சத்தீஸ்கரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ராய்பூர்: சத்தீஸ்கரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி..!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து ஆலோசிக்க சமீபத்தில் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டிற்கான ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. … Read more

ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு பணம் வழங்கப்பட்டதா? – பாஜகவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு

மும்பை: காங்கிரஸ் எம்.பி. ராகுலுடன் பாதயாத்திரையில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பாஜக குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி முதல், மகாராஷ்ராவில் நடைபயணம் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் யாத்திரையின்போது, இந்தி … Read more

குஜராத்தில் 12 பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடை நீக்கம்

குஜராத்: குஜராத்தில் 12 பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சுயேட்சையாக போட்டியிட முயன்ற நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் ஓய்வுபெறும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனம் – அரசு மீது உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: குறுகிய காலத்தில் ஓய்வுபெறக்கூடிய வகையிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிப்பதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜோசப் மத்திய அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து மத்திய அரசு பேசுவதெல்லாம் … Read more

25 ஆண்டுகள் நிறைவு… தடைகளை தாண்டி வெள்ளி விழா கொண்டாடும் பிரசார் பாரதி!

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் 7 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர், தன்னிச்சையாக செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதியை உருவாக்க சட்டம் இயற்றியது. இதையடுத்து 1997ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி பிரசார் பாரதி தொடங்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவிற்கென தனியாக ஒரு ஒளிபரப்பு நிறுவனம் கிடைத்தது. இதன் கீழ் ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் ஆகியவை கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து தனது செயல்பாடுகளை, ஒளிபரப்பை படிப்படியாக விரிவுபடுத்தி வந்தது. ஆனால் வெற்றி பெற்ற ஒளிபரப்பு … Read more

பீகாரில் வருமான வரி சோதனை ரூ.100 கோடி கருப்பு பணம் சிக்கியது

புதுடெல்லி: பீகாரில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.100 கோடி கருப்பு பணம் சிக்கியுள்ளது. ரியல் எஸ்டேட், வைர நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பீகாரைச் சேர்ந்த சில வணிகக் குழுக்களுக்கு, பீகார், உபி, டெல்லியில் உள்ள 30 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 17ம் தேதி ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.5 கோடி மதிப்புள்ள பணம், நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  14 வங்கி லாக்கர்கள் சீல் … Read more

அசாம் போலீஸார், மேகாலயா மக்கள் மோதல் – துப்பாக்கிச்சூட்டில் காவலர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

குவாஹாட்டி: அசாம் போலீஸார், மேகாலயா மக்கள் இடையே நேற்று மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில்அசாம் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். கலவரத்தில் அசாம் வனத்துறை காவலர் உயிரிழந்தார். கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. மத்திய அரசின்சமரசத்தால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சூழலில் நேற்று … Read more

தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி வீட்டில் 2-வது நாளாக வருமானவரி சோதனை

ஆந்திரா: தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி வீட்டில் 2-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது. அமைச்சரின் மகன் மெகந்திர ரெட்டி, மருமகன் மரி ராஜசேகர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நீடிக்கப்பட்டுள்ளது. மல்லா ரெட்டி மகனின் நண்பர் ரகுநாத ரெட்டி வீட்டில் இருந்து இதுவரை கணக்கில் வராத ரூ.2 கோடி பறிமுதல் செய்துள்ளனர். 

22 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் இருந்தவருக்கு இறுதியாக கிடைத்த விடுதலை!

ஜாமீனில் வெளிவருவதற்கான பிணைப் பத்திரம் தாக்கல் செய்யாததால், 22 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டவரை விடுவிக்கும்படி ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டில் குற்ற வழக்கு ஒன்றில் ஜெய் பிரகாஷ் என்பவரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெய் பிரகாஷ்க்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் பிணைப் பத்திரம் அளிக்காததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அண்மையில் ஜெய் பிரகாஷ்க்கு உத்தரப் … Read more