30 கோடி ரூபாய் வரை மோசடி செய்த அழகி கைது!!

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக் (26) என்பவர் புவனேஸ்வரில் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்த போது, ஜெகபந்து என்ற நபர் அறிமுகமானார். இருவரும் 2018ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். பழைய கார்களை விற்கும் ஷோரூம் நடத்தி வந்த ஜெகபந்துவுக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை வைத்து குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக அர்ச்சனா ஜெகபந்து தம்பதியினர் திட்டம் தீட்டினர். ஜெகபந்துவுக்கு பழக்கமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை பாலியல் தொழிலில் … Read more

திருநங்கைக்காக தெருவில் சண்டையிட்டு கொண்ட இளைஞர்கள்!!

திருநங்கை மீதான காதலில் இளைஞர்கள் தெருவில் சண்டையிட்டு கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். டெல்லியைச் சேர்ந்த அனில் என்பவர் சுனிதா என்ற திருநங்கையை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சுனிதா அனிலை விட்டு விலகியுள்ளார். அனிலின் வீட்டில் இருந்து செல்லும்போது சுனிதா ரூ. 40 ஆயிரம் பணத்தை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. அனிலிடமிருந்து பிரிந்து சென்ற சுனிதா குட்டு என்ற இளைஞரை காதலிக்க … Read more

திருத்தப்பட்ட புதிய சுங்க கட்டணக் கொள்கை அடுத்தாண்டு அமலாகிறது..!

தற்போதைய சுங்க கட்டணக் கொள்கையில் குறிப்பிடத்தக்க திருந்தங்களுக்குப் பிறகு அடுத்த ஆண்டு புதிய கட்டண கொள்கையை வெளியிட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. புதிய கொள்கையின்படி வாகனத்தின் அளவு, அந்த வாகனத்தால் சாலையில் ஏற்படும் தேய்மானத்தை கணக்கிட்டு கட்டணங்கள் வசூலிப்பதற்கு ஏதுவாக திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. புதுப்பிக்கப்பட உள்ள சுங்க கட்டணங்களின்படி குறுகிய தூரம் பயணிக்கும் இலகு ரக வாகன ஓட்டுனர்கள் குறைந்த கட்டணங்களை செலுத்துவதற்கான வழிவகை செய்யப்படுகிறது. … Read more

ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி முர்முவுக்கு கண்புரை ஆபரேஷன்

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வடகிழக்கு மாநிலங்களுக்கான முதல் அரசு முறை பயணமாக கடந்த 12ம் தேதி திரிபுரா, அசாம் சென்று இருந்தார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து 14ம் தேதி டெல்லி திரும்பினார். இந்நிலையில், அவருக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரைக்கான அறுவை சிகிச்சை நேற்று செய்யப்பட்டது. இது குறித்து ஜனாதிபதியின் … Read more

சட்டீஸ்கர் மாநில துணை சபாநாயகர் மாரடைப்பால் சாவு

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில துணை சபாநாயகர் மனோஜ் சிங் மாண்டவி நேற்று காலமானார். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சட்டீஸ்கர் மாநிலத்தில்,  சட்டப்பேரவை துணை சபாநாயகராக இருந்தவர் மனோஜ் சிங் மாண்டவி (58) .இவர் நேற்று முன்தினம் கங்கர் மாவட்டம், சரமா பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தம்தாரி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலையில்  சிகிச்சை … Read more

ஐப்பசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு: மேல்சாந்தி நாளை தேர்வு

திருவனந்தபுரம்,: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுவதும் வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.  18ம் தேதி முதல் 22ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி  அளிக்கப்படும். … Read more

நாட்டிலேயே முதலாவதாக உத்தரகாண்டில் புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம்

டேராடூன்: நாட்டிலேயே முதலாவதாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இங்கு அங்கன்வாடியுடன் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளிகளில் நாட்டிலேயே முதல் முறையாக தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் இதனை அறிமுகப்படுத்தினர். பின்னர் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், `உத்தரகாண்டில் புதிய … Read more

நாடு முழுவதும் 65 இடங்களில் வாக்குப்பதிவு: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் 6-வது முறையாக கட்சித் தலைவர் பதவிக்கு இன்று (அக். 17) தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தனது ராஜினாமா கடிதத்தில் கட்சி மேலிடத்தை விமர்சித்திருந்தார். இதனால், காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் போட்டியிடப் போவதில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இத்தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோரிடையே நேரடிப் போட்டி … Read more

விசாகப்பட்டினம் விமான நிலையம் எதிரே நள்ளிரவில் பரபரப்பு நடிகை ரோஜாவை கொல்ல முயற்சி: தாக்குதலில் உதவியாளர், போலீசார் படுகாயம்: ஜனசேனா கட்சி நிர்வாகிகள் 25 பேர் கைது

திருமலை: விசாகப்பட்டினம் விமான நிலையம் எதிரே அமைச்சர் ரோஜா உள்ளிட்டவர்களை தாக்கி கொல்ல முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக ஜனசேனா கட்சி நிர்வாகிகள் 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநில அரசு ராயலசீமா, கடலோர ஆந்திரா, வட ஆந்திரா ஆகிய 3 பகுதிகளுக்கும் சம வளர்ச்சி அளிக்கும் விதமாக 3 தலைநகர் என்ற கொள்கையுடன் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை நீதிமன்ற தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும் அறிவித்தது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி … Read more

சமாளிக்க கூடிய நிலையில் பணவீக்கம் ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்புதான் உயர்கிறது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருகிறது,’ என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு முறை பயணமாக கடந்த 12ம் தேதி அமெரிக்கா சென்றார். அவர் உலக வங்கி, சர்வதேச நாணய நிதிய மாநாட்டில் நேற்று பங்கேற்றார். பின்னர், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, இந்திய பொருளாதாரம், மக்கள், தனியார் நிறுவனங்களை அமலாக்கத்துறை அச்சுறுத்துவது உள்பட பல்வேறு கேள்விகள் … Read more