இந்தியாவில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் தயாரிப்பது பற்றி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று ஆய்வு..!

இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம்   தயாரிப்பது பற்றி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டு உள்ளது. இரண்டு மாநில கடற்பகுதிகளிலும் கடற்பகுதியில் வீசும் காற்று 12 முதல் 18 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய காற்றாலைகளை இயக்குவதற்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் இந்த ஆய்வு நடைபெறுவதாக புதுப்பிக்கத் தக்க எரிசக்தி பிரிவுக்கான துணைத் தலைவர் அனில் பாட்டியா கூறி உள்ளார். காற் றாலை மூலம் 4 ஆயிரம் மெகாவாட் … Read more

கர்நாடக மாநிலத்தில் யானை தாக்கி பெண் பலியானதால் சடலத்துடன் கிராம மக்கள் போராட்டம்: பா.ஜ.க., எம்.எல்.ஏ., மீது தாக்குதல்

கர்நாடகா : யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் நடந்த போராட்டத்தை சமரசப்படுத்த சென்ற பா.ஜ.க., எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் ஆத்திரத்தில் அடித்து விரட்டி, சட்டையை கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகே யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். பலமுறை புகார் அளித்தும் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டு. சிக்மகளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அவர்கள் பெண்ணின் சடலத்துடன் போராட்டம் நடத்தி … Read more

குஜராத் தேர்தல் | காங்கிரஸ் 125 இடங்களில் வெல்லும்: அசோக் கெலாட் நம்பிக்கை

சூரத்: “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 125 இடங்களில் வெற்றி பெறும்” என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தங்களின் பிரச்சாரங்களை ஏற்கெனவே தொடங்கிவிட்ட … Read more

காதலியை 6 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய நபர்; போட்டு தள்ளிய போலீஸ்.!

உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக்பூர் கிராமத்தில், கிணற்றுக்குள் பெண் சடலம் கிடப்பதாக உள்ளூர்வாசிகள் கடந்த 15ம் தேதி போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தலை இல்லாமல் அரை நிர்வாணத்தில் துண்டு துண்டுகளாக கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்து வந்தனர். இதையடுத்து அதே மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் யாதவ் என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், பிரன்ஸ் யாதவ் மற்றும் கொலை செய்யப்பட்ட ஆராதனா என்ற 20 வயது பெண்ணும் முன்னாள் … Read more

ஒடிஸாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் இறப்பு, 7 பேர் காயம்

ஒடிஸாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு ரயில் நிலையத்திற்குள் விழுந்ததில் அங்கிருந்த 3 பேர் உயிரிழந்தனர். ஜாஜ்பூர் மாவட்டம் கோரை ரயில் நிலையம் வழியாக டோங்கோபோசிலிருந்து சத்ரபூருக்கு சென்றுக் கொண்டிருந்த ரயில் அங்குள்ள சிறிய பாலத்தில் ஏறும் போது அதன் ஒரு பெட்டி தடம் புரண்டு ரயில் நிலையத்திற்குள் விழுந்தது. மேலும், அந்த பெட்டி ரயில் நிலையத்திற்குள்ளிருந்த காத்திருப்பு அறை, டிக்கெட் கவுன்டர் ஆகியவற்றின் மீதும் மோதி இடித்து தள்ளியது. இதில், 3 பேர் இறந்ததாக அதிகாரபூர்வமாக … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு  தீர்ப்பு அளித்ததை எதிர்த்து கட்சியின் ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இரு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் கூறியிருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி  அமர்வு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. … Read more

மோர்பி தொங்கு பால விபத்து ஒரு பெருந்துயரம்: உச்ச நீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: குஜராத்தில் மோர்பி நகரில் நடந்த தொங்கு பால விபத்து ஒரு பெருந்துயரம் என்று உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 30-ஆம் தேதி குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் ஒன்று அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 40 குழந்தைகள் உள்பட 141 உயிரிழந்தனர். அண்மைக்காலத்தில் நாட்டின் நடந்த மோசமான பேரிடர் சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இது குறித்து உச்ச நீதிமன்றம் … Read more

ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மறு சீராய்வு மனு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து முன்னாள் … Read more

காங். எம்எல்ஏ மீது பலாத்கார வழக்கு: மத்திய பிரதேச போலீஸ் நடவடிக்கை

போபால்: மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உமாங் சிங்கார் மீது 38 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் உமாங் சிங்கார் மீது  நவ்கான் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தார் போலீஸ் எஸ்பி ஆதித்யா பிரதாப் சிங் கூறுகையில், ‘காந்த்வானி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார், … Read more

அப்பளம் போல் நொறுங்கிய கார்கள் … நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள்.!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அருகே உள்ள நவலே பாலத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. இந்த பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தினால் டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கசிந்துள்ளது. இதனால் சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக மாறியதால், மற்ற வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. அடுத்தடுத்து சுமார் 48 வாகனங்களில் … Read more