மஸ்கட்டில் ஏர் இந்தியா விமானத்தில் தீ: பயணிகள் தப்பினர்

புதுடெல்லி: ஓமன் தலைநகர் மஸ்கட்டி லிருந்து கொச்சிக்கு புறப்பட விருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சில நிமிடங்களுக்கு முன்பாக இன்ஜினிலிருந்து புகை வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதில் பயணம் செய்யவிருந்த 145 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டதால் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாற்று விமானத்தில் பயணிகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. இத்தகவல் சிவில் விமானப் போக்குவரத்து … Read more

ஹிஜாப் விவகாரத்தால் எத்தனை மாணவிகள் படிப்பை கைவிட்டனர்? கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஹிஜாப் அல்லது புர்கா ஆடையை அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், இப்பிரச்சினை காரணமாக எத்தனை மாணவிகள் படிப்பை கைவிட்டனர் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள், பள்ளி கல்லூரிகளுக்கு வராமல் படிப்பை கைவிட்ட மாணவிகள் எண்ணிக்கை பற்றி கேள்வி எழுப்பினர். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாநிலத்தில் 17 ஆயிரம் மாணவிகள் படிப்பைக் கைவிட்டதாகத் தெரிவித்தார். Source link

குஜராத்தில் லிப்ட் அறுந்து 8 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

அகமதாபாத்: குஜராத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக் கழகத்திற்கு அருகில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த கட்டிடத்தின் லிப்ட், நேற்று திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  முதல் கட்ட விசாரணையில், கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று காவல்துறை … Read more

பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு-உ.பி யில் அதிர்ச்சி

உத்தரபிரதேசத்தில் இரண்டு பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பூனம் (15), மனிஷா (17) ஆகிய இரண்டு சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண்களின் தாயார் மாயா தேவி, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தான் தனது மகள்களை கடத்திச் சென்றுள்ளனர் என்றும், அவர்கள் தான் கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தகவல் … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனை, சுகாதாரம், பெண்கள் அதிகாரம்; பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன: பில் கேட்ஸ் பாராட்டு

புதுடெல்லி: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, சுகாதாரம், பெண்கள் அதிகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன என்று மைக்ரோசாஃப்ட் இணைநிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்பு மிகப் பெரிய அளவில் மேம்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த் தனையில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக விளங்குகிறது. கரோனாவுக்குப் பிறகு யுபிஐ பயன்பாடு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல், இந்திய மக்கள் தொகையில் 94.5 கோடி பேருக்கு கரோனா … Read more

ஜம்மு காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் குறித்த பாகிஸ்தான் புகாருக்கு இந்தியா பதிலடி!

ஐநா.மனிதஉரிமைக் குழுவின் முன்பு ஜம்மு காஷ்மீர் மனித உரிமை மீறல் பற்றிய பாகிஸ்தான் பொய்களை இந்திய அரசு அம்பலப்படுத்தியது.  ஜெனிவாவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான பவன் பதே இது குறித்து ஐநா.மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் பேசும் போது, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வரும் தவறான தகவல்களை மறுத்துரைத்தார். பாகிஸ்தானில் இந்து மற்றும் சீக்கியர் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இந்தியா … Read more

திருப்பதியில் 20ம் தேதி விஐபி தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி ஆலயத்தில் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால்ல, அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால் 19ம் தேதி எந்தவித முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் பெறுவதில்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் … Read more

மன உளைச்சலால் விபரீதம்.. வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை..!

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூர் ராஜா அய்யர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (73). இவருடைய மனைவி கங்காதேவி (63). இந்த தம்பதிக்கு ஜெயக்குமரன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஷாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். முதியவர் ஆனந்தன் பார்வை குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவருடைய மனைவி கங்காதேவி முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. வயது முதிர்வு, உடல்நிலை குறைபாடு காரணமாக தம்பதிகள் … Read more

இனி, பணப்பலன் கிடையாது.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு..!

‘பணியின்போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது’ என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ‘பணியில் இருக்கும்போது முறைகேடு மற்றும் பிரச்சினைகள் காரணமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள், ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்ட  அரசு ஊழியர்களுக்கு விடுப்புக்கான பணப்பலன் வழங்கப்பட மாட்டாது’ என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ- ஜியோ மாநாட்டில் … Read more

சுகேஷ் மீதான ரூ.200 கோடி மோசடி வழக்கு நடிகை ஜாக்குலினிடம் விசாரணை: டெல்லி போலீசில் முரண்பட்ட பதில்

புதுடெல்லி: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் டெல்லி போலீசார் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இரட்டை சிலை சின்னத்தை பெற்று தருவதற்காக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்,  இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.  திகார் சிறையில் இவர் இருந்தபோது, தொழிலதிபர் மனைவி ஒருவரிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார்.  … Read more