வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: இமாச்சல பிரதேச பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

சிம்லா: காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கும். பாஜக வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சுந்தர்நகர், சலோனில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான அரசு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. கடந்த 5 … Read more

ராணுவத் தலைமைத் தளபதிகளின் உச்சிமாநாடு: டெல்லியில் நாளையில் தொடங்குகிறது!

இந்திய ராணுவத்திற்கான கொள்கை முடிவுகளை எடுப்பதில் முக்கிய அங்கம் வகிக்கும் வகையிலான விஷயங்களை விவாதிக்கும் ராணுவத் தலைமைத் தளபதிகளின் உச்சிமாநாடு ஆண்டுதோறும் இரு முறை நடைபெறுகிறது. அந்த வகையில் நடப்பாண்டின் இரண்டாவது உச்சிமாநாடு டெல்லியில் வருகிறா 7ஆம் தேதி (நாளை) தொடங்குகிறது. நாளை முதல் 11ஆம் தேதி வரை இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அனைத்து ராணுவத் தலைமைத் தளபதிகள், இதர உயர் அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் இந்த … Read more

உத்தரகாண்டிலும் இந்தியில் எம்பிபிஎஸ்

டேராடூன்: நாட்டிலேயே முதல் முறையாக கடந்த அக்டோபர் 16ம் தேதி மத்தியப்பிரதேசத்தில் இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக உத்தரகாண்டிலும் இந்தியில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வி துறை அமைச்சர் தான் சிங் ராவத் கூறுகையில், ‘‘இந்தி மொழிக்கு ஒன்றிய அரசு சிறப்பு கவனம் செலுத்துவதை கருத்தில் கொண்டு அடுத்த கல்வியாண்டு முதல் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆங்கிலம் … Read more

தெலங்கானா | ஏரியில் நீச்சல் பழக சென்ற 5 மாணவர்கள் உயிரிழப்பு: காப்பாற்ற சென்ற ஆசிரியரும் பலி

மெட்ச்சல்: தெலங்கானாவின் மெட்ச்சல் மாவட்டம், காச்சிகூடா நேரு நகர் பகுதியில் மதரஸா பள்ளி உள்ளது. இங்கு இஸ்லாமிய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு படிக்கும் நேரு நகரை சேர்ந்த இஸ்மாயில் (12), ஜாபர் (13), சோஹைல் (14), அயோன் (14), ரியான் (14) ஆகிய 5 மாணவர்கள், நேற்று இதே பகுதியில் உள்ள எர்ரகுண்டா ஏரியில் நீச்சல் பழக சென்றனர். ஆனால், ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால், இவர்கள் தொடர்ந்து நீந்த முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். … Read more

பாஜக பிளான் தவிடுபொடி; அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் திக்… திக்… முடிவுகள்!

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆதம்பூர் (ஹரியானா), தம்நகர் (ஒடிசா), கோலா கோக்ராநத் (உத்தரப் பிரதேசம்) ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அந்தேரி கிழக்கு (மகாராஷ்டிரா) உத்தவ் தாக்கரே சிவசேனா, கோபால்கஞ்ச் (பிகார்), மொகாமா (பிகார்) ஆகிய தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தள், முனுகோட் (தெலங்கானா) தெலங்கானா ராஷ்டிர … Read more

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மறுதாக்கல் செய்யப்படுமா? அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2010ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2014ல் ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த மசோதா காலாவதியானது. இதன் பின் மீண்டும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு … Read more

“இதென்ன காக்கிநாடாவா?”-சினிமா ஷூட்டிங் போல பயணித்தபின் அரசை கேள்வி கேட்ட பவன் கல்யாண்

ஆந்திராவின் இப்டாம் என்ற கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக ஆந்திர அரசால் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு ஆறுதல் கூற, தனது ஆதரவாளர்களுடன் ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. பவன் கல்யாண் அங்கு செல்லவுள்ளார் என்று தெரிந்ததும், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்திருக்கிறது. அத்துடன் அவரது வருகையையொட்டி, நேற்று அதிகாலையில் இருந்தே அங்கு அவரது ஆதரவாளர்கள் இப்டாம் கூடத்தொடங்கிவிட்டனர். ஆனால் அவரது நிகழ்ச்சிக்கு … Read more

வாரணாசி மாவட்ட புதிய ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் – உ.பி. பாஜக ஆட்சியில் தொடர்ந்து தமிழர்களுக்கு முக்கியத்துவம்

புதுடெல்லி: பாஜக ஆளும் உ.பி.யில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் என குடிமைப்பணி அதிகாரிகளாக சுமார் 40 தமிழர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கியப் பதவிகளில் அமர்த்தியுள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் மாவட்ட ஆட்சியராக தமிழரான எஸ்.ராஜலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்தவர். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (தற்போதைய என்ஐடி) வேதிப்பொறியியலில் பட்டம் பெற்றவர். … Read more

ஆறு மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முனுக்கோடில் டிஆர்எஸ் முன்னிலை!

தெலங்கானா மாநிலம் முனுக்கோடு, ஹரியானாவின் ஆதம்பூர், மகாராஷ்டிராவின் கிழக்கு அந்தேரி, ஒடிசாவின் தாம்நகர், உத்தர பிரதேசத்தின் கோலா கோகர்நாத், பீகார் மாநிலத்தின் மொகாமா, கோபால்கஞ் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 4ஆம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகபட்சமாக முனுகோடில் 77.55 சதவீத வாக்குகள் பதிவாகின. கிழக்கு அந்தேரியில் 31.74 சதவீதமும், ஆதம்பூரில் 75.25, தாம்நகரில் 66.63, கோகர்நாத்தில் 55.68, மொகாமாவில் 53.45, கோபால்கஞ்சில் 51.48 சதவீதமும் வாக்குகள் … Read more

குடிநீர் குழாய் தோண்டும் போது குழிக்குள் தவறி விழுந்த ஜேசிபி கிளீனர்.. மண்ணுக்குள் புதைந்த கிளீனரை போராடி மீட்ட சக ஊழியர்கள்..!

கேரள மாநிலம் அட்டப்பாடியில் குடிநீர் குழாய் தோண்டும் போது குழிக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிய ஜேசிபி கிளீனர் பத்திரமாக மீட்கப்பட்டார். ஜேசிபி ஓட்டுனர் குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது அந்த வாகனத்திற்கு முன்னால் நின்று கொண்டு வழிகாட்டிக் கொண்டிருந்த கிளீனர் சந்தீப் எதிர்பாராத விதமாக குழிக்குள் தவறி விழுந்துள்ளார். அப்போது குழியின் ஓரமாக காணப்பட்ட மண் அவர் மீது விழுந்ததை அடுத்து மண்ணுக்குள் புதைந்தார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து விரைந்து செயல்பட்டு சந்தீப்பை உயிருடன் … Read more