சிஏஏ எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போராட்டம்

கவுகாத்தி: இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர், வடகிழக்கு பகுதிகளில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதன்கிழமை மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. அசாம் அனைத்து மாணவர்கள் சங்கம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதேபோல் வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. அசாம் மாணவர்கள் சங்கம் நடத்த இருந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் தற்போதைய சூழலில், வரும் நாட்களில் இதுகுறித்து கவனம் … Read more

ரூ.215 கோடி மெகா மோசடி..!- நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிக்கியது எப்படி..?

பல்வேறு கால கட்டங்களில் நூதன மோசடிகள் விதவிதமான வடிவங்களில் நடைபெற்று கொண்டு உள்ளன. இவ்வகையில் ரூ.215 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் சுகேஷ். மோசடி மன்னன் … Read more

வெளிநாட்டினருக்கான உலகின் சிறந்த வளர்ந்து வரும் 6 நகரங்களில் இடம்பெற்றுள்ளது பெங்களூரு

வெளிநாட்டினருக்கான உலகின் சிறந்த வளர்ந்து வரும் 6 நகரங்களில் பெங்களூரு இடம்பெற்றுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக ஆயிரக்கணக்கான ஸ்டார்ட்-அப் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு மாறியிருப்பது வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஊதியம் பெறும் வேலைகள் மற்றும் மலிவு விலையில் ஆடம்பர வாழ்க்கை முறைகள் பெங்களூரு உலகளாவிய நகரமாக மாறும் சாத்தியம் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர், லிஸ்பன், துபாய், மெக்சிகோ சிட்டி மற்றும் ரியோ … Read more

நியூயார்க்கில் இந்திய வம்சாவளி எழுத்தாளர் மீது தாக்குதல்; சல்மான் ருஷ்டி விவகாரத்தில் பாஜக மவுனம் காப்பது ஏன்? ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மோடி காலத்தில் நடந்த பரபரப்பு தகவல்

புதுடெல்லி: நியூயார்க்கில் இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது நடந்த கொலை வெறி தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தும், பாஜக தொடர்ந்து மவுனம் காப்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த 12ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது மர்ம நபரால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளானார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் அவரது ஒரு … Read more

5 முறைக்கு மேலான ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் தற்போதுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதற்குமேல் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கான கூடுதல் கட்டணமாக ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ஏ.டி.எம். மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் … Read more

இலவச திட்டங்களுக்கு தடை கோரி வழக்கு..! – என்ன சொல்கிறது உச்ச நீதி மன்றம்..?

உச்சநீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த இலவச திட்டங்களுக்கு எதிரான மனுவில், அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யஉத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். அதேநேரம், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் … Read more

‘மேக் இந்தியா நம்பர் 1’ பிரசார இயக்கத்தைத் தொடங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்று கூறி, ‘மேக் இந்தியா நம்பர் 1’ என்ற பிரசார இயக்கத்தை டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். டெல்லியில் நடந்த தொடக்க நிகழ்வில், “நாட்டின் குடிமக்கள் அனைவரும் இதில் ஒன்றிணைய வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார். “சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் நிலையான கவனத்தை செலுத்தி இந்தியாவை மீண்டும் நம்பர் 1 ஆக்கலாம்” என்று … Read more

பில்கிஸ் பானோ வழக்கு: நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்? ராகுல் சாடல்

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் அவர்களே, உங்கள் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடு முழுவதும் பார்க்கிறது என்றும், நாட்டுப் பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப் போகிறீர்கள் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். கூட்டுப் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து … Read more

பீகார் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசனை; 35 லோக்சபா இடங்களுக்கு இலக்கு.! ஆள் தூக்கும் வேலையை கைவிட்டது பாஜக

புதுடெல்லி: பீகார் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்திய நிலையில், அம்மாநிலத்தில் 35 லோக்சபா இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இடைபட்ட காலத்தில் ஆளுங்கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை தூக்கும் வேலையில் பாஜக ஈடுபட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.  பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. நேற்று அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று டெல்லி பாஜக தலைமையகத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் … Read more

’45 கி.மீ.க்கு ரூ.3000 கட்டணமா?’.. உபர் சேவையால் புலம்பும் நொய்டா வாடிக்கையாளர்!

விமான நிலையத்திலிருந்து வீடு வரை 45 கிலோமீட்டர் செல்வதற்கு உபர் நிறுவனம் ரூ.3,000 கட்டணம் வசூலித்ததாக நொய்டாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நொய்டாவை சேர்ந்த ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு செல்ல உபர் காரை பயன்படுத்தினார். அவர் வீடு வந்து சேர்ந்தவுடன் அவருக்கான கட்டணத்தை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வெறும் 45 கிலோமீட்டர் மட்டுமே … Read more