விளையாட்டுத்துறையில் இந்தியா ஈடு இணையற்றதாக திகழ்கிறது: மாநிலங்களவையில் பி.டி. உஷா பேச்சு

டெல்லி: விளையாட்டுத்துறையில் இந்தியா ஈடு இணையற்றதாக திகழ்கிறது என மாநிலங்களவையில் எம்.பி. பி.டி. உஷா தெரிவித்துள்ளார். விளையாட்டு துறையில் தற்சார்பு அடைய இதுவே சரியான தருணம். துரதிர்ஷ்டவசமாக சில இந்திய வீரர்களே உலக அளவில் சாதனை படைக்க முடிந்தது. கேரளாவில் குக்கிராமத்தில் இருந்து வந்து, நான் தடகளத்தில் சாதனை படைத்தேன் எனவும் கூறினார்.

இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, தேர்தலுக்கு முன்பு இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடை செய்ய ஒன்றிய அரசு ஆதரவளிக்கும் என்றார். இலவசங்கள் விரைவில் நிறுத்தப்படவில்லை என்றால் இந்தியா பொருளாதார பேரழிவை … Read more

கேரளாவில் கனமழை 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கன மழை பெய்துவரும் நிலையில், 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்துக்கு 6 பேர் உயிரி ழந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையுடன் மத்திய தெற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சேர்ந்து கொண்டதால் கேரளா முழுவதும் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு இடி … Read more

டெல்லியில் இந்தியா – சுவிட்சர்லாந்து வெளியுறவுத்துறை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

டெல்லி: இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து வெளியுறவுத்துறை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்து சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் Livia Leu-வும், இந்தியா சார்பில் வெர்மாவும் பங்கேற்றனர். வடகிழக்கு பிராந்தியங்களில், பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்கள் திறம்பட செயலாற்றி வருவதற்கு பாராட்டுத் தெரிவித்த ஆளுநர், எல்லைப் பகுதிகளில் வளர்ச்சியை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இறப்பு… தமிழகம் இரண்டாவது இடம்!

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் இந்த சமூகம் நாகரிகமடைந்துவிட்டது என அனைவரும் நினைத்துக் கொண்டாலும், மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுநிலை இன்னும் ஒழிக்கப்படாமலே இருக்கிறது. இது மனித சமூகத்தின் மாபெரும் அவமானமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது தொடர்பாக தொடர்ச்சியான கண்டனங்களும் விமர்சனங்களும் வைக்கப்பட்டும் வருகிறது. ஒவ்வொரு நாளும் நாம் கடந்து செல்லும் பல இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நம் கண்முன்னே நடந்துகொண்டே தான் இருக்கின்றன. இதனைத் தடுப்பதற்கான 1994-ம் ஆண்டு `தேசியத் துப்புரவுப் … Read more

குரங்கு அம்மை நோய் பாதிப்பு – 8 ஆக உயர்ந்தது

புதுடெல்லி: இந்தியாவில் முதன்முதலாக கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த ஜூலை 14-ம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இவரைத் தவிர கேரளாவில் மேலும் மூவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி கேரளா திரும்பிய 30 வயது நபருக்கு நேற்று குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஏற்கெனவே 2 பேருக்கு … Read more

யாருக்காக குறைந்த விலை?: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி..உரிய விசாரணை நடத்த திமுக எம்.பி ஆ.ராசா வலியுறுத்தல்..!!

டெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி நடந்துள்ளதாக திமுக எம்.பி.யும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 5ஜி அலைக்கற்றை ஏலத்தை ஒன்றிய அரசு முறையாக நடத்தவில்லை. 2ஜி, 3ஜி, 4ஜி உடன் ஒப்பிடும் போது 5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என்று ஒன்றிய அரசே கூறியது. அவ்வாறு இருக்க தற்போது ரூ.1.50 லட்சம் கோடிக்கு மட்டுமே 5ஜி அலைக்கற்றை ஏலம் நடந்துள்ளது. … Read more

`வலிமை மிக்க பேச்சாளர் வைகோவிடம் இத கத்துக்கோங்க!'-அவையில் புகழ்ந்துதள்ளிய வெங்கையா நாயுடு

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த விவாதத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று உரையாற்றியிருந்தார். அவருக்கு மிகக்குறைவான நிமிடங்களே பேச ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்குள் தனது கருத்தை முன்மொழிந்துவிட்டார் அவர். இதைத்தொடர்ந்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, `வைகோ இந்தியாவின் சிறந்த பேச்சாளர். ஆனால் என்னால் அவருக்கு நேரம் ஒதுக்கமுடியாமல் போய்விட்டது’ என்று தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில், தொடக்கத்திலேயே வைகோவிடம் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, `தங்களுக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேச … Read more

இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது – மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

புதுடெல்லி: உலகில் உள்ள வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் கரீம் பேசும்போது, “கடந்த 8 ஆண்டு மோடி அரசில், அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்தும், சிறந்த விலை கிடைக்க விவசாயிகள் … Read more

எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளதால், விசாரணை நேர்மையாக நடைபெற, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக … Read more