மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை; 7 பேர் கொண்ட குழு அமைப்பு.!

உத்தரபிரதேச பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 18ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் 4 இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன..!

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் 4 இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நடப்பாண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் வருகின்ற 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் குஜராத்தி மொழித் திரைப்படமான செல்லோ ஷோ (Chhello Show) இடம்பெற்றுள்ளது. RRR திரைப்படத்தில் உள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்படுகிறது. சிறந்த ஆவணப் படத்திற்கு ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற ஆவணப்படமும், சிறந்த ஆவண குறும்படத்திற்கு தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற … Read more

பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் அபராதம்: விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு

டெல்லி: பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவு அளித்துள்ளது. பிரச்சனையை முறையாக கையாளவில்லை என்று கூறி ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு அளித்துள்ளது. அநாகரிக நிகழ்வு நடந்தபோது விமானத்தை இயக்கிய விமானியின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதத்துக்கு ரத்து செய்தும் உத்தரவு அளித்துள்ளனர். விமான சேவை பிரிவு இயக்குனருக்கும் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். … Read more

மூதாட்டியின் வினோத பழக்கம்..!! நோ சாப்பாடு…ஒன்லி டீ, காபி..!!

உலகம் முழுவதும் மனிதர்கள் பார்க்க ஒன்றுபோல இருந்தாலும் பலர் பல விதங்களில் மாறுபட்டவர்களாகவே இருக்கின்றனர். பலருக்கு பல உணவுகள் அலர்ஜியாக இருப்பதால் வாழ்நாள் முழுக்கவே அப்படியான உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பார்கள். மேற்கு வங்கத்தில் ஒரு மூதாட்டி அலர்ஜியால் அல்ல தன் வைராக்கியத்தால் உணவே சாப்பிடாமல் வாழ்ந்து வருகிறார். மேற்கு வங்கம் மாநிலத்தின் ஹூக்ளி பகுதியை சேர்ந்தவர் 76 வயதான அனிமா சக்ரபூர்த்தி என்ற மூதாட்டி . அவர் இதுவரை சாதம், சப்பாத்தி, டிபன் ஐட்டங்கள் போன்ற திட … Read more

மத்திய அரசு மீது முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: ஓபிசி, சிறுபான்மையினருக்கான உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் மேதாஸ்ரீ திட்டம் அலிபூர்தரில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் மம்தா தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசும்போது, “ஓபிசி, சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களை மத்திய அரசு நிறுத்திவிட்டது. மேற்குவங்க அரசு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும். … Read more

ராகுல் யாத்திரையில் முன்னாள் ராணுவ தளபதி பனா சிங் பங்கேற்பு.!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய … Read more

பாலியல் தொந்தரவு அளித்ததை கண்டித்ததால் மகளிர் ஆணையத் தலைவியை காரில் இழுத்துச் சென்ற போதை ஆசாமி..!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவாலை, போதை ஆசாமி ஒருவன், காரில் இழுத்து சென்ற சம்பவத்தின் காணொலி வெளியாகி உள்ளது. புதன்கிழமை நள்ளிரவு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அருகே சுவாதி மலிவால் ஆய்வு மேற்கொண்டுவந்தார். அப்போது காரில் வந்த போதை ஆசாமி ஒருவன் காரில் ஏறும்படி கூறி சுவாதிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளான். அவனது சட்டையை பிடித்து சுவாதி கண்டித்தபோது, கார் கண்ணாடியை ஏற்றிய போதை ஆசாமி, 40 அடி தூரத்திற்கு சுவாதியை இழுத்தபடியே காரில் … Read more

பிரதமர் மோடி வழங்கிய 71,000 பணிநியமன ஆணைகள் என்பது குறைவு; இன்னும் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளது: காங்கிரஸ்

டெல்லி: பிரதமர் மோடி வழங்கிய 71,000 பணிநியமன ஆணைகள் என்பது குறைவு, இன்னும் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணிநியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் யுபிஎஸ்சி, ரெயில்வே தோ்வு வாரியம், அரசு பணியாளா் தோ்வாணையம் எஸ்எஸ்சி உள்ளிட்டவற்றின் … Read more

செகந்திராபாத் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து – தீயை அணைக்க 9 மணி நேரம் போராட்டம்

செகந்திராபாத்: தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் நேற்று காலை 11 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து நேற்றிரவு 8 மணி வரை கூட முற்றிலுமாக கட்டுப்பாட்டில் வரவில்லை. இதில் 4 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர் தீ விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. செகந்திராபாத் நல்லகுட்டா டெக்கான் நைட் வேர் ஸ்போர்ட்ஸ் ஷாப்பிங் மாலில் நேற்று காலை 11 மணிக்கு திடீரெனதீப்பற்றியது. கீழ் தளத்தில் தீ பரவியதால், மக்கள் பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தனர். … Read more

71 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் வழங்கிய பிரதமர்; 30 லட்சம் பேருக்கு எப்போது.?

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையிலும், பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகவும் ரோஸ்கர் மேளா தொடங்கப்பட்டது. அதன்படி பிரதமர் 10 லட்சம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்காக ரோஸ்கர் மேளாவை தொடங்கினார். வேலையின்மை பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில், கடந்த எட்டு ஆண்டுகளில் வேலைகளை உருவாக்க தனது அரசாங்கத்தின் முயற்சிகளை அடிக்கோடிட்டு காட்ட இந்த முயற்சி எனவும் கூறப்பட்டது. இந்தநிலையில் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு சுமார் 71,426 பணி நியமனக் … Read more