பிஹார் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு: ஜன.20-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: பிஹாரில் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், அவசர வழக்குகளாக வரும் 20-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 7-ம் தேதி தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். இதை அடுத்து இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் … Read more

யார் இந்த ஜிலேபி பாபா? 100 பெண்களுக்கு மேல்… நாட்டையே உலுக்கிய பயங்கரம்!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஏதேனும் ஒரு வகையில் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. எங்காவது ஒரு மூலையில் அவலக் குரலும், கண்ணீர் கதையும் வெளியாகி நெஞ்சை உலுக்கி விடுகிறது. அந்த வரிசையில் 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்ற அடையாளத்துடன் ஒரு பெயர் தீயாய் பரவி கொண்டிருக்கிறது. ஜிலேபி பாபா… இதென்ன வித்தியாசமான பெயர்? எனக் கேட்பதை விட இவரது பின்னணி குறித்து அறிந்தால் இவ்வளவு மோசமான நபரா? என நடு … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. ஜனவரி.16-ம் தேதிக்குள் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரும் சோகம்.. ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து.. மூன்று வீரர்கள் உயிரிழப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில், மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் இளநிலை அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் நேற்று (ஜன.10-ம் தேதி) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனம் பனி மூடிய பாதையில் சறுக்கி, ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இதில் நைப் சுபேதார் பர்ஷோதம் குமார், ஹவில்தார் அம்ரிக் சிங் மற்றும் சிப்பாய் அமித் சர்மா … Read more

“நான் அன்றே எச்சரித்தேன்… இனி நமது பொறுப்பு…” – ஜோஷிமத் பேரிடர் குறித்து உமா பாரதி

ஜோஷிமத்: கொள்கைத் திட்டம் வகுப்பவர்களால் உத்தராகண்ட், இமயமலை ஆகிய பகுதிகள் ஒருநாள் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான உமா பாரதி தெரிவித்துள்ளார். பாஜவைச் சேர்ந்த உமா பாரதி, நிலவெடிப்பு காரணமாக மண்ணில் புதைந்துவரும் ஜோஷிமத் நகருக்குச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் இதுபோன்ற திட்டங்களுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளனர். இந்தக் கொள்கை வகுப்பாளர்கள் உத்தராகண்டை ஒருநாள் இல்லாமல் செய்துவிடுவார்களோ என்று … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பதிலடி தர கிராம பாதுகாப்பு படை அமைப்பு: எல்லையோர கிராமத்தினரை பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை..!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் எதிர்தாக்குதல்கள் நடத்தும் விதமாக எல்லையோர கிராம மக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரஜவுரி மாவட்டத்தின் டாங்கிரி கிராமத்தில் அண்மையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க பாதுகாப்பு படையினருக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து கிராம பாதுகாப்பு … Read more

கோல்டன் குளோப் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் – பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதினை வென்றுள்ளதை அடுத்து, படத்தின் இசை அமைப்பாளர் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”கோல்டன் குளோப் விருது வென்றிருப்பது மிகவும் சிறப்பான சாதனை. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பிரேம் ரக்‌ஷித், கால பைரவா, சந்திரபோஸ், ராகுல் சிப்லிகுஞ்ச் ஆகியோருக்கு பாராட்டுக்கள். எஸ்.எஸ்.ராஜமவுலி, ராம் சரண் உள்பட ஆர்ஆர்ஆர் படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் … Read more

4 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு ஜெகன்மோகன் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை-தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு

திருப்பதி: ‘4 ஆண்டுகால ஜெகன்மோகன் ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை’ என்று தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி விமர்சித்துள்ளது.திருப்பதியில் தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி மாநில செயலாளர் ரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை.  தேர்தலுக்கு முன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேலையில்லாதோருக்கான வேலை காலண்டரை வெளியிடுவோம் என்று கூறி இதுவரை அதனை செயல்படுத்தவில்லை.  ஜெகன்மோகன் ரெட்டியின் … Read more

பஞ்சாப் | இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு முன்பாக ஃபதேகர் சாஹிப் குருத்வாரா சென்ற ராகுல் காந்தி

ஃபதேகர் சாஹிப்(பஞ்சாப்): பஞ்சாபில் இருந்து தனது இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பாக ராகுல் காந்தி, ஃபதேர் சாஹிப் குருத்வாரா சென்று வழிபட்டார். காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரை பயணத்தை புதன் கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந் பகுதியில் இருந்து தொடங்கினார். இதற்காக அவர் செவ்வாய்க்கிழமை மாலையிலேயே சிர்ஹிந்த் வந்தடைந்தார். புதன்கிழமை காலையில் யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, ஃபதேகர் சாஹிபில் உள்ள குருத்வாரா சென்று … Read more

பொதுக்குழு கூட்டத்தில் இடம்பெறாத நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓபிஎஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்?: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

டெல்லி: ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய ஒரு எதிர்க்கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதம் செய்தார். கட்சியில் என் ஆதரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும், அதன் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்: எடப்பாடி தரப்பு வாதம் அதிமுக கட்சியில் உச்சபட்ச அதிகாரத்தை பொதுக்குழு கொண்டுள்ளது. … Read more