இன்னும் 10 நாட்கள் தான்… திடீர்னு 7 பேரை கெட் அவுட் பண்ண பாஜக- என்ன நடக்கிறது குஜராத்தில்?

வரும் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். சுமார் 27 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக குஜராத் மாநிலம் திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து 7வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர அக்கட்சி முனைப்பு காட்டி கொண்டிருக்கிறது. இம்முறை அதை … Read more

Isha Ambani Baby: அம்பானி குடும்பத்திற்கு வந்தாச்சு புதிய 'வாரிசு'.. இரட்டை குழந்தைகளுக்கு தாயான இஷா அம்பானி!

உலகின் பெரும் கோடீஸ்வரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி – நிதா அம்பானி தம்பதிக்கு, ஆகாஷ், இஷா, ஆனந்த் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், அம்பானியின் மகள் இஷா, அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் நேற்று (நவ. 19) இரட்டை குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து அம்பானி குடும்பத்தார் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,”எங்கள் மகள் – மருமகன், இஷா – ஆனந்த் தம்பதியர் நேற்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து, எல்லாம் வல்ல இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்.  இஷா, பெண் … Read more

மங்களூரில் ஆட்டோ வெடி விபத்தில் கோவைக்கும் தொடர்பு – கர்நாடக டிஜிபி தகவல்..!

மங்களூருவில் ஆட்டோவில் வெடி விபத்து ஏற்பட்ட நிகழ்வோடு கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் சூட்  தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும், கடந்த சில மாதங்களில் கோவை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு அவர் பயணித்ததாகவும் கூறினார். இதனிடையே, அந்நபர் கோவையில் போலியான விவரங்கள் வழங்கி சிம் கார்டு வாங்கியுள்ளதாகவும், அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ததை அவரது … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருக்கும் நிலையில் விடுமுறை நாளான இன்றும் சுமார் 67 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.   சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாலை அணிந்து இருமுடி கட்டி வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சரணம் கோஷங்கள் … Read more

'எல்லா வாக்குச்சாவடியிலும் பாஜக வெற்றியே எனது இலக்கு' – பிரதமர் மோடி பிரச்சாரம்

வெராவல்: பாஜக அனைத்து வாக்குச்சாவடியிலும் வெற்றி பெறுவதே குஜராத் தேர்தலில் எனது இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி சோம்நாத் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேநந்திர மோடி வெராவல் தொகுதி மக்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாஜகவுக்கு வெற்றியைத் தர வேண்டும் என்று கோரினார். குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது … Read more

காதலுக்கு இறப்பில்லை… உயிரிழந்த காதலியை திருமணம் செய்த இளைஞர் – மனதை உலுக்கும் வீடியோ

இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் வைரலாகும். மன அமைதியை தரும் வீடியோக்களில் இருந்து தூக்கங்களை தொலைக்கச்செய்யும் வீடியோக்கள் வரை அத்தனையும் தற்போது வைரலாகிறது. மக்களும் தங்களின் சுக, துக்கங்களை பகிர்வது போல் அனைத்தையும் பொதுவெளியில் பரப்பி வருகின்றனர். அந்த வகையில், சமீப நாள்களாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோ என்பது துக்கமான சுப நிகழ்ச்சியுடையது என்றுதான் சொல்ல வேண்டும். மனதை உருக்கும் ஒரு காதல் திருமணம்தான் தற்போது வைரலாகி வருகிறது. தான் நீண்ட காதலித்து வந்த … Read more

ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது

டெல்லி: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பிரிக் எஸ்கே மிஸ்ரா மற்றும் அவரது குழுவினரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குடியரசுதலைவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  

”மங்களூருவில் நடந்தது விபத்தல்ல.. பயங்கரவாத தாக்குதல்” – கர்நாடக DGP அறிவிப்பால் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கங்கநாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரோடி பகுதியில் உள்ள உள்வட்ட சாலையில், நேற்று (நவ.,19) மாலை சென்று கொண்டிருந்த ஆட்டோவில் பயணியின் பையிலிருந்த பார்சல் ஒன்று திடீரென வெடித்து சிதறி அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதில் ஆட்டோ ஓட்டுநரும், ஆட்டோவில் சென்ற பயணியும் படுகாயமடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு … Read more

ம.பி. பாஜக எம்எல்ஏவின் காரை வழிமறித்து ரூ.30 ஆயிரம் பாக்கியை கேட்ட டீக்கடைக்காரர்

சீஹோர்: மத்தியபிரதேச மாநிலத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரான கரண் சிங் வர்மா, தற்போது இச்சாவர் தொகுதியில் (முன்பு சீஹோர்) பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் இவர் அண்மையில் சீஹோர் மாவட்டம் இச்சாவர் தொகுதிக்கு காரில் வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஒருவர் காரை வழிமறித்தார். காரை டிரைவர் நிறுத்தியபோது, எம்எல்ஏவிடம் சென்ற டீக்கடை உரிமையாளர் 2018-ம்ஆண்டு முதல் டீக்கடையில் சாப்பிட்டுவிட்டு தராமல் சென்ற ரூ.30 ஆயிரம் பாக்கி பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். … Read more

புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்

புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை, தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டு ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் மத்திய அரசு செயலாளராக பணியாற்றியுள்ளார். … Read more