ஆந்திர ஐகோர்ட் நீதிபதிகளான தேவானந்த், ரமேஷ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு..!!

பெங்களூரு: ஆந்திர ஐகோர்ட் நீதிபதிகளான தேவானந்த் மற்றும் ரமேஷ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதி தேவானந்த் சென்னை ஐகோர்ட்டுக்கும், நீதிபதி ரமேஷ் அலகாபாத் ஐகோர்ட்டுக்கும் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 2 நீதிபதிகள் பணியிட மாற்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் அடுத்தாண்டில் 600 கிராமங்களில் பயனாளிகளுக்கு இலவச பட்டா-சித்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தகவல்

சித்தூர் : சித்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் 600 கிராமங்களில் பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரரெட்டி தெரிவித்துள்ளார். சித்தூர் அம்பேத்கர் பவனில் நம் பூமி நம் உரிமை திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு இலவசமாக பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டி தலைமை தாங்கி 587 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: முதல்வர் ஜெகன்மோகன் மாநிலம் முழுவதும் தேர்தலின் போது மேற்கொண்ட பாதையாத்திரையின்போது நவரத்தினா … Read more

உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்வு..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோவண்டி பகுதியில் கடந்த மாதம், தட்டம்மை நோய் பாதிப்பால் குழந்தைகள் பலியாகி உள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது.இதன்பேரில் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று, மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய சுகாதாரத்துறை குழும அதிகாரிகள், மும்பை வந்து பரிசோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் இது வரை தட்டம்மை நோயினால் 12 பேர் உயிரிழந்தது பதிவாகி உள்ளது. இந்த … Read more

PSLV-C54: 9 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோ ராக்கெட்

இந்திய விண்வெளி விஞ்ஞானிகளுக்கு இன்று மற்றொரு முக்கியமான நாள்!! ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் (SDSC) SHAR-ல் இருந்து PSLV-C54/EOS-06 மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிஎஸ்எல்வி 3 செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு வெற்றிகரமாக இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டின் முக்கிய பேலோடான ஓசன்சாட் சுற்றுப்பாதை-1 இல் பிரிக்கப்படும். அதே நேரத்தில் மற்ற எட்டு நானோ செயற்கைக்கோள்கள் அவற்றுக்கான தேவைகளின் அடிப்படையில் … Read more

அரசியல் சாசன தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து..!!

டெல்லி: அரசியல் சாசன தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்ணல் அம்பேத்கர் நம் அனைவரையும் ஒற்றுமை பாதையில் அணிவகுக்க சொன்னார். அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு வார்த்தையும் நிலைநிறுத்தப்படும் வரை, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

”மறக்குமா நெஞ்சம்” – 26 /11 மும்பை தாக்குதலும், அதன் தாக்கமும்!

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், மும்பையின் தாஜ் ஹோட்டல் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் கொடூர தாக்குதலில் 26 வெளிநாட்டவர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு கடந்த 2012 நவம்பர் 11-ல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் காவலர்கள் மற்றும் … Read more

இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது: இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு

ஆந்திரா: இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பாய்ந்த ராக்கெட் ஏவுதல் வெற்றிபெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புவிநோக்கு செயற்கைகோள் EOS – 6, 8 நானோ செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி சி – 54 நிலைநிறுத்தியது. கடலில் மற்றும் கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வேறுபாடுகளை கண்காணிக்க புவிநோக்கு செயற்கைகோள் உதவும்.

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – ஒரே நாளில் 61,483 பேர் தரிசனம்

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 61,483 பேர் தரிசனம் செய்தநிலையில், பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விடுமுறை நாட்களான இன்றும் நாளையும் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கும் என எதிர்பார்ப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த 16-ம் தேதி முதல் தற்போது வரை பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அலை மோதி வருகிறது. வெள்ளிக்கிழமையான நேற்று (25.11.22) மட்டும் தரிசனத்திற்காக … Read more

நமது அரசியல் சாசனமே நமது மிகப்பெரிய பலம்: டெல்லியில் அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை

டெல்லி: நமது அரசியல் சாசனமே நமது மிகப்பெரிய பலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். நமது அரசியல் சாசனம் நமக்கு கொடுத்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கை. இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கு கொண்டு இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் மோடி தெரிவித்தார்.

26/11 Attack Mumbai: இந்தியாவை உலுக்கிய மும்பை தாக்குதல், 14-ம் நினைவு தினம் இன்று

26/11 மும்பை தாக்குதல்: 21ஆம் நூற்றாண்டில் பயங்கரவாதம் மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி என்பதை அனைத்து இந்தியர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் நினைவூட்டும் ஒரு தேதியாக நவம்பர் 26 உள்ளது. 14 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், தாக்குதலின் காயங்கள் இன்னும்  நாட்டு மக்களின் இதயங்களில் அப்படியேதான் உள்ளன. இந்த தாக்குதல் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலக நாடுகள் “பயங்கரவாதம்” என்ற அச்சுறுத்தலை ஒப்புக் கொண்டன. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தத் தாக்குதல், நமது தேசியப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள … Read more