மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

டெல்லி: மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே அங்கு பஜனை பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். சோனியா காந்தியை தொடர்ந்து மாநிலங்களை எதிர்கட்சித் தலைவர் … Read more

பிரசாந்த் கிஷோரின் அடுத்த மாஸ்டர் பிளான்… கிழக்கில் இருந்து புறப்படும் அரசியல் சூறாவளி!

இந்தியாவில் பிரசாந்த் கிஷோர் என்ற பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுத்து கொடுத்து அவற்றை சரியான முறையில் செயல்படுத்திக் காட்டியவர். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நாட்டின் முக்கிய மாநிலங்களில் எல்லாம் கால்தடம் பதித்து விட்டார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைவதற்கு 2021 சட்டமன்ற தேர்தலின் போது பெரிதும் உறுதுணையாக இருந்தார். பிகார் மாநிலத்தை சேர்ந்த இவர், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் முக்கிய … Read more

அண்ணல் காந்தியின் 154வது பிறந்தநாள் அனுசரிப்பு! ராட்டை தினத்தன்று இந்தியாவின் அஞ்சலி

புதுடெல்லி: அண்ணல் காந்தியடிகள் என்று அழைக்கப்படும் மாண்புமிகு மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும்  அனுசரிக்கப்படுகிறது. எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காந்தி, தனது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியதில்லை. ஆனால், அவரது இந்த எளிய பண்பே அவரை மகானாக உயர்த்தியது. அகிம்சையே அனைத்தும் என்று உலகிற்கு உரத்துச் சொன்ன தேசத்தந்தையின் இலட்சியத்தை போற்றும் வகையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன் 15, 2007இல் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளை, “அனைத்துலக வன்முறையற்ற … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 6-வது நாள் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 6-வது நாள் பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷத்திற்கு மத்தியில் இன்று அனுமந்த வாகனத்தில் திருக்கோலத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு நாளும் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கோவிலின் நான்கு மாடவீதிகளில் வழியாக பெரும்பாலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து … Read more

ரூ.90 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்க முயன்ற மூவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் மற்றும் ஜாம்நகரில் அச்சடிக்கப்பட்ட 90 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இதில் சுமார் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபகாலங்களில் குஜராத்தில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் சூரத்தில் உள்ள காம்ரேஜ் காவல்துறையினர் விசாரணையில் போலி நோட்டுகளை நேரடியாக சந்தையில் புழக்கத்தில் விடாமல், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது இதன் மூளையாக செயல்பட்ட … Read more

தூய்மையான நகரங்கள் பட்டியலில் 6-வது முறையாக முதலிடம் பிடித்தது இந்தூர்

புதுடெல்லி: தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற பெயரில் விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் தொடர்பான தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு … Read more

உபி.யில் பரிதாபம் டிராக்டர் கவிழ்ந்து 25 பேர் பலி

கான்பூர்: உ.பி.யில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் டிராக்டரில் சென்ற 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  விபத்தில் 25 பேர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உ.பி. மாநிலம் கான்பூரை சேர்ந்த கிராமவாசிகள் பலர் டிராக்டர் ஒன்றில் உனோவ் மாவட்டத்தில் உள்ள கோயில் விழாவில் பங்கேற்றுவிட்டு கான்பூர் திரும்பி கொண்டிருந்தனர். கதாம்பூர் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது அதில் பயணித்த 25 … Read more

உலக அளவில் அசிங்கப்பட்ட இந்தியா… வட மாநில மக்களே காரணம்!!

வட இந்தியர்கள் லண்டனிலும் எச்சில் துப்பி சமூகவலைதளத்தில் அசிங்கப்படுத்துவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வட இந்தியாவில், பான் மற்றும் புகையிலை பொருட்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தும் நபர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி வருகின்றனர். இவர்களின் இந்த செயல் பல இடங்களின் அழகையே கெடுத்து வருகிறது. குறிப்பாக ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் எச்சில் துப்பு சேதப்படுத்தி வருகின்றனர். அபராதம் விதித்தாலும் இவர்கள் இந்த அசிங்கத்தை நிறுத்த மறுக்கின்றனர். பான்பராக் … Read more

பாஜக கூட்டத்துக்கு வர தாமதமானதால் மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அபு சாலையில் நேற்று முன்தினம் இரவு பாஜக பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி கூட்ட மேடைக்கு வருவதற்கு இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது. அப்போது மேடையேறிய பிரதமர் மோடி, மைக்கை தவிர்த்து விட்டு மக்களிடம் நேரடியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பொதுக்கூட்ட மேடைகளில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை உள்ளது. நான் இங்கு வருவதற்கு காலதாமதமாகி விட்டது. ஒலிபெருக்கி பயன்படுத்த … Read more

அக்டோபரில் திருப்பதி செல்ல பிளானா? இந்த தேதியில் தரிசிக்க முடியாது

திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது. அதன்படி தொற்று பரவல் குறைந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது, அதன் பேரில் பக்தர்களும் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் வரும் … Read more