10 நாட்களே ஆன தன் பெண் குழந்தையை கொல்ல முயன்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்!

உத்தரபிரதேசத்தில் பிறந்து 10 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை பிடிக்காததால் கொல்ல முயன்ற தந்தையை ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் மகன். கோசைங்கன்ஜ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் ரமேஷ் சந்திர ராவத்(50) என்ற விவசாயி அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வீட்டிற்கு பக்கத்திலேயே வசிக்கும் அவருடைய மகன்களான அவதேஷ்(29) மற்றும் ரஜ்னேஷ்(25) இருவரும் தனது தந்தையை யாரோ கொலைசெய்துவிட்டதாகவும், முன்பகை காரணமாக உள்ளூர்வாசிகளில் யாரோ … Read more

வித்தை காட்டியவருக்கு நாக பாம்பு ‘மவுத் கிஸ்’: வைரலாகும் வீடியோ

ஷிவமொக்கா: திருமண வீட்டில் இருந்த நாகபாம்பை  பிடித்து முத்தமிட முயன்றவருக்கு, பாம்பு ‘மவுத் கிஸ்’ கொடுத்தது. கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா  மாவட்டம், பத்ராவதியை சேர்ந்தவர்கள் அலெக்ஸ், ரோனி. இவர்கள், பொதுமக்களை  அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து, காடுகளில் விட்டு வருகின்றனர். இந்நிலையில், பொம்மனக்கட்டில் உள்ள ஒரு திருமண  வீட்டில் 2 நாக பாம்புகள் இருந்தன. இதை பார்த்த மக்கள், அலெக்ஸ், ரோனிக்கு தகவல்  கொடுத்தனர். 2 பேரும் அங்கு சென்று பாம்புகளை மீட்டனர். அதில், ஒரு பாம்புக்கு காயம் … Read more

இரு குழந்தைகளை மட்டும்தான் பெற்றுக்கொள்ள வேுண்டுமென உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தை கொள்கைகளை அமல்படுத்த தங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் இது கொள்கை முடிவு சார்ந்த விஷயம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சிய சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா என்பவர் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த விவகாரத்தை நீதிமன்றம் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்?” என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மனுதாரர், … Read more

கொரோனாவை போல் மிரட்டும் புதிய வைரஸ் கோஸ்டா -2

புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு  ‘கோஸ்டா-2’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய … Read more

'எடுத்த முடிவை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது' – ரோஜர் பெடரர் ஆறுதல் பதிவு!

தனது டென்னிஸ் வாழ்க்கையின் நினைவுகளில் மூழ்கிய ரோஜர் ஃபெடரர், இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் அதனை வெளிப்படுத்தியிருந்தார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதையடுத்து லண்டனில் நடந்த  தனது கடைசி போட்டியில் தோல்வியுடன் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் ரோஜர் ஃபெடரர்.  கடைசி போட்டி என்பதால் கண்ணீருடன் விடைபெற்றார் அவர். இதுகுறித்து பேசிய ரோஜர் ஃபெடரர், ”எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  … Read more

சித்தூரில் போலி ஆவணம் தயாரித்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் ரூ73 கோடி மதிப்பு நிலம் மோசடி: இளம்பெண் உள்பட 7 பேர் கைது

சித்தூர்: சித்தூரில் போலி ஆவணம் தயாரித்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் நிலங்களை ரூ73.70 கோடிக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் நகர டிஎஸ்பி சுதாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் சித்தூர் மாநகரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், கட்டமஞ்சு பகுதியில் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை மீனாட்சி மற்றும் பார்வதி ஆகிய இருவரின் பெயருக்கு கருணாகர், யமுனா, ராஜசேகர், ஜெயச்சந்திரா, சுரேந்திரபாபு … Read more

இந்தியாவில் முதன்முறையாக பிடிக்கப்பட்ட ‘ப்ளாக் கொக்கைன்’ – சிக்கியது எப்படி?

இந்தியாவில் முதன்முறையாக போதைப்பொருள் தடுப்பு பிரிவால் ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்துவந்த வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து மும்பை விமான நிலையத்தில் 3.20 கிலோ ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.13 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ப்ளாக் கொக்கைன் என்பது வழக்கமான கொக்கைனுடன் சில வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருப்பது. இப்படி ரசாயனம் ஏற்றப்பட்ட கொக்கைனை விமான நிலைய பரிசோதனையில் டிடெக்ரடாலோ அல்லது மோப்ப நாய்களாலோ கண்டறியமுடியாது. இதுபோன்ற போதைபொருள் இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்டது இதுதான் முதன்முறை … Read more

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

பிடிக்க வந்த போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டிய கஞ்சா விநியோகம் செய்யும் இளைஞர்கள்!!

ஆந்திராவில் கஞ்சா விநியோகம் செய்யும் இளைஞர்களை பிடிக்கச் சென்றபோது, புதுச்சேரி காவல்துறையினரை அரிவாளை காட்டி மிரட்டிய காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் கடந்த 24 ஆம் தேதி மேட்டகருவில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டிருந்த அதேப் பகுதியை சேர்ந்த பெட்டி ரெட்டி கோவிந்து மற்றும் சல்லாடி சதீஷ் ஆகியோரை ஏனாம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தை … Read more

ராஜபக்சே சகோதரர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர்… சர்வதேச அரசியலில் பரபரப்பு!

இலங்கையில் வெடித்த போராட்டத்தையடுத்து மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதலியை ராஜினாமா செய்துவிட்டு உள்நாட்டிலேயே குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதானது. இவரை போன்றே கோத்தபய ராஜபக்சேவும் அதிபர் பதவியை துறந்து, தப்பித்தோம்… பிழைத்தோம் என வெளிநாட்டுக்கு தப்பி ஓட வேண்டியதானது. சிங்கப்பூர், தாய்லாந்து என தஞ்சம் அடைந்திருந்த அவர், கடந்த மாதம் தான் மீண்டும் இலங்கை திரும்பினார். இந்த நிலையில், ராஜபக்சே குடும்பத்தினரின் நண்பரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ராஜபக்சே சகோதரர்களை நேரில் … Read more