சீர்திருத்தங்களை செய்வது ஏன்?..பிரதமர் மோடி விளக்கம்

புதுடெல்லி: ‘நிர்பந்தங்கள் காரணமாக சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு பலன் அளிக்கும் என்ற அடிப்படையிலேயே அவை எடுக்கப்படுகின்றன,’ என பிரதமர் மோடி  கூறினார். மறைந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதித்துறை அமைச்சருமான அருண் ஜெட்லியின்நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:  அனைவரையும் உள்ளடக்காமல் வளர்ச்சி சத்தியமா? அனைவரையும் உள்ளடக்காமல் இது பற்றி சிந்திக்க முடியுமா? உள்ளடக்கிய வளர்ச்சியை கருத்தில் … Read more

உத்தராகண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தராகண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலம் மேற்கு இமயமலை அடிவாரத்தில் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ளது. பஞ்சாப், டெல்லியை சேர்ந்த 11 பேர் இந்த பூங்காவுக்கு காரில் சுற்றுலா சென்றனர். தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் மீண்டும் பஞ்சாப் திரும்பினர். அவர்களின் கார் உத்தராகண்டின் நைனிடால் மாவட்டம், ராம்நகர் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது டெலா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை … Read more

படுத்துக்கிட்டே போனவர் எழுந்து உட்கார்ந்துட்டார்

புதுடெல்லி:  டெல்லி எய்ம்சில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன முறைகேடு வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு சிறுநீரக  கோளாறு உட்பட பல்வேறு நோய்கள் உள்ளன. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.  இந்நிலையில், சில தினங்களுக்கு முன் … Read more

கேரளாவில் கனமழை; ஆறுகளில் வெள்ளம்: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாகி, கடந்த 10 நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கண்ணூர்,  காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை  அதிகமாக உள்ளது. இந்நிலையில், வரும் 3 நாட்களுக்கு பரவலாக  இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளது. இன்று 11  மாவட்டங்களுக்கும், நாளை 9 மாவட்டங்களுக்கும், 11ம் … Read more

ஊழியர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு மும்பை மாஜி கமிஷனர், சித்ரா மீது சிபிஐ வழக்கு: ஒன்றிய அரசு உத்தரவால் அதிரடி

புதுடெல்லி: தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் முன்னாள் மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே, தேசிய பங்குச் சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா  மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தலைவராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் பதவியில் இருந்தபோது பங்கு சந்தை தகவல்களை கசிய விட்டது தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் மாதம் சிபிஐ அவரை கைது செய்தது. இந்நிலையில்,  சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ முன்னாள் நிர்வாக இயக்குனர் ரவி … Read more

இயந்திரம், பாலியஸ்டரில் தயாரிக்கப்படும் தேசியக்கொடிக்கு ஜிஎஸ்டி இல்லை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி: இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டது, பாலிஸ்டர் உள்ளிட்ட அனைத்து வகையான தேசியக்கொடிகளின் விற்பனைக்கும் ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள் மூலம் ஏராளமான விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் தேசியக்கொடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய தேசியக்கொடி குறியீடு சட்டத்தின்படி, பருத்தி, பட்டு, கம்பளி மற்றும் கதர் துணிகளில் கைத்தறி மற்றும் … Read more

காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் மேக வெடிப்பு? – அமர்நாத் யாத்திரை பக்தர்கள் 13 பேர் உயிரிழப்பு

காஷ்மீர்: மத்திய காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள பால்டால் முகாம் அருகே பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அமர்நாத் யாத்திரை சென்ற 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மாலை 5.30 மணியளவில் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டு அதிக கனமழை அந்தப் பகுதியில் பெய்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் நிலச்சரிவும் உண்டாக, அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் அவதிப்பட்டனர். இதில் சிக்கிய பலர் காணாமல் போயுள்ளனர். … Read more

டெங்கு, மலேரியா பரவுவதை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்

புதுடெல்லி:  ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் நிலை பற்றியும், அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் டெல்லியில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. காணொளி மூலம் நடந்த கூட்டத்தில் டெல்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களின் சுகாதார துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மாண்டவியா பேசும்போது, ‘ஒவ்வொருவரும் கொசு ஒழிப்பு பணியை தங்களது வீடுகள், அருகில் உள்ள … Read more

’சீருடைக்கு காசு கேட்டு வகுப்பறைக்குள் வாளுடன் வந்த தந்தை’ – பீகாரில் பகீர் சம்பவம்!

பள்ளி சீருடைக்கு காசு தரவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை ஒருவர் வாளுடன் வகுப்பறைக்குள் சென்று மிரட்டிய சம்பவம் பீகாரில் உள்ள அராரியா பகுதியில் அரங்கேறியிருக்கிறது. ஜோகிஹட் காவல்நிலைய அதிகாரி இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கூறியிருப்பதாவது, “பள்ளி சீருடைக்கு பணம் கிடைக்காததால் தந்தை ஒருவர் வாளுடன் தனது குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்று, அங்குள்ள ஆசிரியர்களை அச்சுறுத்தியிருக்கிறார். மேலும், 24 மணி நேரத்திற்குள் பணம் தராவிட்டால், மீண்டும் வருவேன் என, ஆசிரியர்களை மிரட்டவும் செய்திருக்கிறார். Bihar … Read more

அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ.51.72 கோடி அபராதம்: அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி:  அம்னெஸ்டி இந்தியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் முன்னாள் சிஇஓ.வுக்கு முறையே ரூ.51.72 கோடி மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம், அம்னெஸ்டி இந்தியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட். இது, இந்தியாவின் அந்நிய செலாவணி சட்டத்தை மீறி பல்வேறு வெளிநாடுகளுக்கு தனத இந்திய நிறுவனங்கள் மூலமாக மிகப்பெரிய ெதாகையை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக கூறப்பட்ட புகார்களை விசாரித்த அமலாக்கத் துறை, … Read more