செகந்திராபாத் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து – தீயை அணைக்க 9 மணி நேரம் போராட்டம்

செகந்திராபாத்: தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் நேற்று காலை 11 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து நேற்றிரவு 8 மணி வரை கூட முற்றிலுமாக கட்டுப்பாட்டில் வரவில்லை. இதில் 4 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர் தீ விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. செகந்திராபாத் நல்லகுட்டா டெக்கான் நைட் வேர் ஸ்போர்ட்ஸ் ஷாப்பிங் மாலில் நேற்று காலை 11 மணிக்கு திடீரெனதீப்பற்றியது. கீழ் தளத்தில் தீ பரவியதால், மக்கள் பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தனர். … Read more

71 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் வழங்கிய பிரதமர்; 30 லட்சம் பேருக்கு எப்போது.?

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையிலும், பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகவும் ரோஸ்கர் மேளா தொடங்கப்பட்டது. அதன்படி பிரதமர் 10 லட்சம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்காக ரோஸ்கர் மேளாவை தொடங்கினார். வேலையின்மை பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில், கடந்த எட்டு ஆண்டுகளில் வேலைகளை உருவாக்க தனது அரசாங்கத்தின் முயற்சிகளை அடிக்கோடிட்டு காட்ட இந்த முயற்சி எனவும் கூறப்பட்டது. இந்தநிலையில் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு சுமார் 71,426 பணி நியமனக் … Read more

எல ஜெயபாலு எனக்கு இவா பால் ஊத்திருவா போல இருக்கேலெ.. கார் பேனட்டில் தர்சன் ஊசல்..! பிரியங்கா இப்படி செய்யலாமா ?

பெங்களூரில் காரில் மோதியதை தட்டிக்கேட்ட உரிமையாளரை , தனது கார் பேனட்டில் தொங்கவிட்டபடி பெண் ஒருவர் அதிவேகமாக காரை ஓட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பெங்களூரு, ஞானபாரதி காவல் நிலையம் அருகே தர்ஷன் என்பவர் நண்பர்களுடன் ஓட்டி வந்த சுசுகி ஸ்விப்ட் கார் மீது பிரியங்கா என்ற பெண் ஓட்டிவந்த டாடா நெக்சான் கார் மோதியது. தனது கார் நசுங்கியதால் காரில் இருந்து இறங்கிய தர்சன் அந்தப்பெண்ணிடம் நியாயம் கேட்டார். அந்தப்பெண் காரை கிளப்புவதில் குறியாக … Read more

பாலியல் புகார் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் கூட்டம் இன்று மாலை 5.45 மணிக்கு கூடுகிறது..!!

டெல்லி: பாலியல் புகார் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் கூட்டம் இன்று மாலை 5.45 மணிக்கு கூடுகிறது. மல்யுத்த வீரர்கள் புகார் கடிதம் அனுப்பிய நிலையில் தலைவர் பிடி உஷா தலைமையில் ஐ.ஓ.சி. ஆலோசனை நடத்தவுள்ளது. வீரர்கள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, ரவி தஹியா, தீபக் புனியா, சாக்ஷி மாலிக் கடிதம் அனுப்பியிருந்தனர்.

நீட் தேர்வுக்கு படித்த மாணவர் தீக்குளிப்பு!!..ஓராண்டில் 15 பேர் தற்கொலை!

கோட்டா பயிற்சி மையத்தில் படித்த நீட் தேர்வர், தந்தை கொடுத்த நெருக்கடியால் தீக்குளித்தார். பீகார் மாநிலம் மேற்கு சம்பாரானில் வசிக்கும் 20 வயது இளைஞர், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்தார். ஜவஹர் நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட தல்வாண்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி அவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுதி அறையில் இருந்த மாணவர், தனது உடலில் எரிபொருளை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு … Read more

லீனா மணிமேகலைக்கு எதிரான வழக்குகள்: நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 

புதுடெல்லி: ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், மத்திய அரசின் லுக்அவுட் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் லீனா மணிமேகலை, தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் காளி என்ற ஆவணப்பட போஸ்டரை வெளியிட்டார். அந்த போஸ்டரில், கையில் சிகரெட்டுடன் காளி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போஸ்டருக்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் … Read more

யார் இந்த ராதிகா மெர்ச்சன்ட்? அம்பானி வீட்டுக்கு வரும் மருமகள்… விரைவில் டும் டும் டும்!

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. சர்வதேச கோடீஸ்வரர்களுக்கு பலமான போட்டியாளராக வளர்ந்து வருகிறார். இவரது மனைவி நீடா அம்பானி. இந்த தம்பதிக்கு பிறந்த மகன் ஆனந்த அம்பானியின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவரை திருமணம் செய்து கொள்பவரும் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள். அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம் அவர் ஆங்கர் ஹெல்த்கேர் தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட். இந்நிலையில் ஆனந்த் அம்பானி – … Read more

பாலியல் புகார் விவகாரம் குறித்து அவசரமாக கூடும் ஐ.ஓ.சி.

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் மீதான பாலியல் புகார் நடவடிக்கை  குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா தலைமையில் மலை 5.45 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தல் வழங்கப்பட்டது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக நேற்று நள்ளிரவு வரை ஒன்றிய அமைச்சருடன் நடத்தப்பட்ட … Read more

ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம்

மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் – ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்தம் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்றது. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. #WATCH | The Ambani family dances … Read more

பாஜகவில் சேருங்கள் இல்லையென்றால் புல்டோசர் தான் – ம.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு

பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் அரசியல் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா இஸ்லாமியர்கள் போற்றும் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறிய விவகாரம் உ.பி.யில் கலவரமாக வெடித்தது. 200 க்கும் மேற்பட்டோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், பிரயாக்ராஜ் மாவட்ட கலவரத்துக்கு காரணமானவர் எனக்கூறி அகமது என்பவரது வீடு புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டது. அத்துடன், இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் … Read more