பிரேக் செயலிழப்பால் ஏற்பட்ட பெரிய விபத்து! 8 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து 44 பக்தர்களுடன் தனியார் பேருந்து ஒன்று சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய உற்சாகமாக பஜனை பாடியபடி சென்று கொண்டிருந்தனர். பத்தனம்திட்ட மாவட்டம் , லாஹ அருகே விளக்கு வஞ்சி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 வயது சிறுவன் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிச.7-ல் தொடக்கம்

புதுடெல்லி: டிசம்பர் 7-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் நடைபெறும் நிலையில், டிசம்பர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதையொட்டியும், புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் குறித்த நேரத்தைக் காட்டிலும் நீண்டு செல்வதாலும் இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், இந்த குளிர்கால கூட்டத்தொடரை பழைய கட்டிடத்திலேயே நடத்திவிட்டு, பட்ஜெட் தொடரை புதிய கட்டிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் … Read more

குஜராத்தில் ராகுல் காந்தி நாளை தேர்தல் பிரசாரம்

ராஜ்காட்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை குஜராத்தில் இரண்டு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். குஜராத் மாநிலத்தில் வரும் 1, 5ம்  தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, காங்கிரஸ், பாஜ மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் சார்பில் பல்வேறு தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு இருந்ததால் … Read more

விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே பதவி புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் உள்ளார். தலைமை தேர்தல் ஆணையருக்கு உதவியாக எப்போதும் 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவது உண்டு. தற்போது, அனுப் சந்திர பாண்டே மட்டுமே தேர்தல் ஆணையராக இருக்கிறார். மற்றொரு பதவி காலியாக இருந்தது. இந்நிலையில்,  காலியாக உள்ள இந்த பதவிக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி முர்மு நேற்றிரவு வெளியிட்டார். ஒன்றிய கனரக தொழில்துறை செயலாளராக இருந்த … Read more

மும்பை அருகே ஆடி காரில் காயங்களுடன் கிடந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார்..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே ஆடி காரில் காயங்களுடன் கிடந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை – கோவா நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த ஆடி காரை சோதனையிட்ட போலீசார், அதில் சடலமாக கிடந்த நபரை காரின் கண்ணாடியை உடைத்து மீட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர் புனேவைச் சேர்ந்த சஞ்சய் கர்லே என்பதை உறுதி செய்த போலீசார், அவர் உடல்களில் நான்கு இடங்களில் காயங்கள் இருந்ததால் கொலை … Read more

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக ஊடுருவ முயன்ற நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்சாராவின் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து மர்ம நபர் ஊடுருவினார். வீரர்கள் அவரை திரும்பி செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், வீரர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அவர் இந்திய பகுதிக்குள் தொடர்ந்து முன்னேறி வந்ததால் வீரர்கள் துப்பாக்கிச்சூடு … Read more

நாடாளுமன்ற குளிர்கால தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி துவக்கம்: 23 நாட்களில் 17 அமர்வுகள் நடைபெறும்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருவதால் பழைய கட்டிடத்திலேயே கூட்டம் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். இமாச்சல பிரதேச, குஜராத் சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்தாண்டு சற்றே தாமதமானது. நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் தேதிகள் குறித்து மக்களவை, மாநிலங்களவை  செயலகம் தனித்தனியாக அறிவிக்கை வெளியிட்டுள்ளன. இதுபற்றி அரசு வட்டாரங்கள் … Read more

பப்பில் மப்பு ஆனவரை தூக்கிச் சென்றனர் கேரளாவில் மாடல் அழகி ஜீப்பில் கூட்டு பலாத்காரம்: மற்றொரு அழகி உட்பட 4 பேர் கைது  

திருவனந்தபுரம்: கேரளாவில் பப்புக்கு சென்று மப்பு ஆன 19 வயது மாடல் அழகியை தூக்கிச் சென்று, ஓடும் ஜீப்பில் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு மாடல் அழகியும் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், காசர்கோட்டை சேர்ந்த 19 வயதான இளம்பெண், கொச்சியில் தங்கி மாடல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கொச்சி ரவிபுரத்திலுள்ள ஒரு மது பாருக்கு, ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான டிம்பிள் லாவா என்பருடன் … Read more

பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தோற்ற வேட்பாளருக்கு ரூ.2 கோடி பணம், கார்: கிராம மக்கள் பாசமழை

ரோடக்: பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தோற்ற வேட்பாளருக்கு கிராம மக்கள் ரூ.2 கோடி பணமும், பெரிய காரையும் பரிசாக கொடுத்துள்ளனர். அரியானா மாநிலம், ரோடக் மாவட்டத்தில் உள்ள சித்தி கிராமம். இங்கு கடந்த 12ம் தேதி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில், இதே கிராமத்தை சேர்ந்த தரம்பால் தலால் அகா கலாவும், நவீன் தலாவும் போட்டியிட்டனர். இதில், தரம்பால் 66 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த கிராமம் மிகவும் பதற்றமிக்கது. தரம்பால் தோற்றதால் … Read more

ஸ்டீல், இரும்பு தாது ஏற்றுமதி வரி ரத்து ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஸ்டீல் மற்றும் இரும்பு தாதுக்கான ஏற்றுமதி வரியை ரத்து செய்து ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிந்தது. அதில் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி (இஇபிசி) 21 சதவீதம் சரிந்து, ரூ.59,200 கோடியாக இருந்தது. குறிப்பாக, இஇபிசி ஏற்றுமதி சரிவிற்கு ஸ்டீல் மற்றும் இரும்பு தாது கட்டிகளின் ஏற்றுமதி சரிவே முக்கிய காரணமாகும். இதன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒன்றிய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, … Read more