டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்..!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் இரட்டை சாதனைகளைப் படைத்தார். குறைந்த பந்துகளில் அதிவேக அரை சதம் எடுத்தது,  மற்றொன்று டி 20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்களின் வரிசையில் மூன்றாவதாக இணைந்தது என்ற சாதனைகளை படைத்தார். அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்தவர்களில் முதலாம் இடத்தில் விராட் கோலியும், இரண்டாம் இடத்தில் கே.எல்.ராகுலும் உள்ளனர் Source link

8 ஆண்டுகளுக்குப் பிறகு மங்கள்யான் செயலிழந்தது? இஸ்ரோ தகவல்

புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த மங்கள்யான் விண்கலம் செயல் இழந்திருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ரூ.450 கோடியில் இந்தியாவில் மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 1ம் … Read more

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயம்; 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

லக்னோ; உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயமடைந்தனர். இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது பந்தலுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இருந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. … Read more

தேதி குறிச்சாச்சு… BJP-ஐ வீழ்த்த வரும் BRS… கே.சி.ஆரின் புதிய அரசியல் அவதாரம்!

தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற வியூகம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. மூன்றாவது அணி, நான்காவது அணி, தனிக்கட்சி என அதிரி புதிரி சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே (2024) இருக்கும் நிலையில் வரும் 5ஆம் தேதி பாரத் ராஷ்டிரிய சமிதி (BRS) என்ற புதிய தேசிய கட்சியை தொடங்கவுள்ளார் … Read more

உத்தர பிரதேசம் மாநிலம் பதோஹி துர்கா பூஜை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து

டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலம் பதோஹி துர்கா பூஜை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 52 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் காங். எம்எல்ஏக்கள் புதிய முதல்வர் பெயரை கேட்டு கொந்தளித்தனர்: பைலட் மீது கெலாட் தாக்கு

ஜெய்ப்பூர்: ‘புதிய முதல்வர் பெயரை கேட்டு, கட்சி எம்எல்ஏக்கள் கொந்தளித்தனர். அத்தகைய அதிருப்தி எழுந்தது ஏன் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்’ என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட்டை மறைமுகமாக தாக்கி பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவராக்க கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா முயற்சி மேற்கொண்டார்.  அதனால் ராஜஸ்தானின் புதிய முதல்வராக  சச்சின் பைலட் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் … Read more

பீகாரில் 3,500 கிமீ நடைபயணம் பிரசாந்த் கிஷோர் யாத்திரை தொடக்கம்

பாட்னா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 3,500 கிமீ. பாத யாத்திரையை  பீகாரில் நேற்று துவக்கினார். பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர்,பாஜ உள்ளிட்ட பல கட்சிகளுக்கு பிரசார வியூகங்களை அமைத்துகொடுத்து  தேர்தல் வெற்றியில்  முக்கிய பங்காற்றியுள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் துணை தலைவராக பொறுப்பு வகித்தார். நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பின்னர் அக்கட்சியில் இருந்து பிரசாந்த் நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் … Read more

ஐதராபாத்தில் 3 தீவிரவாதிகள் கைது: பாக். உளவு அமைப்புடன் தொடர்பு

திருமலை: ஐதராபாத்தில் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு சதியை போலீசார் முறியடித்து, சதியில் முக்கிய பங்காற்றிய பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 4 கையெறி குண்டுகள், ரூ.5.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத், மலக்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் ஜாஹத். இவருக்கு கடந்த காலங்களில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக பல வழக்குகளில் தொடர்பு இருந்தது. இந்நிலையில்  பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தீவிரவாத அமைப்புகளுடன்  மீண்டும் தனது தொடர்புகளை புதுப்பித்து குண்டுவெடிப்பு மற்றும் … Read more

அல்லு அர்ஜூன் ஸ்டுடியோவில் சிரஞ்சீவி

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், ‘புஷ்பா’ வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறி விட்டார். அவருடைய தந்தை அல்லு அரவிந்த், தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜூன், 2004ல் காலமான தன்னுடைய தாத்தா நடிகர் அல்லு ராமலிங்கய்யாவை நினைவுபடுத்தும் வகையில், அவரது 100வது பிறந்தநாளான நேற்று முன்தினம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார். ஐதராபாத் பகுதியில் ‘அல்லு ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இதை திறந்து வைத்த சிரஞ்சீவி, ‘அல்லு ராமலிங்கய்யா இவர்கள் … Read more

இப்போது திருமணம் இல்லை: ராஷ்மிகா

ஐதராபாத்: வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்து சுகுமார் இயக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இந்தியில் அமிதாப் பச்சனுடன் அவர் நடித் துள்ள ‘குட் பை’ படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ‘மிஷன் மஜ்னு’, ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’ ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்தநிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தனது முன்னாள் … Read more