ம.பி., மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்: முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அறிவிப்பு

ஜபல்பூர்: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். ஜபல்பூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வந்தனர். அப்போது அதிஷ்டவசமாக தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பல நோயாளிகள் … Read more

என்.டி ராமாராவின் இளைய மகள் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமாராவின் மகள் தற்கொலை செய்துகொண்டார். என்.டி. ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸிலுள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தற்போது அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பியுள்ளதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருவதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறது. என்.டி. ராமாராவின் 8 மகன்கள் மற்றும் 4 மகள்கள் என 12 பிள்ளைகளில் உமா … Read more

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: நிர்மலா சீதாராமன்

டெல்லி: பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என நிர்மல சீதாராமன் அறிவித்துள்ளார். விலைவாசி உயர்வு குறித்து மக்களவை விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கூறியுள்ளார். உலகிலேயே அதிக வேகத்துடன் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

5ஜி ஏலம்: எதிர்பார்த்தது 4.3 லட்சம் கோடி! கிடைத்ததோ 1.5 லட்சம் கோடிதான்! முழு விபரம் இதோ!

5ஜி அலைக்கற்றை ஏலம் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நீடித்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதிரடியான துவக்கம்; ஆனால் அடுத்தடுத்து மந்தம்! தங்கு தடையின்றி அதிவேகத்தில் இணைய தொடர்புகளை மேற்கொள்வதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாள் அன்றே ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், … Read more

நில ஊழல் வழக்கு: சஞ்சய் ரவுத்தை 4 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

மும்பை: நில ஊழல் வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்தை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமலாக்கத் துறை 8 நாட்கள் காவல் அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றம் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், “வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்ததில் சம்பந்தப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிப்பது அவசியம் என்று கருதுகிறோம். ஆனால், 8 நாட்கள் விசாரணை … Read more

ஒரே நேரத்தில் 3000 க்ளிக்ஸ்: கின்னஸ் சாதனை படைத்த ரோஜா

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான நடிகை ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் அவ்வப்போது குறைகளைக் கேட்டறிவார். மக்களை அவர் சந்திக்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்று சமூக வலைதளங்களிலும் வைரலாவது வாடிக்கையாகி வருகிறது. இளைஞர்களுடன் கபடி விளையாடியது, பெரியவர் ஒருவருடன் நகைச்சுவையாக உரையாடியது போன்றவை சமீபத்திய உதாரணங்கள். அந்த வகையில் தற்போது அவர் மக்களை சந்தித்த நிகழ்வையே கின்னஸ் சாதனையாக மாற்றியுள்ளார். திரைத்துறையில் கேமரா முன் … Read more

ஜபல்பூர் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழப்பு..

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள நியூ சிட்டி ஹவுஸ் மருத்துவமனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் அறிவித்துள்ளார். Source link

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான  என்.டி. ராமராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்.டி. ராமராவின் மகள் உமா மேகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த உமாமகேஷ்வரி மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்கொலை செய்து செய்து கொண்டார்.

பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிய மாணவர்கள்! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிர மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக – மகாராஷ்டிர மாநில எல்லையில் உள்ள கூடனூர் கிராமத்தில் உள்ள மராத்தி பள்ளியில் மாணவர்கள் கையெறி குண்டை வைத்து விளையாடியதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், கையெறி குண்டை செயலிழக்கச் செய்தனர். செயலிழக்கச் செய்த கையெறி குண்டில் உருது எழுத்துக்கள் இருப்பதாக தெரிவித்த காவல்துறையினர், தொடர்ந்து … Read more

மத்தியப் பிரதேசம் | தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் பலி

ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்து ஜபல்பூர் மாவட்டம் கோஹல்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்தல் பாடா எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையான நியூ லைஃப் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் இந்த தீ … Read more