ரூ.1,000 கோடி மோசடி புகாரில் சீல் வைத்த கடையில் பொருட்கள் திருட்டு: 3 குடோன்களில் பதுக்கியவர்களுக்கு வலை

வந்தவாசி: வந்தவாசியில் பொங்கல், தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.1000 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரில் ‘சீல்’ வைத்த கடையில் இருந்த பொருட்களை திருடி 3 குடோன்களில் பதுக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் விஆர்எஸ் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தப்பட்டு வருகிறது. வந்தவாசியில் இந்த சூப்பர் மார்க்கெட்டின் கிளை இயங்கி வந்தது. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் முதல் … Read more

விஷம் கலந்திருப்பார்கள் என்று டீ குடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர்!!

டிஜிபி அலுவலகத்திற்கு போராட்டத்திற்கு சென்ற உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அவர்கள் கொடுத்த தேநீரை விஷம் கலந்திருக்கும் எனக்கூறி குடிக்க மறுத்து விட்டார். சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ள நிலையில், கட்சியின் ட்விட்டர் பொறுப்பை மணீஷ் ஜகன் அகர்வால் என்பவர் கவனித்து வந்துள்ளார். சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்ட குற்றச்சாட்டில் ஜகனை போலீசார் கைது செய்தனர். அவரை விடுவிக்கக்கோரி டி.ஜி.பி. தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அகிலேஷ் யாதவ் சென்றார். அவருடன் கட்சி தொண்டர்களும் … Read more

பட்டியலின பெண்ணின் முடியைப் பிடித்து கோவிலுக்கு வெளியே தள்ளிய பூசாரி!!

பெங்களூரு அம்ருதஹள்ளி பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நாராயணா என்ற கோவிலுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த மாதம் 12ஆம் தேதி கோவிலுக்கு சாமி கும்பிட பட்டியலின பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அந்த கோவிலின் பூசாரியான முனிகிருஷ்ணா என்பவர், நீங்கள் எல்லாம் இந்து கோவிலுக்குள் வரக்கூடாது என கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த … Read more

விஷம் கலந்திருந்தால் என்ன செய்வது.? போலீஸ் அளித்த டீயை குடிக்க மறுத்த அகிலேஷ்.!

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் , உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காவல் துறையினர் அளித்த விஷம் கலந்திருந்தால் என்ன செய்வது என கூறி டீயைக் குடிக்க மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமாஜ்வாடி தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோ காவல்துறை தலைமையகத்திற்குச் சென்றிருந்தார், அங்கு பாஜக தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததாக கட்சியுடன் தொடர்புடைய ட்விட்டர் கணக்கை நடத்தி வரும் மணீஷ் ஜெகன் அகர்வால் … Read more

gautam adani: "கடத்தப்பட்டேன்…மரணத்தை 2 முறை அருகில் இருந்து பார்த்தேன்" கவுதம் அதானி

இந்தியாவின் முதன்மையான தொழிலதிபரான கவுதம் அதானி தன் வாழ்நாளில் சந்தித்த நெருக்கடியான சமயங்களை நினைவு கூர்ந்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், 26/11 தாக்குதல் குறித்த பதைபதைக்கும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். மேலும் தான் கடத்தப்பட்டதையும் கவுதம் அதானி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, ” கெட்ட காலத்தை மறப்பது நல்லது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் என்னை மாற்றிக்கொள்கிறேன். 1997ஆம் ஆண்டு நான் கடத்தப்பட்டேன். கடத்தல் நடந்த மறுநாளே நான் விடுவிக்கப்பட்டேன்.  ஆனால் நான் கடத்தப்பட்ட இரவு நிம்மதியாக தூங்கினேன். … Read more

குளிர் அலை வீசி வருவதால் 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: குளிர் அலை வீசி வருவதால், பஞ்சாப் ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்து இந்தியா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர் அலை மற்றும் மோசமான மூடு பணியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது , வடமாநிலங்களில் ஜனவரி 10ம் தேதி முதல் குளிர் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் புத்தாண்டுக்கு பிறகு கடுமையான … Read more

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஒற்றுமை யாத்திரைக்கு மகத்தான வரவேற்பு: ராகுல் பெருமிதம்

குருஷேத்ரா (ஹரியாணா): பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஒற்றுமை யாத்திரைக்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என்று ராகுல் காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஹரியாணா மாநிலத்தை அடைந்துள்ளது. அங்கு பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று குருஷேத்திரத்தை அடைந்தார். குருக்ஷேத்ராவிற்கு அருகிலுள்ள சமனாவில் ராகுல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எனது தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரைக்கு நாடு முழுவதும் அமோக … Read more

ராகுல் டிஷர்ட் குறித்து ஆய்வு செய்பவர்களே..? சத்தீஸ்கர் முதல்வர் காட்டம்.!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார். இந்த ஒற்றுமைப் பயணம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி … Read more

2-1 என தொடரை வென்றது இந்தியா பேட்டிங் எவ்வளவு எளிது என சூர்யாவின் அதிரடி காட்டுகிறது: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு

ராஜ்கோட்: இந்தியா -இலங்கை  கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வதுபோட்டியில் இலங்கையும் வெற்றிபெற்ற நிலையில் 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நேற்றிரவு ராஜ்கோட்டில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவரில் இந்தியா  5விக்கெட் இழப்பிற்கு 228 ரன் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் நாட் அவுட்டாக 51 பந்தில், 7பவுண்டரி,9 சிக்சருடன் 112ரன் விளாசினார்.  சுப்மான்கில் 46(36பந்து),ராகுல்திரிபாதி 35(16பந்து), … Read more

”புதுவை மக்களுக்கு பாரபட்சம் காட்டியதில்லை”-ஏனாம் தொகுதி பிரச்னை குறித்து தமிழிசை விளக்கம்

புதுச்சேரி மக்களுக்கு தாங்கள் பாரபட்சம் காட்டியதில்லை என்றும் ஏனாம் சென்றுள்ள முதலமைச்சர் ரங்கசாமி பிரச்னையை நேரில் பேசி தீர்ப்பார் என்றும் ஆளுநர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் சித்த மருத்துவ தினத்தையொட்டி கடற்கரை சாலை, காந்தி திடலில் நடைப்பயணம் மற்றும் சித்த மருத்துவக் கண்காட்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பேசும்போது, … Read more