பழங்குடியினருக்கான சட்டங்களை பலவீனப்படுத்தும் மோடி அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புல்தானா: பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பலவீனப்படுத்தி வருகிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதிவாசி பெண் பணியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி இதுகுறித்து மேலும் கூறியதாவது: பழங்குடியினர் மட்டுமே இந்த நாட்டின் “முதல் உரிமையாளர்” என்பதை எனது பாட்டி (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) அன்றே கூறியுள்ளார். இதர மக்கள் போலவே … Read more

மேடையில் நடனமாடிய மாணவர்கள்.. தன்னை மறந்து டான்ஸ் ஆடிய டீச்சர்.. வீடியோ வைரல்!

கேரளாவில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய மாணவர்களுக்கு மேடையின் கீழ் நின்று ஆசிரியை ஒருவர் நடனமாடி அசைவுகளை சொல்லி கொடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள  பள்ளி ஒன்றில் சிறு குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ]அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்று திறனாளி  மாணவ, மாணவிகள் நடனம் ஆடும் போது அவர்களின் நடன ஆசிரியரான கீது என்பவர் மேடையின் கீழ் பகுதியில் நின்று நடனமாடி அசைவுகளை சொல்லி கொடுத்தார்.  Source link

தோணி கவிழ்ந்து 4 பேர் மூழ்கி பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம்,  மலப்புரம் அருகே உள்ள திரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்துல் சலாம் (54), அபூபக்கர்(55), ரொகியா(65), சைனபா(54). இவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள  பாரதப்புழா ஆற்றில் மீன் பிடித்து விற்பனை செய்வது வழக்கம். நேற்று முன்தினம் மாலை இவர்கள் உள்பட 6 பேர் ஒரு தோணியில் மீன் பிடிக்க  ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தோணி  கவிழ்ந்து அனைவரும்  ஆற்றுக்குள் விழுந்தனர். இவர்களில் 2 பேர் நீந்தி  … Read more

உ.பியிலும் டெல்லி கொடூரம்.. கரும்பு தோட்டத்தில் வைத்து Ex காதலி 6 துண்டாக வெட்டி வீச்சு!

திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்டு வந்த தனது லிவ்-இன் பார்ட்னர் ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்து 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் வீசிய அஃப்தப்பின் கொலை வழக்கு குறித்த அதிர்வலையே இன்னும் அடங்கிடாத சூழலில், முன்னாள் காதலியை கொன்று 6 துண்டுகளாக வெட்டிய கொடூரம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது. உத்தர பிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் யாதவ். இவருக்கும் இஷாக் பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராதனா என்ற பெண்ணும் காதல் உறவு இருந்திருக்கிறது. ஆனால் அண்மையில் ஆராதனா வேறு … Read more

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த வாரம் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தனர். கடந்த சனிக்கிழமை அதிகாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் நேற்று ஞாற்றுகிழமை என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. … Read more

முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கர்: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து

பனாஜி: கோவா மாநிலம் பனாஜியில் பாரம்பரிய திருவிழா நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எழுத்தாளருமான சசி தரூர் பேசியதாவது. 1920, 30, 40-களில் பெண்களும் பங்கேற்ற கூட்டங்களில் அம்பேத்கர் பேசி உள்ளார். அது இப்போது ஆண் அரசியல்வாதிகளின் வளர்ச்சியாக கருதப்படுகிறது. நாட்டின் முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கராகத்தான் இருக்கக்கூடும். கட்டாய திருமணத்துக்கு சம்மதிக்கக் கூடாது என பெண்களை அவர் வலியுறுத்தினார். திருமணத்தையும், குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போட வேண்டும் … Read more

மீண்டும் ஷாக்… காதலியை 6 துண்டுகளாக வெட்டிய இளைஞர் – குடும்பமும் உடந்தை!

உத்தரப் பிரதேசத்தின் அசாம்கர் நகருக்கு அருகே உள்ள பஸ்சிமி கிராமத்தின் கிணற்றில் கடந்த நவ. 15ஆம் தேதி ஒரு உடல் கிடப்பதை உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், உடலை மீட்டு அவர்கள் விசாரணை நடத்தினர்.  அதில், உயிரிழந்தவர் ஆராதனா என்ற இளம்பெண் என அடையாளம் காணப்பட்டார். அவரை கண்டெடுத்தபோது, அவர் அரை நிர்வாணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் உடல் கிடைப்பதற்கு இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்னரே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.  … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு இன்று விசாரணை நடைபெற உள்ளது. கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு  தீர்ப்பு அளித்ததை எதிர்த்து கட்சியின் ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இரு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் கூறியிருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி  அமர்வு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. … Read more

குஜராத் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

அகமதாபாத்: குஜராத் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி நேற்று வழிபட்டார். குஜராத் சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி குஜராத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். அருணாச்சலின் இடா நகர், உ.பி.யில் உள்ள வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் அவர் குஜராத்துக்கு வந்தார். அவரை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்நிலையில், … Read more

இளம் பெண்ணைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கொலையாளிடம் உண்மை கண்டறியும் சோதனை!

டெல்லியில் இளம் பெண்ணைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய ஆப்தாப்பிடம் இன்று உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. அடிக்கடி வாக்குமூலத்தை மாற்றி கூறும் ஆப்தாபிடம் சோதனை நடத்த டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவனிடம் டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது. உண்மை கண்டறியும் சோதனையின் போது தடயவியல் குழு நேரில் இருப்பது கட்டாயமாகும். இதனால் தடயவியல் … Read more