பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவிப்பு

திருவனந்தபுரம் : பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சகம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது. நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் ஒன்றிய அரசின் தடையை ஏற்கிறோம் என பி.எஃப்.ஐ. தெரிவித்தது.

தனியார்மயமாகும் புதுச்சேரி மின்துறை!? காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள்!

புதுச்சேரி மாநில மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்காலில் மின்துறை ஊழியர்கள்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மின்துறை தனியார் மையம் ஆக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதற்கு மின்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் உள்ள மின் துறையை தனியார்மயத்துக்கான டெண்டர் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முழுவதும் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காரைக்காலில் … Read more

LTTE முதல் PFI வரை… இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் இவைதான்!

அஹிம்சை வழியில் போராடி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. உலகில் வேறெந்த நாட்டுக்கும் இந்த சிறப்பு இருப்பதாக தெரியவி்ல்லை. இத்தகைய சிறப்புமிக்க சுதந்திர போராட்ட வரலாற்றை கொண்ட இந்தியாவில் காந்தி படுகொலை செய்யப்பட்டது முதல் தற்போது பிரதமர் நரேந்திர மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு வரை, பல்வேறு பயங்கரவாத சம்பவங்களோ, அதற்கான சதி திட்டங்களேோ நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. மும்பை குண்டுவெடிப்பு, நாடாளுமன்ற தாக்குதல், கோவை குண்டுவெடிப்பு, புல்வாமா அட்டாக் … Read more

PFI-ஐ போல RSS அமைப்பையும் தடை செய்ய வேண்டும் -லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்

Popular Front of India Banned: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உள்ளிட்ட 8 அமைப்புகளை ஐந்தாண்டுகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர். மத்திய அரசின் PFI தடை முடிவு செய்தி வெளியானவுடனே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கத் தொடங்கியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல தலைவர்கள், கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் … Read more

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 34 சதவீத அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி உயர்வினால் 50 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் … Read more

முடிவுக்கு வந்தது என்.ஆர். காங்கிரஸ் – பாஜக எம்எல்ஏகள் இடையேயான கருத்து வேறுபாடு!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என இரு கட்சி எம்.எல்.ஏக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் சட்டப் பேரவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் மக்கள் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும் முதல்வர் ரங்கசாமியை மாற்ற வேண்டுமென பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் … Read more

பிஎஃப்ஐ தடை, பின்னணி, எதிர்வினைகள்: ஒரு விரைவுப் பார்வை

2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 22 மாநிலங்களில் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு வந்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா – UAPA) என்ற சட்டத்தின் பிரிவு 3-ஐ பயன்படுத்தி பிஎஃப்ஐ தடை செய்யப்பட்டுள்ளது. ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் அல்லது முன்னணிகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை … Read more

மேற்கு வங்கத்தில் கவிழ்கிறது மம்தா பானர்ஜி அரசு? – பாஜக புது குண்டு!

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக, அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுள்ளார். முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல் போக்கு … Read more

கோழிக்கோடு மாலில் நடந்த நிகழ்ச்சியில் 2 நடிகைகளிடம் பாலியல் அத்துமீறல்: இவ்வளவு மோசமான நபர்களா? பேஸ்புக் பதிவில் நடிகை உருக்கம்

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் உள்ள ஒரு மாலில் நடந்த நிகழ்ச்சியில், மலையாள நடிகைகள் 2 பேரிடம் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாளத்தில் வெளியாக உள்ள ஒரு சினிமாவின் விளம்பர நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மாலில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில், சம்பந்தப்பட்ட சினிமாவில் நடித்த 2 இளம் நடிகைகள் உள்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சினிமா நட்சத்திரங்கள் வருவது குறித்து அறிந்ததும் மாலில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி முடிந்து நட்சத்திரங்கள் … Read more

’பாஜகவினர் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு இதுதான் உதாரணம்’ – ராகுல் காந்தி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகனுக்குச் சொந்தமான ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் வரவேற்பாளர் ஆக பணியாற்றி வந்த அங்கிதா என்ற பெண் விடுதிக்குப் பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்த ராகுல் காந்தி பாஜகவுக்கு கடும் கண்டத்தைப் பதிவு செய்துள்ளார். மலப்புரத்தில் உள்ள பாண்டிக்காட்டில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிய ராகுல்காந்தி, அங்கிதாவின் கொலை வழக்கைக் குறிப்பிட்டு பேசினார். … Read more