சித்தராமையா குறித்து சர்ச்சை புத்தகம்; பாஜகவின் வேலை என காட்டம்.!

கர்நாடகா மாநிலத்தில் வருகிற ஏப்ரல்-மே மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா குறித்து புத்தகம் ஒன்று வெளியிடப்பட உள்ளது. புத்தக வெளியீட்டு விழா பற்றிய சுவரொட்டிகளில், அதன் அட்டையில் திப்பு சுல்தானைப் போன்ற உடையை அணிந்து, வாள் ஏந்திய சித்தராமையாவின் படத்தைக் கொண்ட புத்தகங்களின் நகல்க உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் சி என் அஸ்வத் நாராயண் தலைமை தாங்கி … Read more

சபரிமலை கோயில் தேவசம் போர்டுக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு

எர்ணாகுளம்: சபரிமலை கோயிலுக்குள் சினிமா போஸ்டர்கள் எடுத்து வருவது, இசைக்கருவிகள் இசைப்பதற்கு தடை விதிக்குமாறு தேவசம் போர்டுக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், வழிபாடு செய்ய உரிமை உள்ளது; ஆனால், அது கோயிலின் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்டபட்டதாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.

பஞ்சாப்: மனைவியை கொன்றுவிட்டு ராணுவ உயர் அதிகாரி விபரீத முடிவு! கடிதம் சிக்கியது!

பஞ்சாபில் ராணுவ உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஒருவர், தனது மனைவியை கொன்றுவிட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபில் ஃபெரோஸ்பூர் நகரில் வசித்து வந்த இந்திய ராணுவ உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், வீட்டினுள் அவரது மனைவியும் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி லெப்டினன்ட் கர்னல், தற்கொலை குறிப்பை எழுதி வைத்துவிட்டு தன்னைத்தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்துகொண்டதும், அந்த … Read more

இமாச்சலில் அமைச்சரவை விரிவாக்கம்: 7 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

சிம்லா: இமாச்சல பிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் 7 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். கடந்த நவம்பர் 12-ம் தேதி இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜகவுக்கு 25 இடங்கள் கிடைத்தன. கடந்த டிசம்பர் 11-ம் தேதி இமாச்சல பிரதேசத்தின் 15-வது முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் … Read more

பொது சிவில் சட்டம்: மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா எதிர்ப்பு!

“பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம்,” என, மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் சங்கா தெரிவித்து உள்ளார். வட கிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தில் முதலமைச்சர் கன்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநில சட்டப்பேரவைக்கு வரும் மார்ச் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க ஆளும் தேசிய மக்கள் கட்சி கடுமையாக … Read more

டெல்லியில் கடும் பனி மூட்டம்.. 267 ரயில்கள் ரத்து – 170 ரயில்கள் தாமதமாக இயக்கம் – ரயில்வே துறை

டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக, விமானங்கள் மற்றும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 267 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சுமார் 170 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. குளிர் அலை காரணமாக பள்ளிகள் திறப்பதை, ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கினர். டெல்லியின் பல பகுதிகளிலும், பஞ்சாப், ஹரியானா, பீகார் போன்ற மாநிலங்களிலும் நாளை வரை, அடர் பனி மூட்டம் நிலவும் என, இந்திய … Read more

வாட்டி, வதைக்கும் குளிரால் உறைந்து கிடக்கும் வடமாநிலங்கள்: உபி.யில் ஒரே வாரத்தில் 98 பேர் பலி..!

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நிலவிவரும் கடும் குளிரால் கான்பூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. வடமாநிலங்களில் கடும் குளிர்வாட்டி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்போருக்கு நிரந்தர தங்கும் இடமும், தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். நொய்டா, காஜியாபாத், அயோத்தி, … Read more

மோசடி வழக்கில் கைதான சந்தா கோச்சார் விடுதலை – விசாரணையில் பரபரப்பு வாதம்!

பணமோசடி வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாரையும், அவரது கணவர் தீபக் கோச்சாரையும் விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 9) அனுமதி வழங்கியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். அப்போது சந்தா, வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகார் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து … Read more

“உலகின் திறமை மிக்க மனித வளத்தின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது” – பிரதமர் மோடி

இந்தூர்: “உலகின் திறமை மிக்க மனித வளத்தின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 17-வது ஆண்டு கருத்தரங்கம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. எனினும், பிரதமர் நரேந்திர மோடி அதனை இன்று முறைப்படி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த ஆண்டு கருத்தரங்கம் பல வகைகளில் சிறப்பு பெற்றுள்ளது. … Read more

மோடி பிரச்சாரத்திற்கு வந்தால் வேலையை பற்றி கேளுங்கள்; காங்கிரஸ் தலைவர்.!

கர்நாடகா மாநிலத்தில் வருகிற ஏப்ரல்-மே மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த எஸ்சி/எஸ்டி சமூகங்களின் பெரிய மாநாட்டான “ஐக்யதா சமவேஷ்” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ஏஐசிசி பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்பட ஏராளமான கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் … Read more