நடிகர் மகேஷ்பாபு வீட்டில் திருட முயற்சி சுவர் ஏறி குதித்த வாலிபர் கால் முறிவு

திருமலை: ஐதராபாத்தில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபரின் கால் முறிந்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதி பிலிம் நகரில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வீடு உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர் ஒருவர் மகேஷ்பாபுவின் வீட்டு சுவர் ஏறி குதித்து திருட முயன்றார். ஆனால், வீட்டின் மதில் சுவர் 10 அடி உயரத்திற்கு மேல் இருந்ததால் சுவர் ஏறி குதித்தபோது கால் முறிந்தது. இதனால் அந்த … Read more

போலி ஆவணங்களில் சிம்கார்டு.. ரூ.50,000 அபராதம்.. தொலைத்தொடர்பு துறை அதிரடி..!

சிம் கார்டு மற்றும் ஓடிடி சேவைகளுக்கு போலி ஆவணங்களை வழங்கினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என இந்திய தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் மூலமாக மோசடியில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, சட்டவிரோதமான காரியங்களும் தொலைத்தொடர்பு சேவையை அடிப்படையாக கொண்டே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற பல்வேறு மோசடி நிகழ்வுகளிலிருந்து தொலைத்தொடர்பு பயனாளர்களை பாதுகாக்க தொலைத்தொடர்பு வரைவு மசோதாவில் … Read more

தடை செய்யப்பட்ட 63 ஆபாச இணையதளங்கள் – என்னென்ன தெரியுமா?

கடந்தாண்டு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை (IT Rules 2021) வெளியிட்டிருந்தது. அந்த விதியை மீறி, பெண்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் ஆபாச புகைப்படங்கள்/காணொலிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி புனே நீதிமன்றம் 63 ஆபாச இணையதளங்களை சுட்டிக்காட்டியது. அதேபோன்று, உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் 4 இணையதளங்களை தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.  இந்த நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி, பரிந்துரைக்கப்பட்ட 67 இணையதளங்களில், 63 இணையதளங்களை தடை செய்யுமாறு, இணைய நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை … Read more

பஞ்சாப் மாநிலத்தில் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்துக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தை நாளை மறுநாள் தொடங்கிவைக்க இருந்தது. அங்கு உணவு பொருட்கள் உட்பட மளிகை பொருட்கள் 17 ஆயிரம் நியாய விலை … Read more

புதுச்சேரி: மின் ஊழியர் பிரச்னை – ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனை

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆளுநர தமிழிசையை சந்தித்து முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டதன் காரணமாக இன்று மூன்றாவது நாளாக ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் … Read more

பாஜக ஆளும் மாநிலத்தில் தொடங்கும் இந்திய ஒற்றுமை பயணம்: கர்நாடகாவில் ராகுல் காந்திக்கு வரவேற்பு

பெங்களூரு: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் (பாரத் ஜோடோ யாத்திரை) 23-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. முதன்முதலாக பாஜக ஆளும் மாநிலத்தில் ராகுல் இன்று தனது பயணத்தைத் தொடங்குகிறார். கர்நாடகா வந்த ராகுல் காந்தியை அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில எல்லைக்குச் சென்று வரவேற்றார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி செப்.7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தைத் தொடங்கினார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: என்னது 3 பேர் போட்டியா? ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்…!

நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சி என்ற சிறப்பு பெற்ற காங்கிரஸ் கட்சி, அதன் தலைமை பீடத்தை அலங்கரிக்க ஆட்களின்றி தவித்து கொண்டிருக்கிறது. காலங்காலமாக நேரு குடும்பத்தினர் கட்சி தலைவர் பதவியை வகித்து வந்த நிலையில் ராகுல் காந்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனவே நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பதவிக்கு வர வேண்டியுள்ளது. இதற்காக வரும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த … Read more

தீவிரமாகுமா குரங்கம்மை? டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு நோய்த்தொற்று உறுதி

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, தலைநகரில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகள் LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, 30 வயதான நைஜீரிய பெண் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.   ஆதாரங்களின்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகளைத் தவிர, வேறு … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை: இபிஎஸ் தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் எடப்பாடி தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை தசரா விடுமுறைக்கு பின் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் எத்தனை நாள் தமிழக மீனவர்கள் இலங்கையினரால் துயரம் அனுபவிப்பார்கள்-நீதிபதிகள் கேள்வி

இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிட கோரியும், உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி விசாரணைக்கு … Read more