மதமாற்ற தடை சட்டம் இமாச்சலில் நிறைவேற்றம்

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் மதமாற்ற தடை சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதலே மத மாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது. சட்ட விதிகளை கடுமையாக்கி கடந்த 2019-ம் ஆண்டில் புதிய சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் மாநில சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே … Read more

டெல்லியில் வெளிநாட்டு பெண்ணுக்கு குரங்கம்மை

புதுடெல்லி: டெல்லியில் ஆப்பிரிக்காவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்த பெண் நைஜீரியா சென்று வந்துள்ளார். டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணின் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியானதில் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் குரங்கம்மை பாதித்தவர்கள் … Read more

உலகின் உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் திறப்பு

ஜம்மு: உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் ரயில்வே பாலம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்துக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில் ரயில்வே பாலம் கட்டுமான பணி கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 4,314 அடி. கடந்த 2017-ம் ஆண்டு அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்து வளைவுப் பகுதி கட்டுமானம் தொடங்கியது. இரும்பு மற்றும் கான்கிரீட் பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. … Read more

ஒரே வருடத்தில் உயர்ந்த நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?

அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று பிரபலமாக இருப்பவர்களின் சொத்து மதிப்புகளை அறிய பலருக்கும் ஆர்வம் இருக்கும்.  அப்படி பெரும்பாலான மக்கள் அறிந்துகொள்ள விரும்புவது நமது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து விவரம் தான், தற்போது அவரது முழுமையான சொத்து மதிப்பு விவரம் என்ன என்பது பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.  நரேந்திர மோடியின் சொத்துக்கள் மட்டுமல்லாது மத்திய அமைச்சர்களின் சொத்துக்களையும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருக்கின்றது.  அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் … Read more

கண் முன் நின்ற 8 வயது மகனின் எதிர்காலம் ஆற்று வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் அடித்து சென்றும் உயிர் தப்பிய பெண்: பாசத்தின் முன் தோற்றது பாசக்கயிறு

போபால்: ஆற்று வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் அடித்து செல்லப்பட்ட பிறகும், தனது 8 வயது மகனுக்காக வாழ்ந்தே தீர வேண்டும் வைராக்கியத்துடன் எமனின் பாசக்கயிறுடன் போராடிய பாசத்தாயை மீட்பு குழுவினர் மீட்டனர். மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தின்  பதாரியாவை சேர்ந்தவர் சோனம். தனது பெற்றோர் வீட்டிற்கு ரக்ஷாபந்தன் விழாவை கொண்டுவதற்காக தனது சகோதரருடன் பைக்கில் சென்றார். மாலை 6 மணியளவில் பாரிகாட் மேம்பாலத்தை கடக்க முயன்றபோது பைக் சறுக்கியது. இதில், எதிர்பாராத விதமாக சோனம் ஆற்றில் … Read more

நுபுர் சர்மாவை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதி உ.பி.யில் கைது

லக்னோ: பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கொல்லத் திட்டம் தீட்டியதாக தீவிரவாதி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாஜக செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மா 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது இறை தூதர் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பல முஸ்லிம் நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து நுபுர் சர்மா … Read more

பாஜக கூட்டணியில் இருந்து ஏன் விலகினார் நிதிஷ்குமார்?

பீகாரில் நடந்த அரசியல் நகர்வுகளை சற்றே திரும்பிப் பார்ப்போம். கடந்த 2020-ம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மறுபுறம் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.  பீகார் சட்டப்பேரவையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும், … Read more

2 மாதங்களில் 2வது முறை சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 2வது முறையக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் சோனியா காந்திக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லோக் நாயக் மருத்துவமனையில் சில நாட்கள் அவர் சிகிச்சை பெற்றார். இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சில வாரங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சோனியா காந்தி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், காங்கிரஸ் கட்சியின் சில … Read more

ஆந்திராவில் ரவீந்திரநாத் தாகூரால் அரங்கேறிய நமது தேசிய கீதத்துக்கு வயது 104

திருப்பதி: நமது தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்டு, அதனை ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் ஆங்கிலத்தில் ‘மார்னிங் சாங் ஆஃப் இந்தியா’ என மொழி பெயர்க்கப்பட்டு, அவர் மூலமாகவே பாடப்பட்டு 104 ஆண்டுகள் ஆகின்றன. ‘விஸ்வ கவி’ என மக்களால் போற்றப்படும் ரவீந்திரநாத் தாகூரால் நமது தேசிய கீதம் வங்க மொழியில் இயற்றப்பட்டது. நம் நாட்டின் கலாச்சாரம், பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் இருப்பதால், இந்த பாடல் கடந்த24.1.50-ம் ஆண்டில் நமது தேசிய கீதமாக, இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. … Read more

5-வது முறையாக கூட்டணியில் பிளவு : 8-வது முறையாக முதலமைச்சரான நிதிஷ்குமாரின் கதை

தேசிய அரசியலை நன்கு அறிந்தவர்களுக்கு நிதிஷ்குமாரின் செயல் பெரிய ஆச்சர்யத்தைத் தந்திருக்காது. ஏனினில் அவர் கூட்டணியை உடைப்பது இது முதல் முறையல்ல.  மாணவப் பருவத்தில் ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் லாலு பிரசாத்துடன் ஒன்றாக இணைந்து செயல்பட்ட நிதிஷ்குமார், 1990-ம் ஆண்டு, ஜனதா தளம் சார்பில் லாலு பிரசாத் பீகார் முதலமைச்சராவதில் பெரும் பங்கு ஆற்றினார்.  பின்னர், கட்சிக்குள் லாலுவின் செல்வாக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு பிரிந்து வந்து, மூத்த சோசலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டசுடன் இணைந்து … Read more