குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு – மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; இதுவரை தண்டிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

காந்திநகர்: கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை தண்டிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த கரசேவகர்கள் கடந்த 2002-ம் ஆண்டு உ.பி.யில் ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு யாத்திரை சென்றனர். அவர்கள் பிப்ரவரி 27-ம் தேதி ரயில் மூலம் குஜராத் வந்து கொண்டிருந்தனர். அப்போது கோத்ரா என்ற இடத்தில் ஒரு கும்பல் ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் 59 கரசேவகர்கள் உடல் … Read more

இமாச்சலப்பிரதேச பேருந்து விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள், பிற பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சைஞ்ச் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து குலு மாவட்டத்தின் நியோலி-ஷன்ஷேர் சாலையில் சென்றபோது, எதிர்பாரா விதமாக விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சைஞ்ச் பள்ளத்தாக்கின் ஜங்லா பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி பள்ளி குழந்தைகள் உள்பட 16 பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர், உள்ளூர் … Read more

அவதூறு வழக்கில் ஆஜராக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு பிடிவாரண்ட்.!

அவதூறு வழக்கில் ஆஜராக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தானே மாவட்டத்தில் உள்ள மீரா பயந்தர் மாநகராட்சியில் பொது கழிப்பிடம் கட்டியதில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையா மற்றும் அவரது மனைவி மேதா மீது சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியும் இன்று ஆஜராகாத சஞ்சய் ராவத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.  Source link

இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான்; அடுத்த இலக்கு தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி.! அமித்ஷா பேச்சு

ஐதராபாத்: இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும் என அமித்ஷா பேசியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா,மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இது தொடர்பாக,தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா: இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் … Read more

’கேக் கொடுத்து வேலை கேட்கும் பெங்களூர் இளைஞர்’ – வைரல் ட்வீட்டின் பின்னணி இதுதான்!

படித்து பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது, வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி செல்ல நல்ல வேலை தேவை. ஆனால் இந்தியாவில் அப்படியான படித்த படிப்புக்கு வேலை கிடைப்பது என்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. இந்த நிலையில், தனக்கு வேலை கிடைக்க வேண்டி, விநோதமாக யோசித்து இளைஞர் செய்த செயல் நிறுவனங்களை தாண்டிஇணையவாசிகளையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த அமன் கந்தல்வால் என்ற இளைஞன், ஸொமேட்டோ டெலிவரி ஊழியரை போன்று நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளுக்கு உணவு டெலிவரி செய்வதுபோல சென்று … Read more

மிஸ் இந்தியா 2022: கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி வெற்றி

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி 2022ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஎல்சிசி ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் நடந்தது. இதில் கர்நாடக மாநில சினி ஷெட்டி இந்திய அழகியாகவும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரூபல் சவுகான் முதல் ரன்னர் அப் ஆகவும், உத்தரப் பிரதேசத்தின் ஷினாதா சவுகான் இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்வாகினர். மிஸ் இந்தியா சினி ஷெட்டிக்கு கடந்த ஆண்டு … Read more

தேர்தலுக்கு தயாராகுங்க..! – 6 மாதங்களில் ஷிண்டே அரசு கவிழும் – சரத் பவார் ஆரூடம்!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு 6 மாதங்களில் கவிழும் என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது. இதை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் மற்றும் … Read more

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் உடல்கள்பி விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு.!

மணிப்பூர் மாநிலத்தில்  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் உள்ளிட்ட 5 ராணுவ  வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இன்று விமானப்படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன. உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு விமான நிலையத்தில் முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. Source link

இமாச்சலில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்: ரூ.2 லட்சம் நிவாரணம்

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சல் பிரதேசம் குலு மணாலியில் இருந்து சைன்ஜ் பகுதிக்கு 40 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிப்பேருந்து ஒன்று சென்றுள்ளது. சைன்ஜ் பள்ளத்தாக்கு நியூலியில் இருந்து ஷன்ஷார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜங்லா என்ற இடத்தில் அந்த பேருந்து எதிர்பாரா விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் வரை … Read more

நில அபகரிப்பு முயற்சி | மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண் மீது தீ வைப்பு; காங்கிரஸ் கண்டனம்

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தீ பற்றி எரிய கதறும்போது வன்முறையாளர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி காண்போரை பதறச் செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பியாரி சஹாரியா. இவருடைய கணவர் அர்ஜூன் சஹாரியா. இவர்களுக்கு அரசு நலத் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற மூன்று … Read more