தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு!

டெல்லி: தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும் எனவும் ராஜ்னீஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஏற்கனவே ராஜ்னீஷ் தாக்கல் செய்திருந்த மனுவை அலகாபாத் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத் காந்திநகரில் இருந்து மும்பை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் பயணம் தொடங்கியது – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

காந்திநகர்: குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து – மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதே ரயிலில் அவர் கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்தார். குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு பிரதமர் மோடி கடந்த 2 நாட்களாக பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த சில திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். காந்திநகர் ரயில் நிலையத்தில் … Read more

இந்தியாவில் இன்று முதல் 5 ஜி சேவை! தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!

இன்று முதல் இந்தியாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5G சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் மற்றும் ஆறாவது ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸைத் தொடங்கி வைக்கிறார்.  முதலில் முக்கிய நகரங்களில் மட்டும் இந்த 5ஜி அறிமுகமாக உள்ளது, அடுத்த சில ஆண்டுகளில் இந்த சேவை நாடு முழுவதும் தொடங்கப்படும். “பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1, 2022 அன்று தொடங்கி வைப்பார், மேலும் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 1-4 வரை … Read more

சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

டெல்லி: சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. சியோமி குழுமம், அதன் இந்திய கிளையான சியோமி இந்தியா, ரெட்மி என்ற பெயரில் செல்போன்களை விற்பனை செய்து வருகிறது. அனுமதியின்றி ரூ.5,551 கோடிக்கு சமமான அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு வெளியே சியோமி அனுப்பியது. காப்புரிமை தொகையை அனுப்பியதாக சியோமி கூறுவது அன்னிய செலாவணியை அனுப்புவதற்கான சாக்குபோக்கு என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளிலேயே இதுதான் … Read more

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் பொறுப்பேற்பு

புதுடெல்லி: நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பதவியேற்றார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் நாட்டின் 2-வது முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த 28-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக … Read more

அபுரோடு கூட்டத்தில் திரண்ட மக்களிடம் மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி..!

ராஜஸ்தானில் அபுரோடு பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்கத் திரண்டிருந்த போதும் பத்து மணிக்கு மேல் மைக்கையும் ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மதித்து பிரதமர் மோடி தமது பேச்சை ரத்து செய்தார். ஒலிபெருக்கி இல்லாமல் மக்களை நேரடியாக சந்தித்து அவர் அவர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். தமது பேச்சை வெளியிட முடியாமல் போனதற்காக அவர் பொதுமக்களிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் Source link

இந்தியாவில் அதிவேக 5ஜி இணைய சேவையை டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் தொடங்கி வைக்க உள்ளார் பிரதமர் மோடி!

டெல்லி: இந்தியாவில் அதிவேக 5ஜி இணைய சேவை இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி தொடங்கி  வைக்க உள்ளார். முதற்கட்ட உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் அகமதாபாத்தை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வருகிறது.

ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு!சாமானியர்களுக்கு பெரும் அதிர்ச்சி!!

ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் நேற்று முடிவடைந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டின் பணவீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் வட்டி … Read more

யூதர்கள், முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த பிஎஃப்ஐ சதி – தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் அம்பலம்

புதுடெல்லி: தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ கடந்த மாத இறுதியில் 2 முறை சோதனை நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்தது. இவர்களிடம் தீவிரவாத சதி தொடர்பாக ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் பணம் பெறப்பட்டு, வங்கிகளில் ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. என்ஐஏ விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பிஎஃப்ஐ தொண்டர்கள் … Read more

தீவு வாங்கிய பாடகர்

மும்பை: பிரபல பஞ்சாபி பாடகர் மிகாசிங், ஏராளமான இந்தி படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் அவர் பாடியிருக்கிறார். இந்த நிலையில் மிகாசிங் சொந்தமாக வெளிநாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த தீவில் ஒரு ஏரியும் அடங்கும். மேலும் ஏரியுடன் கூடிய இந்த தீவில் 7 படகுகள் மற்றும் 10 குதிரைகளும் உள்ளன என மிகாவின் நெருங்கியவர்கள் தெரிவித்தனர். பாடகர் மிகா சிங் தான் வாங்கிய ஏரியுடன் கூடிய தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் … Read more