கர்ப்பமான சிறுமியை கிணற்றில் வீசிய ஆசிரியர்!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியைச் சேர்ந்த சிவேந்திரா என்பவர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவி சிறிது நாட்களுக்கு பிறகு தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தார். அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ஆசிரியரிடம் கூறினார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆசிரியர் கருவை கலைக்க மருந்து ஒன்றை … Read more

கர்நாடகாவில் பட்டியலினப் பெண் தண்ணீர் அருந்தியதால் நீர்த்தொட்டியில் பசு மூத்திரம் ஊற்றிய ஊர் மக்கள்

சம்மராஜநகர்: கர்நாடகாவில் சம்மராஜநகர் மாவட்டத்தில் பொது நீர்த்தொட்டி ஒன்றிலிருந்து பட்டியலினப் பெண் ஒருவர் தண்ணீர் அருந்தியதால் அந்தத் தொட்டியிலிருந்த மொத்த தண்ணீரையும் வெளியேற்றிவிட்டு தொட்டியில் பசு மூத்திரம் தெளித்த அவலம் நடந்துள்ளது. சம்மராஜநகர் ஹக்கோடோரா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் லிங்காயத் சாதியினர் அதிகம் வசிக்கின்றனர். அச்சமூகத்தினரின் பயன்பாட்டிற்காக உள்ள அந்த நீர்த்தொட்டியிலிருந்து பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் தண்ணீர் அருந்தியுள்ளார். இதனையடுத்து அந்தத்தொட்டியின் நீர் வீணாக வெளியேற்றப்பட்டுள்ளது. இது குறித்த … Read more

அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது: அமெரிக்க தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் தகவல்!

அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாக அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபைனர் தெரிவித்துள்ளார். உலகளாவிய ஒத்துழைப்புக்கான நட்பாக இருநாடுகளின் நட்புறவு முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார். வாஷிங்டனில் இந்திய ஹவுஸ் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ஜான், குவாட் மாநாடு, இந்தியா தலைமையேற்றுள்ள ஜி 20 கூட்டமைப்பின் மாநாடு போன்ற நிகழ்வுகள் மூலமாக அடுத்த ஆண்டில் பிரதமர் மோடி- அதிபர் ஜோ பைடன் இடையிலான நட்பு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். Source … Read more

மோடி – மம்தா டிச.5ல் சந்திப்பு

கொல்கத்தா: டெல்லியில் பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் டிச.5ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றியணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் பேசிய மம்தா, ‘மாநிலங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகைக்காக ஒன்றிய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டுமா? நிலுவை தொகையை உடனடியாக தரவிட்டால் ஜிஎஸ்டி … Read more

பழங்குடியினருக்கான சட்டங்களை பலவீனப்படுத்தும் மோடி அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புல்தானா: பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பலவீனப்படுத்தி வருகிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதிவாசி பெண் பணியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி இதுகுறித்து மேலும் கூறியதாவது: பழங்குடியினர் மட்டுமே இந்த நாட்டின் “முதல் உரிமையாளர்” என்பதை எனது பாட்டி (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) அன்றே கூறியுள்ளார். இதர மக்கள் போலவே … Read more

மேடையில் நடனமாடிய மாணவர்கள்.. தன்னை மறந்து டான்ஸ் ஆடிய டீச்சர்.. வீடியோ வைரல்!

கேரளாவில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய மாணவர்களுக்கு மேடையின் கீழ் நின்று ஆசிரியை ஒருவர் நடனமாடி அசைவுகளை சொல்லி கொடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள  பள்ளி ஒன்றில் சிறு குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ]அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்று திறனாளி  மாணவ, மாணவிகள் நடனம் ஆடும் போது அவர்களின் நடன ஆசிரியரான கீது என்பவர் மேடையின் கீழ் பகுதியில் நின்று நடனமாடி அசைவுகளை சொல்லி கொடுத்தார்.  Source link

தோணி கவிழ்ந்து 4 பேர் மூழ்கி பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம்,  மலப்புரம் அருகே உள்ள திரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்துல் சலாம் (54), அபூபக்கர்(55), ரொகியா(65), சைனபா(54). இவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள  பாரதப்புழா ஆற்றில் மீன் பிடித்து விற்பனை செய்வது வழக்கம். நேற்று முன்தினம் மாலை இவர்கள் உள்பட 6 பேர் ஒரு தோணியில் மீன் பிடிக்க  ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தோணி  கவிழ்ந்து அனைவரும்  ஆற்றுக்குள் விழுந்தனர். இவர்களில் 2 பேர் நீந்தி  … Read more

உ.பியிலும் டெல்லி கொடூரம்.. கரும்பு தோட்டத்தில் வைத்து Ex காதலி 6 துண்டாக வெட்டி வீச்சு!

திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்டு வந்த தனது லிவ்-இன் பார்ட்னர் ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்து 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் வீசிய அஃப்தப்பின் கொலை வழக்கு குறித்த அதிர்வலையே இன்னும் அடங்கிடாத சூழலில், முன்னாள் காதலியை கொன்று 6 துண்டுகளாக வெட்டிய கொடூரம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது. உத்தர பிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் யாதவ். இவருக்கும் இஷாக் பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராதனா என்ற பெண்ணும் காதல் உறவு இருந்திருக்கிறது. ஆனால் அண்மையில் ஆராதனா வேறு … Read more

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த வாரம் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தனர். கடந்த சனிக்கிழமை அதிகாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் நேற்று ஞாற்றுகிழமை என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. … Read more

முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கர்: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து

பனாஜி: கோவா மாநிலம் பனாஜியில் பாரம்பரிய திருவிழா நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எழுத்தாளருமான சசி தரூர் பேசியதாவது. 1920, 30, 40-களில் பெண்களும் பங்கேற்ற கூட்டங்களில் அம்பேத்கர் பேசி உள்ளார். அது இப்போது ஆண் அரசியல்வாதிகளின் வளர்ச்சியாக கருதப்படுகிறது. நாட்டின் முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கராகத்தான் இருக்கக்கூடும். கட்டாய திருமணத்துக்கு சம்மதிக்கக் கூடாது என பெண்களை அவர் வலியுறுத்தினார். திருமணத்தையும், குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போட வேண்டும் … Read more