இது ரொம்ப புதுசா இருக்கே..!! ஜாதகத்தில் நேரம் சரி இல்லையா… 500 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு ஜெயிலுக்கு போங்க..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் அண்மை காலமாக விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது. ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஜோதிடர் தெரிவித்தால் அதற்கு புதுமையான முறையில் பரிகாரம் தேடும் பழக்கம் பரவி உள்ளது. அந்த மாநிலத்தில் வாரத்திற்கு ஒரு தடவை 500 ரூபாய் கொடுத்து விட்டு ஜெயிலுக்குள் இருந்துவிட்டு வரலாம் என்ற திட்டம் அமலில் உள்ளது.இதனை பயன்படுத்தி ஜாதகத்தில் நேரம் சரி இல்லை என்று சொல்லப்படுபவர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு ஜெயிலுக்குள் செல்கிறார்கள். அவர்களுக்கு ஜெயில் … Read more

நீண்ட காலமாக மத்திய அமைப்புகளின் தீவிர கண்காணிப்பில் இருந்த பிஎஃப்ஐ

புதுடெல்லி: பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), நீண்ட காலமாகவே மத்திய அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நடைபெற்ற வன்முறைப் போராட்டம், கட்டாய மதமாற்றம், முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்தல், சட்ட விரோத பணப்பரிமாற்றம், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு போன்றவற்றில் பிஎஃப்ஐ பங்கு தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகள் நீண்ட காலமாக கண்காணித்து வந்தன. பிற மதங்களை ஆதரிக்கும் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கொல்வது, … Read more

பண மதிப்பிழப்பு விவகாரத்தில் எதை விசாரிக்க வேண்டும்? மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு விவகாரத்தில் எதையெல்லாம் விசாரிக்க வேண்டும் என மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி திடீரென நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது,‘பண … Read more

பிஎஃப்ஐ உட்பட 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை – சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை முழு விவரம்

புதுடெல்லி: ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அதன் 8 துணை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் நகரில் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம் (சிமி) கடந்த 1977-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் … Read more

நாடு முழுவதும் இலவச ரேஷன் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கும் திட்டத்தை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதிலும்  ரேஷன் கடைகளின் மூலம் 5 கிலோ இலவச கோதுமை அல்லது அரிசி வழங்கும் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் தமிழத்தில் உள்ள ரேஷன் … Read more

ஜூலை 1-ம் தேதி முதல் அமல் | மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – 48 லட்சம் பேர் பயனடைவர்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகளுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் … Read more

தெருநாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும்: கேரள அரசு மனு

திருவனந்தபுரம்: தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் வாகனங்களிலும் செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் உள்பட அனைவரும் நாய்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர். இந்த வருடம் 9 மாதத்தில் மட்டும் நாய்களின் தாக்குதலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து வெறி பிடித்த தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கேரளாவில் … Read more

ஓட்டல் ஊழல் வழக்கு தேஜஸ்வி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐஆர்சிடிசி  ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) 2 ஓட்டல்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை 2 தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தார். இதற்கு கைமாறாக, பாட்னாவில் 3 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் லாலு, … Read more

ஒரே எண்ணில் பல போன்கள் விற்கப்படுவதை தடுக்க ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்வது இனி கட்டாயம்: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: இனிமேல் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களின் ஐஎம்இஐ எண்ணை ஐசிடிஆர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மொபைல் போனுக்கு தனித்தனியாக 15 இலக்க சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (ஐஎம்இஐ) இருக்கும். மொபைல் திருடு போனால் இந்த எண்ணை வைத்து கண்டுபிடிக்க முடியும். மேலும், பல வழக்குகளில் தலைமறைவான குற்றவாளிகள் பயன்படுத்தும் மொபைலின் இந்த ஐஎம்இஐ எண்ணை வைத்து தான் அவர்களின் இருப்பிடத்தை … Read more

நவராத்திரியை முன்னிட்டு வெங்காயம், பூண்டு இன்றி ரயில்களில் விரத உணவு: ஐஆர்சிடிசி அறிவிப்பு

புதுடெல்லி: நவராத்திரி பண்டிகை கடந்த 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பலரும் வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதம் இருப்பது வழக்கம். அவ்வாறு விரதம் இருப்பவர்கள், விரத காலத்தில் ரயிலில் பயணிக்கும் போதும், அவர்களுக்காக சிறப்பு விரத உணவை வழங்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஏற்பாடு செய்துள்ளது. வரும் 5ம் தேதி வரை இந்த உணவுகளை ‘Food on Track’ என்ற … Read more