ஒரே சிறையில் 140 கைதிக்கு எய்ட்ஸ்; பாஜக ஆளும் மாநிலத்தில் பரபரப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தின் அண்டை மாவட்டமாக கிழக்கு டெல்லி உள்ளது. இங்குள்ள தஸ்னா சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என்று சுமார் 5500 கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மாநில காவல் துறை மற்றும் சிறைத் துறை சார்பில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. அப்போது காய்ச்சல், காச நோய், எச்.ஐ.வி, சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் குறித்து கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் சிறையில் உள்ள 140 கைதிகளுக்கு … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஒன்றிய வெளியுறவு அமைச்சக வாகன ஓட்டுநர் டெல்லியில் கைது

டெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஒன்றிய வெளியுறவு அமைச்சக வாகன ஓட்டுநர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் சதி வலையில் வீழ்ந்த ஓட்டுநரை டெல்லி போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு இந்தியா குறித்த ரகசிய தகவல்களை ஓட்டுநர் பகிர்ந்து வந்தது விசாரணையில் அம்பலமானது. 

சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு கட்டணம் குறைக்கப்படும் – திமுக எம்பி கேள்விக்கு கட்கரி பதில்

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு, மேலும் கட்டணம் குறைக்கப்படும் என திமுக எம்பி வில்சன் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படலாம் மற்றும் கட்டணங்கள் குறைப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  அரசின் முயற்சியால், சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் பணியில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், சுங்கச்சாவடியில் வாகனங்களில் இருந்து சுங்கவரி வசூலிக்க சராசரியாக … Read more

டிஷ்யூம்.. டிஷ்யூம்..! – மகாராஷ்டிராவில் உடைகிறது காங்கிரஸ் – சிவசேனா கூட்டணி?

மகாராஷ்டிர மாநிலத்தில் வீர் சாவர்க்கர் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சிவசேனா – காங்கிரஸ் கூட்டணி முறியும் நிலையில் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பாஜக கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி போட்டியிட்டது. இதில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. எனினும், முதலமைச்சர் பதவியை பாஜக விட்டுக் கொடுக்காததால் அதிருப்தி அடைந்த உத்தவ் தாக்கரே, பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய … Read more

அரசு மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு-25 மாணவிகள் மயக்கம்

ஐதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகள் 25 பேர் மயக்கமடைந்தனர். திடீரென ரசாயன வாயு கசிந்ததால் ஆய்வகத்தில் இருந்த மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த ரசாயன வாயு கசிந்தது என்பது குறித்து தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு … Read more

விதி மீறி இடமாற்றம் கண்டித்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்: 5 லட்சம் பேர் பங்கேற்பு

புதுடெல்லி: விதிமுறைகளை மீறி பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் நாளை ஒரு நாள் வங்கி பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால் காசோலை பரிவர்த்தனை பாதிக்கும். அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட சில வங்கிகளில் வெளி முகமை (அவுட்சோர்ஸிங்) மூலம் பணியாளர்களை அமர்த்துவதை கண்டித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், நவம்பர் 19ம் … Read more

கவுதம் நவ்லகாவுக்கு வீட்டுச் சிறை – உத்தரவைத் திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: மாவோயிச அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள கவுதம் நவ்லகாவை வீட்டுச் சிறையில் வைக்க அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்ற என்.ஐ.ஏ-வின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாவோயிச அமைப்புடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மகாராஷ்ட்ராவின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுதம் நவ்லகா, தன்னை வீட்டுச் சிறையில் வைக்க அனுமதிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் … Read more

நெல் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நவ.21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: வேளாண்துறை அறிவிப்பு

டெல்லி: முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை அடுத்து ஒன்றிய அரசு பயிர்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாளான (15.11.2022) அன்று  தவறிய விவசாயிகளுக்கு மீண்டும் (21.11.2022) வரை பயிர் காப்பீடு பதிவு செய்ய கூடுதலாக 4 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ராஜஸ்தானின் சில பகுதிகளில் உரத் தட்டுப்பாடு? – மத்திய அமைச்சகம் விளக்கம்!

தமிழ்நாட்டின் திருச்சி உள்ளிட்ட சிலப் பகுதிகளில் உர தட்டுப்பாடு உள்ளதாக வெளியான வதந்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும், ராஜஸ்தானில் சிலப் பகுதிகளில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக சொல்லப்படுவதும் தவறு எனவும் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரபி பருவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான அளவு உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப … Read more

ராகுல் காந்தி படுகொலை செய்யப்படுவார்; மர்ம கடிதத்தால் பரபரப்பு.!

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள ஸ்ரீ குஜராத் ஸ்வீட்ஸ் கடைக்கு, நேற்று தபாலில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. ‘இந்தூரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பாத யாத்திரை நுழையும் நாளில், குண்டு வெடித்து ராகுல் காந்தியும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோர் படுகொலை செய்யப்படுவர். 1984ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை நினைவு படுத்தி கொள்ளுங்கள். ராகுல் காந்தி வருகையின் போது, அவரது அப்பாவும் முன்னாள் இந்திய பிரதமருமான … Read more