14 நாட்களில் புதுக்கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத் – காஷ்மீர் தேர்தலுக்கு குறி!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், 14 நாட்களில், புதிய கட்சியை தொடங்க இருப்பதாக, அவரது நெருங்கிய ஆதரவாளர் ஜி.எம்.சரூரி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என, பல பதவிகளை வகித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களாக, காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் … Read more

ஜார்க்கண்ட்டில் ஓர் கூவத்தூர் கலாட்டா.. 3 பேருந்துகளில் எம்எல்ஏக்களுடன் முதல்வர் ஹேமந்த்!

ஆட்சியை தக்க வைக்க எம்எல்ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இறங்கியுள்ளார். ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் தன் பதவியைப் பயன்படுத்தி சுரங்க உரிமத்தைச் சட்டவிரோதமாகப் பெற்றதாகவும், இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாகவும், தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க புகார் அளித்திருந்தது. இந்தப் புகார் தொடர்பாக விசாரித்த தேர்தல் ஆணைய … Read more

இந்தியாவின் 'தேஜஸ்' போர் விமானத்தை வாங்க அர்ஜென்டினா விருப்பம்!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தை வாங்க அர்ஜென்டினா ஆர்வம் கொண்டு உள்ளதாகவும், அந்நாட்டு விமானப்படையில் இணைக்கவும் திட்டமும் அந்நாட்டிடம் உள்ளதாக இந்தியா கூறியுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ளார். அப்போது, அந்நாட்டு அதிபர் ஆல்பெர்டோ பெர்ணாண்டசையும், பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் சன்டியாகோ கபிரியோவை சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தனர். … Read more

டெல்லியில் இன்ஸ்டாகிராமில் பேசுவதை நிறுத்திய சிறுமி மீது துப்பாக்கிசூடு: டெல்லியில் பரபரப்பு சம்பவம்

டெல்லி: டெல்லியில் இன்ஸ்டாகிராமில் பழகிய 16 வயது மாணவி பேசுவதை நிறுத்தியதால் அப்பெண் பள்ளியில் இருந்து திரும்பும் போது துப்பாக்கியால் சுட்ட இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு உதவியதாக மேலும் இருவரை கைது செய்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளார்.

முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – ஜார்கண்ட் பாஜக போர்க்கொடி

புதுடெல்லி: சுரங்க ஒதுக்கீடு தொடர்பான அரசு ஒப்பந்தத்தை தனக்கே ஒதுக்கீடு செய்ததற்காக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்க செய்ய வேண்டும் என ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி, சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை தானே பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாஜக., … Read more

ஜார்க்கண்டில் 'கூவத்தூர்' பார்முலா – ஆட்சியை தக்கவைக்க முதல்வர் சோரன் அதிரடி ப்ளான்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கும் முயற்சியாக, அனைத்து எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைக்க, அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணி அரசுக்கு, 49 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இதில், ஜார்க்கண்ட் … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பொதுமக்கள் நலன் சார்ந்தது. அதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளது.  டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இலவசமாக இருப்பதன் மூலம் மக்கள் அதனை அதிகம் பயன்படுத்த முன்வருவார்கள். இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ … Read more

“ராகுலிடம் கெஞ்சுவோம், அழுத்தம் தருவோம்” – காங். தலைமைக்கு ‘பான் இந்தியா’ முகம் தேடும் கார்கே

புதுடெல்லி: “ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க நாங்கள் அழுத்தம் கொடுப்போம்” என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் நடைபெற வேண்டிய நிலையில், தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் ராகுல் காந்தி திரும்ப வேண்டும் என்று கட்சிக்குள் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கே, … Read more

ஜார்க்கண்டில் ஆட்சியை தக்கவைக்க தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கத் தொடங்கினார் முதல்வர் சிபு சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்டில் ஆட்சியை தக்கவைக்க தங்கள் கட்சி எம்எல்ஏக்களை முதல்வர் சிபு சோரன் பாதுகாக்கத் தொடங்கினார். ஜே.எம்.எம். கட்சி எம்எல்ஏக்கள் 3 பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்ட நிலையில் சொகுசு விடுதிகளில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

நடிகை சோனாலி போகட்டுக்கு போதை மருந்து கொடுத்து கொலை? – கோவாவில் உதவியாளர், நண்பர் கைது

பனாஜி: ஹரியாணாவைச் சேர்ந்தவர் சோனாலி போகட் (42). இவர் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின் டி.வி., வெப் தொடர்களில் நடித்தார். மாடலாகவும் இருந்தார். 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். மேலும், பாஜகவில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஹரியாணா தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் கடந்த 22-ம் … Read more