800 பேருக்கு வேலைவாய்ப்பு – ஸொமேட்டோவின் மாஸ் அறிவிப்பு

நிலையற்ற பொருளாதார சூழல் காரணமாக ஆளாளுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையை கையிலெடுத்துள்ள நிலையில், தங்களது நிறுவனத்தில் புதிதாக 800 பேருக்கு வேலை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது ஸொமேட்டோ. உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தம் காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை கொத்துக்கொத்தாக வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. நிலையற்ற பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ஆளாளுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையை கையிலெடுத்துள்ள நிலையில், தங்களது நிறுவனத்தில் புதிதாக … Read more

"பசுஞ் சாணம் பூசப்பட்ட வீட்டை கதிர்வீச்சு கூட தாக்காது" – குஜராத் நீதிபதி கருத்து

அகமதாபாத்: பசுவின் சாணம் பூசப்பட்ட வீட்டில் கதிர்வீச்சு கூட தாக்காது என்று குஜராத் மாநில செசன்ஸ் கோர்ட் நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. குஜராத் மாநிலம் தாபி மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதி சமீர் வியாஸ். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர் பசு கடத்தல் வழக்கு ஒன்றை விசாரித்தார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பசுக்களையும், எருதுகளையும் கடத்திய அவருக்கு பல்வேறு சட்டங்களின் … Read more

சுருக்குமடி வலையை பயன்படுத்த நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி

கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மீனவர்கள் பயன்படுத்தும் சுருக்குமடி வலையால் கடல்வளம், சிறிய மீன் வகைகள், பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி இந்த வலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிராக சில மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி போபண்ணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு கூறியது. அதில், கரையில் இருந்து 12 கடல் மைல்களுக்கு அப்பால் மட்டுமே சுருக்குமடி வலையை திங்கள் மற்றும் … Read more

பிரதமர் தேர்வு திருவிழா 1921 தொலைபேசி எண்ணிலும் கருத்து கூறலாம்: பாஜக அறிவிப்பு

டெல்லி: பிரதமர் மோடி 27ம் தேதி நடத்தும் தேர்வுதிருவிழாவில் 1921 தொலைபேசி எண்ணிலும் கருத்து கூறலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது. தொலைபேசி எண் 1921ஐ டயல்செய்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்  கருத்து தெரிவிக்கலாம் என்றும் பாஜக கூறியுள்ளது.

”பாஸ்வேர்ட் ஷேரிங் செய்தால் கட்டணம் கட்டாயம்” எப்போது முதல் தெரியுமா? – Netflix அதிரடி!

ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு மிகவும் உறுதுதணையாக ஓ.டி.டி தளங்களே செயல்பட்டன. தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாமல் இருந்தவர்களுக்கு இவை ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவே இருந்தது. இதனால் ஓ.டி.டி. தளங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அந்தந்த நிறுவனங்களும் பல முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்தன. குறிப்பாக அதிரடியாக விலையில் மாற்றம் செய்தது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஒரே நேரத்தில் ஓ.டி.டி. தளத்தை பயன்படுத்த முடியும் என பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், Netflix-ல் கணக்கு … Read more

சென்னை ஐஐடி உருவாக்கிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

புதுடெல்லி: சென்னை ஐஐடி உருவாக்கிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ‘BharOS’-ஐ, மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். ஸ்மார்ட் போன்களின் இயக்கத்திற்கு அடிப்படையாக இருப்பவை OS எனப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம். ஆண்ட்ராய்டு, iOS ஆகிய OSகள் சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வரும் தற்சார்பு இந்தியா கொள்கையின் அடிப்படையில் சென்னை ஐஐடி மாணவர்கள் சுதேசி ஆபேரட்டிங் சிஸ்டத்தை … Read more

பெயரில்லாத அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வீரர்களின் பெயர்!

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பராக்ரம தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அவரது பிறந்தநாளையொட்டி, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெயரில்லாத 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவிடத்தின் மாதிரியை திறந்து வைத்தார். … Read more

கேரளாவில் பள்ளி மாணவர்கள் 62 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு

கேரள: நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மூலம் மாணவர்களுக்கும் நோரா வைரஸ் பரவி இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து … Read more

ஸ்ரத்தா வாக்கர் படுகொலை விவகாரம் – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய டெல்லி போலீஸ் திட்டம்

டெல்லியில் இளம்பெண் ஸ்ரத்தா வாக்கர் படுகொலை விவகாரத்தில் டெல்லி காவல்துறை இன்றைய தினம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  டெல்லியில் தனது காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி அதனை டெல்லியின் பல இடங்களில் வீசிய விவகாரத்தில் இளம் பெண் ஸ்ரத்தா வாக்கரின் காதலர் அப்தாப் பூனவாலா டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவரது … Read more

குடியரசு தின அணிவகுப்பில் 23 அலங்கார ஊர்தி பங்கேற்பு

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளன. நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த அணிவகுப்பில் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் 17 ஊர்திகளும் மத்திய … Read more