ரோஜ்கர் மேளாவில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு 71,056 நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் மோடி உரை

டெல்லி: அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து ஒன்றிய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கினார். இந்தநிலையில், ஒன்றிய அரசின் ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெற்றது. அதில், காணொலி காட்சி மூலமாக பங்கேற்ற பிரதமர் மோடி சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி … Read more

நெஞ்சை உறைய வைக்கும் செய்தி..!! பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரத்தை பாருங்க..!!

உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் யமுனா விரைவுச் சாலையின் வேளாண் ஆராய்ச்சி மையம் அருகே உள்ள முட்புதரில் சிவப்பு நிற டிராலி சூட்கேஷ் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த 18-ம் தேதி இந்த டிராலி சூட்கேஷை கைப்பற்றிய போலீசார், அதனை திறந்து பார்த்த போது இளம்பெண் ஒருவரின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்தப் பெண் டெல்லியைச் சேர்ந்த ஆயுஷி யாதவ் (21) என்பது தெரியவந்தது. அந்தப் பெண்ணின் … Read more

இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ‘ரோஜ்கர் மேளா’ எனும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 71,056 பேருக்கு வேலைவாய்ப்புக்கான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார். வேலைவாய்ப்பைப் பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக புதுடெல்லியில் இருந்தவாறு பேசினார். அப்போது அவர், “நீங்கள் அனைவரும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக பணியாற்றப் போகிறீர்கள். உங்களுக்கு மிகப் … Read more

சி.எம் பதவி கொடுத்த மோடி… பிரசாந்த் கிஷோர் உடைக்கும் அரசியல் சீக்ரெட்!

மத்தியில் ஆளும் பாஜகவும் சரி, பிராந்திய கட்சிகளும் சரி. அனைவரது இலக்கும் 2024 மக்களவை தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த முடியுமா? காங்கிரஸின் திட்டம் என்ன? மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தலைவர்களின் அரசியல் கணக்கு வெற்றி பெறுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வருகின்றன. ஜன் சூரஜ் யாத்ரா இந்த சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாஜக தனது அரசியல் கணக்கை தொடங்கியிருப்பது பற்றி பிரசாந்த் கிஷோர் முக்கியத் … Read more

மேகதாது அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கோரிக்கை

டெல்லி: மேகதாது அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேகதாது வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்தை ஏற்க முடியாது. உச்ச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை மேகதாது குறித்து விவாதிக்க தடை வேண்டும் என … Read more

“இந்தியாவில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” – பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர் என, 75 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கிய பின்னர் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் `ரோஸ்கர் மேளா திட்டத்தின்’ 2வது கட்டமாக, இன்று குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் தவிர நாடு முழுவதும் 45 இடங்களில் 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர … Read more

விபத்தில் சிக்கி உயிரிழந்த சோஷியல் மீடியா பிரபலம்!!

சமூக ஊடக பிரபலமான ரவுடி பாட்டீ என்று அழைக்கப்படும் ரோஹித் பாட்டீ என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். புலந்த்ஷாஹரைச் சேர்ந்த ரோஹித், கிரேட்டர் நொய்டாவின் சி செக்டரில் வசித்து வந்தார். இவர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் பிரபலமாக இருந்து வந்தார். அவரது வீடியோக்களுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நேற்று இரவு ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் ஒரு விருந்தில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. திரும்பும் வழியில் சுகாத்பூர் சுரங்கப்பாதை … Read more

காஷ்மீர் | எல்லையில் ஊடுருவல் முயற்சி: ஒருவர் சுட்டுக்கொலை; மற்றொருவர் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் அருகே தனித்தனியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தானியர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று எல்லைப் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜம்முவில் உள்ள அர்னியா பகுதியிலும், ராம்கர் மாவட்டத்தில் உள்ள சம்பா பகுதியிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றதை எல்லை பாதுகாப்பு வீரர்கள் கண்டறிந்தனர். இதில் ஜம்முவின் அர்னியா பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் மிகவும் ஆக்ரோஷமாக எல்லையில் இருக்கும் பென்சிங் வேலியை … Read more

ஷ்ரத்தா கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

நியூடெல்லி: ஷ்ரத்தா கொலை வழக்கு விசாரணையை காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரிப்பதற்கு சரியான காரணம் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக 11 பேரிடம் டெல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஷ்ரத்தாவின் நண்பர்களான, லஷ்மண், ராகுல் ராய், கோட்வின், ஷிவானி மற்றும் அவரது கணவர், ஷ்ரத்தாவும், அஃப்தாப்பும் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் ஜெயஸ்ரீ மற்றும் ஷ்ரத்தாவை … Read more

இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி : இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா அவரது காதலன் புனவல்லாவுடன் டெல்லியில் தங்கி வேலை பார்த்து வந்தார். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் புனவல்லா, காதலி ஷ்ரத்தாவை கொலை செய்துள்ளார்.