கர்நாடகா: சாமி சிலைகளை தொட்ட பட்டியலின சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம்!

கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் சாமி சிலையை தொட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்த மாற்று சமூகத்தினர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உள்ள உல்லேரஅள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் ரமேஷ் – ஷோபா தம்பதியர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு சேத்தன் (15) என்ற மகன் உள்ளான். இந்நிலையில், இந்த கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஊர் திருவிழாவின் போது பூதம்மா தேவர் சிலை ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் … Read more

பி.எம் கேர்ஸ் நிதி | பிரதமர் மோடி தலைமையிலான குழுவில் இணைந்த ரத்தன் டாடா, சுதா மூர்த்தி

புதுடெல்லி: பி.எம் கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக தொழிலதிபரும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரிய முன்டா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020-ல் நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவத் தொடங்கியபோது, அவசர நிவாரண உதவிகளை அளிப்பதற்காக பி.எம். கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டது. பி.எம். கேர்ஸ்-க்கு நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு வருமான வரிவிலக்கு உண்டு. … Read more

நீரா ராடியா டேப் விவகாரம்: சிபிஐ அடித்த அந்தர் பல்டி!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முதல் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், அரசியல் தரகர் நீரா ராடியாவின் டேப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2008, 2009ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டும் அவரின் தொலைப்பேசி அழைப்புகளை கண்காணித்து பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, நீரா ராடியாவுடன் முக்கிய பிரமுகர்கள் பேசிய தொலைபேசி, … Read more

கவுதம் அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1.612 கோடி!!!

அகமதாபாத்: கடந்த 2021-ல் கவுதம் அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1.612 கோடியாகும். கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பைவிட கவுதம் அதானி கடந்த ஓராண்டில் 11% அதிக சொத்து சேர்த்துள்ளார்.

சிக்கிய 22 டன் ஹெராயின்..! – டெல்லி காவல் துறை அதிர்ச்சி தகவல்..!

22 டன் ஹெராயின் பிடிபட்டுள்ளது டெல்லி சிறப்பு காவல் பிரிவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நூதன முறைகளை பின்பற்றி இந்த ஹெராயின் கடத்தலை நடத்தியிருக்கிறது கடத்தல் கும்பல். மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள நவ சேனா துறைமுகத்தில், சுமார் 22 டன் ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட கன்டெய்னர் பிடிபட்டிருக்கிறது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ1,725 கோடி என டெல்லி போலீஸின் ஸ்பெஷல் செல் தகவல் தெரிவித்திருக்கிறது. டெல்லி காவல்துறைக்கு கிடைத்த உளவுத்துறையின் … Read more

​​சாலை டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் லாரி மோதி பலி: டெல்லியில் அதிகாலை சோகம்

புதுடெல்லி: டெல்லியில் சாலைடிவைடரில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது லாரி மோதியதில் பலியாகினர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியின் சீமாபுரியில் உள்ள டிடிசி டிப்போ அருகில் உள்ள சிக்னல் பாயிண்டில் ​​சாலை டிவைடரில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே … Read more

உணவளித்த இளைஞரின் பாசத்திற்கு கட்டுப்பட்ட யானை! கோவை அருகே நெகிழ்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இளைஞர் ஒருவர் காட்டு யானைக்கு உணவு கொடுத்து அதனை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக- கேரள எல்லையில் உள்ள சுங்கம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக காட்டு யானை ஒன்று காலில் காயத்துடன் தவித்து வந்துள்ளது. இதனை கண்ட பிரவீன் என்ற இளைஞர், ஆற்றில் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் யானைக்கு உணவு அளித்து வந்துள்ளார். இதனால் பிரவீன் மீது யானைக்கு பாசமும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரும் நெருங்குவதை விரும்பாத … Read more

'Pay CM.. 40% கமிஷன் பெறப்படும்' – கர்நாடக முதல்வரை விமர்சித்து காங்கிரஸ் போஸ்டர்!

கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை விமர்சித்து, காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், அரசு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பாஜக அமைச்சர்கள், 40 சதவீத கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார். இது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆட்சியில் 40 சதவீத … Read more

மும்பையில் ரூ.1,752 கோடி மதிப்பிலான 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல்!

மும்பையின் நவ சேவா துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹெராயின் கடத்தலைக் கண்டுபிடிக்காமல் இருக்க, அதிமதுரக் குச்சிகளில் ஹெராயின் பூசப்பட்டு கண்டெய்னரில் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறைக்குக் கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் மும்பை நவசேவா துறைமுகத்தில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு காவலர்கள் இன்று சோதனை நடத்தினர்.  போலீஸார் நடத்திய சோதனையின் போது, மும்பை துறைமுகத்தில் இருந்த ஒரு கண்டெய்னர் லாரியில், சந்தை மதிப்பில் … Read more

ஆந்திர மாநிலத்தில் தரமற்ற மதுபானங்கள் விற்று முதல்வர் ஜெகன்மோகன் பல ஆயிரம் கோடி ஊழல்-சித்தூரில் சந்திரபாபு பேட்டி

சித்தூர் : ஆந்திர மாநிலத்தில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்து முதல்வர் ஜெகன்மோகன் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் கிளை சிறையில் உள்ள முன்னாள் எம்எல்சி சீனிவாஸ் உள்பட 8 பேரை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நேற்று நேரில் சந்தித்தார். பின்னர், வெளியே வந்து நிருபர்களிடம் கூறியதாவது: குப்பம் சட்டமன்ற தொகுதியில் கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது  ஆளும் … Read more