​ஜே.பி. நட்டாவை சந்தித்தார் மிதாலி ராஜ் – நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு வலைவீசும் பாஜக

ஹைதராபாத்: ஹைதராபாத் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் நேற்று சந்தித்து பேசினார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வாரங்கல் பொதுக்கூட்டத் தில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் தனது துணைவியாருடன் ஹைதராபாத் விமான நிலையம் வந்தார். அவரை மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜே.பி.நட்டா சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது … Read more

காஷ்மீரில் 15 நாளில் ஆசாத் புதிய கட்சி: பாஜ உத்தரவுப்படி நடக்கிறாரா?

ஜம்மு: காங்கிரசில் இருந்து விலகிய நிலையில், குலாம் நபி ஆசாத் இன்னும் 15 நாட்களில் காஷ்மீரில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தவல்கள் வெளியாகி உள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத், நேற்று முன்தினம் திடீரென கட்சியிலிருந்து விலகினார். கட்சியில் ராகுல் காந்தி செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து, சோனியா காந்திக்கு 5 பக்க விலகல் கடிதத்தை அவர் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடக்க இருப்பதை கருத்தில் கொண்டு, … Read more

தூக்கமின்றி மக்கள் பீதி: ஜம்முவில் 5 நாளில் 13 முறை நிலநடுக்கம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 நாட்களில் 13 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நேற்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தோடா மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் ஏற்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோளில் 2.9 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து, நான்கரை மணி நேரம் கழித்து மீண்டும் மக்கள் நிலஅதிர்வை உணர்ந்தனர். இது 3.4 புள்ளிகளாக பதிவானது. ஜம்முவின் தோடா, … Read more

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு மீண்டும் சலுகை: வாழ்நாள் முழுவதும் வேலைக்காரர், டிரைவர்

புதுடெல்லி: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மட்டுமின்றி மற்ற நீதிபதிகளும் இனி தங்கள் வாழ்நாள் முழுக்க இலவசமாக வீட்டு வேலைக்கு பணியாளர், டிரைவர், உதவியாளரை நியமித்துக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு மீண்டும் ஓய்வு கால சலுகையை மாற்றி உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஓய்வு கால சலுகைகளை ஒன்றிய அரசு கடந்த 23ம் தேதி திருத்தியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஓய்வுகால … Read more

சுத்துபோட்ட முதலைகள்.. உயிருக்கு போராடிய சிறுவன் மீட்கப்பட்ட காட்சி..!

நூற்றுக்கணக்கான முதலைகள் சூழ ஆற்றுக்குள் தவறி விழுந்ததால் உயிருக்குப் போராடிய சிறுவனை படகில் வந்த மீட்புக்குழுவினர் காப்பாற்றிய காட்சி வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவின் சம்பல் நதியில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன. ஆற்றின் கரையோரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் ஊருக்குள் புகுந்துவிடும் முதலைகளை பிடித்தால் கூட, அவை சம்பல் நதியில் விடப்படுகின்றது. இந்த நிலையில் வெள்ளம் பாய்ந்தோடிய அந்த நதிக்குள் தவறி விழுந்த சிறுவன் ஒருவனை ஏராளமான முதலைகள் சுற்றிவர தொடங்கின, இதனை கண்டு சிறுவன் கூக்குரலிட்டான். … Read more

லஞ்சம் கேட்கிறார்கள் 13,000 பள்ளிகள் மோடிக்கு கடிதம்: கர்நாடகா முதல்வருக்கு சிக்கல்

புதுடெல்லி: கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு லஞ்சம் கேட்பதாக, இந்த மாநிலத்தை  சேர்ந்த 13 ஆயிரம் தனியார் பள்ளிகள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை  தலைமையில் பாஜ அரசு நடைபெறுகிறது. இதன் மீது சமீப காலமாக லஞ்ச, ஊழல் புகார்கள் குவிகின்றன. அரசு ஒப்பந்த பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் கேட்கப்படுவதாக சில தினங்களுக்கு முன் ஒப்பந்ததாரர் ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்த … Read more

பில்கிஸ் பானு வழக்கு | “உச்ச நீதிமன்றத்தை நாங்கள் நம்புகிறோம்” – 134 முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்

புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து 134 முன்னாள் அரசு அதிகாரிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், டெல்லி முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர், முன்னாள் வெளியுறவுச் செயலர்கள் சிவசங்கர் மேனன், … Read more

நடிகை சோனாலி கொலையில் ஓட்டல் உரிமையாளர் உடந்தை

பனாஜி: அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகை சோனாலி போகத், கடந்த 23ம் தேதி கோவாவில் மாரடைப்பால் இறந்தார். சொத்துக்காகவும், சோனாலியின் அரசியல் வாழ்க்கையை அழிக்கவும் அவரது உதவியாளர்கள்தான் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருப்பதாக சோனாலியின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். சோனாலியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய கோவா போலீசார் சோனாலியின் உதவியாளர்கள் சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசியை கைது செய்தனர். இவர்கள் … Read more

கேஜிஎஃப் நடிகருக்கு தொண்டை புற்றுநோய்

பெங்களூர்: கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய், கடுமையான தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ‘கேஜிஎஃப்’,  ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களில் காசிம் சாச்சா என்ற முஸ்லிம் வேடத்தில் நடித்து இருந்தவர், ஹரிஷ் ராய். படத்தின் ஹீரோவாக நடித்த யஷ்ஷுக்கு வலதுகரமாக இவர் இருப்பார். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது புற்றுநோயின் 4வது ஸ்டேஜில் இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஹரிஷ் ராய் … Read more

பெண்ணின் முதுகில் ஏறி படமெடுத்த நாகப்பாம்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம்,  கலபுர்கி மாவட்டம், அப்சல்புரா தாலுகா, மல்லாபாத் கிராமத்தில் பாகம்மா பண்டதாள என்பவர், அவருக்கு சொந்தமான வயல் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். பொதுவாக வயல் வெளியில் பாம்புகள் வசிப்பது இயல்பானது. நேற்று காலை பாகம்மா பண்டதாள, வீட்டு வாசலில் இருந்து கயிறு கட்டீலில் படுத்து கொண்டிருந்தார். அப்போது நிலத்தில் இருந்து வந்த நாகபாம்பு ஒன்று, கட்டிலில் படுத்து கொண்டிருந்த பாகம்மா மீது ஏறி அவர் முதுகில் அமர்ந்த படம் எடுத்து நின்றது. … Read more