ஹிஜாப் தடை தொடருமா? கர்நாடக அமைச்சர் விளக்கமும், புது சர்ச்சையும்!

கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை உச்ச நீதிமன்றம் வரை சென்று தேசிய அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் (அக்டோபர் 13) தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் தடை செல்லும் என்றும், செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்புகளை இரண்டு நீதிபதிகள் வழங்கியதால் குழப்பம் நீடித்து வருகிறது. அடுத்தகட்டமாக கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஹிஜாப் தடை … Read more

வாரணாசியில் ஜெயபிரகாஷ் நகர் காலனியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி பசுபதிநாத் சிங் அடித்துக் கொலை

உத்தர பிரதேசம்: வாரணாசியில் ஜெயபிரகாஷ் நகர் காலனியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி பசுபதிநாத் சிங் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மதுக்கடையில் இளைஞர்களுடன் ஏற்பட்ட தகராறில் பசுபதிநாத் சிங் மகன் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பா.ஜ.க. நிர்வாகி பசுபதிநாத் சிங் உயிரிழந்தார். மகன் ராஜன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த இரண்டு நாட்களில் 12 மணி நேரம் மூடப்படும் – காரணம் என்ன?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவ.8 ஆம்தேதி சந்திர கிரகணத்தையோட்டி 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்த ஆண்டிற்கான சூரிய கிரகணம் வரும் 25ம் தேதியும், நவம்பர் 8ம்தேதி சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. அதன்படி வரும் 25ம்தேதி (செவ்வாய் கிழமை) மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால், அன்று … Read more

உத்தராகண்ட் துப்பாக்கிச் சூட்டில் பாஜக பிரமுகரின் மனைவி பலி: உ.பி. போலீஸார் மீது கொலை வழக்கு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜஸ்பூர் பகுதிக்கு சுரங்க மாஃபியா குற்றவாளியைத் தேடிச் சென்ற உத்தரப் பிரதேச போலீசாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 போலீசார் காமடைந்தனர். பெண் ஒருவர் பலியானார்.உயிரிழந்த பெண், ஜஸ்பூர் பகுதி பாஜக பிரமுகர் குர்தாஜ் புல்லரின் மனைவி, குர்ப்ரீத் கவுர் என்பது தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கும் சுரங்க மாஃபியாவான ஜாஃபர் என்பவரைக் கைது செய்ய உத்தராகண்ட் … Read more

ஹிஜாப் தடை… உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?

கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியலாமா? கூடாதா? என்பதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து மாணவிகள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு 10 நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு புதிய குழப்பத்திற்கு வித்திட்டுள்ளது. ஏனெனில் ஹிஜாப் தடை செல்லும் என ஒருவரும், தடை செல்லாது என மற்றொருவரும் … Read more

Hijab Ban: ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு! கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடரும்

புதுடெல்லி:  கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு அமலில் இருக்கும் என்றும், ‘தகுந்த வழிகாட்டுதலுக்காக’ தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை உறுதி செய்த பழைய கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று (2022 அக்டோபர் 13 வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தது. நீதிமன்ற அமர்வில் இடம் பெற்றிருந்த மற்றொரு நீதிபதி சுதன்ஷு துலியா இந்த … Read more

கர்நாடக அரசின் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

கர்நாடகத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிஜாப் அணியும் முஸ்லீம் பெண்கள் தங்கள் மத வழக்கப்படி தலையில் முக்காடு அணிந்துள்ளனர். இதற்கு கர்நாடக அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் 10 நாட்கள் இருதரப்பினரின் வாதங்களை கேட்ட பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தது.இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட … Read more

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்: தமிழ்நாடு அரசு பதில்

டெல்லி: நளினி, ரவிச்சந்திரன் விடுதலை குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது. தங்களை விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது.

”ஐகோர்ட் தவறாக சென்றுவிட்டது” ஹிஜாப் வழக்கில் நீதிபதி துலியா கருத்து-தீர்ப்பின் முழுவிவரம்

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதில் ஹேமந்த் குப்தா என்ற நீதிபதி கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தும், ஹிஜாப் அணிவது அவரவர் விருப்பம் என நீதிபதி சுதான்ஷு துலியாவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கர்நாடக நீதிமன்ற தீர்ப்பு: ஹிஜாப் அணிந்து வருவது என்பது இஸ்லாமிய மதத்தில் அடிப்படையான விஷயம் அல்ல என்றும் சீருடை விவகாரத்தில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை … Read more

ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்வது என்ன?

புதுடெல்லி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், மற்றொரு நீதிபதி சுஷந்த் துலியா கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளார். இதனால் இந்த வழக்கு விசாரணை வேறு ஒரு அமர்வின் விசாரணைக்கு செல்லும் என்று … Read more