தேர்தல் பணிகளில் இருந்து ‘பப்ளிசிட்டி’ ஐஏஎஸ் அதிகாரி நீக்கம்: போஸ் கொடுத்த போட்டோவால் வந்த வினை

அகமதாபாத்: குஜராத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், பப்ளிசிட்டிக்காக தனது புகைப்படத்தை வெளியிட்டதால் அவரை தேர்தல் பணியில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அகமதாபாத்தில் உள்ள பாபுன்நகர் மற்றும் அஸ்வாரா என்ற இரு தொகுதிகளில் அபிஷேக் சிங் என்ற ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவுகளை போட்டு வந்தார். இந்நிலையில், தான் தேர்தல் நடத்தும் அலுவலராக … Read more

'தமிழை காக்க வேண்டியது இந்தியர்களின் கடமை' – பிரதமர் மோடி பேச்சு!

“உலகின் பழம்பெரும் மொழியான தமிழ் மொழியை காக்க வேண்டியது 130 கோடி இந்தியர்களின் கடமை. அதனை காக்க தவறினால் நாட்டிற்கு நஷ்டம் ” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தனது உரையை ‘வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு’ என தமிழில் கூறி துவக்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க … Read more

குஜராத் பேரவை தேர்தல் முடிந்தவுடன் டிச. 7ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது: 23 நாட்களில் 17 அமர்வுகள் நடைபெறும் என்று தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர்  7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி  தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், 2017, 2018ம் ஆண்டுகளில் டிசம்பரில் குளிர்கால கூட்டத்ெதாடர் நடந்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் ( ரூ.1200 கோடி செலவில்) குறித்த  நேரத்தைக் காட்டிலும் நீண்டு செல்வதாலும், இந்த ஆண்டு … Read more

காசி தமிழ்ச் சங்கமம் | “தமிழ் மொழியைக் காக்க வேண்டியது இந்திய மக்கள் அனைவரின் கடமை” – பிரதமர் மோடி

வாரணாசி: பழம்பெரும் மொழியான தமிழைக் காக்க வேண்டிய கடமை, இந்திய மக்கள் அனைவருக்கும் இருக்கிறது” என்று காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசினார். உத்தரப் பிரசேத்தின் வாரணாசியில் நடைபெறும் ஒரு மாத நிகழ்ச்சியான ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்வை சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் … Read more

தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் நியமனம்; மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு.!

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதேபோல் 68 தொகுதிகள் உள்ள இமாச்சல் மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தநிலையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச … Read more

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார் மணிகா பத்ரா..!

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்  போட்டியில், இந்தியாவின் மணிகா பத்ரா வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்தார். பாங்காக்கில் நடைபெற்ற  வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், உலகின் 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹினா ஹயாதாவை, மணிகா பத்ரா எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 4-க்கு 2 என்ற செட் கணக்கில் மணிகா பத்ரா வெண்கல பதக்கத்தை வென்றார். இதன்மூலம், ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற … Read more

சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம்: 8 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் 8 மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர். கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த இரு வருடங்களுக்குப் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால் நடைதிறந்த 16ம் தேதி மாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் … Read more

பயங்கரவாதத்தைவிட அதற்கு நிதி உதவி செய்வது மிகவும் ஆபத்தானது: அமித் ஷா

புதுடெல்லி: பயங்கரவாதத்தைவிட அதற்கு நிதி உதவி செய்வது மிகவும் ஆபத்தானது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு நிதி உதவி மறுத்தல் எனும் தலைப்பிலான 2 நாள் கருத்தரங்கம் புதுடெல்லியில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் அமித் ஷா ஆற்றிய நிறைவுரை: பயங்கரவாதம் என்பது ஜனநாயகம், மனித உரிமை, பொருளாதார முன்னேற்றம், உலக அமைதி ஆகியவற்றுக்கு எதிரானது. பயங்கரவாதம் வெற்றிபெற நாம் ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது. பயங்கரவாதத்தைவிட அதற்கு நிதி உதவி … Read more

'தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு உ.பி.,யில் பிரதிபலிக்கிறது' – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே ஆண்டுகளில் கணக்கிட முடியாத பந்தம் உள்ளது என்றும், தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை உத்தர பிரதேசத்தில் பிரதிபலிக்கிறது என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கூறியுள்ளார். வாரணாசியில் இன்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு, வரவேற்புரை ஆற்றிய அவர், புனித பூமியான வாரணாசியில் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் … Read more

சாலையோரம் கடை போட்டிருந்த தந்தையை போலீஸ்காரர் அறைந்ததால் நீதிபதியான மகன்!: பீகார் இளைஞனின் வெற்றிக் கதை

சஹர்சா:டெல்லியில் சாலையோரம் கடை போட்டிருந்த தந்தையை போலீஸ்காரர் ஒருவர் அறைந்ததால், விடாமுயற்சியுடன் போராடி அவரது மகன் நீதிபதியான வெற்றிக் கதை பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் சத்தூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் யாதவ், கடந்த சில ஆண்டுகளுக்கு வறுமையின் காரணமாக டெல்லிக்கு குடிபெயர்ந்தார். அங்கு சாலையோரம் கடை அமைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஒரு நாள் போலீஸ்காரர் ஒருவர், சாலையோரம் கடை போட்டதற்காக சந்திரசேகர் யாதவை அறைந்தார். அதனை அவரது மகன் கமலேஷ் குமார் … Read more