ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் சந்திப்பு: ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்க கோரிக்கை..!!

டெல்லி: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்ததாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை வைத்தேன். மதுரையில் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து நிர்மலா சீதாராமனிடம் … Read more

மீண்டும் சர்ச்சையில் அசோக் கெலாட்: ரகசியக் குறிப்பின் புகைப்படம் வெளியானதால் சிக்கல்

புதுடெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் “ரகசியக் குறிப்பு” என்று வெளியான புகைப்படம் ஒன்றில் உள்ள “எஸ்பி” என்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலையாள மனோரமா தலைமைப் புகைப்படக் கலைஞர் ஜே.சுரேஷ் எடுத்த அந்தப்படம் கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கச் செல்லும் போது எடுத்துச் சென்ற குறிப்புகள் என்று கூறப்படுகிறது. அந்த குறிப்புகளில், நடந்தவை அனைத்தும் வருத்தம் தரக்கூடியது. நானும் மிதவும் காயம் பட்டுள்ளேன். மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளைப் பார்த்து கட்சி … Read more

டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் அதிவேக 5ஜி இணைய சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லி: அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை டெல்லியில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலையில் நடந்தது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய  நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது. தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் … Read more

'ஒற்றுமை யாத்திரையின் குரலை யாரும் மவுனிக்க முடியாது' – ராகுல் காந்தி பேச்சு

கர்நாடகா: ஒற்றுமை யாத்திரையின் குரலை யாரும் மவுனிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமைக்கான பாத யாத்திரையை நேற்று தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் நேற்று நுழைந்தார். அவரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை … Read more

குருகிராமில் உள்ள குளோபல் ஃபோயர் வணிக வளாகத்தில் தீ விபத்து..!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள செக்டர் 43-ல் உள்ள குளோபல் ஃபோயர் வணிக வளாகத்தில் தீப்பற்றியது. கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ அணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ தடுப்பு பணியில் ஈடுபட்டனர். Source link

சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

டெல்லி: அந்நிய செலாவணி சட்டமீறல் எதிரொலியாக இந்தியாவில் செயல்படும் சீன செல்போன் நிறுவனத்திடம் இருந்து ரூ.5,551 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த செல்போன் நிறுவனமான சியோமி, ரெட்மி என்ற பெயரில் இந்தியாவில் செல்போன்களை தயாரித்து வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள கிளை நிறுவனமான சியோமி இந்தியா ஒன்றிய அரசின் அனுமதியை பெறாமல் ரூ.5,551 கோடிக்கு இணையான அந்நிய செலாவணியை இந்தியாவுக்கு வெளியே அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதற்காக சியோமி … Read more

ராஜஸ்தான் கூட்டத்தில் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி – பின்னணி என்ன?

ராஜஸ்தானில் நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மைக் இல்லாமல் பேசிய வீடியோ தற்போது ட்ரெண்டாகி உள்ளது. ராஜஸ்தானில் சிரோஹியின் அபு ரோடு பகுதியில் நேற்று பாஜகவின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மோடி கூட்டத்தில் கலந்துகொள்ளும் போது இரவு 10 மணியாகிவிட்டது. இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை … Read more

கர்நாடகாவில் ராகுல் காந்தி பாத யாத்திரை

பெங்களூரு: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமைக்கான பாத யாத்திரையை நேற்று தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் நேற்று நுழைந்தார். அவரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர். ராகுல் காந்தியை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸாரும் பொதுமக்களும் நடந்து சென்றனர். … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 3,805 பேருக்கு கொரோனா… 26 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 3,805 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,24,164 ஆக குறைந்தது. * புதிதாக 26 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

"ஜெயிலுக்கு போறேன்.. நானும் ரவுடி தான்.. " – ஒரு நாள் தங்க வாடகை ரூ. 500!

ஒருவருடைய ஜாதகத்தில் கட்டம் சரியில்லாதவர்கள், கண்டிப்பாக சிறைக்குச் சென்றே தீர வேண்டும் என்ற விதி உள்ளவர்கள் , அதற்கான பரிகாரமாக சிறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என உத்தராகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. வித்தியாசமான சுற்றுலா அனுபவங்களை பெற மக்கள் விரும்புகிறார்கள். அதன்படி, சிறை சுற்றுலா தான் இப்போதைய ட்ரெண்ட். ரூ.500 செலுத்தினால், சிறைக் கைதியை போல ஒருநாள் உள்ளே இருக்கலாம் என சில மாநிலங்களில் சிறைதுறை  அறிவித்தவுடன் தினமும் பல விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. உத்தராகாண்ட் போலவே கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிறை … Read more