மியான்மர் கடத்தல் எதிரொலி: வேலைவாய்ப்பு விளம்பரங்கள் இளைஞர்களுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: தாய்லாந்தில் வேலைக்கு சென்ற 200 இந்தியர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாய்லாந்தில் டிஜிட்டல் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் வேலைகளுக்கு ஆள் எடுப்பதாக இந்திய இளைஞர்களைக் குறிவைத்து போலி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் கால் சென்டர் மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் போலி நிறுவனங்களால் செய்யப்படுகின்றன. எனவே, சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இந்திய இளைஞர்கள் நம்பி ஏமாற … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக ஆசாத் கட்சிக்கு சொந்தக்காரரானார் குலாம் நபி ஆசாத்… !!

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவரரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் தன் புதிய கட்சி தொடங்கினார். அவர் தனது புதிய கட்சிக்கு Democratic Azad party என்று பெயர் சூட்டியுள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளே காங்கிரஸ் கட்சி தோல்விக்கு காரணம் என்று குலாம் நபி ஆசாத் பகிரங்கமாக விமர்சித்து இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவராக இருந்த … Read more

வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய்! காரணம் என்ன?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 81 ரூபாய் 50 காசுகளாக வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், அந்நிய செலாவணி வர்த்தக தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 41 காசுகள் சரிந்து 81 ரூபாய் 50 காசுகளானது. நடப்பு 2022ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரையிலான நாட்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 புள்ளி 42 விழுக்காடு அளவிற்கு சரிந்துள்ளது. ஆண்டு தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 74 … Read more

மாரடைப்பால் மயங்கிய முதியவர்: உயிர் காத்த சி.எஸ்.ஐ.எஃப் வீரர்கள்..!

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் சேகர் ஹஸ்ரா (69). இருதய நோயாளியான இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது, விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து வெளியே செல்லும் போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட சி.எஸ்.ஐ.எஃப் வீரர்கள், தங்களுடைய மேல் அதிகாரிகளுக்கும், விமான நிலைய மருத்துவர்களுக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவர்கள் … Read more

கேரளா: ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கும் பள்ளிக்கு எதிராக போராட்டம்

கோழிக்கோடு: மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வரக்கூடாது என அறிவித்த பள்ளிக்கு எதிராக கேரளாவில் போராட்டம் வெடித்துள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், வகுப்பறைக்குள் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என அறிவித்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு அங்கு போராட்டம் வெடித்தது. பள்ளி நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹிஜாப் அத்தியாவசிய மத வழக்கம் … Read more

Rajasthan Congress Crisis: களமிறங்கும் கமல்நாத்.. முடிவுக்கு வருமா கெலாட் – பைலட் பிரச்னை?

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மூத்தத் தலைவர் கமல்நாத் சந்திக்க உள்ளதாகவும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் விவகாரத்தில் அவர் மத்தியஸ்தம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் … Read more

பெண்ணை கொடூரமாக தாக்கும் கும்பல்; வீடியோவால் பரபரப்பு – பெண்களுக்கு எதிரான மாநிலமா உ.பி.,?

சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 56,083 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 50.5 குற்ற விகிதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 31,000 புகார்கள் கடந்தாண்டு (2021) தேசிய மகளிர் ஆணையத்தால் (NCW) பெறப்பட்டன. 2014ஆம் ஆண்டிற்கு பிறகு, கடந்தாண்டுதான் அதிக புகார்கள் … Read more

மாணவியின் பையை சோதனையிட்ட ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

மத்தியபிரதேசத்தில் பள்ளிக்கு வந்த மாணவியின் புத்தக பைக்குள் நாகப்பாம்பு இருந்த காட்சி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், ஷாஜாபூர் பகுதியில் உள்ள படோனி பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவி, தனது புத்தக பைக்குள் ஏதோ ஊர்வது போன்று இருப்பதாக பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, வகுப்பறைக்கு வெளியே வைத்து பையை ஆசிரியர் சோதனையிட்ட போது, அதிலிருந்து சீறியபடி நாகப்பாம்பு வெளிவந்தது. Source link

கியூட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு

டெல்லி: முதுகலை மாணவர் சேர்க்கைக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

12 மணி நேர போராட்டத்தில் ‘கொரில்லா தாக்குதல்’ நடத்தியது பிஎஃப்ஐ: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘‘கேரளாவில் 12 மணி நேர ‘பந்த்’ நடத்திய போது, முகமூடி அணிந்த பிஎஃப்ஐ நிர்வாகிகள் கொரில்லா தாக்குதல் நடத்தினர்’’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது, தீவிரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்து அனுப்புவது போன்ற குற்றச்சாட்டின் கீழ் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினர் அலுவலகங்கள், அதன் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த சில நாட்களுக்கு … Read more