சதாம் உசைன் போல இருக்கிறார் ராகுல் அசாம் முதல்வர் கேலி! – காங்கிரஸ் பதிலடி!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இன்று மத்திய பிரதேசத்தில் நுழைந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் 12 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, அதன்பின்பு ராஜஸ்தானுக்குள் செல்ல உள்ளனர். நடைபயணத்தின் வழியில் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையின் 77வது நாள். இந்நிலையில், ராகுல் காந்தி தாடி வைத்த தோற்றத்தில் இருப்பதால், அவரை ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுடன் ஒப்பிட்டு அசாம் … Read more

ராகுல் காந்தியின் தோற்றத்தை சதாம் உசேன் உடன் ஒப்பிட்ட அசாம் முதல்வருக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதனால், அவர் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் கொஞ்சம் தாடி வைத்துள்ளார். இந்தச் சூழலில் அந்தப் பயணத்தை கேலி செய்தும், சதாம் உசேன் போல ராகுல் காந்தி தோற்றம் அளிக்கிறார் எனவும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியுள்ளார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை பணியை ஹிமந்த பிஸ்வா மேற்கொண்டு வருகிறார். … Read more

‘கண்டுபிடித்து கொல்’: பாக்., ட்ரோன்களை எதிர்கொள்ள தயாராகும் இந்திய ராணுவம்!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல், தீவிரவாதிகளின் ஊடுருவல் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எத்தனை ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தை நடந்தாலும் பாகிஸ்தான் தரப்பு அதனை மீறி வருவதாகவே குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வகையில், இந்திய எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன்கள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் குறிப்பாக பஞ்சாபில் ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் வேவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனை எதிர்கொள்ளும் வகையில், … Read more

10,000 ஊழியர்கள் பணிநீக்க விவகாரம்! அமேசானுக்கு சம்மன் அனுப்பிய தொழிலாளர் நல அமைச்சகம்!

  Amazon Layoff: அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக ஊழியர் அமைப்புகள் தொழிலாளர் அமைச்சகத்தை அணுகியுள்ளன. ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா (அமேசான் இந்தியா) ஊழியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், அதற்கு எதிராக நிறுவனத்துக்கு தொழிலாளர் அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. ஊழியர் சங்கத்தின் புகாரின் பேரில் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசில், நிறுவனம் தனது நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக10,000 ஊழியர்களை பணி … Read more

சத்யேந்திர ஜெயின் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயில் குறித்து அறிக்கை சமர்பிக்க திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் அளிக்கப்படும் உணவு குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் நவ.28ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு விரைவில் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படும்: கர்நாடக டிஜிபி

மங்களூரு: கர்நாடகாவின் மங்களூருவில் நிகழ்ந்த ஆட்டோ குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை விரைவில் என்.ஐ.ஏ வசம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷரீக், போலி ஆதார் அட்டை மூலம் சிம்கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷிமோகாவில் … Read more

ஆன்லைன் மூலம் உங்கள் EPF கணக்கின் நாமினியை எளிதாக மாற்றலாம்

இபிஎஃப்ஓ ஆன்லைன் நாமினேஷன்: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) செப்டம்பர் மாதத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்தது, அதே நேரத்தில் அதன் நிகர சந்தாதாரர்கள் 16.82 லட்சம் பேர் உயர்ந்துள்ளனர். 1951 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையை வெளியிட்டதன் மூலம் இபிஎஃப்ஓ நடைமுறைக்கு வந்தது, இதனால் 1952 சட்டம் மாற்றப்பட்டது. அதன்படி தொடர்ந்து இபிஎஃப்ஓ அதன் சந்தாதாரர்களை தங்களின் குடும்ப விவரங்கள், சுயவிவரத் … Read more

இன்று அதிகாலை மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இன்று அதிகாலை 4.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். முன்னதாக நேற்று மாலை லடாக்கில் உள்ள லே மற்றும் கார்கில் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. கார்கிலுக்கு வடக்கே … Read more

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சிறப்பு உணவு – சொகுசாக வாழ்வதாக பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சிறப்பு உணவு வழங்கப்படுவது குறித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ள நிலையில், அவர் தண்டனை பெறுவதற்குப் பதிலாக சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. போலி நிறுவனங்கள் பலவற்றை … Read more

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம்; திருப்பதி கோயில் முக்கிய அறிவிப்பு!

திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை தரிசனம் செய்யும் விதமாக, டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் 6 மாதத்திற்கு பிறகு திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் கடந்த 1ம் தேதி மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்படும் கவுண்டர்களில் பக்தர்களிடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் திருப்பதி மலைக்கு நேரடியாக சென்று இலவசமாக ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு … Read more