அல்லு அர்ஜூன் ஸ்டுடியோவில் சிரஞ்சீவி

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், ‘புஷ்பா’ வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறி விட்டார். அவருடைய தந்தை அல்லு அரவிந்த், தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜூன், 2004ல் காலமான தன்னுடைய தாத்தா நடிகர் அல்லு ராமலிங்கய்யாவை நினைவுபடுத்தும் வகையில், அவரது 100வது பிறந்தநாளான நேற்று முன்தினம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார். ஐதராபாத் பகுதியில் ‘அல்லு ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இதை திறந்து வைத்த சிரஞ்சீவி, ‘அல்லு ராமலிங்கய்யா இவர்கள் … Read more

இப்போது திருமணம் இல்லை: ராஷ்மிகா

ஐதராபாத்: வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்து சுகுமார் இயக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இந்தியில் அமிதாப் பச்சனுடன் அவர் நடித் துள்ள ‘குட் பை’ படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ‘மிஷன் மஜ்னு’, ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’ ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்தநிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தனது முன்னாள் … Read more

விஜய் சேதுபதி நடித்த மவுன படம்: அடுத்த ஆண்டு வெளியாகிறது

மும்பை: ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் படம், ‘காந்தி டாக்ஸ்’. இது வசனம் இல்லாத மவுன படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் காமெடி ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இதில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், அரவிந்த்சாமி, சித்தார்த் ஜாதவ் நடித் துள்ளனர். விஜய் சேது பதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஆகிய மூவரும் இதற்கு முன்பு  மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தனர். தற்போது அவர் கள் ‘காந்தி டாக்ஸ்’ படத்தில் மீண்டும் … Read more

7 மொழிகளில் உருவாகும் படத்துக்காக மஞ்சு வாரியருக்கு பயிற்சி அளித்த பிரபுதேவா

திருவனந்தபுரம்: வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான மலையாள உலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர், தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘துணிவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரபுதேவாவுடன் இணைந்துள்ள படம், ‘ஆயிஷா’. இதில் பிரபுதேவா நடனப் பயிற்சியில் உருவான ‘கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. பி.கே.ஹரி நாராயணன், சுகைல் கோயா எழுதிய இப்பாடலை, ஜெயச்சந்திரன் இசையில் இந்திய … Read more

இலகு ரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இன்று சேர்ப்பு

புதுடெல்லி: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர் இன்று விமானப்படையில் சேர்க்கப்படுகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால், நாட்டின் விமானப்படை, ராணுவத்துக்கு வலுசேர்க்க அனைத்து காலநிலையிலும், இரவு நேரத்திலும் தாக்கும் திறன் கொண்ட 15 இலகு ரக ஹெலிகாப்டர்கள் ரூ.3,887 கோடி மதிப்பில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விமானப்படைக்கு 10, ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட உள்ளன. சியாச்சின், லடாக் உள்ளிட்ட உயரமான மலை பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகளை தகர்க்க, காடுகள் … Read more

154-வது பிறந்த தினம் கொண்டாட்டம்; காந்தி நினைவிடத்தில் மரியாதை

புதுடெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்ட பல தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி தனது டிவிட்டரில், `நாடு சுதந்திர அமிர்த பெருவிழாவினை கொண்டாடி வரும் நிலையில், … Read more

ஒன்றிய அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு; தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தரும் தகவலை புறக்கணிக்காதீர்

புதுடெல்லி: ‘தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளிக்கும் தகவல்களை புறக்கணிக்க வேண்டாம்’ என்று அனைத்து ஒன்றிய அமைச்சகங்களுக்கும் பிரதமர் மோடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனைகளின் போது பல்வேறு ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் … Read more

குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? -காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு ஷாக் கொடுத்த கருத்துக்கணிப்பு!

குஜராத் ,ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது குறித்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில், ‘குஜராத் மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதாவது தற்போது ஆளுங்கட்சியான பாஜகவுக்கு … Read more

பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும் சமுதாயத்தை உருவாக்குவோம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு பேச்சு

டெல்லி: பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும் சமுதாயத்தை உருவாக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இந்து மத பண்டிகையான துர்கா பூஜையையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், துர்கா பூஜையின் நல்ல நேரத்தில், இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். துர்கா பூஜை பண்டிகை மூலம் நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் பலப்படுத்தப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். நாட்டை … Read more

ஐசியூவில் முலாயம் சிங் யாதவ்… உ.பி முன்னாள் முதல்வர் கவலைக்கிடம்!

நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. இம்மாநிலத்தை மூன்று முறை ஆட்சி செய்தவர் முலாயம் சிங் யாதவ். ஆனால் ஒருமுறை கூட 5 ஆண்டுகளை நிறைவு செய்தது இல்லை. இவர் சமாஜ்வாதி கட்சி தலைவராகவும் விளங்குகிறார். உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். … Read more