கேரள சட்டப்பேரவை புதிய சபாநாயகர் தேர்வு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை சபாநாயகராக இருந்த ராஜேஷ் உள்ளாட்சித் துறை அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதனால் சபாநாயகர் பதவி காலியானது. தொடர்ந்து புதிய சபாநாயகராக தலச்சேரி தொகுதி எம்எல்ஏவான ஷம்சீரை நியமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கமிட்டி தீர்மானித்தது. இந்த நிலையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. இடது முன்னணி சார்பில் ஷம்சீரும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் அன்வர் சாதத்தும் போட்டியிட்டனர். இதில் ஷம்சீருக்கு 96 ஓட்டுகளும், அன்வர் … Read more

ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி: அரை கம்பத்தில் தேசிய கொடி

புதுடெல்லி: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி இந்தியாவில் நேற்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகை, செங்கோட்டை உட்பட நாடு முழுவதும் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 8-ம் தேதி இங்கி லாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். அவரது மறைவை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் துக்கம் அனு சரிக்கப்படுகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாள் துக்கம் அனு சரிக்கப்பட்டது. இதையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகை, … Read more

சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை..! – தெலுங்கானா சட்டமன்றத்தில் கலாய்த்த கே.சி.ஆர்..!

சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சியை கவிழ்ப்பாரா என தெலுங்கானா சட்டமன்றத்தில் சந்திர சேகர ராவ் அண்ணாமலையை கலாய்த்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேசிய அண்ணாமலை “ மகாராஷ்ட்ராவில் எக் நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆட்சியை கலைத்ததைப் போல தமிழகத்திலும் திமுக ஆட்சியை ஒரு ஏக நாத் ஷிண்டே புறப்பட்டு வந்து கலைப்பார்” என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது. இதனிடையில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவருமான … Read more

ஆவின் முறைகேடு: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை… உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆவின் முறைகேடு வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். அதிமுகவில் … Read more

ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க செப்.14-ல் மோடி உஸ்பெகிஸ்தான் பயணம்: ரஷ்ய, சீன அதிபர்கள் உட்பட 15 தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: வரும் 15, 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார். இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட15 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் இணைந்து கடந்த 1996-ம் ஆண்டு ‘ஷாங்காய் பைவ்’ என்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பின்னர், இந்த 5 நாடுகள் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் தலைவர்கள் கடந்த … Read more

ஞானவாபி மசூதிக்குள் தினமும் வழிபட அனுமதி கோரிய 5 இந்து பெண்கள் மனுவை விசாரணைக்கு ஏற்கலாம்: வாரணாசி கோர்ட் அதிரடி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதிக்குள் சென்று வழிபட உரிமை கோரிய இந்து பெண்கள் மனு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அதன் சுவரில் இந்து கடவுளின் சிலை இருப்பதாகவும், அங்கு தினமும் வழிபட அனுமதி கோரியும் 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. … Read more

ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் பி17ஏ ரக போர்க்கப்பல் ‘தரகிரி' அறிமுகம்

புதுடெல்லி: ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரியை கடற்படை மனைவியர் நல சங்கத்தின் (மேற்கு பிராந்தியம்) தலைவர் சாரு சிங் இன்று அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் மேற்கு கடற்படையின் தலைமைத் தளபதி அஜேந்திர பஹதுர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த தரகிரி … Read more

2024 இல் பாஜகவை வீழ்த்த தமிழ்நாட்டு மாடல் கூட்டணி… ராகுலுக்கு தேஜஸ்வி சூப்பர் யோசனை!

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எப்படியாவது பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன் களமிறங்கி உள்ளார் பிகார் முதல்வுரும், பாஜக கூட்டணியில இருந்து அண்மையில் வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கடசித் தலைவருமான நிதீஷ் குமார். 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பதுதான் தமது நோக்கம் என்றும், எதிர்க்கட்சிகளின் பொதுவான பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பிறகு பார்த்து கொ்ள்ளலாம் எனவும் அவர் கூறி வருகிறார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முதல் முயற்சியாக அண்மையில் … Read more

வேட்பாளர் கொடுத்த மதுவை வாங்கி குடித்த 6 வாக்காளர்கள் பலி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு மதுபானங்களை சப்ளை செய்து வாக்குகளை சேகரிக்க அழைத்து செல்கின்றனர். அந்த வகையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரிடம் மதுபானங்களை வாங்கிக் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஹரித்வார் மாவட்டம் பூல்கர் கிராமத்தின் பஞ்சாயத்து வேட்பாளர்  ஒருவர், சிலருக்கு மதுபானங்களை சப்ளை செய்துள்ளார். அந்த மதுபானத்தை குடித்தவர்களில் சிலரின் உடல்நிலை மோசமடைந்தது. … Read more

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1,800 கோடி செலவாகும்: அறங்காவலர் குழு கணிப்பு

அயோத்தியா: அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட ரூ.1,800 கோடி செலவாகும் என்று ராமர் கோயிலை கட்ட அமைக்கப்பட்ட அறங்காவலர் குழு கணித்துள்ளது. ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரம் என்ற அறங்காவலர் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு தான் கோயில் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில ஃபைசாபாத் சர்க்யூட் ஹவுஸில், அறங்காவல் குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் … Read more