ராஜஸ்தானில் 4 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அடுத்த ஜரோலி நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரின் வீடு இன்று காலை திறக்கப்படாமலேயே இருந்தது. அதனால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல்கள் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணவன் – மனைவி தம்பதி மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகளும் இறந்த நிலையில் கிடந்தனர். அதிர்ச்சியடைந்த போலீசார் 6 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர். 6 பேரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது … Read more

2-வது வேலைவாய்ப்பு விழா: 71,000 பேருக்கு நாளை பணி ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி: ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் 71,000 பேருக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாடும் முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் “ரோஜ்கார் மேளா” திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இதன்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக நாளை (நவ.22) புதிதாக பணியில் சேர உள்ள 71,000 பேருக்கு பணி … Read more

Gujarat Polls: 'பழங்குடியினர் உடை அணிந்ததற்காக காங்கிரஸ் கேலி செய்தது!' – பிரதமர் மோடி பேச்சு!

பழங்குடியினர் உடை அணிந்ததற்காக காங்கிரஸ் கட்சி தன்னை கேலி செய்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, … Read more

10 நாளில் இறந்து, பின் 3ஆம் நாள் உயிர்த்தெழுவேன்.. அந்திராவில் பீதியை கிளப்பும் மதபோதகர்..

பத்து நாளில் இறந்துவிடுவேன் என்றும், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று சொல்லிக்கொள்ளும் மதபோதகர் ஒருவர், தனக்கு சமாதி கட்டுவதற்கான குழியையும் தோண்டி வைத்துள்ளார். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொல்லபள்ளி கிராம சர்ச்சில் நாகபூஷணம் என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார். திடீரென்று பத்து நாளில் இறந்துவிடுவேன் என்றும், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று பேசத்தொடங்கிய அவர், குழிக்கு அருகில் தான் இறந்துவிட்டது போன்று பிளக்ஸ் பேனர் ஒன்றையும் வைத்திருக்கிறார்.  Source link

குஜராத்தில் இன்று ஒரே நாளில் மோடி, அமித் ஷா, ராகுல், கெஜ்ரிவால் பிரசாரம்

அகமதாபாத்: குஜராத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மோடி, அமித் ஷா, ராகுல், கெஜ்ரிவால் ஆகிய தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்கின்றனர். குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும், ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்று பிரசாரம், பேரணிகளில் பங்கேற்கின்றனர். … Read more

பேரரசர் சத்ரபதி சிவாஜி பழைய லட்சியவாதி ஆகிவிட்டாரா? – அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்.!

மகாராஷ்டிர மாநிலத்தில், உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது, அவரது சிவசேனா கட்சியில் இருந்து, ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் விலகினார். இந்துத்துவா கொள்கையில் இருந்து திசைமாறியதாகவும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறினார். இதையடுத்து அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ஆனார். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் தற்போது முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சிக்கு, முதலமைச்சர் … Read more

IMD: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை: 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை கொட்டும்

சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்த  வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதன் காரணமாக தமிழகத்தின் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு?

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், 142வது சட்டப்பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து, முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும், இதே சட்டப்பிரிவை பயன்படுத்தி தங்களையும் சிறையில் இருந்து … Read more

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலைக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நன்னடத்தைக் காரணமாக பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். சட்டப்பிரிவு … Read more

'ஆளுநரை எங்கயாவது அனுப்புங்க..!' – ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ பரபரப்பு கருத்து!

சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை, டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் வலியுறுத்தி உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சிக்கு, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பும், உத்தவ் தாக்கரே தரப்பும் உரிமைக் கோரி வருவதால், அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை … Read more