குஜராத் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

அகமதாபாத்: குஜராத் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி நேற்று வழிபட்டார். குஜராத் சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி குஜராத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். அருணாச்சலின் இடா நகர், உ.பி.யில் உள்ள வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் அவர் குஜராத்துக்கு வந்தார். அவரை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்நிலையில், … Read more

இளம் பெண்ணைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கொலையாளிடம் உண்மை கண்டறியும் சோதனை!

டெல்லியில் இளம் பெண்ணைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய ஆப்தாப்பிடம் இன்று உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. அடிக்கடி வாக்குமூலத்தை மாற்றி கூறும் ஆப்தாபிடம் சோதனை நடத்த டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவனிடம் டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது. உண்மை கண்டறியும் சோதனையின் போது தடயவியல் குழு நேரில் இருப்பது கட்டாயமாகும். இதனால் தடயவியல் … Read more

விவசாயிகளின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றவில்லை: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை பாஜ அரசு நிறைவேற்றவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டினார். கடந்த 2020ம் ஆண்டு  சர்ச்சைக்குரிய வேளாண் சட்ட மசோதாவை ஒன்றிய  அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள்  போராட்டம் நடத்தினர். ஓராண்டாக நீடித்த போராட்டத்தின் போது பல்வேறு காரணங்களால் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்தனர். இதையடுத்து, கடந்த நவம்பர் 19ம் தேதி வேளாண் சட்டம் வாபஸ் பெறுவதாக மோடி அறிவித்தார். வேளாண் சட்டங்கள் … Read more

திருமணம் குறித்து பேச அப்தாப் வீட்டுக்கு சென்ற போது ஷிரத்தா பெற்றோரை அவமானப்படுத்திய குடும்பத்தினர்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த ஷிரத்தா கொலை வழக்கில் நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஷிரத்தாவும், அப்தாப்பும் ஒன்றாக வாழ்ந்து வந்ததால், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஷிரத்தாவின் பெற்றோர் முடிவு செய்தனர். இதுதொடர்பாக பேசுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு அப்தாப் வீட்டுக்கு ஷிரத்தாவின் தந்தை விகாஸ் வால்கர், தாய் ஹர்சிலா ஆகியோர் சென்றுள்ளனர். ஆனால் ஷிரத்தாவின் குடும்பத்தை அவமானப்படுத்தியதுடன், இனிமேல் தங்கள் வீட்டுக்கு மீண்டும் வரவேண்டாம் எனவும் கூறியுள்ளனர். இந்த திருமணம் நடந்திருந்தால், ஷிரத்தாவுக்கு இந்த … Read more

மங்களூரில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் : கர்நாடக காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மங்களூரில் ஆட்டோவில் நிகழ்த்தப்பட்டது குண்டுவெடிப்பு என்றும், இது தன்னிச்சையானது அல்ல மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. மங்களூரில் ஆட்டோவில் குண்டு வெடித்து சிதறிய இடத்தை கர்நாடக காவல்துறை ஏடிஜிபி அலோக் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே தாக்குதலின் நோக்கம் என்றும், அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். கோவை உக்கடத்தில் நிகழ்த்தப்பட்ட … Read more

பீகார் மாநிலத்தில் சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் முர்மு, முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். விசாரணையில், கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்தபோது ​அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்து நிகழ்ந்தது தெரிய … Read more

பட்டியலின பெண் தண்ணீர் குடித்ததால் பசுவின் கோமியத்தை கொண்டு டேங்கை சுத்தப்படுத்திய மக்கள்

கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குழாயில் தண்ணீர் குடித்ததால் கிராம மக்கள் அந்த  தண்ணீர் தொட்டியை காலி செய்து பசுவின் கோமியத்தை கொண்டு சுத்தம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் சாமராஜ் நகர் தாலுக்காவில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக உறவினர்கள், ஊர் மக்கள் வந்து சென்றனர். அப்போது ஒரு பட்டியலின பெண், லிங்காயத்கள் தெருவில் உள்ள … Read more

நடிகைகளை வைத்து ஆபாச படங்களை எடுத்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மீது போலீசாரின் குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு!

மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள இரண்டு 5 நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி நடிகைகளை வைத்து நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை எடுத்ததாக மகாராஷ்டிர போலீசாரின் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 450 பக்க குற்றப்பத்திரிகையில் இந்தி நடிகைகள் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, தயாரிப்பாளர் Meeta Jhunjhunwala மற்றும் கேமராமென் ராஜூ துபே உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. நடிகைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுத்து, அதை ஓடிடி தளத்துக்கு … Read more

பட்ஜெட் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை

டெல்லி: பட்ஜெட் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் ஆலோசனை மேற்கொள்கிறார். வேளாண்மைதுறை பிரதிநிதிகள், தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் உள்ளிட்டோருடன் இன்று நிர்மலா சீதாராமன் ஆலோசிக்க உள்ளார்.உள்கட்டமைப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.

சபரிமலையில் மீண்டும் துவங்கிய இன்னிசை கச்சேரி: பக்தி பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தி இன்னிசை கச்சேரிகள் மீண்டும் துவங்கியுள்ளன. பக்தர்கள் கச்சேரியை ஆர்வத்துடன் கண்டும் கேட்டும் ரசித்து மகிழ்ந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கட்டட்டுள்ளது. முழு தளர்வுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களை மகிழ்விக்கவும் அவர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தவும் தினசரி பக்தி இன்னிசை கச்சேரிகள் நடப்பது வழக்கம். இந்நிலையில், கொரோனா முடக்கத்திற்குப் பின் சபரிமலை சன்னிதான அரங்கில் … Read more