ஃபோட்டோஷாப் செய்து தேசப்பற்றை காண்பித்த ஐ.ஐ.டி. பாம்பே.. கொதித்துப்போன நெட்டிசன்ஸ்!

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாட்டின் அனைவரது இல்லங்கள்தோறும் தேசியக்கொடியை ஏற்றி தத்தம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். மேலும் தேசியக் கொடியை எப்படியெல்லாம் பறக்க விடவேண்டும், எப்படியெல்லாம் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்ற அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி நாட்டு மக்கள் பலரும் தங்கள் இல்லங்களிலும், வாகனங்களிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிட்டனர். சாமானிய மக்களே நாட்டின் மூவர்ணக் கொடியை … Read more

10 ரூபாய் கட்டணத்தில் கொச்சி மெட்ரோவில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம்

கொச்சி: நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொச்சி மெட்ரோவில் பயணிகள் வெறும் 10 ரூபாய் மட்டுமே செலுத்தி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது Freedom To Travel என்ற ஆஃபரின் கீழ் இன்று ஒருநாள் மட்டும் வழங்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் ஆண்டை கொண்டாடும் விதமாக அரசு நாட்டு மக்களுக்கு சில சலுகையை அறிவித்துள்ளது. பாரம்பரிய நினைவுச் சின்னங்களை இலவசமாக பொதுமக்கள் … Read more

மோடி ஜெபித்துள்ள அதே ஊழல் மந்திரம்… இனியும் கிடைக்குமா மக்களின் வரம்?

2 ஜி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது (2009 -14) ஆட்சி காலத்தின் இரண்டாம் பாகத்தில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு, நிலக்கரி இறக்குமதியில் ஊழல், காமன்வெல்த் போட்டிகளை நடத்தியதில் முறைகேடு என மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசைக்கட்டி நின்றன. இதுதான் சரியான தருணம் என்று காங்கிரஸ் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் பாஜக ஒருபுறம் உரக்க எடுத்துரைக்க, மறுபுறம் அன்னா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான … Read more

விடுதலை போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்றுகிறார் பிரதமர் – அமித் ஷா புகழாரம்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் ஒன்பதாவது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். அப்போது நான்கு ஹெலிகாப்டர்களில் இருந்து தேசிய கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியேற்றினார். அதேபோல் நாடு முழுவதும் இருக்கும் அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மத்திய … Read more

டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராகுல் காந்தி, பிரியங்கா, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து சுதந்திர தின கவுரவ யாத்திரை தொடங்கிய அவர்கள், காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு ஊர்வலமாக சென்றனர். காங்கிரஸ் தொண்டர்களும் மூவர்ண கொடியை கையில் ஏந்திக்கொண்டு யாத்திரையில் பங்கேற்றனர். காந்தி வாழ்ந்த இல்லத்தில், அவர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் ராகுல், … Read more

அரசு அதிகாரிகள் ஹலோவிற்கு பதிலாக வந்தே மாதரம் என்று சொல்ல வேண்டும் – மகாராஷ்டிரா அமைச்சர்

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் செல்போனில் பேசும் போது இனி ஹலோ (Hello) என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என அம்மாநில கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்களில் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் எனவும், அந்நிய வார்த்தையான ஹலோ-வை தவிர்த்து வந்தே மாதரம் என்ற உள்நாட்டு வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “நாம் சுதந்திரத்தின் 76வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நாம் சுதந்திர தின … Read more

மோடியின் 82 நிமிட உரை, 5 உறுதிமொழிகள் – செங்கோட்டை சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்

புதுடெல்லி: நாட்டின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். டெல்லியில் பிரதமர் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றுவது இது 9-வது முறையாகும். பொதுவாக பிரதமர் மோடி உள்நாடு, வெளிநாடு என எங்கு உரை நிகழ்த்தினாலும் டெலி ப்ராம்ப்டர் மூலம் உரை நிகழ்த்துவது வழக்கம். டெலி ப்ராம்ப்டர் இல்லாமல் அவரால் உரை நிகழ்த்த முடியுமா என்று காங்கிரஸ் பலமுறை விமர்சனம் செய்ததும் உண்டு. இந்நிலையில், பிரதமர் நரேந்திர … Read more

75ஆவது சுதந்திர நாள் விழா.. நாடு முழுவதும் கொண்டாட்டம்

75ஆவது சுதந்திர நாளையொட்டிப் பொது இடங்களிலும் கோவில்களிலும் தனியார் இடங்களிலும் தேசியக் கொடியேற்றிக் கொண்டாடப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் லால் சவுக்கில் புகழ்பெற்ற மணிக்கூண்டின் உச்சியில் தேசியக் கொடி கட்டப்பட்டுள்ளது. அதன் முன் தேசியக் கொடியேந்திய இளைஞர்கள் வந்தே மாதரம் என முழக்கமிட்டனர்.  மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மூவண்ணக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.  மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோவிலில் சுதந்திர நாளையொட்டிச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவலிங்கத்தின் … Read more

சிறுத்தையிடம் கடி வாங்கிய பின் செத்தது போல் நடித்து உயிர் தப்பிய நாய்

உடுப்பி: கர்நாடகா மாநிலம் உடுப்பி அடுத்த மணிப்பால் பல்கலைகழகத்திற்கு எதிரே உள்ள குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டின் ஒன்றில் புகுந்த சிறுத்தை, அந்த வீட்டின் முன்புள்ள ஊஞ்சலுக்கு அடியில் பதுங்கியிருந்தது. சுமார் ஒன்றரை நிமிடம் அந்த சிறுத்தை பதுங்கியிருந்தது. அப்போது வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திர கெடிலயாவின் வளர்ப்பு நாய் டோமி மீது அந்த சிறுத்தை திடீரென பாய்ந்தது. நாயின் கழுத்தை லாவகமாக சிறுத்தை கவ்வியது. அடுத்த சில நொடிகளில் எவ்வித கூச்சலுமின்றி அந்த நாய் … Read more

“நீ வெடிகுண்டு வைப்பவன்” – சக பயணிக்கு வந்த மெசேஜை பார்த்து விமானத்தை நிறுத்திய நபர்!

கர்நாடக மாநிலத்தில் விமானத்தில் பயணம் இருந்த ஒருவர் தனது சக பயணிக்கு “நீ வெடிகுண்டு வைப்பவன் அல்லவா” என்று கிண்டலாக வந்த மெசேஜைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விமானத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை நோக்கி நேற்று காலை 11 மணியளவில் பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானம் திடீரென நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு விமானமும், பயணிகளின் உடைமைகளையும் விமான நிலைய அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட … Read more