முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்: காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி டிவிட்டரில் வாழ்த்து

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் தன்னடக்கம், அர்ப்பணிப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு எவருடனும் ஒப்பிட முடியாது என்றும் என்னை போன்ற பல இந்தியர்களுக்கு மன்மோகன்சிங் ஓரு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி புகழ்ந்துள்ளார். மன்மோகன்சிங் அவர்களின் நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக இருந்த இறைவனை வேண்டுகிறேன் என ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார். 

நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கிய நவராத்திரி விழா.!

நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. நவராத்திரியின் முதல் நாளையொட்டி வடமாநிலங்களின் பல்வேறு கோயில்களிலும், பக்தர்கள் சிறப்பு பூஜைகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டனர். இன்று தொடங்கியுள்ள நவராத்திரி பண்டிகை, அக்டோபர் 5 ஆம் தேதி வரையில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தேவலன் கோயிலில், அம்மன் சிலைக்கு மலர்கள் மற்றும் ஆபரணங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பே கவுரி ஆரத்தி எனும் சிறப்பு தீபாராதனையும் செய்யப்பட்டது. இதே போல மகாராஷ்டிரா … Read more

வீடு தேடி வந்து உதவி கேட்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு: ரூ.25 கோடி பரிசு விழுந்தும் தலைமறைவாக வாழ்கிறேன் – கேரளத்தில் ஓணம் பம்பர் வென்ற ஆட்டோ ஓட்டுநர் புலம்பல்

திருவனந்தபுரம்: கேரளத்தில் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.25 கோடி வென்ற ஆட்டோ ஓட்டுநர் அனூப் தனக்கு நிம்மதி இல்லை என புலம்பித் தீர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கேரள மாநிலத்தில் தினசரி லாட்டரி சீட்டை மாநில அரசு நடத்தி வருகிறது. இதன் அதிகபட்ச பரிசுத்தொகை ரூ.90 லட்சமாகும். இந்நிலையில் கேரளத்தில் மலையாளிகளின் முக்கியப் பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு பம்பர் பரிசுச் சீட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஓணம் … Read more

நமீபியா சிவிங்கி புலிகளால் ராஜஸ்தானிலும் அதிசயம் நடக்கும்

ஜெய்ப்பூர்: புதிய சிவிங்கி புலிகளால் ராஜஸ்தான் சுற்றுலாவிலும் பல்வேறு அதிசயங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி கடந்த 17ம் தேதி திறந்து விட்டார். இவற்றை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆர்வம், சுற்றுலா பயணிகளிடம் மேலோங்கி வருகிறது. ஆனால், இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள இந்த சிவிங்கி புலிகளுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், இப்போதைக்கு சுற்றுலா … Read more

CUET நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு.! ரிசல்ட்டுக்கான லிங்க் உள்ளே.!

செப்டம்பர் மாதம் எழுதப்பட்ட CUET தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளது. புதிய கல்விக் கொள்கையின் படி 66 மத்திய பல்கலைக்கழகங்களில் கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம்1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட இத்தேர்வில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 201 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்த … Read more

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு கடும் எதிர்ப்பு: கெலாட் ஆதரவாளருக்கு முதல்வர் பதவி கேட்டு 90 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சி எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கட்சித் தலைவராக தேர்வானாலும் முதல்வர் பதவியிலும் தொடர கெலாட் விரும்பினார். ஆனால், இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. … Read more

'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டம்: தினமும் 10 லட்சம் அட்டைகள் வழங்க இலக்கு – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தினமும் 10 லட்சம் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் … Read more

மகாராஷ்டிராவில் 7 குடியிருப்புகள் அடுத்தடுத்து திடீரென இடிந்து விழுந்து விபத்து..!

மும்பையின் Vile Parle பகுதியில் 7குடியிருப்புகள் அடுத்தடுத்து திடீரென்று இடிந்து விழும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் குடியிருப்பு வாசிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று அருகில் இருந்த 24 கட்டிடங்களில் வசித்த மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புகள் இடிந்து விழுந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Source … Read more

சட்டப்பேரவை அலுவல் சர்ச்சை ஆளுநர் பன்வாரிலாலிடம் பணிந்தார் முதல்வர் மான்: நாளை சிறப்பு கூட்டம் நடத்த அனுமதி

புதுடெல்லி: அலுவல் விவரங்களை அளித்ததை தொடர்ந்து, பஞ்சாப் சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தை நாளை கூட்டுவதற்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தனது கட்சி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை கவிழ்க்க பாஜ முயற்சிப்பதாக சமீபத்தில் அவர் குற்றம்சாட்டினார். மேலும், சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தை கடந்த 22ம் தேதி கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் போவதாக முதல்வர் மான் அறிவித்தார். இதற்கு முதலில் அனுமதி … Read more

சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டி வங்கிகளில் பிஎஃப்ஐ ரூ.120 கோடி டெபாசிட்: விசாரணை அறிக்கையில் அமலாக்கத் துறை தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட்ஆஃப் இந்தியாவும் (பிஎஃப்ஐ), அது தொடர்பான நிறுவனங்களும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டி வங்கிகளில் ரூ.120 கோடி டெபாசிட் செய்துள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிஎஃப்ஐ, சட்டவிரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினர் (இடி) இணைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையை … Read more