குஜராத் மாநிலத்தில் ஆம்புலன்ஸில் பிடிபட்ட 25 கோடி ரூபாய் நோட்டுகள் அனைத்தும் போலியானவை: போலீஸ் விசாரணை

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 25 கோடி ரூபாய் நோட்டுகள் போலியானவை என தெரியவந்துள்ளது. உளவு தகவல் அடிப்படையில், சூரத்தில் காம்ரிச் நகர் காவல்துறையினர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அகமதாபாத் – மும்பை சாலையில் நோயாளியின்றி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறைத்து சோதனை செய்தனர். அப்போது 2 பெட்டிகள் முழுவதுமாக 2 ஆயிரம் ரூபாய் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 1290 இரண்டாயிரம் ரூபாய் … Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க… அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா?

அக்டோபர் மாதத்தில் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிறுகள் உட்பட மொத்தம் 21 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது. அடுத்த மாதத்தில் மட்டும் 5 ஞாயிறுகள் உள்ளன. அதேபோல், தேசிய விடுமுறை – காந்தி ஜெயந்தி மற்றும் சரஸ்வதி பூஜை, தசரா-விஜயதசமி, தீபாவளி போன்ற பிற பண்டிகைகள் காரணமாக … Read more

பசி எடுக்கும்போது உணவு கிடைக்கலைன்னு இப்படியா? ஒரு இளைஞர் செய்த செயலை பாருங்க..!!

உ.பி மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது விசித்திரமாக சில பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு அறுவை சிகிச்சை செய்துதான் அதை வெளியேற்ற முடியும் என விஜயிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அறுவை சிகிச்சைக்கு விஜய் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோதுதான் அவரது வயிற்றிலிருந்து ஸ்பூன் என்பது மருத்துவர்களுக்குத் தெரிந்தது. மேலும் அதில் … Read more

அதிர்ச்சி கொடுத்த RBI; மீண்டும் உயரும் ரெப்போ விகிதத்தால் EMI அதிகரிக்கும்!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI)ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம், உங்கள் EMI தொகையும் அதிகமாகும். இப்போது ரெப்போ விகிதம் 5.40% லிருந்து 5.90% ஆகவும், SDF விகிதம் 5.15% லிருந்து 5.65% ஆகவும் அதிகரித்துள்ளது. பொருளாதார கொள்கைகளுக்கான (MPC)  6  உறுப்பினர்களில் 5 பேர் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஆதரவாக இருந்தனர். பணவீக்கம் இன்னும் அனைத்து துறைகளுக்கும் கவலை அளிக்கும் விஷயமாகவே உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க பெடரல் … Read more

ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கெலிஜியம் பரிந்துரை

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கெலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி வரலாவை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கெலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஜம்மு கோர்ட் நீதிபதி முகமது மாக்ரோவை ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

"காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப் போன மருந்து" – அசாம் முதல்வர் விமர்சனம்

புதுடெல்லி: “காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப்போன மருந்து. அவர்களால் எதிர்க்கட்சிக்கான வேலையை செய்ய முடியாது” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். அண்மையில் அவர் அளித்தப் பேட்டியில், “காங்கிரஸ் இன்னும் தாங்களே ஆட்சியில் இருப்பதாக உணர்கிறது. பாரதிய ஜனதா கட்சி அவர்களிடமிருந்து எப்போதோ ஆட்சியை பறித்து விட்டது. இந்தியாவில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இயல்பான ஜனநாயக அமைப்புகள் இருக்கின்றன. மேலும் அவை கட்சிக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் காந்தி குடும்பத்தை ஒரு எதிர்க்கட்சியாக பார்க்கக் கூடாது. … Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: மோடி கொடுத்த சிக்னல்… மும்பைக்கு கிளம்பிய 2.0!

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஆகஸ்ட் 15, 2021ல் பிரதமர் மோடி வெளியிட்டார். இதற்காக ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக உழைத்து வந்தனர். முன்னதாக நியூ டெல்லி – வாரணாசி மற்றும் நியூ டெல்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வரிசையில் மூன்றாவது ரயிலை பிரதமர் மோடி … Read more

மழலை மாணவர்களுக்கு அயோத்தியில் நடக்கும் கொடுமை! சாதமும் உப்பும் மட்டுமே உணவு!

அயோத்தியா: ராமர் ஜென்ம பூமியான அயோத்தியில் அரசுப் பள்ளியில் மதிய உணவில் பரிமாறப்பட்ட உணவு வீடியோ வெளியாகி அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகி இருக்கும் இந்த இரண்டு நிமிட வீடியோவில், தரையில் அமர்ந்தபடி பள்ளிக் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் சாதம் மற்றும் உப்பு சாப்பிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அயோத்தியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதத்துடன் உப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் … Read more

மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு

இம்பால்: மணிப்பூரில் தெங்னூமால் என்ற இடத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, மேகாலாவிலும் உணரப்பட்டது.

காந்திநகர் – மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்: காந்திநகர்- மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலை காந்திநகர் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காந்திநகரில் இருந்து கலுபூர் ரயில் நிலையம் வரை ரயிலில் இன்று பயணம் செய்கிறார். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.