Watch: ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட பிரதமர் கான்வாய் – குவியும் பாராட்டு

இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்திற்கு வந்துள்ளார். இரண்டாம் நாளான இன்று, காந்திநகர் – மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். அதிக வேகமான ரயிலான இது, மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும்.  மேலும், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டப்பணிகளையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அகமதாபாத் நகரின் தூர்தர்ஷன் மையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தொடர்ந்து, கூட்டத்திற்கு பின் … Read more

68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் தொடக்கம்

டெல்லி: 68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியது. 2020-ல் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்.

என்னை Bhaiya, Uncle என்று அழைக்க வேண்டாம்: டாக்ஸி ஓட்டுனர் ஒட்டிய நோட்டீஸால் பரபரப்பு

என்னை Bhaiya, Uncle என்று அழைக்க வேண்டாம் என கார் சீட்டின் பின்புறத்தில் Uber டாக்ஸி ஓட்டுனர் ஒட்டிய நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டது. பயணி ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலளித்த Uber India, பயணிகள் தங்களுக்குத் தெரியாத நபர்களை எப்படி அழைக்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்தால் App-ல் உள்ள ஓட்டுனரின் பெயரை உபயோகித்துக் கொள்ளுங்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

கேரளா: பூனைக்கடிக்கு தடுப்பூசி செலுத்தச் சென்ற பெண்ணை தெருநாய் கடித்த கொடூரம்!

பூனைக்கடிக்கு தடுப்பூசி செலுத்த சென்ற இளம்பெண்ணை மருத்துவமனைக்குள் தெருநாய் கடித்த கொடூர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள விழிஞ்சம் நகரைச் சேர்ந்தவர் அபர்னா(31). இவரை பூனை கடித்ததால் மூன்றாவது டோஸ் ஆண்டி – ரேபிஸ் தடுப்பூசி செலுத்த தனது தந்தையுடன் அப்பகுதியிலுள்ள சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். காலை எட்டு மணியளவில் சென்ற அவர், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நாற்காலியின்கீழ் படுத்திருந்த தெருநாள் ஒன்று அவரை கடித்து காயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து … Read more

கொதித்த பால் உடலில் கொட்டி குழந்தை பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே காஞ்சிரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் தாமஸ். அவரது மனைவி தியா மேத்யூ. இவர்களது மகள் செரா மரியா பிரின்ஸ்(2). சம்பவத்தன்று தியா மேத்யூ வீட்டில் டீ தயாரிப்பதற்காக பாலை அடுப்பில் சுட வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பால் சூடான பிறகு பாத்திரத்தை அவர் கையில் எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செரா மரியா மீது கொதிக்கும் பால் விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தையை எருமேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். … Read more

பிரபல நடிகை தூக்குப் போட்டு தற்கொலை: கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது..!

நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் ஹோட்டல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் அகன்ஷா மோகன் (30). மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆன ‘சியா’ என்ற படத்தில் ஷிபெய்ல் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன், விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், மும்பை அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் வெகு நேரமாகியும் தனது அறையில் … Read more

மல்லிகார்ஜூன கார்கே Vs சசி தரூர்: காங்கிரஸ் தலைமை பதவி யாருக்கு?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே – சசி தரூர் ஆகியோர் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தைச் சேராதவர் ஒருவர் கட்சித் தலைவராக உள்ளார். இந்த முடிவில் … Read more

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சிஜின் என்பவர் தொடர்ந்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிருந்த பொஸ் மற்றும் விக்ரம்நாத் அமர்வில் விசாரணைக்காக வந்த போது ஆஜரான சிஜின் 90-ருக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் … Read more

'ரூ. 25 கோடி' கத்தை கத்தையாக கள்ளநோட்டு – குஜராத் தேர்தலுக்கா அல்லது சினிமாவுக்கா?

குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் பிரச்சாரப் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டன. மேலும், போலீசாரும் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தில் கள்ள நோட்டு புழக்கம் தற்போது அதிகமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த வகையில், ரூ. 25 கோடி கள்ள நோட்டுகளை குஜராத் போலீசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.  சூரத் நகரில் அகமதாபாத் – … Read more

நடிகர் மகேஷ்பாபு வீட்டில் திருட முயற்சி சுவர் ஏறி குதித்த வாலிபர் கால் முறிவு

திருமலை: ஐதராபாத்தில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபரின் கால் முறிந்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதி பிலிம் நகரில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வீடு உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர் ஒருவர் மகேஷ்பாபுவின் வீட்டு சுவர் ஏறி குதித்து திருட முயன்றார். ஆனால், வீட்டின் மதில் சுவர் 10 அடி உயரத்திற்கு மேல் இருந்ததால் சுவர் ஏறி குதித்தபோது கால் முறிந்தது. இதனால் அந்த … Read more