மதங்களும், மொழிகளும் நம்மை ஒருங்கிணைத்துள்ளன: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை..!

டெல்லி: மதங்களும், மொழிகளும் நம்மை ஒருங்கிணைத்துள்ளன என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 74வது குடியரசு தினவிழா நாளை (26ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில் மிகுந்த எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் இவ்விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மூவர்ண கொடியேற்றுகிறார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு … Read more

‘அனைவரின் நிலையையும் உயர்த்துதல்’ என்பது இன்னும் எஞ்சி இருக்கிறது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

புதுடெல்லி: “பாபாசாஹேப் அம்பேத்கரும் பிறரும், நமக்கு ஒரு வரைபடத்தையும், தார்மிகக் கட்டமைப்பையும் அளித்தாலும், அந்தப் பாதையில் பயணிப்பது என்பது நமது பொறுப்பாக இருந்தது. நாம் பெரும்பாலும் அவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மெய்யானவர்களாகவே நடந்திருக்கும் அதே வேளையில், காந்தியடிகளின் ஆதர்சமான சர்வோதயம் என்ற அனைவரின் நிலையையும் உயர்த்தல் என்பது நிறைவேற்றப்படாமல் இன்னும் எஞ்சி இருக்கிறது என்பதையும் நான் உணர்ந்திருக்கிறோம். இருந்தாலும், அனைத்து முனைகளிலும் நாம் கண்டிருக்கும் முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக இருக்கிறது” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். நாட்டின் … Read more

'ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட காரணம் உண்டு' – ஜனாதிபதி திரெளபதி முர்மு

“ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட காரணம் உண்டு,” என, குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்து உள்ளார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திரம் அடைந்த இந்தியா, 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு நாடானது. அதன்படி, இந்தியத் திருநாட்டின் 74வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, குடியரசு தினத்திற்கு முந்தைய … Read more

உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது-குடியரசு தினத்தையொட்டி குடியரசு தலைவர் உரை

குடியரசு தினம் – ஜனாதிபதி உரை நாட்டின் 74வது குடியரசு தினத்தையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை அரசியலமைப்பு சட்டத்தைப் பின்பற்றுவது குடிமக்களின் கடமை பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் நம்மை ஒன்றிணைத்துள்ளன ஒற்றுமைக்கு இந்தியா எடுத்துக் காட்டாக திகழ்கிறது மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு பயனளித்து வருகின்றன ரேசனில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது சட்டமேதை அம்பேத்கருக்கு இந்த நாடு எப்போதும் கடமைப்பட்டுள்ளது வேற்றுமையில் … Read more

பட்ஜெட்டுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை: நிதியமைச்சக வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: பொது பட்ஜெட்டுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகை திட்டங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பிப். 1ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தாண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஒன்றிய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக … Read more

பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப முயன்ற மாணவர்கள் மீது கல்வீசி தாக்குதல் – ஜே.என்.யுவில் பரபரப்பு

பிரதமர் மோடிக்கு எதிராக பிபிசி தயாரித்திருந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப முயன்ற டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீது கல்வீசி தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அம்மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து நாட்டு ஊடகமான பிபிசி கடந்த 17ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. ‘India: The Modi Question’ என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி … Read more

கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் தடை நீக்கம்; சினிமா துறை குறித்து கடும் சாடல்.!

தமிழில், தாம்தூம் படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பேசும் தலைவி திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்துவருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அந்த மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து நடிகை கங்கனா ரனாவத் வன்முறை தூண்டும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருசில … Read more

நடுரோட்டில் நின்று கொண்டு ஆபாச ‘ரீல்’ வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணுக்கு ரூ17,000 அபராதம்

காசியாபாத்: உத்தரபிரதேசத்தில் நடு ரோட்டில் நின்று கொண்டு ஆபாச ரீல் வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணுக்கு ரூ.17,000 அபராதம் விதிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த வைஷாலி சவுத்ரி என்ற இளம்பெண், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ‘ரீல்’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார். இந்நிலையில் சாஹிபாபாத் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் காரின் முன்பாக நின்றுகொண்டு ஆபாச செய்கையில் ரீல் வீடியோவை தயாரித்து வைஷாலி சவுத்ரி வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது மட்டுமின்றி, பலரது கண்டனங்களுக்கும் … Read more

பஞ்சாப் உளவுத்துறை தலைமையத்தில் குண்டு வீசி தாக்குதல்; முக்கிய நபர் கைது.!

கடந்த ஆண்டு மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை தலைமையகத்தில் கையெறி குண்டு வீசி தாக்கியதில் முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதி ஒருவர் உத்தரபிரதேசத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரி இன்று தெரிவித்தார். ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சுரக்பூரில் வசிக்கும் தீபக் ரங்கா புதன்கிழமை காலை கோரக்பூரில் இருந்து கைது செய்யப்பட்டதாக மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த ஆண்டு மே மாதம் மொஹாலியில் … Read more

அதிர்ச்சி… அரசு வேலைக்காக 5 மாத குழந்தையை கொன்ற கொடூர பெற்றோர்

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் மாவட்டத்தில் ஒரு தம்பதியை போலீசார் கடந்த திங்கட்கிழமை (ஜன. 23) அன்று கைதுசெய்துள்ளனர். அவர்களின் 5 மாத குழந்தையை கால்வாயில் தூக்கிவீசியதற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் அந்த கொலைக்கு கூறிய காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள சந்தாசர் கிராம அரசு பள்ளியில் உதவியாளராக பண்ணியாற்றி வந்துள்ளார், ஜான்வர்லால். அரசு பள்ளியில் ஒப்பந்ததின் அடிப்படையில் பணியாற்றி வந்த இவர், தனது பணி நிரந்தரமாவதற்காக காத்திருந்துள்ளார். ஜான்வர்லால் மற்றும் அவரது … Read more