2 குழந்தைகளின் தந்தையாக இருந்து கொண்டு ‘மேட்ரிமோனி’ மூலம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடியவன் சிக்கினான்; ‘பிடெக்’ படித்ததாக கூறி பலரிடம் மோசடி

லக்னோ: மேட்ரிமோனி இணையதளம் மூலம் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாண்ட மோசடி குற்றவாளியை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆஷியானா பகுதியை சேர்ந்த ஹரிஓம் துபே என்ற சஞ்சய் சிங் என்பவர், தனக்கான வரன் தேடி ஆன்லைன் திருமண வெப்சைட்டில் (மேட்ரிமோனி திருமண தகவல் மையம்) பதிவு செய்திருந்தார். பிளஸ் 2 வரை படித்த இவர், தனது கல்வித் தகுதியை பிடெக் என்று குறிப்பிட்டிருந்தார். இவரது விபரங்களை அறிந்த பீகாரை சேர்ந்த … Read more

Morbi Tragedy: மோர்பி பால விபத்து: 3,165 டிக்கெட்டுகள் விற்பனை.. துருபிடித்த கேபிள்கள் – ஷாக் தகவல்கள்!

குஜராத் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்கு உள்ளான நாளன்று, 3,165 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட தகவல் தடயவியல் விசாரணையில் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்கே, 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விபத்துக்கு உள்ளானது. கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணி அளவில், தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தில் இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் … Read more

மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லை பிரச்சனை – 2 அமைச்சர்களை நியமித்தது மகாராஷ்டிரா அரசு..!

கர்நாடகத்துடன் நிலவி வரும் எல்லை பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, 2 அமைச்சர்களை மகாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது. மகாராஷ்டிராவுக்கும், அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கும் இடையே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில், எல்லை பிரச்சனையில் சட்ட மற்றும் இதர விஷயங்களை ஒருங்கிணைக்க, பாஜகவைச் சேர்ந்த உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சம்புராஜே தேசாய் ஆகியோரை நியமித்துள்ளதாக, மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. Source link

நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த இந்தோனேசியாவிற்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி

டெல்லி: இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 252 பேர் உயிரிழந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் அவசர கால மீட்பு குழுவினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தேட தேட கிடைக்கும் உடல்களால் உயிரிழப்பு மேலும் … Read more

கால்பந்து ரசிகர்களிடையே மோதல்! வீடியோவால் மாட்டிக் கொண்ட ரசிகர்கள்

கொல்லம்: கேரளா மாநிலம் கொல்லத்தில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணிகளை ஆதரிக்கும் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் கால்பந்து ரசிகர்கள் சண்டையில் ஈடுபட்ட வீடியோ தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர் என்று கேரள போலீசார் தெரிவித்தனர். சக்திகுளங்கரா கிராமப்புற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது சக்திகுளங்கரா காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 160 (கலவரம் செய்வது) … Read more

ரோஜர் மேளா திட்டத்தை காணொலி காட்சி மூலமாக துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!

ரோஜர் மேளா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 71 ஆயிரத்து 56 பேருக்கு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றார். மேலும், உற்பத்தி இணைப்பு முன்முயற்சி திட்டத்தின்  மூலமாக 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். ரோஜர் மேளா திட்டத்தின் கீழ் உள்துறை மற்றும் மத்திய காவல் … Read more

நோயாளிக்கு சிகிச்சை அளித்ததில் அலட்சியம்; உ.பி-யில் 5 மருத்துவர்கள் மீது வழக்கு: ஓராண்டுக்கு பின்னர் நடவடிக்கை

காஜியாபாத்: நோயாளிக்கு சிகிச்சை அளித்ததில் அலட்சியம் காட்டியதாக கூறி ஓராண்டுக்கு பின்னர் 5 மருத்துவர்கள் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக  நொய்டா பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைப்பது அரிதாக இருந்தது. குறிப்பாக ரெம்டெசிவர் என்ற மருந்து கிடைப்பது பெரும் சவாலாக இருந்தது. இந்த நிலையில் கொரோனாவால் … Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த ஆசிரியரை கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து கேரள போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 16-ம் தேதி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை, அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 15 வயது மாணவி ஒருவர் பார்த்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது பஸ் வசதி இல்லாததால் பைக்கில் வீட்டில் கொண்டு விடுவதாக அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி … Read more

சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் யார் தெரியுமா? – தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். பண மோசடி வழக்கில், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை, கடந்த மே மாதம் 30 ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது … Read more

ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் ஜம்முவின் ஆர்.எஸ் புரா செக்டரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஒருவர் ஊடுருவ முயற்சித்த போது எல்லை பாதுகாப்பு படையினர் அவரை எச்சரித்தனர். ஆனாலும், அந்த நபர் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியை நோக்கி வந்ததால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link