குஜராத் பாலம் விபத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட பழமையான தொங்கு பாலம் கடந்த மாதம் 30ம் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் பலியாயினர். பாலத்தை முறையாக பராமரிக்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக் காரணம் என வக்கீல் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென … Read more

புனே – பெங்களூரு நெடுஞ்சாலை நாவலே பாலத்தில் விபத்து: 45+ வாகனங்கள் சேதம்

புனே: புனே – பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நாவலே பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 45க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. ஞாயிறு (நவம்பர் 20) அன்று இந்த விபத்து நடைபெற்றுள்ளது. தற்போது விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையில் சரிவு அதிகம் இருப்பதும், அதிவேகமாக வரும் வாகனமும் தான் விபத்துக்கு காரணம் என தெரிகிறது. அதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள … Read more

இந்த காலத்திலும் இப்படியொரு காதலா?- ச்சே என்ன மனுசன்யா இந்த ஆளு!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் பிடுப்பன். இவருக்கும், பிராத்தனா என்ற பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து வநதுள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சமீபத்திய சம்மதமும் தெரிவித்திருந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று இருவரும் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தபோதுதான் பிடுப்பன், பிராத்தனா இருவரின் வாழ்விலும் விதி ஏகத்துக்கு விளையாட ஆரம்பித்தது. இருவீட்டாரும் திருமண நிச்சயதார்த்தம் நடத்தி, மணநாள் குறிப்பது குறித்து ஆலோசித்து கொண்டிருந்த வேளையில், சில தினங்களுக்கு முன் பிராத்தனாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. … Read more

”வளர்ச்சிக்கு பா.ஜ.க. முன்னுரிமை அளிப்பதால், அரசியல் கட்சிகளுக்கு அது குறித்து பேச வேண்டிய நிலை” – பிரதமர் மோடி

வளர்ச்சிக்கு பா.ஜ.க. முன்னுரிமை கொடுப்பதால் தான், தேர்தலின்போது இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளுக்குக்கும் வளர்ச்சியை பற்றி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் போதாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ.க. அரசு சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தததாக கூறினார். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக, … Read more

கர்நாடகாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயங்கர சதி திட்டம்: போலீஸ் டிஜிபி தகவலால் பரபரப்பு, மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு குறித்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், ஆட்டோ டிரைவர், பயணி படுகாயமடைந்தனர். இம்மாநிலத்தில் பயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் போட்டிருப்பது, முதல் கட்ட விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இது தொடர்பாக, குண்டுவெடிப்பில் காயமடைந்த 2 பேர் மட்டுமின்றி, மேலும் 2 பேரையும் பிடித்து கர்நாடகா போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள நகோரி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, … Read more

மங்களூரு வெடிவிபத்து : தமிழர் பெயரில் சிம் கார்டு… போலி ஆதார் அட்டை… சம்பவத்தின் முழு விவரம்!

கர்நாடக மாநிலம் மங்களூரில் நேற்று மாலை ஆட்டோ வெடித்த விபத்து தற்போது பூதாகரமாகியுள்ளது. அதாவது, மங்களூரு பகுதியில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் இருந்த குக்கர் வெடித்து இந்த விபத்து ஏறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வெடி விபத்தில், ஆட்டோ ஓட்டுநரும் பயணி ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த விவகாரத்தை போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளனர்.  விசாரணையில், எல்இடி போன்ற பொருள் வெடி விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் கிடைத்த … Read more

35 துண்டுகளாக்கப்பட்ட இளம்பெண்ணின் சில உடல்பாகங்கள் கண்டெடுப்பு.. ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏவுடன் பரிசோதனை நடத்த முடிவு..!

டெல்லியில் கொலை செய்யப்பட்டு உடலை 35 துண்டுகளாக்கி காட்டில் வீசப்பட்ட இளம்பெண் ஷ்ரத்தாவின் மண்டை ஓட்டின் அடிப்பகுதி, தலை துண்டிக்கப்பட்ட தாடை மற்றும் பல எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புகளை ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பிட்டு தடயவியல் பரிசோதனை செய்ய டெல்லி போலீசார் முடிவெடுத்துள்ளனர். மேலும், கொலையாளி அப்தாப் வீட்டில் இருந்து ஷ்ரத்தாவின் கைப்பை, உடை, ஷூ, 3 பெரிய பிளாஸ்டிக் கறுப்பு பைகள், கூர்மையான கத்தி ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். Source link

சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலிஸ்தானி தீவிரவாதி பாகிஸ்தானில் மரணம்: இந்திய உளவுத் துறை தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் பதுங்கியிருந்த காலிஸ்தானி தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தானி தீவிரவாத அமைப்பான ‘பாபர்  கல்சா இன்டர்நேஷனல்’ அமைப்பின் உறுப்பினராக ஹர்விந்தர் சிங் ரிண்டா என்பவன்  இருந்தான். இந்த ஆண்டு மே மாதம், மொஹாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ்  உளவுத்துறை தலைமையகத்தில் ராக்கெட் புரொபல்டு க்ரெனேட் (ஆர்பிஜி)  தாக்குதலின் பின்னணியில் ஹர்விந்தர் சிங் ரிண்டா பெயரும் இடம்பெற்றது.   … Read more

குளிருக்காக நிலக்கரி எரிப்பு – 2 பேர் பலி!!

குளிரை சமாளிக்க அறைக்குள் நிலக்கரியை எரித்ததால் மூச்சுத்திணறி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தொழிலாளர்கள் குளிரை சமாளிக்க அறைக்குள் நிலக்கரியை எரித்தனர். நிலக்கரி எரிந்ததால் ஏற்பட்ட வாயு அறை முழுவதும் நிரம்பியதால் சுவாசிக்க காற்று இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மறுநாள் உள்ளூர்வாசிகள் கதவைத் திறந்து பார்த்த போது, தொழிலாளர்கள் அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர். அவர்களை மீட்டு … Read more

சபரிமலையில் இன்று ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்: கூடுதல் பஸ்கள் இயக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் தரிசனத்துக்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருந்ததை போல மண்டல காலத்தில் பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறந்த நேரம் முதல் பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். அதன்படி கடந்த 4 நாளில் மட்டும் … Read more