சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அதிகாலை 3 மணிக்கே நடை திறப்பு: 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருப்பதால், காலையில் கோயில் நடை ஒரு மணி நேரம் முன்னதாகவே திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால், நடை திறந்த 16ம் தேதி மாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் … Read more

அடுத்த அதிர்ச்சி..!! ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல, பயங்கரவாதிகள் தயாரானதற்கான அடையாளம்

கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடிது சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் பார்வையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து … Read more

பேட்டரியுடன் ப்ரெஷர் குக்கர் பறிமுதல்; மங்களூரு சம்பவம் தீவிரவாத செயல்: கர்நாடக டிஜிபி தகவல்

மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று மாலை ஆட்டோ ஒன்றில் நடந்த வெடிவிபத்து தற்செயலானது அல்ல அது தீவிரவாதச் செயல் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில், மத்திய புலன் விசாரணை அமைப்புகள் மாநில காவல்துறைக்கு விசாரணையில் உதவி வருவதாக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடகா டிஜிபி தனது ட்விட்டர் பக்கத்தில், “உறுதியாகிவிட்டது. நடந்தது விபத்து அல்ல. அது தீவிரவாத செயல். பலத்த சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் … Read more

டெல்லி அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருநபர் கால்களை அழுத்தி, மசாஜ் செய்து விடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதியப்பட்டது. அவரை கடந்த மே 30ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில், திகார் … Read more

திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தருக்கு மசாஜ் – பிசியோதெரபி சிகிச்சை என ஆம் ஆத்மி விளக்கம்

புதுடெல்லி: திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது. இது பிசியோதெரபி சிகிச்சை என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. டெல்லி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. போலி நிறுவனங்கள் பலவற்றை நடத்தி அதன்மூலம் நிதி மோசடியில் … Read more

கர்நாடகாவில் பயங்கரவாத தாக்குதல்: காவல்துறை அதிர்ச்சி தகவல்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அதில் பயணம் செய்த ஒருவர் என இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மங்களூருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பயணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் உயர் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்றும், காஸ் … Read more

இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மறைந்த நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன்,’ என்று பதிவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, … Read more

காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க வாரணாசிக்கு நள்ளிரவில் வந்த தமிழர்களை ரயில் நிலையத்தில் வரவேற்ற மத்திய அமைச்சர்

புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க நேற்று முன்தினம் நள்ளிரவு வாரணாசி வந்த தமிழர்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ரயில் நிலையம் சென்று வரவேற்றார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கார்த்திகை மாத முதல் நாளான நவம்பர் 17 முதல் ஒரு மாதத்திற்கு காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க தமிழகத்திலிருந்து காசி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்ட 3 சிறப்பு … Read more

மங்களூருவில் நேற்று நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல்: கர்நாடக டிஜிபி அறிவிப்பு

மங்களூரு: மங்களூருவில் நேற்று நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல் என கர்நாடக டிஜிபி அறிவித்துள்ளார். மங்களூருவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் வெடிபொருள் நேற்று வெடித்து சிதறியது. குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த பெங்களூருவில் இருந்து தனிப்படை மங்களூரு விரைகிறது. ஆட்டோவில் பயணித்தவர் கொண்டு வந்த சாக்கு முட்டையிலிருந்து வெடிபொருள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தராகண்டில் ஆழமான பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழப்பு

சாமோலி: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் இருந்து 16 பேர்பல்லா ஜகோல் என்ற கிராமத்துக்கு நேற்று முன்தினம் சுமோ காரில் சென்றுகொண்டிருந்தனர். காரில் இடமில்லாத நிலையில், அதன் கூரை மீதும் சிலர் அமர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஜோஷிமத் அருகே உர்கம் என்ற இடத்தில் சுமார் 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் சுமோ கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. தகவல் அறிந்து போலீஸாரும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த … Read more