உல்லாசத்தால் உச்சம் தொட்ட மோசடி ராணி… பொறியில் சிக்கிய அரசியல் எலிகள் – யார் அந்த பெண்?

ஒடிசாவின் சாதராண கிராமத்தில் இருந்து வந்து, தற்போது பல கோடிகளுக்கு அதிபதியான இளம்பெண் குறித்த பேச்சுக்கள்தான் நாடு முழுவதும் எழுந்துள்ளது. கடந்த அக். 6ஆம் தேதி மிரட்டி பணம் பறித்தல் குற்றத்திற்காக அந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கதையை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க உள்ளதாக பிரபல ஒடியா இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு சுவாரஸ்யமான கதைதான் அந்த 26 வயது இளம்பெண்ணின் வாழ்க்கை.  அவர் குறித்த போலீசாரின் அறிக்கையில்,”அர்ச்சனா … Read more

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் 5ஜி – நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 5ஜி தொழில்நுட்பம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன், அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். 5ஜி தொழில்நுட்பத்தை, பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள, இந்தியா தயாராக இருப்பதாக, அப்போது அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் 5ஜி சேவை, தனித்துவமானது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  Source link

7,887 பேருக்கு ஆசிரியர் பணி வழங்குவதாக அறிவித்த முதல்வர் ஜெகன்மோகன் படத்திற்கு பாலாபிஷேகம்-ஆசிரியர் சங்கத்தினர் ஏற்பாடு

சித்தூர் : ஆந்திரா முழுவதும் 7,887 பேருக்கு அரசு ஆசிரியர் பணி வழங்குவதாக தெரிவித்த முதல்வர் ஜெகன்மோகனின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.  கடந்த 1998ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ஆசிரியர் பணி வழங்குவதாக அரசாணை பிறப்பித்தார். இதனை வரவேற்கும் விதமாக சித்தூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர் சங்கத்தினர் முதல்வர் ெஜகன்மோகனின் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து இனிப்புகள் வழங்கினர்.  அப்போது, சங்க நிர்வாகிகள் பேசுகையில், ‘மாநிலம் முழுவதும் டிஎஸ்சி … Read more

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை – ஆப்பிள் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர் அபராதம்

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது பிரேசில் நீதிமன்றம். உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அண்மைகாலமாக தமது ஐபோன் மொபைல்களுடன் சார்ஜர் அடாப்டர் வழங்காமலே விற்பனை செய்து வருகிறது. இதனால் ஐபோன் வாடிக்கையாளர்கள் சார்ஜர் அடாப்டரை தனியாக விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். மற்ற செல்போன்களைக் காட்டிலும் ஐபோன்களின் விலை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கான சார்ஜர் அடாப்டரை … Read more

'பிரதமரின் தாயைப் பழித்தவர்களுக்கு குஜராத் மக்கள் பாடம் புகட்டுவார்கள்' – ஸ்மிருதி இரானி

புதுடெல்லி: “பிரதமர் மோடியின் தாயை அவமதித்தவர்களுக்கு வரும் தேர்தலில் குஜராத் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தலைவர் கோபால் இடாலியா மோடியின் தாயை பழித்து வெளியிட்ட வீடியோ குறித்தது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமரின் தாயை … Read more

சர்ச்சை ஏற்படுத்திய அழகுப்போட்டி விளம்பரம்! ‘இந்த’ சாதி மட்டும் தான் கலந்துக்கலாம்!

பதிண்டா: பெண்களின் அழகுப் போட்டியின் போஸ்டர்கள் ஏற்படுத்திய சர்ச்சையால் இருவர் கைது செய்யப்பட்டனர். அழகுப் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு என்ஆர்ஐ பையனுடன் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. பஞ்சாபில் நடைபெறவிருந்த ‘அழகு போட்டியில்’ அமைப்பாளர்களின் சர்ச்சைக்குரிய விதிமுறைகளால் சலசலப்பு ஏற்பட்டது. அக்டோபர் 23 ஆம் தேதி பதிண்டாவில் உள்ள ஸ்வீட் மிலன் ஹோட்டலில் நடைபெறவிருந்த இந்த அழகுப்போட்டியின் விளம்பரங்களால் கோபமடைந்த பல்வேறு சமூக மற்றும் மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பஞ்சாப் மாநிலம் … Read more

37வது நாளாக நீடிக்கும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்: மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு

பெங்களூரு: இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் ராம்புராவில் 37வது நாளாக தமது பயணத்தை தொடர்ந்து வருகிறார். கடந்த மாதம் 7ம் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில், பாதயாத்திரையை தொடங்கிய அவர், கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகத்தில் மேற்கொண்டு வருகிறார். அவருடன் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ராகுல் … Read more

நக்சல் தொடர்பு வழக்கு | முன்னாள் பேராசிரியர் சாய்பாபா விடுவிப்பு

நாக்பூர்: மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை அந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை. நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரே அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சாய்பாபாவை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு 2014-ம் ஆண்டு மே-மாதம் கைது செய்யப்பட்டார். அதாவது போலீஸ் தகவல்களின் … Read more

டார்கெட் 144… கைகொடுக்குமா அமித் ஷாவின் கவுரவ் யாத்ரா? குஜராத்தில் புது வியூகம்!

182 எம்.எல்.ஏக்கள் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18, 2023ல் நிறைவு பெறுகிறது. எனவே முன்கூட்டியே தேர்தல் நடத்தும் வகையில் இன்றைய தினம் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கவுள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தலை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். அதன்படி, கவுரவ் யாத்ரா என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார். மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 144 தொகுதிகள் வழியாக செல்லும் வகையில் யாத்திரை … Read more

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

டெல்லி:  நீட் தேர்வை கட்டாயமாக்கியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. … Read more