1-4 வயது குழந்தைகளுக்கு டிக்கெட் தேைவயில்லை: ரயில்வே விளக்கம்

ரயிலில் 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று டிக்கெட் விதிமுறைகளை ரயில்வே மாற்றி அமைத்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இவை முற்றிலும் தவறானவை, ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை, பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக் கொள்ளலாம், தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துக் … Read more

தவுசன்ட் வாலா, ஜிலேபி பாக்ஸ் டண்டணக்கா ஆன கதையை சொல்கிறார் wiki: யானந்தா

‘‘அதிரடி தீர்ப்பை கேட்டு எடப்பாடி கோஷ்டி அதிர்ந்து போயிருக்காமே…’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘வெற்றிக் கனியையே ருசித்துக்கொண்டிந்த மாங்கனியாரின் ஆதரவாளர்கள் ஒரே ஒரு தீர்ப்பில் மனசொடிஞ்சு போயிட்டாங்களாம். தமிழகத்தின் முதல்வராகி  மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் இலைக்கட்சியின் இடைக்கால பொ.செ.ஆகி மணிமகுடம் சூட்டினாருன்னு அவரது அடிப்பொடிகள் வெற்றி களிப்பில் இருந்தாங்க. அதேபோல பொதுக்குழு தொடர்பான கேசிலும் வெற்றி நமக்குத்தான்னு இருந்தாங்க. இதற்காக டென் தவுசன்ட் வாலாவை வாங்கி மாங்கனி நகரை அதிரவைக்க திட்டமும் போட்டிருந்தாங்க. அதோடு … Read more

அவங்க எங்கே… நாம எங்கே… அமெரிக்கா ஓட்டலில் ஜெய்சங்கர் ஆச்சர்யம்: சமூக வலைதளத்தில் வைரல் வீடியோ

புதுடெல்லி: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க ஓட்டலுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அமைச்சர் ெஜய்சங்கர் கூறுகையில், ‘கொரோனா தொற்று காட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கடந்தாண்டு நான் அமெரிக்கா சென்றேன். அங்கு எனது மகன் வேலை செய்கிறார். அவருடன் ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றேன். ஓட்டலின் நுழைவு வாயிலில் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை கேட்டனர். உடனடியாக நான் எனது செல்போனில் இருந்த … Read more

“நான் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவள்” – ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக சேர்ப்பு

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. அவரது ரூ.7 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டன. இதனிடையே, இந்த விவகாரத்தில் தற்போது ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை … Read more

ரூ.215 கோடி மிரட்டி பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளி: குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தகவல்

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் மோகன் சிங் என்பவரை சிறையிலிருந்து விடுவிக்க அவரின் மனைவியிடம் ரூ.215 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நூரா பத்தேகி ஆகியோருக்கு விலை மதிப்புமிக்க பொருட்களை கொடுத்தாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரண்டு நடிகைகளிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு … Read more

குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் மாற்றம் இல்லை: ரயில்வே அமைச்சகம் தகவல் 

புதுடெல்லி: ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த … Read more

“நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை கொடுங்கள்” – பில்கிஸ் பானு உருக்கம்

குஜராத்: “இந்த அநீதியான முடிவை எடுப்பதற்கு முன், எனது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பற்றி யாரும் யோசிக்கவில்லை” என்று பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார். 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்றவர்களை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலை விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு விடுதலை … Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! – மத்திய அரசின் புதிய திட்டம்..!!

தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும் விவசாயிகளின் கண்ணீர் கதையை கேட்க ஆள் இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இது காலம் காலமாக தொடரும் அவல நிலையாகும். அரசு எவ்வளவோ திட்டங்களை அறிவித்தாலும் அது விவசாயிகளின் குறையை தீர்த்த பாடில்லை. இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விவசாய கடன்களுக்கு ஒன்றரை சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது 3 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு … Read more

உள்ளூர் வியாபாரிகளுக்கு நற்செய்தி பழையபடி ரயில் பயணத்தில் பொருட்களை விற்க அனுமதி: ரயில்வே புதிய திட்டம்

புதுடெல்லி: ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், உள்ளூர் தயாரிப்புகள் விற்பனையை ஊக்கப்படுத்த ‘ஒரே நிலையம், ஒரே தயாரிப்பு’ திட்டத்தை இந்த ஆண்டு பட்ஜெட்டில், ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி, ​​உணவுப் பொருட்கள் முதல் கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை ரயில் நிலையங்களில் விற்க அனுமதிக்கப்பட உள்ளனர். தற்போது, ஐஆர்சிடிசி அனுமதி பெற்ற வணிகர்கள் மட்டுமே ரயில் நிலையங்களில் கடை வைத்து வியாபாரம் செய்ய முடியும். இதே போல, சிறு, … Read more

பீகாரில் புதிதாக பதவியேற்ற சட்ட அமைச்சருக்கு பிடிவாரண்ட் – நெருடலில் நிதிஷ் குமாா்!

பீகாரில் புதிதாக பதவியேற்ற சட்ட அமைச்சருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறித்து கேள்விக்கு பதிலளித்த முதல்வர் நிதிஷ் குமார், அது பற்றி எதுவும் தனக்குத் தெரியாது என்றார். பீகார் மாநிலத்தில் பாஜக உடனான கூட்டணியை அண்மையில் முறித்த நிதிஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சியை அமைத்தாா். இதையடுத்து,  முதல்வா் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டு, 31 அமைச்சா்கள் பதவியேற்றனா். இவா்களில் 16 போ் ராஷ்ட்ரீய … Read more