பட்டு வேட்டி சட்டை அணிந்து விருதைப் பெற்றுக் கொண்ட சூர்யா!!

டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டன. சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய … Read more

ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்ட பிரதமர் மோடி – வைரல் வீடியோ!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமாக குஜராத்துக்கு சென்றுள்ளார். 2ஆவது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்ட்ரல் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். முன்னதாக இன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க காந்தி நகரில் இருந்து அகமதாபத்துக்கு பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி நகர் – அகமதாபாத் சாலையில் ஆம்புலன்ஸ் வருவதை கண்டார். உடனடியாக தனது பாதுகாப்பு … Read more

ஆம்புலன்ஸ் செல்வதற்காக பாதுகாப்பு வாகனத்தை வழிவிட சொன்ன பிரதமர் மோடி

அகமதாபாத்: மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்டார். காந்திநகர், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று சென்றுள்ளார். ஆமதாபாத்தில் நேற்று 36-வது தேசிய விளையாட்டு போட்டியை அவர்  துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2-வது நாளான இன்று காந்திநகர் … Read more

ஜார்கண்ட்: மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டிய ஆசிரியை! கிராமத்தினர் கொடுத்த கொடூர தண்டனை!

ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நவாமுண்டி (Noamundi) தொகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இப்பள்ளியில் பயின்று வரும் ஆறு மாணவிகள் தங்கள் ஆசிரியை மீது வைத்துள்ள புகார்கள் அம்மாநிலத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. தங்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை வகுப்பறையில் தங்களுக்கு அநாகரீகமான ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும், தகாத முறையில் தங்களை தொட்டதாகவும் அம்மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் அளித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புதன் கிழமையன்று … Read more

'ப்ளீஸ் என்ன மன்னிச்சுருங்க..!' – நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சசி தரூர்.. நடந்தது என்ன?

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், இந்தியாவின் வரைப்படத்தை தவறாக வெளியிட்டதற்காக, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தைச் சேராதவர் ஒருவர் கட்சித் தலைவராக உள்ளார். … Read more

நீட் தேர்வு விவகாரம்: முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

டெல்லி: நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதற்கட்டமாக நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரிடம் 165 பக்க … Read more

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 1ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு இடங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வெப்ப மண்டல மாற்றங்களால் ஆந்திராவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் … Read more

பட்டு வேட்டி சட்டை அணிந்து விருதைப் பெற்றுக் கொண்ட சூர்யா!!

டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டன. சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய … Read more

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கான்வாயில் 42 கார்கள் – விளாசும் எதிர்க்கட்சிகள்!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பக்வந்த் மான் கான்வாயில் 42 கார்கள் உள்ளது, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 90-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முதன் முறையாக பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான் கான்வாய் குறித்து தகவல் அறியும் அறியும் சட்டத்தின் கீழ் அறிக்கை … Read more

அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம்: நாளை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை,பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ் என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 5ஜி … Read more