போலீஸ் இன்பார்மராக செயல்பட்டதால் ஆத்திரம் பஞ். துணை தலைவரை கொன்ற மாவோயிஸ்ட்: தெலங்கானாவில் பதற்றம்

திருமலை: தெலங்கானாவில் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டதாக ஆத்திரமடைந்த மவோயிஸ்டுகள், பஞ்சாயத்து துணை தலைவரை கடத்திக்கொன்று சடலத்தை கிராமத்தில் வீசினர். மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கடிதம் வைத்திருந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், கொத்தகூடம் மாவட்டம், செர்லா மண்டலம், குர்னப்பள்ளி கிராம பஞ்சாயத்து துணை தலைவர் இர்பா ராமாராவ். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு மாவோயிஸ்டு இயக்கத்தை  சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். இரவு நேரத்தில் அவரது மனைவி கனகம்மாவை எழுப்பி, ராமராவை தங்களுடன் அழைத்து … Read more

கணவரின் ஆபிஸுக்கு சென்று திட்டுவது கொடுமைப்படுத்துவதற்கு சமம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் அரசு ஊழியராக உள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ராய்ப்பூரைச் சேர்ந்த 34 வயது கைம்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த பெண் மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரை அவமரியாதையுடன் நடத்தியதோடு, அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நபர் ராய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அந்த பெண்ணின் … Read more

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணை – டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணையை கட்டாயமாக்க டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லி காவல்துறையின் தலைமையகத்திற்கு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்திய அமித்ஷா தண்டனையை அதிகரிக்கவும், குற்றவியல் நீதி அமைப்பை தடய அறிவியல் விசாரணையுடன் ஒருங்கிணைக்கவும் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்தக் கூட்டத்தின்போது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அமித்ஷா விவாதித்தார். Source link

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்முவில் காங்கிரசார் கூண்டோடு ராஜினாமா 64 பேர் விலகினர்

ஜம்மு: ஜம்முவில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து 64 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளியன்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். புதிய கட்சியை தொடங்க உள்ளதாக இவர் அறிவித்துள்ளார். இந்நிலையில்  காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த ஆசாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜம்முவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். ஜம்முவில் 64 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் … Read more

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15.3 சதவீதம் உயர்வு – 2021-ல் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு

புதுடெல்லி: கடந்த 2021-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 15.3% அதிகம். இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. … Read more

ஆட்சி கலைகிறதா? செப்.,3ல் காத்திருக்கும் பரபரப்பு… தட்டி தூக்கப் போகும் கே.சி.ஆர்!

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலம் உருவான 2014ல் இருந்து தற்போது வரை சந்திரசேகர ராவ் தான் முதல்வராக இருக்கிறார். கடந்த 2018 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திடீரென பதவி விலகிய கே.சி.ஆர், ஆட்சி கலைப்பிற்கு வித்திட்டார். இதையடுத்து நடந்த தேர்தலில் 46.9 சதவீத வாக்குகளுடன் மக்களின் பேராதரவை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தார். இதுவொரு தேர்தல் யுக்தி என்று பேசப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு … Read more

ஆசியாவில் யாரும் படைக்காத சாதனை; உலக பணக்காரர்களில் 3-ம் இடத்தில் அதானி

புதுடெல்லி: உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார் கவுதம் அதானி. அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தினசரி அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றைய புதுப்பித்தலில், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கவுதம் அதானி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவர் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டை முந்தி உள்ளார். அதானியின் சொத்து மதிப்பு ரூ.10.85 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஜூலை மாதம் இப்பட்டியலில் பில் … Read more

பிரதமர் மோடி நாளை கேரளா வருகை

புதுடெல்லி / பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1, 2் தேதிகளில் கேரளா, கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி செப். 1-ம் தேதி மாலை 6 மணிக்கு கேரள மாநிலம் காலடி கிராமத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் பிறப்பிடமான ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க் ஷேத்திரத்துக்கு செல்கிறார். செப்டம்பர் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் … Read more

பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு; நண்பர்களை மட்டும் பணக்காரர் ஆக்குகிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது நண்பர்களை மட்டும் பணக்காரர்களாக்கி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டரில் ‘2 இந்தியர்கள்’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்ட பதிவில், ‘ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தினசரி கூலிக்கு வேலை செய்யும் 5 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பிரதமர் மோடியின் விருப்பத்திற்குரிய நண்பர் கணக்கில் ரூ.85 கோடி பணம் சேர்கிறது. சாமானியர்களிடம் இருந்து கொள்ளையடித்து … Read more

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த எஜமானர்களின் கடைசி உடல் கிடைக்கும் வரை உடன் இருந்த நாய்

இடுக்கி: கேரளாவில் நிலச்சரிவில் புதைந்த எஜமானர்களின் கடைசி உடல் கிடைக்கும் வரை, அவர்கள் வளர்த்த நாய் உடன் இருந்துள்ளது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமாக பெய்ததில் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடயாதூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சோமன் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காணவில்லை. இவர்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என கருதி இங்கு தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒரு நாய் காலில் காயத்துடன், மீட்புக் குழுவினருடன் சேர்ந்து சுற்றியது. அந்த நாய் சோமன் … Read more