நான் சசிதரூர் கிட்ட பேசிட்டேன்… மல்லிகார்ஜுன கார்கே சொன்ன தகவல்!

வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப் போகும் நபரை தேர்வு செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிலவரப்படி, மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் என இருவர் மட்டும் போட்டியில் இருக்கின்றனர். இவர்களில் யார் வெற்றி பெறப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடந்து அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மூத்த … Read more

'வாவ்…' குப்பையில் கோடியை அள்ளும் இந்தூர் – தூய்மையான நகரம் விருதை வென்றது இப்படிதான்!

மத்திய அரசு ஆண்டுதோறும், சுத்தமான நகரம் குறித்து கணக்கெடுப்பை எடுத்து, அதன் முடிவுகளை வெளியிடும். இந்தாண்டுக்கான கணக்கெடுப்பின் முடிவை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், முதல் மூன்று இடங்களை முறையே இந்தூர் (மத்தியப் பிரதேசம்), சூரத் (குஜராத்), நவி மும்பை (மகாராஷ்டிரா) ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன. முதலிடம் பிடிக்கும் நகரத்திற்கு ஸ்வச் சர்வேக்ஷன் என்ற பெயரில் மத்திய அரசு விருதளிக்கும். இந்தூர் நகரம் இந்த விருதை தொடர்ந்து ஆறாவது முறையாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதில், முதல் … Read more

115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனை.!

செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில், 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. இந்திய ரயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில், 115.80 மெட்ரிக் டன்னாக சாதனை படைத்துள்ளது. இது 2021 செப்டம்பர் மாதத்தை விட 9.15% வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 25 மாதங்களாக, ரயில்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படும் சரக்குகளின் அளவு இதற்கு முன்பு … Read more

வேலையை ராஜினாமா செய்யும் ஐ.டி., ஊழியர்கள்: 2025இல் காத்திருக்கும் அதிர்ச்சி!

இந்தியாவில் ஐ.டி., மற்றும் வர்த்தக நிர்வாகத்துறையின் வீழ்ச்சி மிகப்பெரிய விகிதத்தை எட்டுவதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் இந்திய ஐ.டி., ஊழியர்கள் சுமார் 22 லட்சம் பேர் தங்களது வேலையை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக டீம்லீஸ் டிஜிட்டலின் ‘டேலண்ட் எக்ஸோடஸ் ரிப்போர்ட்’ எனும் அறிக்கை கூறுகிறது. அத்துடன், 57 சதவீத ஐ.டி., ஊழியர்கள் எதிர்காலத்தில் மீண்டும் அத்துறைக்கு திரும்புவதைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2022 நிதியாண்டை ஒப்பிடும்போது, 2023ஆம் நிதியாண்டில் ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை … Read more

குழந்தை தொழிலாளர் மீட்பு மையங்கள் மூடப்படும் அவலம்: திட்டத்தை நிறுத்தியது ஒன்றிய அரசு

பழமையில் ஊறிக் கிடந்த சமுதாயத்தில் பாய்ச்சல் வேகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது படிப்பறிவு மட்டுமே. காலத்துக்கு ஒவ்வாத நடைமுறைகளை விட்டு விட்டு சமுதாய மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அளித்ததும் படிப்பறிவு தான்.   இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்த பிறகு சிறந்த கல்வி அனைவருக்கும் வசப்படவில்லை என்றுதான்  சொல்ல வேண்டும். நேஷனல் சர்வே ஆப் இந்தியாவின் சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்த ஆண்டு இந்தியாவில் படிப்பறிவு 77.7 சதவீதமாக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் பெருகி … Read more

"Your Platform"… முதல் ரயில் ஸ்மார்ட் இதழ்- சர்ப்ரைஸ் கொடுத்த தெற்கு ரயில்வே!

தெற்கு ரயில்வே மற்றும் E-Toll Ads Media and Earth & Air ஆகியவை இணைந்து முதல் ரயில் ஸ்மார்ட் இதழை செப்டம்பர் 30ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதற்கு “Your Platform” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை மீடியா துறையில் சிறப்பான அனுபவம் கொண்ட வி.பிரவீன் குமார், ஷங்கர் எம்.சிவ், கார்த்திக் பி.எஸ் ஆகியோர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். நடப்பு நிகழ்வுகள், சர்ச்சையான விஷயங்கள், அரசியல் போன்றவை அல்லாமல் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் வகையில் தகவல்களை … Read more

பிரதமர் மோடி பெயர் சூட்டிய பெண் சிவிங்கிப்புலி கர்ப்பம்? 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதல் குட்டி

போபால்: பிரதமர் மோடி பெயர் சூட்டிய பெண் சிவிங்கிப் புலி ஆஷா கர்ப்பமாக இருப்பதற்கான அடையாளங்கள் தென்படுவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு முன் சிவிங்கிப் புலி விலங்குகள் இனம் அழிந்து போயின. அவற்றை மீண்டும் கொண்டுவரும் நடவடிக்கையாக ஆப்ரிக்காவிலிருந்து 5 பெண் மற்றும் 3 பெண் சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டு வரப்பட்டன. அவற்றை மத்தியப்பிரதேச மாநிலம் சியோபூரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் கடந்த மாதம் 17ம் தேதி பிரதமர் … Read more

இவிஎம் வழக்கில் மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம்

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் குறைகள் இருப்பதாகவும் அதை களைய உத்தரவிட கோரியும் ம.பி.யை சேர்ந்தஜன் விகாஸ் கட்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், அபே எஸ்ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘விளம்பரம் தேடிக் கொள்வதற்காக இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே,மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுபோன்ற மனுக்கள் தடுக்கப்பட வேண்டும். மேலும் மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் … Read more

சசிதரூருக்கு வந்த சோதனை… சொந்த ஊருலயே செல்வாக்கு போச்சு!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? காந்தி குடும்பத்தை அல்லாமல் அலங்கரிக்கப் போகும் அந்த நபர் யார்? என்ற கேள்விக்கு கிட்டதட்ட விடை தெரிந்துவிட்டதாகவே அக்கட்சி தொண்டர்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு போட்டிக்கான களம் சுருங்கி விட்டது. காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரி தெரிவித்துள்ள தகவலின்படி, மல்லிகார்ஜுன கார்கே 14 படிவங்களும், சசி தரூர் 5 படிவங்களும், கே.என்.திரிபாதி ஒரேவொரு படிவமும் தாக்கல் செய்துள்ளனர். இந்த படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு … Read more

பொதுக்கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் மன்னிப்பு கேட்டார் மோடி: ராஜஸ்தானில் நெகிழ்ச்சி

ஜெய்ப்பூர்: கூட்டத்துக்கு தாமதம் ஆனதால் மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி. பிரதமர்  மோடி நேற்று முன்தினம் இரவு, ராஜஸ்தான், அபு ரோடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் வரும் வழியில் பல நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பொதுகூட்ட நிகழ்ச்சிக்கு வர தாமதமானது.  ஒலிபெருக்கி இல்லாமலேயே  அவர் பேசினார். மோடி பேசும்போது, ‘‘இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியில் பேசுவது சரியாக இருக்காது என்று என் மனசாட்சி கூறுகிறது, எனவே உங்கள் முன்பு நான் … Read more