மங்களூருவில் நேற்று நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல்: கர்நாடக டிஜிபி அறிவிப்பு

மங்களூரு: மங்களூருவில் நேற்று நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல் என கர்நாடக டிஜிபி அறிவித்துள்ளார். மங்களூருவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் வெடிபொருள் நேற்று வெடித்து சிதறியது. குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த பெங்களூருவில் இருந்து தனிப்படை மங்களூரு விரைகிறது. ஆட்டோவில் பயணித்தவர் கொண்டு வந்த சாக்கு முட்டையிலிருந்து வெடிபொருள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தராகண்டில் ஆழமான பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழப்பு

சாமோலி: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் இருந்து 16 பேர்பல்லா ஜகோல் என்ற கிராமத்துக்கு நேற்று முன்தினம் சுமோ காரில் சென்றுகொண்டிருந்தனர். காரில் இடமில்லாத நிலையில், அதன் கூரை மீதும் சிலர் அமர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஜோஷிமத் அருகே உர்கம் என்ற இடத்தில் சுமார் 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் சுமோ கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. தகவல் அறிந்து போலீஸாரும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த … Read more

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: மத்திய அரசு சூப்பர் திட்டம்!

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்பிக்கும் சேவையை அஞ்சல் துறை வழங்குகிறது. மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் EPFO ஓய்வூதியம் பெறுவோர்களை 1 நவம்பர் 2022 முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு்ள்ளது. இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை … Read more

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் இன்று மாலைக்கு … Read more

தோற்ற வேட்பாளருக்கு ரூ.2.11 கோடி, கார் பரிசு: ஹரியாணா கிராம மக்கள் வழங்கினர்

ரோத்தக்: ஹரியாணாவில் கடந்த ஜூன் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ரோத்தக் மாவட்டம், சிரி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தரம்பால் என்பவர் போட்டியிட்டார். இவர் 66 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தரம்பாலுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். கிராம மக்களால் அவரது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தரம்பாலை கவுரவிக்கும் வகையில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் பிரம்மாண்ட விழாவை நடத்தினர். அப்போது கிராம மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.2.11 கோடி ரொக்கம் மற்றும் மஹிந்திரா … Read more

பட்டியல் இன பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவு: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்!

தேசிய எஸ்.சி-எஸ்.டி மையத்தின் கீழ் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் டெல்லியில் நடத்திய மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாட்டிற்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தலைமை வகித்தார். குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை ஆணையின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றி தெரிந்து கொண்டு, அந்த நிறுவனங்களுடன் கலந்தரையாடும் … Read more

“தீவிரவாதம் தீவிரவாதம் தான் . எந்த அரசியல் காரணமும் அதனை நியாயப்படுத்தாது” – ஜெய்சங்கர்

தீவிரவாதம் தீவிரவாதம் தான், அதனை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.  தீவிரவாதத்திற்கு நிதியைத் தடுப்பது தொடர்பான மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்,  அரசு கொள்கையாக வைத்திருக்கும் நாடுகள் ஆகியவற்றிடமிருந்து இழப்பீடு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக அந்த மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற ஜெய்சங்கர் தீவிரவாதத்தை கடுமையாக கண்டனம் செய்தார்.பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஐநா.சபையில் தடை விதிக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு … Read more

சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்: தேவசம்போர்டு

திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளனர். பக்தர்கள் ஆதார் கார்டுகளை காட்டி முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம் என  தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பி செல்ல கேரளா அரசின் அனைத்து துறைகளுக்கும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். கேரளா மற்றும் மாநில எல்லைப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உடனடியாக முன்பதிவு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அருணாச்சல பிரதேசத்தில் பசுமை விமான நிலையம் திறந்தார் பிரதமர் மோடி – நாட்டின் புதிய அணுகுமுறைக்கு உதாரணம் என பெருமிதம்

குவாஹாட்டி: அருணாச்சல பிரதேசத்தில் முதல் பசுமை விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் புதிய அணுகுமுறைக்கு இது உதாரணம் என பெருமிதமாக தெரிவித்தார். சீனாவின் எல்லையில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இடாநகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஹலோங்கியில் பசுமை விமான நிலையம் அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணி முடிந்ததையடுத்து, இந்த விமான நிலையத்தை பிரதமர் … Read more

மருத்துவமனைக்குள் புகுந்த பசுமாடு… ஐசியு வார்டில் புகுந்ததால் நோயாளிகள் பீதி

மத்தியப் பிரதேசம் ராஜ்கர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மாடு ஒன்று சுதந்திரமாக சுற்றித் திரிந்து நோயாளிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் மாடு நடமாடிய காட்சி வீடியோவாக வெளியாகி பரவலாகி வருகிறது. மாடு விரட்டியடிக்கப்பட்ட போதும் கவனக்குறைவாக மாட்டை உள்ளே வரவிட்ட ஊழியர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது Source link