷ்ம பிதாமகனைப் போன்ற தீர்க்கமானவர் யாரும் இருக்க முடியாது. அவரைப் போன்ற முன்னாள் வீரர் யாருமில்லை. அவருடைய … Read more

காங்கிரஸ் எம்.பி. உயிரிழப்பு: பாரத் ஜோடோ யாத்ரா நிறுத்தி வைப்பு!

பஞ்சாபில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மயங்கி விழுந்த ஜலந்தர் காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் செளத்ரி உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக பாரத் ஜோடோ யாத்ரா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு … Read more

ஜோஷிமத் துயரம் | மறுகுடியமர்வு நடவடிக்கை தீவிரம் – மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

ஜோஷிமத்: நிலவெடிப்பு காரணமாக ஜோஷிமத் நகர கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடியமர்த்துவதற்கானப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் இமையமலை அடிவாரத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் ஏற்பட்ட நில வெடிப்பு காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இதுவரை 760 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதும், இவற்றில் 147 கட்டிடங்கள் வசிப்பதற்கு ஏற்றவை அல்ல என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற கட்டிடங்களில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். … Read more

மதிய உணவில் பாம்பு, நோய்வாய்பட்ட குழந்தைகள்: வைரலாகும் போட்டோஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பிர்பூமிலிருந்து அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அங்குள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் பாம்பு இருந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு மதிய உணவை பரிமாற பயன்படுத்தப்பட்ட பாத்திரத்தில் பாம்பு இருப்பது போன்ற பல படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மயூரேஸ்வர் பிளாக்கில் உள்ள பள்ளியில் சுமார் 30 மாணவர்கள் மதிய உணவில் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்டதாக அதிகாரிகள் … Read more

உணவு கொள்முதல் முறைகேடு மேலும் ஒரு அதிகாரி கைது: சென்னையிலும் ரெய்டு

புதுடெல்லி: உணவு கொள்முதல் முறைகேட்டில்  மேலும் ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்திய உணவு கழகத்திற்கு(எப்சிஐ) உணவு தானியங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் தொடர்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி மாநிலங்களில் 50 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் எப்சிஐ துணை பொது மேலாளர் ராஜீவ் குமார் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், உபி,கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று 19 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் எப்சிஐ மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.   ரூ.1.03  … Read more

வந்தே பாரத் ரயில் மீது கல்லெறிந்த 3 பேர் கைது

விசாகப்பட்டினம்: செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இரு தெலுங்கு மாநிலங்களை இணைக்கும் விதத்தில் இந்த வந்தேபாரத் ரயில் பாதை அமைந்துள்ளது. இது நாட்டின் 8-வது வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில், கடந்த புதன்கிழமையன்று சென்னையில் இருந்து சோதனை ஓட்டமாக விசாகப்பட்டினம் வந்தடைந்தது. அப்போது, விசாகப்பட்டினம் அருகே கஞ்சரபாளையம் எனும் இடத்தில் வரும்போது, … Read more

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடக்கம்: பிப்.1ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை 2 கட்டமாக நடைபெறும் என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 23ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்கட்சிகள் கடும் … Read more

"2019ம் ஆண்டு வெற்றியை பாஜகவால் திரும்பப் பெற முடியாது" – காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து

கோழிக்கோடு: “கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை பாஜகவால் 2024ம் ஆண்டு திரும்பவும் பெற முடியாது. அக்கட்சி நாடாளுமன்றத்தில் 50 இடங்களை இழக்கும்” என்று திருவனந்தபுரம் எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் பல மாநிலங்களில் அவர்கள் வெற்றியை பறிகொடுத்துள்ளனர். … Read more