சசிதரூருக்கு வந்த சோதனை… சொந்த ஊருலயே செல்வாக்கு போச்சு!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? காந்தி குடும்பத்தை அல்லாமல் அலங்கரிக்கப் போகும் அந்த நபர் யார்? என்ற கேள்விக்கு கிட்டதட்ட விடை தெரிந்துவிட்டதாகவே அக்கட்சி தொண்டர்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு போட்டிக்கான களம் சுருங்கி விட்டது. காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரி தெரிவித்துள்ள தகவலின்படி, மல்லிகார்ஜுன கார்கே 14 படிவங்களும், சசி தரூர் 5 படிவங்களும், கே.என்.திரிபாதி ஒரேவொரு படிவமும் தாக்கல் செய்துள்ளனர். இந்த படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு … Read more

பொதுக்கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் மன்னிப்பு கேட்டார் மோடி: ராஜஸ்தானில் நெகிழ்ச்சி

ஜெய்ப்பூர்: கூட்டத்துக்கு தாமதம் ஆனதால் மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி. பிரதமர்  மோடி நேற்று முன்தினம் இரவு, ராஜஸ்தான், அபு ரோடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் வரும் வழியில் பல நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பொதுகூட்ட நிகழ்ச்சிக்கு வர தாமதமானது.  ஒலிபெருக்கி இல்லாமலேயே  அவர் பேசினார். மோடி பேசும்போது, ‘‘இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியில் பேசுவது சரியாக இருக்காது என்று என் மனசாட்சி கூறுகிறது, எனவே உங்கள் முன்பு நான் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | கார்கே – சசிதரூர் இடையே நேரடி போட்டி: கையெழுத்து பிரச்சினையால் திரிபாதி மனு நிராகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் கார்கே – சசி தரூருக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட் டுள்ளது. கே.என். திரிபாதி மனு கையெழுத்து பிரச்சினையால் நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன. அதன்பின் அகில இந்திய காங்கிரஸ்கமிட்டியின் மத்திய தேர்தல்ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சித் … Read more

சந்தர்ப்பவாத அரசியல்வாதி… காந்தியை அம்பேக்தர் இவ்வளவு கடுமையாக சாட என்ன காரணம்?

இரண்டாம் வட்ட மேசை மாநாடு: தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அம்பேத்கருக்கு இருந்த செல்வாக்கையும், ஆதரவையும் அறிந்த பிரிட்டிஷ் அரசு, 1932 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்ற அம்பேத்கருக்கும் அழைப்பு விடுத்தது. இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பை முடிவு செய்ய முற்பட்டபோது மக்கள் பிரதிநிதிகளுக்காக நடத்தப்படும் தேர்தலில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் குறித்து முடிவெடுப்பதற்காக நடத்தப்பட்ட அந்த முக்கியமான மாநாட்டில், ஆதிக்க சாதிப்பிரிவினர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர்கள் என அனைத்து வகை மக்களுக்கும் … Read more

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

டெல்லி: மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே அங்கு பஜனை பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். சோனியா காந்தியை தொடர்ந்து மாநிலங்களை எதிர்கட்சித் தலைவர் … Read more

பிரசாந்த் கிஷோரின் அடுத்த மாஸ்டர் பிளான்… கிழக்கில் இருந்து புறப்படும் அரசியல் சூறாவளி!

இந்தியாவில் பிரசாந்த் கிஷோர் என்ற பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுத்து கொடுத்து அவற்றை சரியான முறையில் செயல்படுத்திக் காட்டியவர். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நாட்டின் முக்கிய மாநிலங்களில் எல்லாம் கால்தடம் பதித்து விட்டார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைவதற்கு 2021 சட்டமன்ற தேர்தலின் போது பெரிதும் உறுதுணையாக இருந்தார். பிகார் மாநிலத்தை சேர்ந்த இவர், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் முக்கிய … Read more

அண்ணல் காந்தியின் 154வது பிறந்தநாள் அனுசரிப்பு! ராட்டை தினத்தன்று இந்தியாவின் அஞ்சலி

புதுடெல்லி: அண்ணல் காந்தியடிகள் என்று அழைக்கப்படும் மாண்புமிகு மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும்  அனுசரிக்கப்படுகிறது. எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காந்தி, தனது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியதில்லை. ஆனால், அவரது இந்த எளிய பண்பே அவரை மகானாக உயர்த்தியது. அகிம்சையே அனைத்தும் என்று உலகிற்கு உரத்துச் சொன்ன தேசத்தந்தையின் இலட்சியத்தை போற்றும் வகையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன் 15, 2007இல் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளை, “அனைத்துலக வன்முறையற்ற … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 6-வது நாள் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 6-வது நாள் பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷத்திற்கு மத்தியில் இன்று அனுமந்த வாகனத்தில் திருக்கோலத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு நாளும் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கோவிலின் நான்கு மாடவீதிகளில் வழியாக பெரும்பாலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து … Read more

ரூ.90 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்க முயன்ற மூவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் மற்றும் ஜாம்நகரில் அச்சடிக்கப்பட்ட 90 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இதில் சுமார் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபகாலங்களில் குஜராத்தில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் சூரத்தில் உள்ள காம்ரேஜ் காவல்துறையினர் விசாரணையில் போலி நோட்டுகளை நேரடியாக சந்தையில் புழக்கத்தில் விடாமல், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது இதன் மூளையாக செயல்பட்ட … Read more

தூய்மையான நகரங்கள் பட்டியலில் 6-வது முறையாக முதலிடம் பிடித்தது இந்தூர்

புதுடெல்லி: தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற பெயரில் விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் தொடர்பான தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு … Read more