மத்திய பிரதேச அரசு மருத்துவமனையின் பிணவறையில் இருந்த சடலத்தின் கண்கள் மாயம்: எலிகள் தோண்டி தின்றுவிட்டதாக பகீர் தகவல்

சாகர்: மத்திய பிரதேச அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் கண்களை எலிகள் கடித்து தின்றுவிட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் கண்களை காணவில்லை என்ற புகார் வந்துள்ளது. மாயமான கண்களை எலிகள் தோண்டி எடுத்து சாப்பிட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் கண்களை எலிகள் கடித்து தின்ற சம்பவம் நடந்துள்ளது. அதனால் மீண்டும் அதே மருத்துவமனையில் இதேபோன்ற … Read more

ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு; ராகுல் காந்திக்கு விடப்பட்ட எச்சரிக்கையா.?

கன்னியாகுமரியிலிருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி, ராகுல் காந்தி நடை பயணத்தை துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ஜம்மு – காஷ்மீரில் நுழைந்துள்ளது. அங்கு லகான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, ராகுல் காந்தியை வரவேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் … Read more

பிரதமர் மோடியை குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தின் வீடியோக்கள் முடக்கம்..!

பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தின் வீடியோக்களை, மத்திய அரசு உத்தரவின்பேரில் யூடியூப், டிவிட்டர் நிறுவனங்கள் முடக்கியுள்ளன. அண்மையில் பிபிசி வெளியிட்ட 2 அத்தியாயங்களை கொண்ட ஆவணப்படம், குஜராத் கலவரத்தில் பிரதமரை தொடர்புப்படுத்தி இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆவணப்படங்கள் குறித்த வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளது. Source link

வீரர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளை மறுத்து இந்திய மல்யுத்த சங்கம் ஒன்றிய அரசுக்கு பதில் கடிதம்..!!

டெல்லி: வீரர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளை மறுத்து இந்திய மல்யுத்த சங்கம், ஒன்றிய விளையாட்டுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்திய மல்யுத்த சங்கம், ஒன்றிய விளையாட்டுத்துறைக்கு 8 பக்கங்கள் கொண்ட பதில் கடிதம் அனுப்பியுள்ளது. மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார்களை மறுத்து ஒன்றிய விளையாட்டுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

பாஜக பிரமுகர் கொலை.. துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம்.. என்.ஐ.ஏ. அறிவிப்பு..!

தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் நெட்டார் (31). பாஜக பிரமுகரான இவர் கோழி இறைச்சிக்கடை நடத்தி வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு … Read more

மோடி, அமித்ஷா யார் வந்தாலும் வெற்றி எங்களுக்கு தான்; சித்தராமையா உறுதி.!

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 (36.35%), காங்கிரஸ் 80 (38.14%), மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 (18.3%), மற்றவை 3 என வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு … Read more

காசியாபாத்தில் 6 வயது சிறுமி அடித்துக் கொலை! ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் 6 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்டார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. செங்கல்லால் அவர் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் மோடிநகர் பகுதியில் உள்ள கடனா பகுதியில் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில், தனது மகனைக் கொன்றதாகக் கூறி … Read more

ஜம்முவின் நர்வால் பகுதியில் இரட்டை குண்டுவெடிப்பு: குடியரசு தினத்துக்கு 4 நாட்களே இருக்கும் நிலையில் தாக்குதல்..!!

ஜம்மு காஷ்மீர்: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வரும் ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவின் நர்வால் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் இன்று காலை 11.20 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இரட்டை குண்டுவெடிப்பில் 7 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் நிகழ்விடத்திற்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதை அடுத்து அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் … Read more

வோட்காவுடன் புத்தக் கோயிலில் நுழைந்த ரஷ்ய புத்த துறவி.. சிறையில் தள்ளிய பீகார் போலீஸ்!

மதுபானத்துடன் பீகாரில் உள்ள புத்த கோயிலுக்குள் ரஷ்யாவைச் சேர்ந்த புத்த துறவி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புத்த துறவிகளுக்கான புனித தலமாகவே கருதப்படுகிறது பீகாரில் உள்ள மகாபோதிக் கோயில். அங்கு வெளிநாட்டு பயணிகள் பலரும் ஆண்டுதோறும் வருகை தருவது வாடிக்கை. அந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த புத்த துறவியான இடிப்சி அயாஸ் என்பவரும் நேற்று மகாபோதிக் கோயிலுக்கு சென்றிருக்கிறார். கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு அந்த ரஷ்ய நாட்டினரின் உடமைகளை போலீசார் சோதித்திருக்கிறார்கள். அப்போது அவரது பையில் 10 மில்லி … Read more

பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்த பதிவுகள் நீக்கம்; திரிணாமுல் எம்பி சாடல்.!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளது. பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசின் ரகசிய விசாரணையில் கலவரத்துக்கு மோடியே நேரடி காரணம் என தெரியவந்ததாக ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி … Read more