சென்னை பறக்கும் ரயிலில் சாசகம் என்ற பெயரில் உயிருக்கு உலை வைக்கும் வேலையில் ஈடுபட்ட வீடியோ வைரல்..!!

சென்னையில் பள்ளி செல்லும் மாணவர்கள் சிலர் ரயில் மற்றும் பேருந்தில் தொங்கியபடி அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. சாசகம் என்ற பெயரில் உயிருக்கு உலை வைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபடுவது வைரல் வீடியோவாக வருகிறது. ரயிலின் மேற்கூரையில் ஏறி பயணம் செய்வது, ரயில் பெட்டிகளில் கால்களைத் தொங்க விட்டுக் கொண்டு பயணம் செய்வது, பேருந்தில் தரையில் கால்கள் உரச பயணம் செய்வது என மாணவர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பூங்கா ரயில் … Read more

திருமணம் ஆகாத பெண்களுக்கும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உள்ளது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில், 25 வயதான, திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஒருமித்த உறவின் விளைவாக தான் கர்ப்பம் அடைந்ததாகவும், 23 வாரங்கள் மற்றும் 5 நாட்களான கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்குமாறும் கோரினார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கு … Read more

பாப்புலர் பிரன்ட் டிவிட்டர் முடக்கம்

புதுடெல்லி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் 8 கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில்,, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ5.2 கோடி நஷ்டஈடு செலுத்த உத்தரவு: பாப்புலர் பிரன்ட் நிர்வாகிகள் கைதை கண்டித்து, கேரளாவில் இந்த அமைப்பினர் சில தினங்களுக்கு … Read more

பட்டினி, வேலையின்மை கொண்ட நாடு இந்தியா: ஒன்றிய அமைச்சர் கட்கரி சர்ச்சை

நாக்பூர்: நமது நாடு பட்டினி, வேலையின்மை, உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஏழை மக்கள் வாழும் பணக்கார நாடு என்று ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ராஷ்ட்ரிய சேவா சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கட்கரி பேசியதாவது: உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா. ஏழை மக்கள் தொகை … Read more

ஜம்மு காஷ்மீரில் 2 பேருந்துகளில் குண்டுவெடிப்பு: பாக்.கிற்கு எதிராக போராட்டம்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 பேருந்துகளில் அடுத்தடுத்து குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 2 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு தோமைல் சவுக்கில் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்து சில … Read more

சர்வதேச விண்வெளிகூட்டமைப்பில் பதவி: இஸ்ரோ விஞ்ஞானிக்கு கவுரவம்

பெங்களூரு: இஸ்ரோ விஞ்ஞானி அனில் குமார் தற்போது இஸ்ரோவின் டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் துணை தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு, கடந்த 1951ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 433 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இஸ்ரோவின் டிவிட்டர் பதிவில்,  ‘இஸ்ரோ விஞ்ஞானி அனில் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளது சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த … Read more

சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைக்க அனுமதி உண்டு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: திருமண ஆனவர், ஆகாதவர் என்று இல்லாமல் அனைத்து பெண்களுக்கும், சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய அனுமதி உண்டு என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. திருமணம் ஆகாத பெண்களும் கருகலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமா கோலி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று … Read more

வசமாக சிக்கிய விடுதி துப்பரவு பணியாளர்.. மொபைலில் சிக்கிய மாணவிகளின் பகீர் வீடியோக்கள்!

கான்பூரில் மாணவிகளை அவர்களுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்த தனியார் விடுதி துப்புரவாளரை மாணவிகளின் புகாரின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். கான்பூர் துல்சி நகரில் மருத்துவ தேர்வுகளுக்கு தயாராகும் மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி இயங்கிவருகிறது. இந்த விடுதியை காவல்துறை அதிகாரியான கூடுதல் எஸ்.பி ஒருவர் நடத்திவருகிறார். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாணவிகள் வந்து இங்கு தங்கி படித்துவருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை இன்று, அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளரான ஆண் ஒருவர், ஒரு மாணவியை ரகசியமாக படம் பிடித்துள்ளார். … Read more

கனவு நகர் திட்டத்தால் சூரத் பாதுகாப்பான வைர வர்த்தக மையமாக மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை

சூரத், செப்.30: சூரத்தை பாதுகாப்பான, வசதியான வைர வர்த்தக மையமாக மாறுவதற்கு, கனவு நகர் திட்டம்  உதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, குஜராத்திற்கு 2 நாள் பயணமாக நேற்று சென்றார். சூரத் விமான நிலையத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று பொதுமக்களை அவர் சந்தித்தார். பின்னர், சூரத் நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரூ29,000 கோடி மதிப்புள்ள பல்வேறு … Read more

பிரபல யூடியூபர் சாலை விபத்தில் உயிரிழப்பு – அதிர்ச்சியில் சப்ஸ்கிரைபர்ஸ்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா சாலை விபத்தில் உயிரிழந்தார்.   மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் இவர் ‘Skylord’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். இவருடைய சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 1.64 மில்லியன் பேர் ‘ஸ்கைலார்டு’ சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்த … Read more