டெல்லி மேயர் யார்? இன்னிக்கு பெரிய சம்பவம்; முட்டி மோதும் ஆம் ஆத்மி, பாஜக!

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேட்சைகள் 3 பேர் என வெற்றி பெற்றனர். முதல்முறை ஆம் ஆத்மி தனிப் பெரும்பான்மை பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மேயர் யார் என்பதை தேர்வு செய்ய கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாநகராட்சி கூட்டம் கூடியது. டெல்லி … Read more

Budget 2023: தள்ளிப்போடப்பட்டதா வங்கி தனியார்மயமாக்கல்? காரணம் என்ன?

பட்ஜெட் 2023: 2023 பட்ஜெட் குறித்து அரசுக்கு உள்ள முக்கிய செயல்திட்டங்களில் வங்கி தனியார்மயமாக்கல் முன்னணியில் இல்லை என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன. இருப்பினும், கடந்த ஆண்டில், தனியார்மயமாக்கல் பற்றி அதிகம் பேசப்பட்டது, வங்கி தொழிற்சங்கங்களும் இந்த யோசனையை கடுமையாக எதிர்த்தன. நிதி அமைச்சகம் ஜனவரி 19 அன்று பொது வங்கிகளின் தலைவர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட முக்கிய விஷயங்களில் வங்கி தனியார்மயமாக்கல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  எங்கள் … Read more

குளிர்கால கூட்டத்தொடரில் நியமன எம்.பி.க்களில் ஒருவரான இளையராஜாவின் வருகை பதிவு பூஜ்ஜியம்

டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரில் நியமன எம்.பி.க்களில் ஒருவரான இளையராஜாவின் வருகை பதிவு பூஜ்ஜியமாக கருதப்பட்டுள்ளது. டிசம்பர் 2022-ல் 13 நாட்கள் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் … Read more

கர்நாடகாவில் ஹிஜாப் தடை மீதான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிசீலனை

புதுடெல்லி: கர்நாடகாவில் ஹிஜாப் தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அம்மாநில பாஜக அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதற்கு எதிரான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை உறுதி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் … Read more

அன்பான, புத்திசாலியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் – ராகுல் காந்தி

அன்பான, புத்திசாலியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில், திருமணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ராகுல், சரியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் பெண் குறைந்தபட்சம் இரண்டு குணாதிசயங்களுடன் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அந்தப் பெண் தனது தாயார் சோனியா மற்றும் பாட்டி இந்திராவின் … Read more

ஷ்ரத்தா படுகொலை வழக்கில் டெல்லி காவல்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்.?

டெல்லி: ஷ்ரத்தா படுகொலை வழக்கில் டெல்லி காவல்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக தகவல் தெரியவந்துள்ளது. அப்தாப் பூனாவாலாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகையை டெல்லி சாக்கேட் கோர்ட்டில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

ட்ரோன் கேமரா இயக்க விரைவில் தடை – திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தடை செய்யப்பட்ட இடங்களில் ட்ரோன் கேமராவை உபயோகித்து சமீபத்தில் வீடியோ படம் எடுக்கப்பட்டது. இது கோயில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என பலர் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் நேற்று திருமலையில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது: பாதுகாப்பு கருதி திருமலையில் இனி ட்ரோன் கேமராக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட உள்ளது. இது குறித்து விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும். பக்தர்களின் உடமைகளை பாதுகாப்பாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு … Read more

குடியரசு தினத்தையொட்டி, டெல்லி வான்பகுதியில் டிரோன்கள், ஏர் பலூன்கள் பறக்க தடை

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி, டெல்லி வான்பகுதியில் டிரோன்கள், ஏர் பலூன்கள், பாராகிளைடர்கள் ஆகியவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, குடியரசு தினத்தையொட்டி, வழக்கம்போல் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும், பயங்கரவாதிகளும், இந்தியாவுக்கு எதிரானவர்களும் டிரோன்கள், பாராகிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் … Read more

காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்

ஜம்மு: காஷ்மீரில் வசிக்கும் இந்து பண்டிட் சமூகத்தினருக்கு அநீதி இழைத்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். ராகுல் காந்தி தொடங்கிய பாரத ஒற்றுமைப் பயணம் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ஜம்முவில் நேற்று நடைபெற்ற பாத யாத்திரையின் போது ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: இன்று காஷ்மீரி பண்டிட்டுகளின் பிரதிநிதிகள் என்னை சந்தித்து இங்கு நடக்கும் அவலநிலை … Read more

ஏழுமலையானுக்கு கொட்டிய ரூ.650 கோடி… செம சர்ப்ரைஸ் ஆன திருப்பதி தேவஸ்தானம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலை தேவஸ்தானம் (TTD) நிர்வகித்து வருகிறது. இந்த தேவஸ்தானம் ”ஸ்ரீ வெங்கடேஸ்வர அலயால நிர்மானம் ட்ரஸ்ட்” (Srivani) என்ற பெயரில் அறக்கட்டளையை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இதில் பக்தர்கள் பலரும் தொடர்ச்சியாக நன்கொடை அளித்து வருகின்றனர். ஸ்ரீவானி ட்ரஸ்ட்கடந்த 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்ரீவானி ட்ரஸ்ட், இந்து சனாதன தர்மத்தை நிலைநாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக எஸ்.சி, எஸ்.டி, பி.சி காலனிகளில் கோயில்கள் கட்டுவது, … Read more