அதிகாரிகள் தொல்லை கொடுத்ததால் விமானப் படை கல்லூரி மாணவர் தற்கொலை!!

புதுடெல்லியில் உள்ள உத்தம் நகரில் வசித்து வந்தவர் அங்கித் குமார் ஜா (27). இவர் விமானப்படையில் அதிகாரியாக பணி செய்ய தேர்ச்சி பெற்று இருந்தார். இதையடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜாலஹள்ளி பகுதியில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான தொழில்நுட்ப கல்லூரியில் அங்கித் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி கல்லூரி விடுதி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அங்கித் குமார் ஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அறிந்ததும் ஜாலஹள்ளி போலீசார் … Read more

மாலையில் ஒன்றரை மணி நேரம் செல்போன், டி.வி.யை தவிர்க்கும் கிராமம்

மும்பை: மாலை நேரங்களில் செல்போன், டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை தவிர்க்கும் முறையை மகாராஷ்டிராவிலுள்ள ஒரு கிராமமக்கள் கடைபிடித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது மோஹித்யாஞ்சே வத்காவோன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை செல்போன், டி.வி. உள்ளிட்ட அனைத்து விதமான எலக்ட்ரானிக் சாதனங்களையும் அணைத்து வைத்துவிடுகின்றனர். இந்த ஒன்றரை மணி நேரத்தில் அவர்கள் புத்தகம் படிப்பது, பாடப்புத்தகங்களில் எழும் சந்தேகங்களை … Read more

பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது – அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கருப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள் பலமுறை ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியது. இந்த … Read more

இறந்த கணவர் மீண்டு வருவார்… அழுகிய உடலோடு 18 மாதங்கள் வாழ்ந்த மனைவி

உத்தர பிரதேசம் மாநிலம், கான்பூரில் வசித்து வந்தவர் விம்லேஷ் தீட்சித் . 52 வயதான இவர் வருமான வரித்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவ்வாறு இருக்க ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அலுவலகம் சென்ற விம்வேஷ் தீட்சித் அங்கே நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார். இதையடுத்து அவரது சக பணியாளர்கள் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடலை எடுத்துச்செல்ல விம்லேஷ் தீட்சித்தின் உறவினர் … Read more

இந்தியாவுடன் இணைந்து செயல்பட முழு உலகமும் விருப்பம்: பிரதமர் மோடி பேச்சு

மண்டி: ‘நாட்டில் ஏற்பட்டுள்ள வலுவான அடித்தளத்தின் காரணமாக, மொத்த உலகமும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரங்களை பிரதமர் மோடி நலத் திட்டங்களை தொடங்கி வைத்து செய்து வருகிறார். இந்நிலையில், இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் பாஜ யுவ மோர்ச்சா சார்பில் இளைஞர்கள் பேரணி நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று … Read more

பிழைப்பார் என ஒன்றரை ஆண்டாக கணவர் சடலத்தை பாதுகாத்த மனைவி

கான்பூர்:  உத்தரப் பிரதேசத்தில் இறந்த கணவரின் உடலை, ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் மனைவி பாதுகாத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்தவர் விம்லேஷ் தீட்சத். வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்தாண்டு ஏப்ரலில், உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் இறந்தார். அவருடைய உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், அதை தகனம் செய்யவில்லை. விம்லேஷ் கோமாவில் இருப்பதாகவும், திரும்ப வருவார் என்றும் நம்பினர். அவருடைய மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர். … Read more

யுஏபிஏ சட்டம் – ஒரு பார்வை

தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த, யுஏபிஏ சட்டம் கடந்த 1967-ல் கொண்டுவரப்பட்டது. நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்குவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். தீவிரவாத செயலுக்காக ஆட்களை யார் தேர்ந்தெடுத்தாலும், அவர்கள் மீது இந்த சட்டம் பாயும். இச்சட்டப்படி ஒருவர் மீது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும். கருப்பு சட்டம்.. – யுஏபிஏ சட்டம் குறித்து … Read more

ராஜஸ்தான் முதல்வர் ஆகிறார் சச்சின் பைலட் – வழி விடுகிறார் அசோக் கெலாட்!

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இளம் தலைவர் சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு, வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில், காந்தி குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட மறுத்துள்ளனர். அவர்களிடம், மூத்தத் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியும் அதனை அவர்கள் ஏற்கவில்லை. … Read more

திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் தனியார் மருத்துவமனை மாடியில் தீ விபத்து: 2 சிறுவர்கள் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் தனியார் மருத்துவமனை மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தீயில் சிக்கி சிறுவர்கள் பரத் ரெட்டி, கார்த்திகா  ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ரேணிகுண்டா பிஸ்மில்லா நகரில் மருத்துவர் சிவசங்கர் ரெட்டி மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். மருத்துவமனை மாடியில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் குடும்பத்தினர் சிக்கி கொண்டனர்.

‘ஜி-23’ தலைவர்கள் நினைத்தது நடந்தது – காங். தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு படிவம் வாங்கினார் சசி தரூர்

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேற்று வேட்புமனு தாக்கல் நடவடிக்கை தொடங்கியது. தேர்தலில் போட்டியிட சசி தரூர் எம்.பி. வேட்பு மனு படிவத்தைப் பெற்றுக் கொண்டார். அசோக் கெலாட் விரைவில் மனு தாக்கல் செய்வதாக கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகிய பிறகு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்தி கட்சிப் பொறுப்பேற்றார். அதன் பிறகு நடைபெற்ற மாநில தேர்தல்கள் மற்றும் 2019-ல் … Read more