2 மாதங்களில் 2வது முறை சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 2வது முறையக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் சோனியா காந்திக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லோக் நாயக் மருத்துவமனையில் சில நாட்கள் அவர் சிகிச்சை பெற்றார். இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சில வாரங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சோனியா காந்தி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், காங்கிரஸ் கட்சியின் சில … Read more

ஆந்திராவில் ரவீந்திரநாத் தாகூரால் அரங்கேறிய நமது தேசிய கீதத்துக்கு வயது 104

திருப்பதி: நமது தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்டு, அதனை ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் ஆங்கிலத்தில் ‘மார்னிங் சாங் ஆஃப் இந்தியா’ என மொழி பெயர்க்கப்பட்டு, அவர் மூலமாகவே பாடப்பட்டு 104 ஆண்டுகள் ஆகின்றன. ‘விஸ்வ கவி’ என மக்களால் போற்றப்படும் ரவீந்திரநாத் தாகூரால் நமது தேசிய கீதம் வங்க மொழியில் இயற்றப்பட்டது. நம் நாட்டின் கலாச்சாரம், பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் இருப்பதால், இந்த பாடல் கடந்த24.1.50-ம் ஆண்டில் நமது தேசிய கீதமாக, இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. … Read more

5-வது முறையாக கூட்டணியில் பிளவு : 8-வது முறையாக முதலமைச்சரான நிதிஷ்குமாரின் கதை

தேசிய அரசியலை நன்கு அறிந்தவர்களுக்கு நிதிஷ்குமாரின் செயல் பெரிய ஆச்சர்யத்தைத் தந்திருக்காது. ஏனினில் அவர் கூட்டணியை உடைப்பது இது முதல் முறையல்ல.  மாணவப் பருவத்தில் ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் லாலு பிரசாத்துடன் ஒன்றாக இணைந்து செயல்பட்ட நிதிஷ்குமார், 1990-ம் ஆண்டு, ஜனதா தளம் சார்பில் லாலு பிரசாத் பீகார் முதலமைச்சராவதில் பெரும் பங்கு ஆற்றினார்.  பின்னர், கட்சிக்குள் லாலுவின் செல்வாக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு பிரிந்து வந்து, மூத்த சோசலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டசுடன் இணைந்து … Read more

ஒரே எம்எல்ஏ; ஒரே பென்ஷன்: அமலாக்கியது பஞ்சாப் அரசு

சண்டிகர்: பஞ்சாப்பில் ஒரு எம்எல்ஏ, ஒரே பென்ஷன் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தி அரசாணை வெளியிட்டது. பஞ்சாப்பில் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு அமைந்த பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, அம்மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் எத்தனை முறை எம்எல்ஏ.க்களாகி இருந்தாலும், அவர்களுக்கு ஒரே ஒருமுறைக்கான பென்ஷன் மட்டுமே வழங்கப்படும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இதற்கான சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 30ம் … Read more

இந்தியர்களின் உத்தேச ஆயுள் 1951இல் 32… 2022இல் 70! விடுதலை இந்தியாவின் சாதனை

புதுடெல்லி: இந்தியா சுதந்திரம் பெற்ற 75 வருடங்களில், கலாச்சாரம், சமூகம், அரசியல், பொருளாதாரம், ராணுவம், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வியக்கத்தக்க அளவில் முன்னேறி தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்ற இந்தியா, நூற்றுக்கணக்கான ஆண்டு அந்நிய ஆட்சியால் வறுமை மற்றும் சீர்கேட்டின் புதைகுழியில் சிக்கியிருந்தது. சுதந்திரம் அடைந்து  75 ஆண்டுகாலப் பயணத்தில், தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி பீடுநடை போடுகிறது இந்தியா. கடந்த 75 ஆண்டுகளில், உள்நாட்டுப் பிரச்சனைகள் மற்றும் … Read more

ஆர்எஸ்எஸ் டிபி.யில் தேசியக் கொடி படம்: சர்ச்சைக்குப் பிறகு திடீர் மாற்றம்

புதுடெல்லி: மிகுந்த சர்ச்சைகளுக்கு பிறகு தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படமாக தேசியக்கொடியை ஆர்எஸ்எஸ் மாற்றியுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைவரும், தங்களின் சமூக வலைதள பக்கங்களில் தேசியக்கொடியை முகப்பட படமாக (டிபி) வைக்கும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் அழைப்பு விடுத்தப் பிறகும் ஆர்எஸ்எஸ் தனது சமூக வலைதள … Read more

Meteorological Temple: மழை வருவது யாருக்கு தெரியும்? இந்த வானிலை கோவிலுக்கு தெரியும்

வானிலையை கணிக்கும் கோவில்: மழை வருவதை வானிலை மையம் கணித்து செய்திகளைத் தரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பெஹ்டா கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றும் மழை வருவதை கணித்து சொல்லும் என்பது யாருக்கும் தெரியாது. கான்பூரில் உள்ள ஜெகநாதர் கோவில் பிதர்கான் தொகுதியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு தொலைதூரத்தில் இருந்தும் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த கோவில் பல ரகசியங்களை தன்னுள் … Read more

காஷ்மீரில் தீவிரவாத தொடர்பு முஜாகிதீன் தலைவன் மகன், 3 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 4 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 311ன்படி, நாட்டிற்கு எதிராக செயல்படும் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள், தேச விரோத கருத்துக்களைப் பரப்பும் நபர்களையும் அரசு பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டு சுமத்தப்படுவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் பணி நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவனான சயீத் சலாவுதீனின் மகன் சயீத் அப்துல் … Read more

75-வது சுதந்திர தினம் | டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு – 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்ற உள்ளார். சுமார் 7 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள இவ்விழாவையொட்டி, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் 75-வது சுதந்திர தினம் அமுதப் பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாடுமாறு மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 2-ம் … Read more

என் மனதில் அப்படி ஒரு எண்ணம் இல்லை… -பிரதமர் பதவி குறித்து நிதிஷ்குமார்

பீகார்: பிரதமர் வேட்பாளர் போட்டியில் நீங்களும் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு “எனக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை” என்று பீகார் முதல்வராக 8-வது முறையாக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் பதிலளித்துள்ளார். பிரதமராகும் எண்ணமெல்லாம் என் மனதில் இல்லை. அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவதே எனது பணி. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதற்கு முயற்சி செய்வேன் என்று கூறினார். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் சம்மதித்து ஒன்றுபட்டால் நல்லதுதான். பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றவுடனே பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக தாக்கிய நிதிஷ்குமார், பிரதமரின் … Read more