மின்னணு இயந்திரம் தவறான பயன்பாடு ஜனநாயகத்திற்கு கடும் சவால் 11 எதிர்க்கட்சிகள் தீர்மானம்

புதுடெல்லி: மின்னணு வாக்கு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து போராடுவதென 11 எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத கம்யூனிஸ்ட், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆர்எல்டி, வெல்பேர் கட்சி மற்றும் சுவராஜ் இந்தியா ஆகிய 11 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மின்னணு வாக்கு இயந்திரம், பணபலம், ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் தேர்தல் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து … Read more

NEET UG 2022 Result Date: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? லேடஸ்ட் அப்டேட் இதோ

நீட் யுஜி 2022 முடிவு தேதி: நீட் யுஜி  2022 தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது. நீட் யுஜி  2022 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) விரைவில் வெளியிடவுள்ளது. ஊடக அறிக்கையின்படி, இந்த மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஆகஸ்ட் 21 ஆம் தேதி தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவுகளை வெளியிடலாம். இந்த முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் தேசிய தேர்வு முகமை நீட் இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neetNEET UG … Read more

அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவு

மும்பை: பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 87. ஆகாசவானி வானொலி செய்திகளில் 1980, 90களில் தமிழர்களை வசீகரித்த குரலுக்கு சொந்தக்காரர் இந்த சரோஜ் நாராயணசுவாமி. ஆகாசவானி வானொலி யில் தினமும் காலை 7.15 மணிக்கு ஒலிக்கும் அவரின் குரல் மூலமே உலக நடப்புகளை அறிந்தவ தமிழர்கள் ஏராளம். தமிழத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் பிறந்து, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் படித்து வளர்ந்தார் சரோஜ் நாராயணசுவாமி. ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் … Read more

கம்பீர குரலுக்கு சொந்தக்காரரான சரோஜ் நாராயண் ஸ்வாமி காலமானார்..!- யார்இவர் தெரியுமா..?

ஆகாஷ் வானொலி “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி” எனும் கம்பீர குரலால் வசீகரித்த பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87. சரோஜ் நாராயணஸ்வாமியின் பூர்வீகம் தஞ்சாவூர் ஆகும். இவர் பிறந்து வளர்ந்து படித்தது அனைத்தும் மும்பையில் தான். பிஏ ஆங்கிலம் முடித்த அவர் தமிழில் புலமை பெற்று திகழ்ந்தார். திருமணம் முடிந்து வானொலி பணிக்காக டெல்லியில் குடியேறினார். பணி ஓய்வுக்கு பின் மும்பையில் வசித்து வந்தார். இந்திய வானொலியின் முதல் … Read more

துப்பாக்கியால் சுட்ட அமைச்சர்; சுதந்திர தின பேரணியில் பரபரப்பு!

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை வரும் 15ம் தேதி கொண்டாட இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முன்னதாக நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா என்ற பெயரில், நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரத்துக்கு கொண்டாட்டங்கள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தெலங்கானாவில் தெலங்கான ராஷ்டிரிய … Read more

இனி அனைத்து படிப்பிற்கும் ஒரே நுழைவுத்தேர்வு..! – மாணவர்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் ஷாக்..!

இந்தியாவில் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்குஒரே நிழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் 3 பொது நுழைவுத் தேர்வுகளின் அடிப்படியில் உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதில்மருத்துவ படிப்புகளில் ‘ நீட் ‘ என்னும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது . தொழில்நுட்ப நிறுவனங்களில்சேருவதற்குஎன்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி. உள்ளிட்ட குறிப்பிப்பிட்ட சில ஜே.இ.இ. மெயின் தேர்வும், ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் மூன்றாவதாக 45 மத்திய … Read more

கடன் வாங்கியவர்களை தொல்லை செய்ய கூடாது..!- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சொல்வது என்ன..?

கடன் பெற்றவர்களை வங்கிகள் தொடர்ந்து தொல்லை செய்வது வாடிக்கையாகியுள்ளது. இதனால் சிலர் தற்கொலை போன்ற முடிவுகளையும் எடுத்து உள்ளனர். இது சமூகத்தில் பெரும் பேசு பொருள் ஆகி உள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களது கடன் வசூல் முகவர்கள், கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ … Read more

ராகுல் காந்தி மீண்டும் தலைவராக விருப்பம்: செப். 5ல் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல்? விரைவில் காரிய கமிட்டி கூடுகிறது

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடத்துவதற்கான முன்மொழிவு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான  தோல்வியை எதிர்கொண்டதால், அப்போதைய தலைவராக இருந்த ராகுல்காந்தி தனது  பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் இன்று வரை காங்கிரஸ் கட்சியின்  முழுநேரத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. இடைக்கால தலைவராக சோனியா காந்தி  செயல்பட்டு … Read more

‘தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர்’-காலமானார் பிரபலசெய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண ஸ்வாமி

வானொலியில் ஒரு காலத்தில் அதிகாலையில் ஒலித்த, ‘செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண ஸ்வாமி…’ என்ற தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87. லட்சக்கணக்கான தமிழர்கள் நாள்தோறும் வானொலில் சரோஜ் நாராயண ஸ்வாமியின் குரலை கேட்டு எழும் காலம் இருந்தது. அகில இந்திய வானொலி வாயிலாக பிரபலமான அவருக்கு, ஒலிபரப்புத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக 2009-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. அகில இந்திய வானொலியில் தமிழ் செய்தி வாசிப்பாளராக பிரபலமான சரோஜ் நாராயண ஸ்வாமி, ஒலிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். 35 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி விடை பெற்ற … Read more

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு உபரி நீர் திறப்பு நிறுத்தம்: நீர் வளத்துறை தகவல்

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு உபரி நீர் விநியோகம் பிற்பகலில் நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் 13 மதகுகளும் மூடப்பட்டன என நீர் வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.