'அரிசி, கோதுமை விலைகள் கட்டுக்குள் உள்ளது' – மத்திய அரசு தகவல்

உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமான உணவு தானிய இருப்பு நாட்டில் உள்ளது என்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோதுமை மற்றும் அரிசியின் விலைகள் தொடர்புடைய ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்புக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்துள்ளது. 2021-22ம் ஆண்டில் விலைகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன, ஏனெனில் விலைகளைக் கட்டுப்படுத்த ஓ.எம்.எஸ்.எஸ். எனப்படும் வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் மூலம் சுமார் 80 லட்சம் … Read more

அன்புக்கு பதில் அன்பு மட்டுமே | உ.பி. சிறையில் இந்துக்களுடன் நவராத்திரி விரதம் மேற்கொண்ட இஸ்லாமியர்கள்

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் சிறையில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நவராத்திரி விரதத்தை கடைபிடிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்துகளின் திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத ஒற்றுமையை நிலை நாட்டும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகர் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் சிறையில் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த கைதிகளுடன் இணைந்து நவராத்திரி விரதத்தை கடைபிடித்துள்ளனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறும்போது, “முசாபர்நகர் சிறையில் சுமார் 3,000 கைதிகள் … Read more

சிறுமியின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்ட ‘ஹேர்பின்’; எய்ம்ஸ் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்

போபால்: சிறுமியின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்ட 4 சென்டிமீட்டர் ஹேர்பின்னை போபால் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த சிறுமி ஒருவர் தற்செயலாக பெண்கள் பயன்படுத்தும் ஹேர்பின்னை விழுங்கி விட்டார். அந்த ஹேர்பின், சிறுமியின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்டது. ஆனால் ஹேர்பின் சிக்கிக் கொண்ட விசயத்தை தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவிக்கவில்லை. அதேநேரம் சிறுமிக்கு மூச்சுவிடுதலில் சிரமம் இருந்ததால், மூன்று நாட்களுக்கு பின் தனது பெற்றோரிடம் நடந்த … Read more

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகையை மார்ச் 2023 வரை நீட்டிப்பு

டெல்லி: சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகையை மார்ச் 2023 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நான் சசிதரூர் கிட்ட பேசிட்டேன்… மல்லிகார்ஜுன கார்கே சொன்ன தகவல்!

வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப் போகும் நபரை தேர்வு செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிலவரப்படி, மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் என இருவர் மட்டும் போட்டியில் இருக்கின்றனர். இவர்களில் யார் வெற்றி பெறப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடந்து அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மூத்த … Read more

'வாவ்…' குப்பையில் கோடியை அள்ளும் இந்தூர் – தூய்மையான நகரம் விருதை வென்றது இப்படிதான்!

மத்திய அரசு ஆண்டுதோறும், சுத்தமான நகரம் குறித்து கணக்கெடுப்பை எடுத்து, அதன் முடிவுகளை வெளியிடும். இந்தாண்டுக்கான கணக்கெடுப்பின் முடிவை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், முதல் மூன்று இடங்களை முறையே இந்தூர் (மத்தியப் பிரதேசம்), சூரத் (குஜராத்), நவி மும்பை (மகாராஷ்டிரா) ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன. முதலிடம் பிடிக்கும் நகரத்திற்கு ஸ்வச் சர்வேக்ஷன் என்ற பெயரில் மத்திய அரசு விருதளிக்கும். இந்தூர் நகரம் இந்த விருதை தொடர்ந்து ஆறாவது முறையாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதில், முதல் … Read more

115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனை.!

செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில், 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. இந்திய ரயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில், 115.80 மெட்ரிக் டன்னாக சாதனை படைத்துள்ளது. இது 2021 செப்டம்பர் மாதத்தை விட 9.15% வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 25 மாதங்களாக, ரயில்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படும் சரக்குகளின் அளவு இதற்கு முன்பு … Read more

வேலையை ராஜினாமா செய்யும் ஐ.டி., ஊழியர்கள்: 2025இல் காத்திருக்கும் அதிர்ச்சி!

இந்தியாவில் ஐ.டி., மற்றும் வர்த்தக நிர்வாகத்துறையின் வீழ்ச்சி மிகப்பெரிய விகிதத்தை எட்டுவதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் இந்திய ஐ.டி., ஊழியர்கள் சுமார் 22 லட்சம் பேர் தங்களது வேலையை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக டீம்லீஸ் டிஜிட்டலின் ‘டேலண்ட் எக்ஸோடஸ் ரிப்போர்ட்’ எனும் அறிக்கை கூறுகிறது. அத்துடன், 57 சதவீத ஐ.டி., ஊழியர்கள் எதிர்காலத்தில் மீண்டும் அத்துறைக்கு திரும்புவதைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2022 நிதியாண்டை ஒப்பிடும்போது, 2023ஆம் நிதியாண்டில் ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை … Read more

குழந்தை தொழிலாளர் மீட்பு மையங்கள் மூடப்படும் அவலம்: திட்டத்தை நிறுத்தியது ஒன்றிய அரசு

பழமையில் ஊறிக் கிடந்த சமுதாயத்தில் பாய்ச்சல் வேகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது படிப்பறிவு மட்டுமே. காலத்துக்கு ஒவ்வாத நடைமுறைகளை விட்டு விட்டு சமுதாய மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அளித்ததும் படிப்பறிவு தான்.   இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்த பிறகு சிறந்த கல்வி அனைவருக்கும் வசப்படவில்லை என்றுதான்  சொல்ல வேண்டும். நேஷனல் சர்வே ஆப் இந்தியாவின் சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்த ஆண்டு இந்தியாவில் படிப்பறிவு 77.7 சதவீதமாக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் பெருகி … Read more

"Your Platform"… முதல் ரயில் ஸ்மார்ட் இதழ்- சர்ப்ரைஸ் கொடுத்த தெற்கு ரயில்வே!

தெற்கு ரயில்வே மற்றும் E-Toll Ads Media and Earth & Air ஆகியவை இணைந்து முதல் ரயில் ஸ்மார்ட் இதழை செப்டம்பர் 30ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதற்கு “Your Platform” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை மீடியா துறையில் சிறப்பான அனுபவம் கொண்ட வி.பிரவீன் குமார், ஷங்கர் எம்.சிவ், கார்த்திக் பி.எஸ் ஆகியோர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். நடப்பு நிகழ்வுகள், சர்ச்சையான விஷயங்கள், அரசியல் போன்றவை அல்லாமல் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் வகையில் தகவல்களை … Read more