கேரளாவில் சிகிச்சை தோல்வி குரங்கம்மை பாதித்தவர் சாவு: அதிகாரிகள் அவசர ஆலோசனை

திருவனந்தபுரம்: கேரளாவில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்து விட்டது. கடந்த மாதம் துபாயிலிருந்து கேரளா வந்த கொல்லத்தை சேர்ந்த 35 வயதான வாலிபருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மலப்புரம், கண்ணூரை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் இந்த நோய் பரவியது. இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி துபாயிலிருந்து வந்த திருச்சூரை … Read more

அலைகளின் வேகத்தில் அடித்து வரப்பட்டு கரையில் குவிந்த மீன்களை கூடையில் அள்ளிச் சென்ற மக்கள்!

கேரள மாநிலம் மலப்புரம் திரூர் கடற்கரையில் அலைகளின் வேகத்தில் அடித்து வரப்பட்டு கரையில் குவிந்த மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மதிய வேளையில் கடல் அலையுடன் சேர்ந்து அதிகப்படியான மீன்கள் கரை ஒதுங்கின. மீன்கள் துள்ளி குதிப்பதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அவைகளை பிடித்து கூடைகளில் அள்ளி போட்டு சென்றனர். Source link

நடுவானில் இன்ஜின் திடீர் மக்கர் ஜன்னல் கண்ணாடிகளில் விரிசல் என்ன தான் ஆச்சு! பறக்கும் தொழிலில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி

எல்லா பொதுத்துறை நிறுவனத்தையும் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டுமென்பதில் ஒன்றிய பாஜ அரசு குறியாக இருக்கிறது. இப்படி எல்லா துறையும் தனியார்மயமானால் சேவை என்ன மாதிரியாக இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாக இன்றைய விமானத்துறை திகழ்கிறது. கடந்த ஒரு மாதத்தில் நடுவானில் இன்ஜின் செயலிழத்தல், விமானியின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்படுதல், விமான விசிறிகள் செயல்படாமல் போதல், விமானத்தில் புகை ஏற்படுதல், தரை இறங்கும் போது இன்ஜின் தீப்பிடித்தல், விமான நிலையத்தில் நாய் குறுக்கே வருதல், விமானி … Read more

குஜராத் உட்பட 6 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: சேலத்தில் இளைஞர் கைது

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கண்டறிய 6 மாநிலங்களில் தேசியப்புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பிஹாரில் செயல்பட்ட தீவிரவாத குழுவினர், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாட்னாவில் ஆயுத பயிற்சி வழங்கி உள்ளனர். இந்தஆயுத பயிற்சியில் பங்கேற்றவர்களை கண்டறிய தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேசம், குஜராத், பிஹார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் … Read more

அமலாக்கத் துறையிடம் சிக்கியது என் பணமல்ல: அமைச்சர் பார்தா புலம்பல்

கொல்கத்தா: அமலாக்கத் துறை சோதனையில் சிக்கியது தனது பணம் அல்ல என்று மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்தா சட்டர்ஜி புலம்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜியையும், அவருடைய உதவியாளரும், தமிழ் நடிகையுமான அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அர்பிதாவின் வீடுகளில் பதுக்கியிருந்த ரூ.49 கோடி பணம், 6 கிலோ தங்கக் குவியல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஜோகாவுக்கு அழைத்து … Read more

சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடி: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 91-வது ‘மனதின்குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி … Read more

பீதி அடைய தேவையில்லை தனியார் விமானங்கள் மிக பாதுகாப்பானவை: டிஜிசிஏ இயக்குநர் உறுதி

புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் தனியார் விமானங்கள் முற்றிலும் பாதுகாப்பானது என்று விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் இயக்குநர் உறுதி அளித்துள்ளார். இந்தியாவில் செயல்படும் தனியார் விமான நிறுவனங்களின் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகளால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த 45 நாட்களில் அதிகமானது. இதையடுத்து, விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) விமான நிறுவனங்களுக்கு நேரில் சென்று அதிரடியாக சோதனை நடத்தியது. இதில், விமானங்கள் பறப்பதற்கான அனுமதியை தகுதியற்ற பொறியாளர்கள் அளித்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அனைத்து விமான நிறுவனங்களிலும் தணிக்கை நடத்த … Read more

பீகார் பல்கலை.யில் அதிர்ச்சி 100-க்கு 151 மார்க் எடுத்த மாணவன்: ‘0’ எடுத்தவர் பாஸ்

தர்பங்கா: பீகார் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் தேர்வில் 100-க்கு 151 மதிப்பெண்கள் ஒரு மாணவன் பெற்றதாகவும், பூஜ்யம் எடுத்த மற்றொரு மாணவர் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்பட்டதாகவும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் லலித் நாராயண் மிதிலா பல்கலைக் கழகத்தின் (எல்என்எம்யு)  பி.ஏ (ஹானர்ஸ்) இளங்கலை மாணவர் ஒருவர், பல்கலைக் கழகத்தின் பகுதி-2 தேர்வில் அரசியல் அறிவியல் தாள் – 4ல் 100க்கு 151 … Read more

நாடு முழுவதும் கடந்தாண்டில் 21 நாள் மட்டுமே நடந்த சட்டப்பேரவை கூட்டம்: 500 மசோதாக்கள் நிறைவேற்றம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையும் சராசரியாக 21 நாள்கள் மட்டுமே கூடி உள்ளன. இதில், 500க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் உள்ள மாநில சட்டபேரவைகளின் செயல்பாடுகள் குறித்து, ‘பிஆர்எஸ் லெஜிஸ்லேட்டிவ்’ என்ற அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:* கடந்தாண்டில் மாநில சட்டப்பேரவைகள் சராசரியாக 21 நாட்கள் மட்டுமே கூடியுள்ளன. இதில், உயர்க் கல்வி, ஆன்லைன் விளையாட்டு, மத மாற்றம், கால்நடைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட … Read more

ஆகஸ்ட் 2 முதல் 15ம் தேதி வரை சமூக வலைதள ‘டிபி’யில் தேசியக்கொடி வையுங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாள் என்பதால், ஆகஸ்ட் 2  முதல் 15 வரை மூவர்ணக் கொடியை சமூக ஊடக தளங்களில் தங்கள் கணக்குகளின்  சுயவிவரப் படமாக (டிபி) வைக்கும்படி மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று ஆற்றிய உரையில் பேசியதாவது: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ‘ஒவ்வொரு வீட்டிலும் மூர்வணக்கொடி’ ஏற்றுவதற்கான சிறப்பு … Read more