இளங்கலை 4ம் கட்டம் 11 ஆயிரம் மாணவர்களுக்கு கியூட் தேர்வு ஒத்திவைப்பு

புதுடெல்லி: கியூட் இளங்கலை 4ம் கட்ட தேர்வானது 11 ஆயிரம் தேர்வர்களுக்காக மட்டும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக கியூட் என்ற பெயரில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், இளங்கலைக்கான 2ம் கட்ட நுழைவு தேர்வின்போது குளறுபடிகள் காரணமாக பல்வேறு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், தேர்வை சீர்குலைக்க நாசவேலைகள் நடப்பதாக வந்த அறிக்கைகளை தொடர்ந்து, பல்வேறு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், … Read more

ராமர் கோயில் பணி அடுத்தாண்டு முடியும்: அறக்கட்டளை உறுதி

சுல்தான்பூர்: அயோத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒன்றிய அரசு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்துள்ளது. சுல்தான்பூரில் நடந்த ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சியில் இந்த அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று கலந்து கொண்டார். அப்போது … Read more

7 கிலோமீட்டர் க்யூ… 2 நாட்கள் வெயிட்டிங்… திருப்பதி தரிசனம் ரொம்ப கஷ்டம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். தற்போது சனி, ஞாயிறு, திங்கள் (சுதந்திர தினம்) என மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி பலரும் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விடலாம் என்று கிளம்பிவிட்டனர். திருமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய செல்வதற்கு இரும்பு கம்பிகளால் ஆன க்யூ அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர் விடுமுறை நாட்களில் இந்த க்யூவை தாண்டி … Read more

வீடுகளில் தேசியக் கொடி ஏற்றிய பாஜ தலைவர்கள்

புதுடெல்லி: வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பின்படி, நேற்று முதல் வீடுகளில் மக்கள் தேசியக்கொடி ஏற்றினர். பாஜ தலைவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை  ஏற்றி, அந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் நேற்று (13ம் தேதி) முதல் 15ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்றும்படி கடந்த மாதம் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, … Read more

ஆணுறை, கருத்தடை மாத்திரை வழங்கும் ஒடிசா அரசு: அதுவும் புதுமண தம்பதிகளுக்கு.. ஏன் தெரியுமா?

புதுமண தம்பதிகளுக்கு கருத்தடை மருந்துகள், ஆணுறைகள் உள்ளிட்ட முக்கிய இல்லறம் சார்ந்த பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை ஒடிசா அரசு சார்பில் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மத்திய அரசின் பரிவார் விகாஸ் என்ற திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நயி பாஹல் அல்லது நபாதம்பதி என்பதன் பேரிலான தொகுப்பைதான் புதுமண தம்பதிகளுக்கும், குடும்பக் கட்டுப்பாடு செய்துக் கொள்ள நினைக்கும் தம்பதிகளுக்கும் ஆஷா பணியாளர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. அந்த தொகுப்பில், ஆணுறை, கருத்தடை மருந்துகள், குடும்பக் … Read more

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா ராகுல்? மவுனத்தின் பின்னணி என்ன?

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தலை நடத்துவதற்கான தற்காலிக முன்மொழிவு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்ற நிலையில், அக்கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, இதுவரை அக்கட்சியின் முழுநேரத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் … Read more

இந்தியாவின் "Warren Buffet" ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்!

இந்திய பங்கு சந்தையின் தந்தை, என்றும், இந்தியாவின் Warren Buffet என்றும் அழைக்கப்பட்டு வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று காலமானார். இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களில் மிகவும் பிரபலமானவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமம் உள்ளிட்ட பல பங்குகளில் தனது முதலீட்டினை பெருமளவில் செய்துள்ளார். இவர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விட்டால், அந்த நிறுவனத்தின் பங்குகள் பல மடங்கு உயரும் என கூறப்படுவதுண்டு.  இந்திய பங்குச் சந்தையின் தந்தை என்று பிரபலமாக … Read more

மெச்சத்தக்க பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர்களுக்கு அறிவிப்பு: ஒன்றிய அரசு

டெல்லி: மெச்சத்தக்க பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 3 காவலர்களுக்கு  ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயிலில் கீழே சிந்திய உணவை கைக்குட்டையால் சுத்தம் செய்த இளைஞர்

புதுடெல்லி; டெல்லியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பிரஞ்சால் தூபே. இவர் தினமும் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகிறார். ஒருநாள் இவர் பயணம் செய்யும்போது அவர் கொண்டு வந்த உணவு ரயில் பெட்டியில் கீழே சிந்திவிட்டது. இதையடுத்து சிறிதும் யோசிக்காத தூபே, தனது கைக்குட்டையைக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்தார். இதைப் பார்த்த சக பயணியான சுபம் வர்மா என்பவர் இதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 14,092 பேருக்கு கொரோனா… 41 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 14,092 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,53,464 ஆக உயர்ந்தது.* புதிதாக 41 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more