ஓட்டல் ஊழல் வழக்கு தேஜஸ்வி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐஆர்சிடிசி  ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) 2 ஓட்டல்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை 2 தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தார். இதற்கு கைமாறாக, பாட்னாவில் 3 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் லாலு, … Read more

ஒரே எண்ணில் பல போன்கள் விற்கப்படுவதை தடுக்க ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்வது இனி கட்டாயம்: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: இனிமேல் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களின் ஐஎம்இஐ எண்ணை ஐசிடிஆர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மொபைல் போனுக்கு தனித்தனியாக 15 இலக்க சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (ஐஎம்இஐ) இருக்கும். மொபைல் திருடு போனால் இந்த எண்ணை வைத்து கண்டுபிடிக்க முடியும். மேலும், பல வழக்குகளில் தலைமறைவான குற்றவாளிகள் பயன்படுத்தும் மொபைலின் இந்த ஐஎம்இஐ எண்ணை வைத்து தான் அவர்களின் இருப்பிடத்தை … Read more

நவராத்திரியை முன்னிட்டு வெங்காயம், பூண்டு இன்றி ரயில்களில் விரத உணவு: ஐஆர்சிடிசி அறிவிப்பு

புதுடெல்லி: நவராத்திரி பண்டிகை கடந்த 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பலரும் வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதம் இருப்பது வழக்கம். அவ்வாறு விரதம் இருப்பவர்கள், விரத காலத்தில் ரயிலில் பயணிக்கும் போதும், அவர்களுக்காக சிறப்பு விரத உணவை வழங்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஏற்பாடு செய்துள்ளது. வரும் 5ம் தேதி வரை இந்த உணவுகளை ‘Food on Track’ என்ற … Read more

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமனம்

டெல்லி: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார். கே.கே.வேணுகோபாலுக்குப் பிறகு வெங்கடரமணி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தொடர்வார் என்று மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அலுவலகமும் உறுதி செய்துள்ளது. 15-வது தலைமை வழக்கறிஞராக வேணுகோபால் (91) நியமிக்கப்பட்டார். அவர் 3 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்த பிறகு அவ்வப்போது பதவி நீட்டிப்பு … Read more

ஒன்றிய அரசு பணிக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ்.களை உடனே அனுப்புங்கள்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை

புதுடெல்லி: ஒன்றிய அரசில் பணி செய்வதற்கு  மாநிலங்கள் கூடுதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பணியாளர், பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பேசிய ஒன்றிய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘‘ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவை அதிகாரிகளை … Read more

ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்த ராணுவ அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

பாணாவரம்: ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பாணாவரத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார்(44). இவர், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் அருகில் உள்ள கோபால்பூரில், இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வந்தார். அவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் பாணாவரம் திடீர் நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் … Read more

ஒன்றிய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக வெங்கட்ரமணி நியமனம்: தமிழகத்தை சேர்ந்தவர்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக, தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்)  கே.கே.வேணுகோபால் நீண்ட காலமாக இருந்து வருகிறார். 91 வயதான இவருக்கு கடந்தாணடு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவருடைய இந்த பதவிக்காலம் நாளையுடன் முடிகிறது. அவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்க ஒன்றிய அரசு விரும்பிய போதிலும், வயது மூப்பு காரணமாக வேணுகோபால் அதை ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து, ஒன்றிய … Read more

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் – உச்சநீதிமன்றம்!

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு ஓய்வூதியம் (Pension) வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆத்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய … Read more

உ.பி | 63 டீஸ்பூன்களை விழுங்கிய நபர்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்

முசாபர்நகர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 63 டீஸ்பூன்களை 32 வயது மதிப்பு தக்க நபர் ஒருவர் விழுங்கி உள்ளார். அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்று பகுதியில் இருந்து அகற்றியுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். அந்த நபரின் பெயர் விஜய் என தெரிகிறது. அவரது சொந்த ஊர் மன்சூர்பூர் பகுதியில் உள்ள பொபாடா கிராமத்தை சேர்ந்தவர் என தெரிகிறது. அவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவராம். அதன் காரணமாக மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை: அடுத்து என்ன நடக்கும்?

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை அமல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்திய நிலையில், இந்த தடையானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக … Read more