‘அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும்’ – பிரதமர் மோடி உரை

வளர்ச்சியை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டிய நேரமிது என்றும், ஒவ்வொரு இந்தியனும் வேகமாக அடியெடுத்து வைக்கும் நேரமிது என்றும் நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் உரையாற்றினார். 75-ம் ஆண்டு நிறைவுபெற்று, 76-ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி. அதன்பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் நாட்டுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து தனது உரையை … Read more

’ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியாவின் இருபெரும் சவால்கள்’ – பிரதமர் மோடி

புதுடெல்லி: ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள இரு பெரும் சவால்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பட்டியலிட்டுள்ளார். சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார். தேசிய கீதம் ஒலிக்கப்பட மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் துவக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி அவர்களின் கனவின்படி இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க மக்கள் … Read more

76th independence day: 'ஹலோவுக்கு பதில் வந்தே மாதரம்' – அமைச்சரின் அதிரடி உத்தரவு!

மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்கப்பட்டு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் இணைந்து பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நவிஸும் பதவியேற்றனர். முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று ஒரு மாத காலம் நிறைவடைந்த நிலையிலும் அமைச்சர் குறித்த விபரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது. காரணம் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்க உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது. அமைச்சர்கள் இல்லாததால் அரசு நிர்வாகம் முடங்கி … Read more

சவால்களை கடந்து சாதனை படைக்கிறது; உலகத்துக்கே நம்பிக்கையாக திகழ்கிறது இந்தியா: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..!

டெல்லி; சவால்களை கடந்து இந்தியா சாதனை படைக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி பிரதமர் மோடி ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர்; உலக பிரச்சனைகளுக்கு எல்லாம் இன்று இந்தியா தீர்வு கண்டு வருகிறது. உலகத்துக்கே நம்பிக்கையாக திகழ்கிறது இந்தியா; சவால்களை கடந்து இந்தியா சாதனை படைக்கிறது. பன்முக தன்மை கொண்ட இந்தியர்கள் அனைவரும் தேசப் பற்றில் ஒன்றிணைவதால் இந்தியா அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. வேகமாக … Read more

‘நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கையே இவர்கள்தான்‘- குடியரசுத் தலைவர் முர்மு உரை

இந்தியத் திருநாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் ஆகியவற்றிற்காக நம்மாலான அனைத்தையும் அளிக்க உறுதி ஏற்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து 76-ஆவது ஆண்டில் எடுத்து வைக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் 76-ஆவது சுதந்திர தின வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டார். ஜனநாயகத்தின் மெய்யான சக்தியை உலகம் தெரிந்து கொள்ள இந்தியா உதவியிருக்கிறது என்று கூறிய குடியரசுத் தலைவர், இந்திய விடுதலைக்குப் போராடிய அனைவருக்கும் தலை வணங்குவதாகக் குறிப்பிட்டார். … Read more

இந்திய வரலாற்றில் மனிதாபிமானமற்ற அத்தியாயத்தை மறக்க முடியாது: பிரிவினை நினைவு தினத்தில் அமித் ஷா வேதனை

புதுடெல்லி: இந்திய வரலாற்றில் மனிதாபிமான மற்ற அத்தியாயத்தை ஒருபோதும் மறக்க இயலாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேதனை தெரிவித்தார். 1947-ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைந்தபோது பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக தனியாக பிரிந்தது. முன்னதாக பாகிஸ்தான் தனி நாடு கோரி ஏற்பட்ட பெரும் கலவரத்தில் லட்சக்கணக்கான மக்கள் சொந்த வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து சென்றதுடன் லட்சக்கணக்கானோர் தங்களது இன்னுயிரையும் இழந்தனர். மக்களின் போராட்டம் மற்றும் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் … Read more

செங்கோட்டையில் மோடி உரை: தலைவர்களை நினைவுகூர்ந்தார்!

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி சுதந்திரத்துக்காக போராடிய பல்வேறு தலைவர்களை நினைவுகூர்ந்து பேசினார். நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றினார். சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற இவ்விழாவை முன்னிட்டு, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் … Read more

சுதந்திர தினம் 2022: தியாகம், வீரம் கொண்ட வீரர்கள் தந்த வரம் நம் சுதந்திரம், இதை கண் போல் காப்போம்!!

பாரத நாடு பழம்பெரும் நாடு. பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய், உலகுக்கு ஆசானாய், மனித குலத்துக்கு எடுத்துக்காட்டாய், பொறுமையின் பிறப்பிடமாய், துணிச்சலில் இருப்பிடமாய், அன்பின் அன்னையாய், துணிவின் தந்தையாய், உழைப்பின் உதாரணமாய், வளர்ச்சியின் வழிகாட்டியாய் பிரபஞ்சத்தில் பிரகாசிக்கும் நாடு இந்தியா!! இன்று நம் நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். சுதந்திரம் என்பது வெறும் சொல்லோடு இல்லாமல், நம் வாழ்விலும், உணர்விலும், உயிரிலும் பின்னிப்பிணைந்துள்ளது.   ஆகஸ்ட் 15, 1947 இல் பிரிட்டிஷ் காலனித்துவ … Read more

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவு விழா கோலாகலமாக கொண்டாட்டம்.!

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள முக்கிய இடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டது. தஞ்சையில் மாநகராட்சி கட்டிடம், நகரின் முக்கிய சாலைகள் உட்பட மாநகரம் முழுவதும் மூவர்ண தேசியக்கொடி அலங்காரத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ஜொலித்தன. கடலூரில் உள்ள வீராணம் ஏரியின் முகப்பு பகுதி மூவர்ண கொடி வண்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இதேபோல், ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர், அப்துல் … Read more

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: வானிலிருந்து பொழிந்த 'பூ' மழை..!

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி பிரதமர் மோடி ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திர தின விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதை கோலாகலமாக கொண்டாடும் வகையில், ஒன்றிய அரசு அமிர்த பெருவிழாவாக ஓராண்டுக்கு கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடை வதையொட்டி, பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, நாடெங்கிலும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி, 75ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், நாட்டின் 76வது சுதந்திர … Read more