குடியரசு தின விழா: அலங்கார ஊர்தி மாதிரிகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவு!

2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக் குழுக்களும் மிகவும் புகழ் பெற்றவை. முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு … Read more

தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கு: முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்

தேசிய பங்குச் சந்தை வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அவரது முன்ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் 6ஆம் தேதி சிபிஐ அவரை கைது … Read more

மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதால் தெருநாய்களை கொல்ல அனுமதி தர வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு

திருவனந்தபுரம்: மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கேரளாவில் சமீபகாலமாக தெரு நாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்து உள்ளது. ரோட்டில் நடந்தும், வாகனங்களிலும் செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் உள்பட அனைவரும் நாய்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர். இந்த வருடம் 9 மாதத்தில் மட்டும் நாய்கள் கடித்து 21 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து வெறி பிடித்த … Read more

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் முதுகை உடைக்கிறது – ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனான சந்திப்பில் கிழக்கு ஆசியப் பிரச்சினைகள், உக்ரைன் போர், பரஸ்பர நலத் திட்டங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.  இந்த சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், ‘’ ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் நாடான எங்களின் தனிநபர் பொருளாதாரம் 2,000 டாலர்கள் தான். … Read more

RSS அமைப்பையும் தடை செய்யுங்க..! – லாலு பிரசாத் ஆவேசம்!

பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தது போல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார். பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு கடந்த 2006 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் துவக்கப்பட்டது. இது டெல்லியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. அண்மையில், பி.எப்.ஐ. அமைப்பின் தலைவர்கள், துணை தலைவர்கள், … Read more

ரயில்வே ஊழியர்களுக்கு GOOD News! 78 நாள் போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் செய்தி: விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக, 2021-22 ஆம் ஆண்டிற்கான ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாள் திறமைக்கு ஏற்ற வகையில் போனஸ் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளதாக ஜீ பிசினஸ் நியூஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால், இந்திய ரயில்வேக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இது தவிர, மேலும் ஒரு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக ஏழாவது ஊதியக் … Read more

ஒன்றிய அரசு ஊழியர்கள் 4 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : ஒன்றிய அரசு ஊழியர்கள் 4 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லி, மும்பை, அகமபாத் ரயில் நிலையங்களை மேம்படுத்த 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தை ஊழல் வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்!

தேசியப் பங்குச் சந்தை ஊழியர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரத்தில் அதன் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம். 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணனை, தேசியப் பங்குச் சந்தையின் ரகசியத் தகவல்களை முன்கூட்டியே பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் ‘கோ-லொக்கேஷன்’ ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகள். … Read more

தலித் இளைஞர் மீது தாக்குதல்..!! நாற்காலியில் அமர்ந்தது ஒரு குற்றமா ?

மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கபில்தரா யோஜனா திட்டத்தின் பயனாளர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் ஹல்லு அஹிர்வார் (35) என்பவர் கலந்து கொண்டார். அப்போது அங்கு சென்ற அவர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். இதை கண்ட ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ரோகித்சிங், தாக்கூர் ஆகியோர் ஹல்லுவை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார்கள். இதில் ஹல்லுவுக்கு காயம் ஏற்பட்டது. பொது மக்கள் விலக்கிவிட்ட பிறகு ஹல்லு அங்கிருந்து சென்றார். பின்னர் … Read more

மாதிரிகளை உடனே அனுப்புங்க.. தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவு..!

2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளும் அலங்கார ஊர்திகளின் மாதிரி மற்றும் தகவல்களை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினவிழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக் குழுக்களும் மிகவும் புகழ்பெற்றவை. முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மேலும், பல்வேறு துறைகள் மற்றும் … Read more