பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் மத ரீதியிலான பாரபட்சம் காட்டக் கூடாது: திருமாவளவன்

சென்னை: “மத ரீதியாக பாரபட்சம் பார்த்து பயங்கரவாதத்தை அணுகினால், அது இந்த நாட்டின் பாதுகாப்புக்குக் கேடாகவே முடியும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் ஒன்றிய பாஜக அரசு தடை செய்திருப்பது இந்தியாவில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதற்கு சான்றாக உள்ளது. சனாதனப் பயங்கரவாத அமைப்புகளைத் தடை … Read more

இந்தியாவுக்கு புதிய ஆபத்து?; வெளியானது அதிர்ச்சி தகவல்!

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. கண் பார்வையற்றவர். கடந்த 1911ம் ஆண்டு வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகா பகுதியில் பிறந்த இந்த பெண் தனது 85 வயதில் 1996ம் ஆண்டு காலமானார். பாபா வாங்கா பல்கேரியா நாட்டின் நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். இவர், தன்னுடைய வாழ்நாளில் எதிர் காலத்தில் நடக்க இருக்கும் பல்வேறு சம்பவங்களை முன்கூட்டியே கணித்து கூறி இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாபா வாங்கா கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் அப்படியே சொல்லி வைத்தது … Read more

தொடரும் குளியலறை வீடியோ சர்ச்சை: இந்த முறை உ.பி.,யில் – போர்க்கொடி தூக்கும் மாணவிகள்

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள விடுதி ஒன்றில் தாங்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, அந்த விடுதியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தங்களை வீடியோ எடுத்ததாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பல பெண்கள் இணைந்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். சில வாரங்களுக்கு முன்பு சண்டிகர் பல்கலைக்கழக சர்ச்சையைப் போன்று, பெண்கள் விடுதியில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி, மாணவிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

”கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம்” – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி அறிவிப்பு

கார்களில் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டம் அடுத்த ஆண்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் 8 பேர் வரை பயணிக்கும் M1 வகை கார்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அந்த கார்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்குவதற்கான புதிய பாதுகாப்பு விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிவிப்பு கடந்த  ஜனவரி 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த வரைவு அறிவிப்புக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் … Read more

பிஎஃப்ஐ அமைப்பிற்கு ஒன்றிய அரசு தடை விதித்ததை தொடந்து அந்த நிறுவனத்தின் டிவிட்டர் பக்கம் நீக்கம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஒன்றிய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்ததை தொடர்ந்து தற்போது அந்த நிறுவனத்தின் டிவிட்டர் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எதிர்ப்பு சக்தி ஊடுருவலா?: தேவஸ்தான அர்ச்சகர்கள் விளக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு. இவர் தேவஸ்தானம் குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்து வெளியிடுவார். இதேபோன்று அண்மையில் ரமண தீட்சிதலு ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதில், ‘ஏழுமலையான் கோயிலுக்குள் பிராமண எதிர்ப்பு சக்திகள் ஊடுருவியிருப்பதாகவும், கோயில் கொள்கைகளுடன் அர்ச்சகர் முறையையும் அவர்கள் அழிப்பதற்குள் முதல்வர் ஜெகன்மோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஏழுமலையான் கோயிலின் தற்போதைய தலைமை அர்ச்சகர்களான வேணுகோபால தீட்சிதர், கோவிந்தராஜு தீட்சிதர், கிருஷ்ண … Read more

அசோக் கெலாட் விலகல்.. களத்தில் தொடரும் சசிதரூர் – காங். தலைவர் தேர்தலில் தொடரும் பரபரப்பு

ராஜஸ்தான் மாநில முதல்வராக சச்சின் பைலட்டை தேர்வு செய்தால், அசோக் கெலாட்டின் ஆதரவு 90 எம்.எல்.ஏகள் ராஜினமா செய்வோம் என அறிவித்தனர். இதனை தொடர்ந்து, காங்கிரஸுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கவே அசோக் கெலாட்டின் மீது சோனியா காந்தி அதிருப்தியிலிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அசோக் கெலாட்டின் தற்போது அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செப்.24 முதல் செப். 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும், … Read more

அசோக் கெலாட் அதிரடி முடிவு… காங்கிரசில் அடுத்தது என்ன?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற் உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கலும் நடைபெற்று வரும் நிலையில், நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சியின் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக்கிவிடலாம் என்று சோனியா காந்தி முடிவெடுத்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு ராகுல், பிரியங்கா ஆகியோரும் ஆதரவு தெரிவிக்க, அசோக் கெலாட் தான் காங்கிரசின் … Read more

திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு: கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

டெல்லி: திருமணம் ஆகாதவர்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவரால் மனைவிக்கு நடந்தாலும்  பலாத்காரம் என்பது பலாத்காரமே என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பம் அடைந்த பிறகு திருமணம் பந்தம் ஏற்படாமல் போனது. திருமணம் ஆகாதவர் என்ற காரணத்தை சுட்டிகாட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்து விட்டனர். … Read more

திருமணம் ஆகாத பெண்ணும் கருக்கலைப்பு செய்யலாம்; கணவன் என்றாலும் பலவந்தம் குற்றமே: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் என வேறுபடுத்தாமல் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு. கருக்கலைப்புக்கு பாகுபாடு காட்டுவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கணவராக இருந்தாலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்பட வேண்டும். இரு வயதுவந்த நபர்கள் ஒருமித்த கருத்துடன் உறவு கொண்டு எதிர்பாராமல், திட்டமிடாமல் கர்ப்பம் தரிக்க நேர்ந்தால், அந்தக் கரு 20 முதல் 24 வாரங்கள் வளர்ச்சியைத் … Read more