உத்தரகாண்ட்டை உலுக்கும் இளம்பெண் ‘அங்கிதா பண்டாரி’ கொலை விவகாரம்.. வெடிக்கும் போராட்டம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சொகுசு விடுதி ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிந்த அங்கிதா பண்டாரியை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும் உடற்கூறு அறிக்கை வெளியிடப்பட்டு சரியான விசாரணை நடைபெறும்வரை, அங்கிதா பண்டாரியின் உடல் அடக்கம் செய்யப்படாது எனவும், அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஸ்ரீநகர் நகரத்தில் போராட்டம் நடத்தி வலியுறுத்தினர். அங்கிதா பண்டாரியின் படுகொலையை மூடி மறைக்க முயற்சி நடைபெறுவதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் … Read more

பெரும் சோகம்.. மருத்துவமனையில் தீ.. தந்தை, மகன், மகள் பலி..!

ஆந்திராவில், புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தந்தை, மகன், மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் கார்த்திகேயா மருத்துவமனை என்ற மருத்துவமனையை கட்டியுள்ளார். மூன்று மாடி கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் மருத்துவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த மருத்துமனையில் இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை … Read more

திடீர் உடல்நலக் குறைவு.. முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..!

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாவுக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குறைந்தபட்ச செயற்கை சுவாசம் மூலம் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணா, … Read more

கோடிகள் வந்தது நிம்மதி போச்சு… தலைமறைவு வாழ்க்கை வாழும் ஆட்டோ டிரைவர் அனூப்!

தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் இன்னும் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு அரசாங்கமே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு, கடந்த 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பம்பர் குலுக்கல் நடைபெற்றது. இதில், திருவனந்தபுரம் ஸ்ரீவரஹம் பகுதியை சோ்ந்த அனூப் என்பவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஆட்டோ ஓட்டுநரான இவா், கடன் பிரச்சனை காரணமாக மலேசியாவுக்கு சமையல் வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், லாட்டரில் … Read more

பசங்களுக்கும் பாதுகாப்பில்லை… 12 வயது சிறுவனை கூட்டு பாலியல் வன்புணர்வு

தலைநகர் டெல்லியில் பாலியல் வன்புணர்வு சம்பவம், குறிப்பாக கூட்டு பாலியல் வன்புணர்வு அதிகமாகி உள்ளது. போதை மருந்து பயன்பாடு, மன சிக்கல்கள், பாலியல் வறட்சி ஆகியவை காரணமாகவே பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், டெல்லியில் தற்போது 12 சிறுவன், நான்கு ஆண்களால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் தலைநகரையே உலுக்கியுள்ளது.  வன்புணர்வு செய்த அந்த நால்வர், சிறுவனை குச்சியை வைத்து பலமாக அடித்து அப்படியே சம்பவ … Read more

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் இல்லை; ஜாலிக்காக வதந்தியை பரப்பிய அமெரிக்க வாழ் சீனப் பெண்: சர்வதேச ஊடங்களின் உண்மை சரிபார்ப்பில் அம்பலம்

புதுடெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொழுதை ஜாலியாக கழிக்க அமெரிக்காவில் வசிக்கும் சீனப் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டது அம்பலமாகி உள்ளது. இது சர்வதேச ஊடகங்களின் உண்மை சரிபார்ப்பில் கண்டறியப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின்  தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்றில் இருந்து உலகம் முழுவதும்  செய்திகள் பரவி வருகின்றன. மேலும் அவர் வீட்டுக் காவலில்  வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் சீனாவின் ஒட்டுமொத்த ஆட்சியும் … Read more

காங். தலைவர் தேர்தல்: 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் சசிதரூர் – வாய்ப்பு எப்படி?

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் வருகிற 30-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சி, புதிய தலைமுறையை தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருக்கக்கூடிய நிலையில் இந்தத் தேர்தலில் ராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராக அறியப்படும் அசோக் கெலாட் … Read more

ரிசார்ட்டில் இளம் பெண் கொலை..! பாஜக தலைவர் வாரிசை எதிர்த்து போராட்டம் ..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் விபச்சாரத்திற்கு உடன்படாத பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் அம்மாநில பாஜக தலைவர் மகன் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கில் பாஜக மாநில தலைவர் மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌரி மாவட்டத்திற்கு உட்பட மாவட்டத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அங்கீதா பண்டாரி (19 வயது) இளம் பெண் வரவேற்பாளராக … Read more

3 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை கர்நாடகா விரைகிறார்

பெங்களூர்: ஜனாதிபதி திரௌபதி முர்மு கர்நாடகாவில் 3 நாள் பயணம் மேற்கொள்கிறார். நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க உள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரௌபதி முர்மு. ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்ட பின் முதல் முறையாக கர்நாடகா செல்கிறார். கர்நாடக வரும் அவர் முதலில் மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் தசரா விழாவை அவர் தொடங்கி வைக்கிறார். அதே நாளில், ஹூப்ளியில் ஹூப்ளி -தர்வாட் முனிசிபல் … Read more

தினமும் 1.30 மணிநேரம் செல்ஃபோனுக்கு பிரியா விடை கொடுக்கும் இந்திய கிராமம்: எங்கு தெரியுமா?

மனிதர்களின் ஆறாவது விரலாகவே செல்ஃபோன் போன்ற எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள் செயல்பட்டு வருகின்றன. மின்னணு சாதனங்கள் இல்லாத மனிதர்களை காண்பதே இந்த நவீன உலகில் அத்தகைய விந்தையாகவே இருக்கிறது. ஆனால் உலகின் முதல் செல்ஃபோனை உருவாக்கிய மார்ட்டின் கூப்பரே தன்னுடைய ஒரு நாளில் வெறும் 5 சதவிகிதத்தை மட்டுமே செல்ஃபோன் பயன்படுத்துவதற்கு செலவழிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் சராசரி மனிதர் நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 மணிநேரம் செல்ஃபோன் பயன்படுத்துவதற்கு நேரம் செலவழிப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இப்படி … Read more