சோகத்தில் ஈபிஎஸ்.. உற்சாகத்தில் ஓபிஎஸ்!: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டம் ஒருங்கிணைப்பாளர் இன்றி நடைபெற்றதால் அதனை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இந்த … Read more

உ.பி: மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த புல்டோசர்.. கலாட்டா செயத பாஜக நிர்வாகியின் மனைவி!!

பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி அனு தியாகி தனது குடியிருப்பில் உள்ள ஒரு பொது இடத்தை மீண்டும் ஆக்கிரமித்து அங்கு மரக்கன்றுகளை வைத்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள ‘கிராண்ட ஓமேக்ஸ் சொசைட்டி’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் பாஜக விவசாயப் பிரிவுத் தலைவர் ஸ்ரீகாந்த் தியாகி. 34 வயதான இவர் கடந்த மாதம் தனது குடியிருப்பில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கு மரக்கன்றுகளை … Read more

அதிர்ச்சி! குழந்தைகளுக்கு வெறும் உப்பு கலந்து பள்ளியில் சத்துணவு!!

மதிய உணவுத் திட்டத்தில் வெறும் சாதத்தில், உப்பு கலந்து மாணவர்கள் சாப்பிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள அரசு பள்ளியில்தான் மதிய உணவுத் திட்டத்தில்தான் மாணவர்களுக்கு வெறும் சாதத்துடன் உப்பு கலந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து அப்பள்ளி முதல்வரை மாவட்ட ஆட்சியர் பணி இடை நீக்கம் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவை பதிவிட்டு முதல்வர் யோகி பாபா இதை பாருங்கள் என பெற்றோர்கள் பதிவிட்டு வருகின்றனர். 2019ஆம் … Read more

கூட்டு பாலியல் வன்புணர்வு : சிறுமியை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கொடூரம் – காவலரும் உடந்தை

உத்தரப் பிரதேசத்தின் மவு நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடிவந்துள்ளார். அவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பீகாரில் உள்ள ஜெய்நகருக்கு வந்துள்ளார். ஜெய்நகரில் உள்ள சந்தைக்கு வந்த சிறுமி, அங்கிருந்த ஒருவரிடம் வழி கேட்டுள்ளார். அப்போது, அர்ஜூன் யாதவ் என்ற அந்த நபர், சிறுமியை கடத்தி சென்று தனது இடத்தில் மறைத்து வைத்துள்ளார்.  மேலும், தனது மூன்று நண்பர்களை அழைத்து, அவர்களுடன் அந்த சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். … Read more

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூரை ஆதரிக்காமல் அதிர்ச்சி கொடுத்த அதிருப்தி தலைவர்கள்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூரை அதிருப்தி தலைவர்கள் ஆதரிக்காமல் அதிர்ச்சி தந்துள்ளனர். காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து கட்சி செயல்பாட்டில் மாற்றம் வேண்டும் என 23 தலைவர்கள் குரல் எழுப்பினர். ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, புபிந்தர்சிங் உட்பட 23 தலைவர்கள் கையெழுத்திட்டு 2020-ல் சோனியாவுக்கு கடிதம் எழுதினார்.

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட ’பிரதமர் மோடி’ சென்ற கார்- இணையத்தில் வைரல்.!

குஜராத் மாநிலம் காந்தி நகரில் இருந்து அகமதாபாத்துக்கு சென்ற போது பிரதமர் மோடி சென்ற கார் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அகமதாபாத்தில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதன் பின்னர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து மகிழ்ந்தார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக … Read more

பட்டு வேட்டி சட்டை அணிந்து விருதைப் பெற்றுக் கொண்ட சூர்யா!!

டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டன. சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய … Read more

ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்ட பிரதமர் மோடி – வைரல் வீடியோ!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமாக குஜராத்துக்கு சென்றுள்ளார். 2ஆவது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்ட்ரல் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். முன்னதாக இன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க காந்தி நகரில் இருந்து அகமதாபத்துக்கு பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி நகர் – அகமதாபாத் சாலையில் ஆம்புலன்ஸ் வருவதை கண்டார். உடனடியாக தனது பாதுகாப்பு … Read more

ஆம்புலன்ஸ் செல்வதற்காக பாதுகாப்பு வாகனத்தை வழிவிட சொன்ன பிரதமர் மோடி

அகமதாபாத்: மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்டார். காந்திநகர், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று சென்றுள்ளார். ஆமதாபாத்தில் நேற்று 36-வது தேசிய விளையாட்டு போட்டியை அவர்  துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2-வது நாளான இன்று காந்திநகர் … Read more

ஜார்கண்ட்: மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டிய ஆசிரியை! கிராமத்தினர் கொடுத்த கொடூர தண்டனை!

ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நவாமுண்டி (Noamundi) தொகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இப்பள்ளியில் பயின்று வரும் ஆறு மாணவிகள் தங்கள் ஆசிரியை மீது வைத்துள்ள புகார்கள் அம்மாநிலத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. தங்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை வகுப்பறையில் தங்களுக்கு அநாகரீகமான ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும், தகாத முறையில் தங்களை தொட்டதாகவும் அம்மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் அளித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புதன் கிழமையன்று … Read more