மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு | ஷரீக்கிற்கு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு: கர்நாடக போலீஸ்

மங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷரீக்கிற்கு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர். மங்களூருவில் கடந்த சனிக்கிழமை அன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநரும், அதில் பயணித்த பயணி ஒருவரும் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அங்கு இருந்த குக்கர், பேட்டரிகள், சர்க்யூட் வயர்கள் உள்ளிட்டவை இருந்ததைக் கண்டு அவற்றை கைப்பற்றினர். இதை … Read more

இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் சங்க நிர்வாகிகளின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான 3 கோடியே 37 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, அமலாக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர். 2011ஆம் ஆண்டில் இருந்து அந்த சங்கத்தில் பல முறைகேடுகள் நடந்ததாகவும், அதில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சார்பில் சிபிஐயிடம் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து, செஞ்சிலுவை சங்க தமிழக நிர்வாகிகள் 6 பேர் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கினை அமலாக்க … Read more

என் அந்தஸ்து குறித்து பேசுவதை விட்டுவிட்டு, வளர்ச்சி அரசியலை எதிர்க்கட்சிகள் பேச வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

சூரத்: என் அந்தஸ்து குறித்து பேசுவதை விட்டுவிட்டு, வளர்ச்சி அரசியலை எதிர்க்கட்சிகள் பேச வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மேற்கொண்டார். சுரேந்திர நகரில் நடைபெற்ற பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி; ஒரு காலத்தில் சைக்கிளை கூட தயாரிக்காத மாநிலமாக இருந்த குஜராத், தற்போது விமானத்தை … Read more

பிரபல ரஸ்னா குளிர்பான நிறுவனர் காலமானார்..!!

குளிர்பானங்களுக்கு மாற்றாக மிக குறைந்த விலையில் 1970-ம் ஆண்டுகளில் ரஸ்னாவை அறிமுகப்படுத்தியவர் ஆரீஜ் பிரோஜ்ஷா காம்பாட்டா. 1980 மற்றும் 1990 ஆகிய காலகட்டங்களில் மக்களிடையே பிரபலம் அடைந்தது. ரூ.5 மதிப்புள்ள ரஸ்னாவை வாங்கி 32 கோப்பைகளாக மாற்றி கொடுக்க முடியும். இதனால், ஒரு கிளாஸ் ரஸ்னாவுக்கு 15 பைசா கொடுக்கிறோம் என்ற அளவில் விலை இருந்தது. அதன் சுவை மற்றும் தரத்திற்காக பல விருதுகளையும் ரஸ்னா பெற்றுள்ளது. இந்நிலையில், பிரபல ரஸ்னா குளிர்பானத்தின் நிறுவனர் ஆரீஜ் பிரோஜ்ஷா … Read more

'Bharat Jodo பயணத்தில் விவசாயிகள், பழங்குடியினர் வலியை உணர்ந்தேன்!' – ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்திரையின் போது, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்த பிறகு அவர்களின் வலியை உணர்ந்ததாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி … Read more

ஆதிவாசிகளின் நிலங்களைப் பறிக்கும் மோடி அரசு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சூரத்: ஆதிவாசிகளின் நிலங்களைப் பறித்து அவற்றைத் தொழிலதிபர்களுக்கு பாஜக வழங்கியுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்த்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி; அதில் பணவீக்கம், ஊழல் மற்றும் பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளில் இருந்து குஜராத் மக்களை விடுவிக்க நாங்கள் … Read more

ஆதிவாசிகள் முன்னேறுவதை பாஜக விரும்பவில்லை: குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் சாடல்

சூரத்: ஆதிவாசிகள்தான் நமது நாட்டின் முதல் உரிமையாளர்கள் என தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஆனால் அவர்கள் முன்னேறுவதை பாஜக விரும்பவில்லை என்று குற்றம்சாட்டினார். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இன்று குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இன்று முதல் முறையாக குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சூரத் … Read more

bihar road accident: சாலையோரம் சாமி வழிபாடு… கூட்டத்தில் லாரி புகுந்த விபத்தில் 12 பேர் பலி

பிகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்துக்குட்பட்ட தேஸ்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு மத ஊர்வலம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது சாலையோர மரத்தடியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒன்றாக கூடி வழிபாடு நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே சாலையில் வேகமாக வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்த பக்தர்களின் மீது வந்த வேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். … Read more

ராஜஸ்தானில் 4 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அடுத்த ஜரோலி நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரின் வீடு இன்று காலை திறக்கப்படாமலேயே இருந்தது. அதனால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல்கள் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணவன் – மனைவி தம்பதி மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகளும் இறந்த நிலையில் கிடந்தனர். அதிர்ச்சியடைந்த போலீசார் 6 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர். 6 பேரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது … Read more

2-வது வேலைவாய்ப்பு விழா: 71,000 பேருக்கு நாளை பணி ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி: ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் 71,000 பேருக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாடும் முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் “ரோஜ்கார் மேளா” திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இதன்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக நாளை (நவ.22) புதிதாக பணியில் சேர உள்ள 71,000 பேருக்கு பணி … Read more