சித்தூரில் போலி ஆவணம் தயாரித்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் ரூ73 கோடி மதிப்பு நிலம் மோசடி: இளம்பெண் உள்பட 7 பேர் கைது

சித்தூர்: சித்தூரில் போலி ஆவணம் தயாரித்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் நிலங்களை ரூ73.70 கோடிக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் நகர டிஎஸ்பி சுதாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் சித்தூர் மாநகரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், கட்டமஞ்சு பகுதியில் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை மீனாட்சி மற்றும் பார்வதி ஆகிய இருவரின் பெயருக்கு கருணாகர், யமுனா, ராஜசேகர், ஜெயச்சந்திரா, சுரேந்திரபாபு … Read more

இந்தியாவில் முதன்முறையாக பிடிக்கப்பட்ட ‘ப்ளாக் கொக்கைன்’ – சிக்கியது எப்படி?

இந்தியாவில் முதன்முறையாக போதைப்பொருள் தடுப்பு பிரிவால் ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்துவந்த வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து மும்பை விமான நிலையத்தில் 3.20 கிலோ ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.13 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ப்ளாக் கொக்கைன் என்பது வழக்கமான கொக்கைனுடன் சில வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருப்பது. இப்படி ரசாயனம் ஏற்றப்பட்ட கொக்கைனை விமான நிலைய பரிசோதனையில் டிடெக்ரடாலோ அல்லது மோப்ப நாய்களாலோ கண்டறியமுடியாது. இதுபோன்ற போதைபொருள் இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்டது இதுதான் முதன்முறை … Read more

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

பிடிக்க வந்த போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டிய கஞ்சா விநியோகம் செய்யும் இளைஞர்கள்!!

ஆந்திராவில் கஞ்சா விநியோகம் செய்யும் இளைஞர்களை பிடிக்கச் சென்றபோது, புதுச்சேரி காவல்துறையினரை அரிவாளை காட்டி மிரட்டிய காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் கடந்த 24 ஆம் தேதி மேட்டகருவில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டிருந்த அதேப் பகுதியை சேர்ந்த பெட்டி ரெட்டி கோவிந்து மற்றும் சல்லாடி சதீஷ் ஆகியோரை ஏனாம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தை … Read more

ராஜபக்சே சகோதரர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர்… சர்வதேச அரசியலில் பரபரப்பு!

இலங்கையில் வெடித்த போராட்டத்தையடுத்து மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதலியை ராஜினாமா செய்துவிட்டு உள்நாட்டிலேயே குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதானது. இவரை போன்றே கோத்தபய ராஜபக்சேவும் அதிபர் பதவியை துறந்து, தப்பித்தோம்… பிழைத்தோம் என வெளிநாட்டுக்கு தப்பி ஓட வேண்டியதானது. சிங்கப்பூர், தாய்லாந்து என தஞ்சம் அடைந்திருந்த அவர், கடந்த மாதம் தான் மீண்டும் இலங்கை திரும்பினார். இந்த நிலையில், ராஜபக்சே குடும்பத்தினரின் நண்பரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ராஜபக்சே சகோதரர்களை நேரில் … Read more

மாணவர்கள் கோஷ்டிக்குள் மோதல்; பல்கலை மாணவர் மீது துப்பாக்கிச்சூடு: டெல்லி மருத்துவமனை வளாகத்தில் பதற்றம்

புதுடெல்லி: ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ெடல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலகத்தில் இரு மாணவர்கள் குழுகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் அடுத்த சர்தஹான் கிராமத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் நோமன் சவுத்ரி (26) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹோலி … Read more

பிரதமர் மோடி துவக்கி வைத்த "வந்தே பாரத்" ரயிலில் இவ்வளவு சிறப்பம்சங்களா!? இதோ பட்டியல்!

காந்திநகர் – மும்பை இடையே “வந்தே பாரத்” ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்திநகர் – மும்பை வழித்தடத்தில் நவீன வசதிகளுடன் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தொடங்கி வைத்தார். காந்திநகர் ரயில் நிலையத்தில் கொடியசைத்து, இந்த சேவையை தொடங்கிவைத்த மோடி, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார்.  இணையதள சேவைகளுக்கான வை-பை (WI-FI) உள்ளிட்ட பல … Read more

இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு – குஜராத்தில் பிரதமர் அதிரடி அறிவிப்பு

குஜராத்தின் அம்பாஜி நகரில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  இன்று மாலை அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,”இந்த பண்டிகை காலத்தில் எனது சகோதரிகளுக்கு உதவ, அரசாங்கம் அதன் இலவச ரேசன் திட்டத்தை நீட்டிக்கிறது” என அறிவித்தார். நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இக்கட்டான காலங்களில் நிவாரணம் வழங்க மத்திய அரசு சுமார் 4 லட்சம் கோடி … Read more

சோகத்தில் ஈபிஎஸ்.. உற்சாகத்தில் ஓபிஎஸ்!: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டம் ஒருங்கிணைப்பாளர் இன்றி நடைபெற்றதால் அதனை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இந்த … Read more

உ.பி: மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த புல்டோசர்.. கலாட்டா செயத பாஜக நிர்வாகியின் மனைவி!!

பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி அனு தியாகி தனது குடியிருப்பில் உள்ள ஒரு பொது இடத்தை மீண்டும் ஆக்கிரமித்து அங்கு மரக்கன்றுகளை வைத்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள ‘கிராண்ட ஓமேக்ஸ் சொசைட்டி’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் பாஜக விவசாயப் பிரிவுத் தலைவர் ஸ்ரீகாந்த் தியாகி. 34 வயதான இவர் கடந்த மாதம் தனது குடியிருப்பில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கு மரக்கன்றுகளை … Read more