உதய்பூர் படுகொலை | கைதானவர்களில் ஒருவர் பாஜக உறுப்பினர்: காங்கிரஸ் புகார்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர் கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக கைதானவர்களில் ஒருவர் பாஜக உறுப்பினர் என்று காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை மத்திய அரசு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றியது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் சில சந்தேகங்களை முன்வைத்துள்ளது. கைதானவர்களில் ஒருவரான ரியாஸ் அத்தாரி ராஜஸ்தான் பாஜக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர். அதனாலேயே பாஜக இந்த … Read more

உதய்பூர் கொலை: கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பு?

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் அத்துமீறி நுழைந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ், கவுஸ் … Read more

பக்கவாட்டில் உரசிய டிப்பர் லாரி.. கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதிய தனியார் பேருந்து.. 3 பேர் காயம்..!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே, டிப்பர் லாரி பக்கவாட்டில் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தின் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கண்ணூர் நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மாம்புறம் பகுதியில் அதிவேகமாக வந்த போது, எதிரே வந்த டிப்பர் லாரி பேருந்தின் பக்கவாட்டில் உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியதில், மின்கம்பம் சரிந்து பேருந்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் … Read more

பிரதமர் மோடியை புறக்கணித்த தெலுங்கானா முதல்வர் கேசிஆர்.. யஷ்வந்த் சின்ஹாவை ஓடிப்போய் வரவேற்றார்!!

ஹைதராபாத் : ஹைதராபாத் நகரில் நடைபெறும் பாஜக தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பிரதமர் மோடிக்கு தெலங்கானா அரசு சார்பில் அம்மாநில அமைச்சர் ஒருவர் மட்டுமே சென்று வரவேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெறும் பாஜக தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம் இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஹைதராபாத் வருகை தந்தார். அவரை தெலுங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவ் நேரில் … Read more

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு – சர்வதேச அளவில் உணவு, எரிபொருள் பற்றாக்குறை குறித்தும் ஆலோசனை

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், சர்வதேச அளவில் உணவு தானியங்கள், உரங்கள், எரிபொருளுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. … Read more

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதை.. ஹெலிகாப்டர்கள் மூலம் உடல்கள் அனுப்பி வைப்பு..!

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிலிகுரியில் உள்ள பாக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 14 வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கபட்டது.  Source link

பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்; இடைத்தரகர்கள் ஒழிப்பால் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி கூடுதல் வருவாய்: ேநரடி லட்டு விற்பனையில் ரூ.250 கோடி

திருமலை: திருமலையில் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பக்தர்கள் தரிசனம் மற்றும் பிரசாதங்கள் பெற எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஆண்டுக்கு ₹500 கோடி தேவஸ்தானத்திற்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் மற்றும் பிரசாதம் எளிதாக கிடைப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்குப் பிறகு பக்தர்கள் அதிக அளவு முக்கியத்துவம் தருவது லட்டு பிரசாதம் பெறுவதற்கு தான். இதனை இடைத்தரகர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டனர். ஏழுமலையான் ேகாயிலில் 2004ம் ஆண்டுக்கு … Read more

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது

புதுடெல்லி: ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்காமல், படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என தொழிற்துறை சங்கங்கள் மத்திய அரசை வலியுறுத்தின. ஆனால் இதற்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை சுமூகமாக அமல்படுத்த, இது குறித்த பிரசாரங்களை மாநில அரசுகள் தொடங்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க நிறுவனங்கள், விநியோகிக்கும் நிறுவனங்களை மூடவும், இதுபோன்ற பொருட்களின் விற்பனையை தடுக்கவும் மாநில அரசுகள் … Read more

திரௌபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: மம்தா பானர்ஜி!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். ஒடிசாவைச் சேர்ந்த திரௌபதி முர்மு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். பாஜகவுக்கு இருக்கும் பலம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு சரியாக கிடைத்து விட்டால், தேசிய ஜனநாயக கூட்டணியின் … Read more

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவனந்தபுரம்; கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் மெதுவாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள … Read more