காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அறிவுஜீவி தேவை இல்லை; ஆக்ஷன் நாயகரே தேவை – சொந்த மாநிலத்திலேயே சசி தரூருக்கு கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் வேட்பு மனு பெற்றுள்ளார். ஆனால்சொந்த மாநில காங்கிரஸ் கட்சியினரே சசி தரூருக்கு எதிராக நிற்கின்றனர். ஐ.நா.வில் இருந்து அரசியல் உள்ளுரில் சுவர் பிடித்து விளம்பரம் செய்வது, கொடி கட்டி கட்சி வேலை செய்வது என்று அடிமட்ட அளவில் இருந்து படிப்படியாக அரசியலுக்கு வந்த வரலாறு சசி தரூருக்கு இல்லை. … Read more

தீவிரவாதத்துக்கு எதிரான போர் முன்னணி நாடாக இந்தியா விளங்குகிறது: ஜனாதிபதி முர்மு பேச்சு

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் முன்னணி நாடாக இந்தியா விளங்குகிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு (ஐஎப்எஸ்) பயிற்சி அதிகாரிகள் சிலர்  ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில்  நேற்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் மத்தியில் திரவுபதி முர்மு பேசுகையில், ‘பொருளாதார வளர்ச்சி மற்றும் பல அம்சங்களின் அடிப்படையில் உலக அரங்கில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு  பல முன்னேறிய நாடுகள் கூட  அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் … Read more

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – மாயமான 15 பேரை தேடும் பணி தீவிரம்

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தின் துப்ரி நகரிலிருந்து பஷானி என்ற இடத்துக்கு பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 30 பேர், நாட்டு படகு ஒன்றில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணம் செய்தனர். அந்தப் படகில் 10 மோட்டார் சைக்கிள்களும் ஏற்றிச் செல்லப்பட்டன. துப்ரி நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அடாபாரி என்ற இடத்தில் உள்ள பாலத்தை, படகு கடக்க முயன்றபோது, அதன் தூண் மீது படகு மோதி கவிழ்ந்தது. இதனால் அந்த படகில் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் மூழ்கி … Read more

முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

மும்பை: முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், தற்போது இவருக்கு பாதுகாப்பு இசட் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது. இசட் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் அவருக்கு 58 கமண்டோ படையினர் பாதுகாப்பு வழங்குவார்கள். பாதுகாப்புக்காக செலவினங்களை முகேஷ் அம்பானி ஏற்பார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டருகே 20 … Read more

இன்று சானிட்டரி நாப்கின் கேட்பீர்கள்.. நாளை ஆணுறை கேட்பீர்கள்… ஐஏஎஸ் அதிகாரி பேச்சால் சர்ச்சை..!!

பீகார் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ‘அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மகளிர் மற்றும் குழந்தைகளு மேம்பாட்டு நிறுவன இயக்குநர ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரியிடம் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் கேட்டனர். அதில் ஒரு மாணவி, “அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது. ஆனால் எங்களுக்கு சானிட்டரி நாப்கின்களை ரூ.20 முதல் 30 ரூபாயில் ஏன் வழங்க முடியவில்லை? … Read more

காஷ்மீரில் 2 பேருந்துகளில் குண்டுவெடித்து 2 பேர் காயம்

ஜம்மு: காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூரில் இந்துக்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். அங்கு ராணுவத்தின் வடக்கு பிரிவின் தலைமையகம் செயல்படுகிறது. நகரின் டோமல் சவுக் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே ஏராளமான தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும். அங்கு நேற்று முன்தினம் இரவு இங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் பேருந்து முற்றிலுமாக உருக்குலைந்தது. பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை உதம்பூர் பஸ் … Read more

சிபிஐ, என்சிபி.யின் ‘ஆபரேசன் கருடா’போதை பொருள் கடத்தல்; 6,600 நபர் மீது சந்தேகம்: 175 பேர் கைது

புதுடெல்லி:  சிபிஐ, என்சிபி மற்றும் மாநில போலீசார் இணைந்து நாடு முழுவதும் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீப காலமாக, நாட்டில பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகமாகி இருக்கின்றன. இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சர்வதேச அளவில் தொடர்பு கொண்டுள்ள  போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டறியவும், போதை பொருள் கடத்தலை தடுக்கவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் விலகல் – சசி தரூர், திக் விஜய் சிங் இடையே போட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தேர்தலில் போட்டியிடுகிறார். கடைசி நாளான இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங்கும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். டெல்லியில் நேற்று அவர் கூறும்போது, … Read more

வாட்ஸ் அப் வழக்கு ஜன.17ல் விசாரணை

புதுடெல்லி: வாட்ஸ்அப் நிறுவனத்தின் கொள்கைகள், தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக பயனாளிகள் தங்களது அழைப்புகள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வீடியோ உள்ளிட்ட தகவல்களை அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தி வருகிறது. இது தனிமனித சுதந்திரம், பேச்சுரிமைக்கு எதிரானது,’ என்று எதிர்ப்பு தெரிவித்து 2 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கேஎம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு … Read more

சிம் கார்டு வாங்க போலி ஆவணங்களை வழங்கினால் ஓராண்டு சிறை

புதுடெல்லி: சிம் கார்டு மற்றும் ஓடிடி சேவைகளுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வழங்கினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க இந்திய தொலைத்தொடர்பு வரைவு மசோதா 2022-ன் விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் மூலமாக மோசடியில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, சட்டவிரோதமான காரியங்களும் தொலைத்தொடர்பு சேவையை அடிப்படையாக கொண்டே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற பல்வேறு மோசடி நிகழ்வுகளிலிருந்து … Read more