சாப்பிட அழைத்த தூய்மைப் பணியாளரை டெல்லி அழைத்துச் சென்று  மதிய உணவளித்த அரவிந்த் கேஜ்ரிவால்  

புதுடெல்லி: தன்னை வீட்டிற்கு சாப்பிட அழைத்த தூய்மைப் பணியாளரை குடும்பத்துடன் தன்னுடைய டெல்லி வீட்டிற்கு அழைத்து மதிய விருந்தளித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், “ஹர்ஷ் மற்றும் குடும்பத்தினருக்கு நல்வரவு. என்னுடைய குடும்பம் அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.டெல்லி, பஞ்சாப் வெற்றியை அடுத்து குஜராத் … Read more

மறைந்த பிரதமரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் பயணம்

புதுடெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) கடந்த ஜூலை 8ம் தேதி நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய டெட்சுயா யமகாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ச்சியாக ஜூலை 12ம் தேதி ஷின்சோ அபேவுக்கு தனிப்பட்ட முறையிலான இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. ஆனால் பொதுவான இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் நாளை (செப். 27) ஷின்சோ அபேவுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. அதற்காக தலைநகர் … Read more

பிரதமர் மோடி நாளை ஜப்பான் பயணம்: சின்சோ அபே இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார்

படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் ஆகிறார். தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஜூலை எட்டாம் தேதி ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே நபர் ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் அவரது இறுதிச் சடங்கை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு … Read more

“ராகுல் காந்தி செல்லும் இடங்களில் மலரும் தாமரை” – கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு: “காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அடுக்குகளில் ஊழல்கள் நிறைந்திருக்கும் நிலையில், அவர்கள் எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மைசூரிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அடுக்குகளில் ஊழல்கள் நிறைந்திருக்கும் நிலையில், அவர்கள் எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் சுயநலவாதிகள். மாநிலத்தின் நலனை தியாகம் செய்யத் … Read more

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்

டெல்லி: 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்று 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக 2019 ஆண்டு கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையின் போது சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு கோடி கணக்கில் அரசு பொருட்கள் வாங்கி கொடுத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து வழக்கு தொடர்பாக நடை … Read more

ஹவாலா விவகாரங்களுக்கு அபுதாபி உணவகத்தைப் பயன்படுத்திய பிஎஃப்ஐ – அமலாக்கத் துறை

புதுடெல்லி: வளைகுடா நாடுகளில் இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் ஹவாலா நடவடிக்கை மூலமாக இந்தியாவிற்கு பணம் அனுப்ப அபுதாபியின் உணவகம் ஒன்றினை தலைமையகமாக பயன்படுத்தியுள்ளனர் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் அங்கிருந்து நிதிதிரட்டி அதனை ஹவாலா பரிமாற்றம் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் இந்த நிதி திரட்டும் … Read more

புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி..!

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று 82 பேருக்கு பன்றிக்காய்ச்சல் சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு குழந்தை உள்ளிட்ட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 15 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

பேரறிவாளனைப் போல தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு: ஒன்றிய, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவர்களை விடுதலை செய்ய … Read more

”வேற லெவல் படைப்பு; அந்த செல்லத்த பார்த்தே ஆகனும்” பட்டாசு பாலு போல ஆனந்த் மஹிந்திரா tweet

மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவனரும் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். புதுமையான கண்டுபிடிப்புகளை பகிர்ந்து அதனை பாராட்டுவதோடு, அந்த கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்தவர்களை அங்கீகரிக்கவும் ஆனந்த் மஹிந்திரா எப்போதும் தவறியதில்லை. அதன்படி அண்மையில் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களை பெரிதளவில் கவர்ந்திருக்கிறது. அந்த வீடியோ எட்டு லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டும் வியப்படையவும் செய்திருக்கிறது. மொபைலிட்டி என்ற சொல்லாடல் தற்போது மிகவும் பிரசித்தமாகியிருக்கிறது. … Read more

நாளை பஞ்சாப் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்துக்கு ஆளுநர் அனுமதி

சண்டிகர்: பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. மாநில அரசு தரப்பில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை நடத்த சட்டப்பேரவை செயலாளர் சுரேந்தர் பால் கடந்த 22-ம் தேதி ஆளுநர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு பதில் அனுப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார். இதுதொடர்பாக முதல்வர் பகவந்த் மான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ஆளுநர் வரம்பு மீறி … Read more