3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள நக்பால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வீரர்கள் அங்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ெதாடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் … Read more

பாஜகலின் அடுத்த தலைவர் யார்?- மோடி, அமித் ஷாவின் சாய்ஸ் இவர்தான்!

பாஜகவின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் மூன்று ஆண்டு பதவிக் காலம் 2023 ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து கட்சியின் புதிய தலைவராக யாரை தேர்ந்தெடுப்புது என்பது குறித்த ஆலோசனையில் பிரதமர் மோடி. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர இறங்கி உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் விதிமுறைப்படி ஒரு நபர் அதிகபட்சம் இரண்டு முறைதான் தலைவர் பொறுப்பை வகிக்க முடியும் என்பதால் ஜே.பி.நட்டாவுக்கு மீண்டும் … Read more

“ நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம்..!” – குடியரசு தலைவர் விநாயக சதுர்த்தி வாழ்த்து..!

நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட இருக்கும் நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் … Read more

காவல் நிலையம் முன் மாறிமாறித் தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்திய போலீசார்..!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பள்ளி மாணவர்கள் காவல் நிலையம் முன் மோதிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன. பட்டாம்பி பகுதியில் இயங்கிவரும் அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவர்கள், பள்ளிக்கு வெளியே இரு பிரிவினராகப் பிரிந்து மாறி மாறி தாக்கிகொண்டனர். காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீசார் மோதலை தடுத்துநிறுத்தி மாணவர்களை அனுப்பிவைத்தனர். Source link

கேரள மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை… மழைநீரில் இரு பள்ளி மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அடித்து துவைத்து வரும் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடான மாறி வருகின்றன. பாம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. சபரிமலை காடுகளில் கனமழையும், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகவும் பாம்பை ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரைகளை கடந்து, சேறும், … Read more

’’என்னை கல்யாணம் பண்ணிக்கோ’’.. ஓட்டம் பிடித்த மணமகனை விரட்டி பிடித்த மணப்பெண்!

திருமணத்தின்போது தப்பியோடிய மணமகனை, மணமகள் பின்னாலேயே துரத்திச்சென்று பிடித்த விசித்திர சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோக்கள் சமூக ஊடங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த பெண் தனது பெற்றோருடன் சந்தைவெளிக்கு சென்றபோது, தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளையை பார்த்திருக்கிறார். அங்குவைத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதனால் மாப்பிள்ளை பையன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். இதனைக்கண்ட மக்கள் அங்கு கூட்டம் கூடியுள்ளனர். இருப்பினும் அந்த கூட்டத்திற்கு நடுவில் புகுந்த அந்த … Read more

“பாகுபாடின்றி உரியவர்களைச் சென்றடைகிறது மோடி அரசின் நலத்திட்டங்கள்” – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மெயின்பூரி: “பிரதமர் மோடி அரசின் நலத்திட்ட உதவிகள் வாங்கு வங்கியை கருத்தில் கொள்ளாமலும், எந்தவித பாகுபாடு இல்லாமலும் தேவையானவர்களைச் சென்றடைகிறது” என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்பூரியில் நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். பயனாளிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளின் உறுப்பினர்களிடையே அமைச்சர் பேசியது: “ஏழைகளுக்கு உதவுகின்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வாக்கு வங்கியை மனதில் … Read more

குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்த உச்சநீதிமன்றம்..! – நிலுவையில் இருக்கும் ஒரே ஒரு வழக்கு..!

குஜராத்தில் 2002 கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு மனுக்களுக்கு உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு குஜராத்தில் 2002ஆம்ஆண்டு நடந்த கோத்ரா கலவர வழக்குகள் தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் விசாரணைக்குவந்தன. அப்போது வாதிட்ட மூத்த … Read more

கெட்டி மேளம் கொட்டி.. மலர் மாலைகள் அணிவித்து உறவினர்களுடன் வைர விழா கொண்டாடிய தம்பதி: கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே வயது முதிர்ந்த தம்பதிக்கு வைர விழா திருமணம் நடத்தி உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆசிபெற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டி.ஜி. தோட்டை கிராமத்தில் வசிக்கும் முனியப்பா 100 வயதை கடந்தார். அவருடைய மனைவி குண்டம்மா என்கின்ற மாரம்மாவுக்கு 96 வயதாகிறது. ஆரோகியத்துடன் வாழ்ந்து வரும் இவர்களது நூற்றாண்டு விழாவை குடும்பத்தினர் கொண்டாடினர். தேன்கனிக்கோட்டை கதிலட்சுமி – நரசிம்மசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் வைரவிழா கொண்டாடும் இந்த தம்பதியினருக்கு புரோகிதர்கள் வேத … Read more

என்னையே அட்டாக் பண்றீயா! தாக்க வந்த புலிய தெறிச்சு ஓட விட்ட காளை! – வீடியோ

தைரியம், துணிச்சல் என்பது எல்லோருக்குள்ளும் இருப்பது. சிறு உயிரினங்கள்கூட கொடூரமான பெரிய விலங்குகளை எதிர்த்து வெற்றிபெறுவதை அவ்வப்போது நாம் சமூக ஊடகங்களில் பார்ப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவத்தை அருமையான வாசகங்களுடன் பகிர்ந்திருக்கிறார் புவனேஸ்வரைச் சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி. இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் புலி ஒன்று மெதுவாக பதுங்கி பதுங்கி சாலையில் வந்துகொண்டிருந்த காளையை தாக்க முற்படுகிறது. காளை சிறிதும் பயப்படாமல் துணிச்சலாக புலியை தாக்குவதுபோல் … Read more