சாலை விபத்தில் தாய், தந்தை, மகன் பலி.. துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பியபோது சோகம்..!

செஞ்சி அருகே நடைபெற்ற சாலை விபத்தில், தாய், தந்தை, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கீரம்பாடியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன். இவர் மதுரையில் உள்ள தனது உறவினர் ஒருவரின் இல்லத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று தனது காரில் சென்றிருந்தார். அவருடன், அவர் மனைவி சாந்தி, மகன் முத்துராஜா ஆகியோர் சென்றனர். காரை முத்துராஜா ஓட்டிச் சென்றார். துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு … Read more

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட‌தற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் விளக்கம் கேட்டு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த பிப்ரவரியில் கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த‌து. இதற்கு எதிரான வழக்கை கடந்த மார்ச் 15ம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘‘ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய … Read more

2024 mp election:பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியது என்ன?

பிரதமர் வேட்பாளர்: 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறையும் மோடிதான் எங்களின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துள்ள அமித் ஷா, எம்பி தேர்தலுக்குள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென்மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். என்னதான் பாஜக ஊழலற்ற நேர்மையான ஆட்சி, நிர்வாகம் என்று பேசி வந்தாலும், நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை, சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான … Read more

குஜராத் கலவரம் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் முடித்துவைப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி; 2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு இழப்பீடு கோரிய மனு உள்ளிட்ட வழக்குகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டதாக கூறி வழக்குகளை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முடித்து வைத்துள்ளது.

டெல்லி பேரவையில் நம்பிக்கை தீர்மானம் | ஆம் ஆத்மி அரசின் ஊழலை திசை திருப்ப நாடகமாடுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவும் தனது தலைமையிலான அரசை கவிழ்க்கவும் பாஜக முயன்று வருவதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் அனைவரும் தன்னுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் நேற்று டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இத்தீர்மானம் மீது இன்று காலை 11 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறியதாவது: டெல்லி சட்டப்பேரவையில் மொத்தமுள்ள … Read more

மணீஷ் சிசோடியாவுக்கு இறுகும் பிடி – வங்கி லாக்கரில் சிபிஐ ரெய்டு!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். “சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை” என, மணீஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார். டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில், துணை முதலமைச்சராக இருப்பவர், மணீஷ் சிசோடியா. இவர், ஆட்சியிலும், கட்சியிலும் நம்பர் 2 இடத்தில் இருப்பவர். டெல்லி மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக, சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. … Read more

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட சசி தரூர் எம்.பி. திட்டம்..!!

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு வர ராகுல்காந்தி மறுத்துவிட்டதால் மூத்த தலைவர் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவர் பதவிக்கு கொண்டு வர சோனியா காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலையாளம் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வெளியிட்டுள்ள … Read more

'நீதிபதிகள் ஊழல்வாதிகள்' -பிரசாந்த் பூஷனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

இந்தியாவின் முன்னாள் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என பேட்டி அளித்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். தெஹல்கா செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இந்தியாவில் உள்ள முன்னாள் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என கூறினார். இதனையடுத்து  2009ம் ஆண்டு அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிற்து. இந்நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி இந்திரா பானர்ஜி … Read more

ட்விட்டரில் தரக்குறைவான விமர்சனம்: நடிகர் கமல் ரஷீத் கான் மும்பையில் கைது

மும்பை: கடந்த 2020 ஆம் ஆண்டு தரக்குறைவான விமர்சனங்களுடன் சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை பகிர்ந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான கமல் ஆர் கான் கைது செய்யப்பட்டார். அவர் மீது யுவ சேனா அமைப்பின் உறுப்பினர் ராகுல் கனல் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு ரஷீத் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலையில் மும்பை விமான நிலையத்தில் அவரை மும்பை மலாட் போலீஸார் கைது செய்தனர். அவர் இன்று … Read more

2021-ல் நாட்டில் தினசரி சராசரியாக 82 கொலைகள் நடந்துள்ளது: தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை

டெல்லி: 2021-ல் நாட்டில் தினசரி சராசரியாக 82 கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3,717 கொலைகளும், பீகாரில் 1,799 கொலைகளும், மராட்டியத்தில் 2,330 கொலைகளும் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வழக்குகளில் 2021-ல் பஞ்சாப் முதலிடத்திலும், இமாச்சல், அருணாச்சல பிரதேசம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.