"Your Platform"… முதல் ரயில் ஸ்மார்ட் இதழ்- சர்ப்ரைஸ் கொடுத்த தெற்கு ரயில்வே!

தெற்கு ரயில்வே மற்றும் E-Toll Ads Media and Earth & Air ஆகியவை இணைந்து முதல் ரயில் ஸ்மார்ட் இதழை செப்டம்பர் 30ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதற்கு “Your Platform” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை மீடியா துறையில் சிறப்பான அனுபவம் கொண்ட வி.பிரவீன் குமார், ஷங்கர் எம்.சிவ், கார்த்திக் பி.எஸ் ஆகியோர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். நடப்பு நிகழ்வுகள், சர்ச்சையான விஷயங்கள், அரசியல் போன்றவை அல்லாமல் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் வகையில் தகவல்களை … Read more

பிரதமர் மோடி பெயர் சூட்டிய பெண் சிவிங்கிப்புலி கர்ப்பம்? 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதல் குட்டி

போபால்: பிரதமர் மோடி பெயர் சூட்டிய பெண் சிவிங்கிப் புலி ஆஷா கர்ப்பமாக இருப்பதற்கான அடையாளங்கள் தென்படுவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு முன் சிவிங்கிப் புலி விலங்குகள் இனம் அழிந்து போயின. அவற்றை மீண்டும் கொண்டுவரும் நடவடிக்கையாக ஆப்ரிக்காவிலிருந்து 5 பெண் மற்றும் 3 பெண் சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டு வரப்பட்டன. அவற்றை மத்தியப்பிரதேச மாநிலம் சியோபூரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் கடந்த மாதம் 17ம் தேதி பிரதமர் … Read more

இவிஎம் வழக்கில் மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம்

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் குறைகள் இருப்பதாகவும் அதை களைய உத்தரவிட கோரியும் ம.பி.யை சேர்ந்தஜன் விகாஸ் கட்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், அபே எஸ்ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘விளம்பரம் தேடிக் கொள்வதற்காக இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே,மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுபோன்ற மனுக்கள் தடுக்கப்பட வேண்டும். மேலும் மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் … Read more

சசிதரூருக்கு வந்த சோதனை… சொந்த ஊருலயே செல்வாக்கு போச்சு!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? காந்தி குடும்பத்தை அல்லாமல் அலங்கரிக்கப் போகும் அந்த நபர் யார்? என்ற கேள்விக்கு கிட்டதட்ட விடை தெரிந்துவிட்டதாகவே அக்கட்சி தொண்டர்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு போட்டிக்கான களம் சுருங்கி விட்டது. காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரி தெரிவித்துள்ள தகவலின்படி, மல்லிகார்ஜுன கார்கே 14 படிவங்களும், சசி தரூர் 5 படிவங்களும், கே.என்.திரிபாதி ஒரேவொரு படிவமும் தாக்கல் செய்துள்ளனர். இந்த படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு … Read more

பொதுக்கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் மன்னிப்பு கேட்டார் மோடி: ராஜஸ்தானில் நெகிழ்ச்சி

ஜெய்ப்பூர்: கூட்டத்துக்கு தாமதம் ஆனதால் மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி. பிரதமர்  மோடி நேற்று முன்தினம் இரவு, ராஜஸ்தான், அபு ரோடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் வரும் வழியில் பல நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பொதுகூட்ட நிகழ்ச்சிக்கு வர தாமதமானது.  ஒலிபெருக்கி இல்லாமலேயே  அவர் பேசினார். மோடி பேசும்போது, ‘‘இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியில் பேசுவது சரியாக இருக்காது என்று என் மனசாட்சி கூறுகிறது, எனவே உங்கள் முன்பு நான் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | கார்கே – சசிதரூர் இடையே நேரடி போட்டி: கையெழுத்து பிரச்சினையால் திரிபாதி மனு நிராகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் கார்கே – சசி தரூருக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட் டுள்ளது. கே.என். திரிபாதி மனு கையெழுத்து பிரச்சினையால் நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன. அதன்பின் அகில இந்திய காங்கிரஸ்கமிட்டியின் மத்திய தேர்தல்ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சித் … Read more

சந்தர்ப்பவாத அரசியல்வாதி… காந்தியை அம்பேக்தர் இவ்வளவு கடுமையாக சாட என்ன காரணம்?

இரண்டாம் வட்ட மேசை மாநாடு: தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அம்பேத்கருக்கு இருந்த செல்வாக்கையும், ஆதரவையும் அறிந்த பிரிட்டிஷ் அரசு, 1932 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்ற அம்பேத்கருக்கும் அழைப்பு விடுத்தது. இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பை முடிவு செய்ய முற்பட்டபோது மக்கள் பிரதிநிதிகளுக்காக நடத்தப்படும் தேர்தலில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் குறித்து முடிவெடுப்பதற்காக நடத்தப்பட்ட அந்த முக்கியமான மாநாட்டில், ஆதிக்க சாதிப்பிரிவினர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர்கள் என அனைத்து வகை மக்களுக்கும் … Read more

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

டெல்லி: மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே அங்கு பஜனை பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். சோனியா காந்தியை தொடர்ந்து மாநிலங்களை எதிர்கட்சித் தலைவர் … Read more

பிரசாந்த் கிஷோரின் அடுத்த மாஸ்டர் பிளான்… கிழக்கில் இருந்து புறப்படும் அரசியல் சூறாவளி!

இந்தியாவில் பிரசாந்த் கிஷோர் என்ற பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுத்து கொடுத்து அவற்றை சரியான முறையில் செயல்படுத்திக் காட்டியவர். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நாட்டின் முக்கிய மாநிலங்களில் எல்லாம் கால்தடம் பதித்து விட்டார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைவதற்கு 2021 சட்டமன்ற தேர்தலின் போது பெரிதும் உறுதுணையாக இருந்தார். பிகார் மாநிலத்தை சேர்ந்த இவர், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் முக்கிய … Read more

அண்ணல் காந்தியின் 154வது பிறந்தநாள் அனுசரிப்பு! ராட்டை தினத்தன்று இந்தியாவின் அஞ்சலி

புதுடெல்லி: அண்ணல் காந்தியடிகள் என்று அழைக்கப்படும் மாண்புமிகு மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும்  அனுசரிக்கப்படுகிறது. எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காந்தி, தனது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியதில்லை. ஆனால், அவரது இந்த எளிய பண்பே அவரை மகானாக உயர்த்தியது. அகிம்சையே அனைத்தும் என்று உலகிற்கு உரத்துச் சொன்ன தேசத்தந்தையின் இலட்சியத்தை போற்றும் வகையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன் 15, 2007இல் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளை, “அனைத்துலக வன்முறையற்ற … Read more