மகாராஷ்டிர அரசு அலுவலகங்களில் ஹலோ சொல்லக்கூடாது `வந்தே மாதரம்’சொல்லணும்; அமைச்சர் சுதிர் முங்காந்திவர் பேட்டி

மும்பை: மகாராஷ்டிராவில் அரசு அலுவலகங்களுக்கு வரும் போன் அழைப்பை எடுக்கும் அதிகாரிகள் ஹலோ என்பதற்கு பதில் வந்தேமாதரம் என கூற வேண்டும் என மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்காந்திவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்காந்திவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த அவர் கூறியதாவது: இந்தியாவின் 76 வது சுதந்திர தினத்தில் நுழையும் நிலையில் சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் மாநில அரசு அலுவலகங்களுக்கு வரும் போன் … Read more

மோகன்லால், திரிஷா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது

திருவனந்தபுரம்: மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘திரிஷ்யம்’,‘திரிஷ்யம் 2’,‘டுவெல்த் மேன்’ஆகிய படங்கள் வெற்றிபெற்றன. இப்படங்களுக்கு முன்பு மோகன்லால், திரிஷா முதல்முறையாக ஜோடி சேரும் ‘ராம்’என்ற படத்தை ஜீத்து ஜோசப் இயக்கத் தொடங்கினார். படத்தின் முக்கிய காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்ததால், ெகாரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ‘ராம்’படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ‘மூன்று வருடங்களுக்குப் பிறகு‘ராம்’படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் தொடங்கியுள்ளது. பிறகு இங்கிலாந்து, மொராக்கோ, லண்டன், … Read more

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் தபால்தலை அவரது நினைவு தினத்தன்று வெளியிடப்படும்: மத்திய அமைச்சர் எல்.முருகன்

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் தபால்தலை அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெளியிடப்படவுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மக்களுக்கு தேசியக் கொடிகளை அமைச்சர் முருகன் விநியோகம் செய்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அரங்கையும் அவர் திறந்து … Read more

முதல் காலாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் ரூ.98,352 கோடி 20.35% அதிகரிப்பு

மும்பை: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எல்ஐசியின் பிரீமியம் வருவாய் 20.35 சதவீதம் அதிகரித்து ரூ.98,352 கோடியாக உள்ளது என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: எல்ஐசி நிறுவனம், கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த முதல் காலாண்டில் பிரீமியம் வருவாயாக மொத்தம் ரூ.98,352 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் … Read more

தேசிய கொடியை புறக்கணிக்கனுமாம்; மடாதிபதி பகீர் விளக்கம்; பா.ஜ.க ஷாக்!

புதுடெல்லி அடுத்துள்ள காஜியாபாத்திப் மகாகால் தாஸ்னா மடத்தின் தலைவராக இருப்பவர் யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி. சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி சிக்கலில் மாட்டுவது யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதியின் வழக்கம். இந்நிலையில் மடாதிபதி யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு மற்றொரு சர்ச்சையையும் கிளப்பி உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற அந்த வீடியோவில் மடாதிபதி யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி‘மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்களால் தேசியக்கொடி தயாரிக்கப்படுகிறது. எனவே, வீடுதோறும் … Read more

ஜனநாயக சக்தியை உலகம் தெரிந்துகொள்ள இந்தியா உதவியிருக்கிறது: குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை

புதுடெல்லி: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அதோடு நாட்டு மக்களிடையே உரையும் ஆற்றியுள்ளார். “நம் நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் 76-வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான நேரத்தில் உங்களிடத்தில் உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா ஒரு சுதந்திர நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதியை, ‘பிரிவினைக்கால … Read more

'உலககோப்பையில் அவரால் விக்கெட்டுகள் எடுக்க முடியாது!' – ஜடேஜா குறித்து முன்னாள் வீரர்!

உலககோப்பையில் ஆடினாலும் அவரால் விக்கெட்டுகள் எடுக்க முடியாது என்று இந்திய வீரர் ஜடேஜா குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஜடேஜா நடக்கவிருக்கும் டி20 உலககோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், ”கண்ணாடி என்றும் பொய் சொல்லாது என்று கூறியுள்ள அவர், 2021 … Read more

இந்தாண்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தில் 2.2 கோடி வழக்குகள் தீர்வு; நேற்று மட்டும் 81 லட்சம் வழக்குகள் சமரசம்

புதுடெல்லி: நாடு முழுவதும் இந்தாண்டு நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத் மூலம் 2.2 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நேற்று மட்டும் 81 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நாட்டின் 75வது சுதந்திர தின  விழாவிற்கான ஒத்திகை தலைநகர் டெல்லியில் நடைபெற்றதால், நேற்று அங்கு தவிர  நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது.  ஏற்கனவே இந்த ஆண்டு இரண்டு லோக் அதாலத்கள் நடத்தப்பட்ட நடத்தப்பட்ட நிலையில் நேற்று மூன்று லோக் அதாலத் நடத்தப்பட்டது. … Read more

பானையில் இருந்த குடிநீரை குடித்ததால் ஆசிரியர் தாக்கியதில் தலித் மாணவன் பலி; ராஜஸ்தான் பள்ளியில் வன்கொடுமை

ஜலோர்: ராஜஸ்தானில் பள்ளியில் இருந்த குடிநீர் பானையில் இருந்த தண்ணீரை குடித்த தலித் மாணவரை ஆசிரியர் அடித்து தாக்கியதில் அந்த மாணவர் பலியானார். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது தலித் பள்ளி மாணவன், கடந்த ஜூலை 20ம் தேதி தான் படிக்கும் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் பானையில் இருந்து தண்ணீரை குடித்தார். இதைப் பார்த்த பள்ளி ஆசிரியர் சைல் சிங், மாணவனை திட்டியது மட்டுமின்றி … Read more

”மனநலம் பாதிக்கப்பட்டவனா?”.. உணவின் தரத்தை குறைகூறிய உபி காவலருக்கு கட்டாய பணி விடுப்பு.!

12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள் ஆனால் தரமற்ற உணவை வழங்குகிறார்கள் என்று உணவின் தரம் குறித்து குறைகூறிய உத்திர பிரதேசத்தை சேர்ந்த காவலருக்கு கட்டாய பணி விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காவலராக பணிபுரிந்து வரும் மனோஜ் குமார் என்பவர் தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து விமர்சனம் செய்து அழுதபடி பேசிய வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது. காவலர் மனோஜ் குமார் அந்த வீடியோவில், “ஒரு நாய் கூட இந்த உணவை சாப்பிட … Read more