ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 34 சதவீத அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி உயர்வினால் 50 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் … Read more

முடிவுக்கு வந்தது என்.ஆர். காங்கிரஸ் – பாஜக எம்எல்ஏகள் இடையேயான கருத்து வேறுபாடு!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என இரு கட்சி எம்.எல்.ஏக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் சட்டப் பேரவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் மக்கள் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும் முதல்வர் ரங்கசாமியை மாற்ற வேண்டுமென பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் … Read more

பிஎஃப்ஐ தடை, பின்னணி, எதிர்வினைகள்: ஒரு விரைவுப் பார்வை

2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 22 மாநிலங்களில் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு வந்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா – UAPA) என்ற சட்டத்தின் பிரிவு 3-ஐ பயன்படுத்தி பிஎஃப்ஐ தடை செய்யப்பட்டுள்ளது. ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் அல்லது முன்னணிகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை … Read more

மேற்கு வங்கத்தில் கவிழ்கிறது மம்தா பானர்ஜி அரசு? – பாஜக புது குண்டு!

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக, அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுள்ளார். முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல் போக்கு … Read more

கோழிக்கோடு மாலில் நடந்த நிகழ்ச்சியில் 2 நடிகைகளிடம் பாலியல் அத்துமீறல்: இவ்வளவு மோசமான நபர்களா? பேஸ்புக் பதிவில் நடிகை உருக்கம்

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் உள்ள ஒரு மாலில் நடந்த நிகழ்ச்சியில், மலையாள நடிகைகள் 2 பேரிடம் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாளத்தில் வெளியாக உள்ள ஒரு சினிமாவின் விளம்பர நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மாலில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில், சம்பந்தப்பட்ட சினிமாவில் நடித்த 2 இளம் நடிகைகள் உள்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சினிமா நட்சத்திரங்கள் வருவது குறித்து அறிந்ததும் மாலில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி முடிந்து நட்சத்திரங்கள் … Read more

’பாஜகவினர் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு இதுதான் உதாரணம்’ – ராகுல் காந்தி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகனுக்குச் சொந்தமான ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் வரவேற்பாளர் ஆக பணியாற்றி வந்த அங்கிதா என்ற பெண் விடுதிக்குப் பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்த ராகுல் காந்தி பாஜகவுக்கு கடும் கண்டத்தைப் பதிவு செய்துள்ளார். மலப்புரத்தில் உள்ள பாண்டிக்காட்டில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிய ராகுல்காந்தி, அங்கிதாவின் கொலை வழக்கைக் குறிப்பிட்டு பேசினார். … Read more

குடியரசு தின விழா: அலங்கார ஊர்தி மாதிரிகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவு!

2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக் குழுக்களும் மிகவும் புகழ் பெற்றவை. முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு … Read more

தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கு: முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்

தேசிய பங்குச் சந்தை வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அவரது முன்ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் 6ஆம் தேதி சிபிஐ அவரை கைது … Read more

மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதால் தெருநாய்களை கொல்ல அனுமதி தர வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு

திருவனந்தபுரம்: மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கேரளாவில் சமீபகாலமாக தெரு நாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்து உள்ளது. ரோட்டில் நடந்தும், வாகனங்களிலும் செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் உள்பட அனைவரும் நாய்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர். இந்த வருடம் 9 மாதத்தில் மட்டும் நாய்கள் கடித்து 21 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து வெறி பிடித்த … Read more

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் முதுகை உடைக்கிறது – ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனான சந்திப்பில் கிழக்கு ஆசியப் பிரச்சினைகள், உக்ரைன் போர், பரஸ்பர நலத் திட்டங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.  இந்த சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், ‘’ ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் நாடான எங்களின் தனிநபர் பொருளாதாரம் 2,000 டாலர்கள் தான். … Read more