6 ஆண்டு தண்டனை குற்றத்துக்கு தடயவியல் விசாரணை சோதனை கட்டாயம்: ஒன்றிய உள்துறை அமைச்சர் தகவல்

காந்திநகர் : ஆறு ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை பெறக் கூடிய குற்றங்களுக்கு தடயவியல் சோதனை கட்டாயமாக்கப்படும்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள  தேசிய தடயவில் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: குற்றவியல் நீதி அமைப்புடன் தடயவியல் துறை இணைக்கப்படும்.  6 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை பெறக் கூடிய குற்றங்களுக்கு தடயவியல் சோதனையும், விசாரணையும் கட்டாயமாக்கப்படும். இதற்காக, … Read more

டெல்லியில் புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற பிரதான கட்டிட பணி முடிந்தது; டாடா நிறுவனம் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற கட்டிடத்தின் முக்கிய பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது என்றும்  தற்போது உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் டாடா புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினாயக் பை தெரிவித்தார். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக, பிரமாண்டமான முறையில் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர்  மோடி அடிக்கல் நாட்டினார். இதில் எம்பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம் பெறுகின்றன. ஒன்றிய  அமைச்சர்கள் … Read more

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 780 ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை; அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

புதுடெல்லி: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, 780 ராணுவ தளவாட உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராணுவத்திலும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்தாண்டு டிசம்பர் மற்றும் கடந்த மார்ச் மாதம் என 2 முறை ராணுவ தளவாட உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு பாதுகாப்பு … Read more

இன்னும் சில தினங்களில் திருமணம்.. சிறிய வாக்குவாதத்தில் மகளை தாக்கிய தந்தை.. பறிபோன உயிர்!

உத்தர பிரதேசத்தில் உணவு கொண்டுவர தாமதப்படுத்திய 21 வயது மகளை கொலைசெய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் பகுதியைச் சேர்ந்தவர் மோஹித் ஃபரியாத்(55). இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு மகள் ரேஷ்மா(21). ரேஷ்மாவிற்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் சாப்பிட உட்கார்ந்திருந்த தந்தைக்கு உணவை கொண்டுவந்து தர தாமதப்படுத்தியிருக்கிறார் ரேஷ்மா. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் மிகவும் கடுமையான வார்த்தைகளால் கோபமாக பேசியிருக்கிறார் ரேஷ்மா. அது … Read more

தாயை கிண்டல் செய்த நபரை ஓட ஓட விரட்டி கொலை செய்து தாயின் காலடியில் போட்ட மகன்

திருப்பதியில், தாயை கிண்டல் செய்த நபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். விசாகப்பட்டினத்தில் உள்ள அலிபுரம் பகுதியைச் சேர்ந்த சீனு, நேற்று சாலையில் நடந்து சென்ற பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் தனது மகனிடம் கூறியதையடுத்து, தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர், சீனுவை துரத்திச் சென்று தாக்கியதுடன் அங்கிருந்த சுவற்றில் தலையை மோதிக் கொலை செய்துள்ளார். பின்னர், 30 அடி தூரத்திற்கு … Read more

`அட எழுந்துருச்சு ஓடிவாப்பா…’-நொய்டா கோபுர தகர்ப்பின்போது அசதியில் தூங்கியவரால் பரபரப்பு

நொய்டாவில் கட்டடம் இடிக்கப்பட்ட போது, அருகிலிருந்த அபார்ட்மெண்டில் இருந்த ஒருவர் அசதியில் வீட்டுக்குள்ளேயே தூங்கியிருந்திருக்கிறார். அவரை ஒருவழியாக போராடி எழுப்பி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர் அதிகாரிகள். நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டைக் கட்டங்கள், இன்று கண் இமைக்கும் நேரத்தில் தகர்க்கப்பட்டன. இதற்காக 3,700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அபேக்ஸ், சியான் என்ற பெயர்களில் குடியிருப்பு இரட்டை கட்டடங்கள் கட்டப்பட்டதில் விதிமீறல் இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு கட்டடங்களையும் இடிக்க … Read more

காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செப்.24ல் தொடக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடத்துவது என, காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் 24ம் தேதி தொடங்குகிறது.காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21ம் தேதியிலிருந்து செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிப்பது என, கடந்த ஆண்டு நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அடுத்த மாதம் 7ம் தேதி … Read more

’’மாட்டிறைச்சி சாப்பிட காதலி வற்புறுத்தினார்’’ – இளைஞரின் அதிர்ச்சி தற்கொலை குறிப்பு

தனது லிவ் – இன் பார்ட்னர் தன்னை மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்தியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் சிங்(27). இவர் உத்னாவின் படேல் நகரிலுள்ள தனது வீட்டில் ஜூன் 27ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் தனது இறப்பிற்கு காரணம், அவரது லிவ் -இன் பார்ட்னர் சோனம் அலியும், … Read more

"2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதியளிக்கிறேன்" – பிரதமர் மோடி

புஜ்: வரும் 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதனை தனது சொந்த மாநிலமான கட்ச் மாவட்டத்திற்கு வருகை தந்த போது அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2001 வாக்கில் அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்த மக்களின் நினைவாக அஞ்சர் பகுதியில் இரண்டு நினைவகங்களை அர்பணித்துள்ளார் … Read more

நொய்டாவில் இடிக்கப்பட்ட இரட்டை கோபுரம்..! – விரிவான வழக்கு விபரம்..!

விதிமுறைகளைமீறி கட்டப்பட்டதாக நொய்டாவில் இரட்டை கோபுரம் இன்று திட்டமிட்டபடி இடிக்கப்பட்டது. இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இந்த இரட்டை கோபுரத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோபுரங்களின் கட்டுமானத்தின்போது, உத்தரபிரதேச அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் விதிமுறை மீறப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது . தங்கள் கட்டடங்களிலிருந்து வெறும் 16மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள இந்த இரு கோபுரங்களால் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன. தோட்டத்துக்காக … Read more