மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு விரைவில் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படும்: கர்நாடக டிஜிபி

மங்களூரு: கர்நாடகாவின் மங்களூருவில் நிகழ்ந்த ஆட்டோ குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை விரைவில் என்.ஐ.ஏ வசம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷரீக், போலி ஆதார் அட்டை மூலம் சிம்கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷிமோகாவில் … Read more

ஆன்லைன் மூலம் உங்கள் EPF கணக்கின் நாமினியை எளிதாக மாற்றலாம்

இபிஎஃப்ஓ ஆன்லைன் நாமினேஷன்: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) செப்டம்பர் மாதத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்தது, அதே நேரத்தில் அதன் நிகர சந்தாதாரர்கள் 16.82 லட்சம் பேர் உயர்ந்துள்ளனர். 1951 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையை வெளியிட்டதன் மூலம் இபிஎஃப்ஓ நடைமுறைக்கு வந்தது, இதனால் 1952 சட்டம் மாற்றப்பட்டது. அதன்படி தொடர்ந்து இபிஎஃப்ஓ அதன் சந்தாதாரர்களை தங்களின் குடும்ப விவரங்கள், சுயவிவரத் … Read more

இன்று அதிகாலை மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இன்று அதிகாலை 4.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். முன்னதாக நேற்று மாலை லடாக்கில் உள்ள லே மற்றும் கார்கில் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. கார்கிலுக்கு வடக்கே … Read more

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சிறப்பு உணவு – சொகுசாக வாழ்வதாக பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சிறப்பு உணவு வழங்கப்படுவது குறித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ள நிலையில், அவர் தண்டனை பெறுவதற்குப் பதிலாக சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. போலி நிறுவனங்கள் பலவற்றை … Read more

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம்; திருப்பதி கோயில் முக்கிய அறிவிப்பு!

திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை தரிசனம் செய்யும் விதமாக, டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் 6 மாதத்திற்கு பிறகு திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் கடந்த 1ம் தேதி மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்படும் கவுண்டர்களில் பக்தர்களிடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் திருப்பதி மலைக்கு நேரடியாக சென்று இலவசமாக ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு … Read more

அரசு வேலை தேடுவோரின் கவனத்திற்கு! ரயில்வே அமைச்சர் முக்கிய அறிவிப்பு

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, மத்திய அரசு மாதந்தோறும் 16 லட்சம் பேருக்கு வேலை தருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு வழங்கும் திட்டங்களின் பலன்கள் அனைவருக்கும் கிடைத்து வருகிறது என்பதையும் அஷினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுமட்டுமின்றி, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வாய்ப்புகள் நிறைந்த எரிசக்தி ஆதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். உண்மையில், அஜ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதுள்ள வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கடந்த 10-ந்தேதி ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தவறாக … Read more

”டெலிவரி பாய்ஸா? இந்த லிஃப்ட்ல போகாதீங்க” – மார்டன் பாகுபாடும்.. நெட்டிசன்ஸின் கொதிப்பும்!

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு எதிராக குடியிருப்புவாசிகள் பலரும் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு. அந்த வகையில், ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஊழியர்கள் தங்களது அப்பார்ட்மென்ட்டில் உள்ள லிஃப்டில் செல்லக் கூடாது நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்த புகைப்படத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த போஸ்ட்டில், ஸ்விக்கி, ஸொமெட்டோ உட்பட எந்த டெலிவரி ஊழியர்களும் லிஃப்டை பயன்படுத்தக் … Read more

7-வது முறையாக சொந்த தொகுதியில் வெற்றி பெற்ற நேபாள பிரதமர்: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஷேர் பகதூர் தியூபா வெற்றி

நேபாளம் : நேபாள நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்று இருக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபா அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றன. அந்த வகையில் 110 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையானது திங்கள் கிழமை … Read more

தமிழக – கேரள எல்லை வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா – இளம்பெண் உட்பட மூவர் கைது

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சொகுசு காரில் கஞ்சா கடத்திய வழக்கில் இளம்பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி கலால்துறை சோதனைச் சாவடியில் கேரள கலால்துறை ஆய்வாளர் ஜார்ஜ் ஜோசப், கலால்துறை பெண் அலுவலர் ஸ்டெல்லா உம்மன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகத்தில் இருந்து வந்த சொகுசு காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது அதில், அரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரையும் கஞ்சாவையும் … Read more