உ.பி.யில் ஆசம் கானுக்கு நெருக்கமான ஃபசகத் அலி கான் பாஜகவில் இணைந்தார்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் ராம்பூர் தொகுதி எம்எல்ஏவுமான ஆசம் கானுக்கு அவதூறு வழக்கில் கடந்த மாதம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலியான ராம்பூர் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆசம் கானுக்கு நம்பிக்கைக்குரியவரும் ஊடகப் பொறுப்பாளருமான ஃபசகத் அலி கான் என்கிற ஷானு நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தார். ராம்பூர் தொகுதிக்கான சமாஜ்வாதி வேட்பாளராக … Read more

பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் உள்பட 4 ஆசிரியர்கள் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே திருப்பூணித்துறையில் தனியார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி உள்ளது. சில தினங்களுக்கு முன், இந்த பள்ளியில்  படிக்கும் பிளஸ் 1 மாணவியை  கிரண் (51) என்ற ஆசிரியர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கலைவிழாவில் பங்கேற்பதற்காக தனது பைக்கில் அழைத்து சென்றார். கலைவிழா முடிந்து இரவில் பைக்கில் திரும்பினர்.  அப்போது மாணவியிடம் ஆசிரியர் கிரண் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி … Read more

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு | வாட்ஸ்அப்பில் சிவன் படம் வைத்த ஷரீக் – சதி குறித்து தீவிர விசாரணை

பெங்களூரு/ கோவை: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியுள்ள முகமது ஷரீக், தனது வாட்ஸ்அப் முகப்பாக ஆதியோகி (சிவன்) படத்தை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷரீக், போலி ஆதார் அட்டை மூலம் சிம்கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷிமோகாவில் குண்டுவெடித்து அவர் ஒத்திகையில் … Read more

உ.பி.யில் உள்ள 12 கிராமங்களில் மின்சாரமே இல்லாத வீடுகளுக்கு ரூ.60,000 பில்

சாம்லி: உத்தரப் பிரதேச மாநிலம், சாம்லி மாவட்டம் ஜின்ஜானா பகுதியில் கோஸ்கா உட்பட 12 கிராமங்களில் மின்சாரம் இணைப்பு நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மேற்கண்ட கிராமங்களில் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டது. அப்போது, விரைவில் மின்இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர். ஆனால், இதுவரை மின்இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்த கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று … Read more

புளூ டிக் சேவை மீண்டும் நிறுத்தம்: எலான் மஸ்க் தகவல்

புதுடெல்லி: டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகள் என்பதை தெரிவிக்கும் புளூ டிக் சேவை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பிறகு அவர் அதில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பயன்படுத்தும் நீலநிற புளூ டிக் குறியீட்டு வசதியை அனைவரும் பயன்படுத்தி கொள்ளும் வகையில், பயனாளர்களிடம் இருந்து … Read more

5 வகை பாக்டீரியாக்கள் தாக்குதல் இந்தியாவில் 2019-ல் 6.8 லட்சம் பேர் பலி: மருத்துவ ஆய்வறிக்கையில் அதிர்ச்சி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டில் 5 பாக்டீரியாக்கள் தொடர்பான நோய்களால் 6.8 லட்சம் பேர் பலியானதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் வெளியாகும், ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில் கடந்த 2019ம் ஆண்டில் மாரடைப்புக்கு அடுத்தபடியாக பாக்டீரியாக்களால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு 77 லட்சம் மக்கள் 33 வகையான பொதுவான பாக்டீரியா நோய்களுக்கு பலியாகி உள்ளனர். இதில், இ கோலி, எஸ் நிமோனியா, கே நிமோனியா, எஸ் … Read more

‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் மூலம் 2ம் கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: பிரதமர் மோடி வழங்கினார்

புதுடெல்லி: ‘ரோஜ்கார் மேளா’ வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 2ம் கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கினார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பிரச்னையாக முன்வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  தற்போது, நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தலில் முக்கிய ஆயுதமாக வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசின் … Read more

தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வர் வாழ்க்கை வரலாறு படம்: கர்நாடக முதல்வர் டிரைலரை வெளியிட்டார்

பெங்களூரு: கர்நாடகா தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வர் வாழ்க்கை, ‘விஜயானந்த்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. வரும் டிசம்பர் 9ம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இதை ரிஷிகா சர்மா இயக்கியுள்ளார். விஜய் சங்கேஸ்வர் கேரக்டரில் நிஹால் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா நடித்துள்ளனர். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் … Read more

இந்தியா தலைமையில் உதய்பூரில் முதல் ஜி-20 மாநாடு: அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்

உதய்பூர்: ராஜஸ்தானில் டிசம்பர் 5 முதல் 7ம் தேதி வரையில் ஜி-20 அமைப்பின் முதல் பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும்  ஐரோப்பிய யூனியனை கொண்ட ஜி-20 அமைப்பின் 17வது உச்சி மாநாடு சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இந்தியாவில் அடுத்தாண்டு செப்டம்பர் 9-10ம் தேதிகளில் இதன் உச்சி … Read more

தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 நக்சல்கள் சுட்டுக் கொலை; ஜார்கண்ட்டில் அதிரடி

ராஞ்சி: ஜார்கண்ட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 நக்சல்களை போலீசார் அதிரடியாக என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ஜார்கண்ட் மாநிலம் லதேஹார் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தனிப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்த போலீசாரை நோக்கி நக்சல் கும்பல் தாக்குதல் நடத்தியது. அதற்கு போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தியதில் மூன்று நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து  லதேஹார் எஸ்பி அஞ்சனி அஞ்சன் கூறுகையில், ‘ஜார்கண்ட் ஜன்முக்தி பரிஷத் (ஜேஜேஎம்பி) தலைவர் பப்பு … Read more