''காண்டமும் சேர்த்து வழங்க வேண்டுமா?'' – மாணவிகளிடம் ஆணவமாக உரையாடிய பெண் ஐஏஎஸ் அதிகாரி!

’சானிடரி நாப்கின்களை அரசு ரூ.20-30க்கு வழங்குமா?’ என்ற பள்ளி மாணவியின் கேள்விக்கு, ’அரசு குடும்ப கட்டுப்பாடு முறைகள் மற்றும் காண்டமும் சேர்த்து வழங்கவேண்டுமா?’ என பீகாரில் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி இறுமாப்பாக பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். பீகாரின் பாட்னாவில் ‘Sashakt Beti, Samriddh Bihar’ (அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. யுனிசெஃப் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. … Read more

மத்திய அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமனம்!

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உடன், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் எனப்படும், தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் இன்று, மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்து உள்ளார். இவர், பதவி ஏற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகள், … Read more

ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கிய போது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 5 கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிமுகப்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் நாளை மறுநாள் செப்-30ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இந்நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் … Read more

எல்.டி.டி.ஈ முதல் காலிஸ்தான் வரை.. இந்தியாவில் இதுவரை தடை செய்யப்பட்ட 43 இயக்கங்கள்!

இந்தியாவில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967-ன் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏற்கனவே 43 இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இது பற்றி இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம். இந்திய மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போதல், தீவிரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்த்தல், பயிற்சி அளித்தல், நிதி உதவி அளித்தல், நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுதல், தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டுதல், ஆயுதங்கள் வைத்திருத்தல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுதல், ஏற்கனவே தடை செய்யப்பட்ட … Read more

பிரதமர் ஆகும் மாயாவதி?; பகுஜன் சமாஜ் அதிரடி; பாஜக ஷாக்!

மக்களவை தேர்தல் வருகிற 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைப்பதற்கு பாஜக சார்பில் பல்வேறு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்தும் பாஜ ஆலோசித்து வருகிறது. இதையடுத்து, தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களுக்கு பாஜக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த … Read more

அனைத்து மொபைல் போன்களின் IMEI எண்களையும் ICDR போர்ட்டலில் பதிவு செய்ய ஒன்றிய அரசு புதிய உத்தரவு

டெல்லி: அனைத்து மொபைல் போன்களின் IMEI எண்களையும் ICDR போர்ட்டலில் பதிவு செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஜன.1-ம் தேதி முதல், அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களும் பதிவு செய்ய ஒன்றிய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.    இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் திருட்டுகளையும் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்கும்பொருட்டு ஒன்றிய அரசு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வைக்கப்படுவதற்கு முன்பு அதன் … Read more

பேருந்து லாரி மோதி கோர விபத்து; 8 பேர் பலி!!

உத்தர பிரதேச மாநிலம் தருஹெரா பகுதியில் இருந்து லக்னோ நோக்கி தனியார் பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலை எண் 730-ல் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து, லக்கீம்பூர் கெரி பகுதியில் ஈரா பாலம் அருகே ஈசாநகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் வந்தபோது, எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் … Read more

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

2021-ல் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டமான பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தின் கீழ் கூடுதல் உணவுப் பாதுகாப்பு வெற்றிகரமாக அமலாவதை அடுத்து, இந்த திட்டத்தின் 7-வது கட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘இது வரவிருக்கும் நவராத்திரி, தசரா, மிலாது நபி, தீபாவளி, சத் பூஜா, குருநானக் தேவ் ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கு உதவியாக இருக்கும். நிதிச்சுமை ஏதும் … Read more

Congress President Election: ஜகா வாங்கிய அசோக் கெலாட் – களமிறங்கும் திக்விஜய் சிங்!

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி உள்ளார். இவரது மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், அதற்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், … Read more

இந்தியா கேட் பகுதியில் பதுக்கம்மா பண்டிகை களைகட்டியது

புதுடெல்லி: இந்தியா கேட் பகுதியில் பதுக்கம்மா பண்டிகை களைகட்டியது. ஏராளமான பெண்கள் திரண்டு, பூக்களை வைத்து கும்மியடித்து ஆடினர். இதை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். நாடுமுழுவதும் நவராத்திரி பண்டிகை பல விதங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வீடுகளிலும் கோயில்களிலும் கொலு வைத்து கொண்டாடுகின்றனர். பாடல்களை பாடி சுண்டல் படைத்து அம்மனை அழைக்கின்றனர். தெலங்கானாவில் பதுகம்மா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மகா கெளரியை பிரதான தெய்வமாக கொண்டாடும் பண்டிகையில் பெண்கள் உற்சாகமாக மலர்களை அலங்கரித்து கொண்டாடுகின்றனர். தெலங்கானாவில் பித்ருபட்சம் அமாவாசை தொடங்கி … Read more