காரில் கட்டுக்கட்டான பணத்துடன் மேற்கு வங்கத்தில் சிக்கிய ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள்!

ஜார்க்கண்ட் மாநில எம்எல்ஏக்கள் 3 பேர் சென்ற காரில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய நிலையில், அவர்களை மேற்கு வங்காள காவல்துறை கைது செய்துள்ளது. ஜார்க்கண்டின் அண்டை மாநிலமான மேற்குவங்கத்தில் ராணிஹதி என்ற இடத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. காரில் இருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களான இர்ஃபான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் பிக்சல் … Read more

நில மோசடி வழக்கு… சன்டே என்றும் பாராமல் சஞ்சய் ராவத் கைது?!

1,034 கோடி ரூபாய் நில மோசடி தொடர்பான வழக்கில், சிவசேனா மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத் துறை முன்பு சஞ்சய் ராவத் நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கிடையே, மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் … Read more

பீகாரில் படித்த பல்கலைக்கழத்துக்கு சென்றபோது ‘ஜேபி நட்டா கோ பேக்’ கோஷம்: மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு

பாட்னா: பாட்னா சென்ற பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு பல்கலைக்கழக மாணவ அமைப்பினர்  ‘ஜேபி நட்டா கோ பேக்’ கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் ஆளும் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தான் படித்த பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு வந்தார். அப்போது அவரை வழிமறித்த அகில இந்திய மாணவர் … Read more

'கடனுக்காக முதியவர்களை வீட்டினுள் வைத்து சீல் வைத்த வங்கி அதிகாரிகள்' – புதுவையில் கொடூரம்

புதுச்சேரியில் ஜப்தி செய்த வீட்டின் உள்ளே முதியவர்களை வைத்து சீல் வைத்த வங்கி அதிகாரிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி முத்தியால்பேட்டை புளோஸ் கார்மேல் தெருவைச் சேர்ந்தவர் துரை (எ) மாணிக்கவாசகம். இவர் தனது பெற்றோர் மற்றும் மனைவி பிள்ளைகளுடன் தனக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில், பில்டிங் காண்டராக்ட் தொழில் செய்து வரும் இவர், ஒரு தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தார். இந்நிலையில் கடனிற்கான தவணையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இவர் கடன் … Read more

ஒரே குடும்பத்தில் 4 ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் – யார் இவர்கள் தெரியுமா ..?

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் 4 பேர் ஐஓஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் பாஸ் ஆகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில் பிரகாஷ் மிஸ்ரா. இவர் கிராம வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு யோகேஷ் மிஸ்ரா, ஷமா மிஸ்ரா, மாதுரி மிஸ்ரா, லோகேஷ் மிஸ்ரா ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர். கிராம வங்கி அதிகாரியான அனில் பிரகாஷுக்கு தனது இரு ஆண் பிள்ளை மற்றும் இரு பெண் … Read more

அமைச்சரும், நடிகையுமான ரோஜாவை ஒரேநேரத்தில் 3000 புகைப்படக் கலைஞர்கள் படம்பிடித்து சாதனை

ஆந்திர மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை ஒரே நேரத்தில் மூவாயிரம் புகைப்படக் கலைஞர்கள் படம்பிடித்ததற்காகக் கின்னஸ் சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஒருவரை ஒரேநேரத்தில் அதிகம்பேர் படம் எடுத்த சாதனைக்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தன்னைப் படம்பிடித்த புகைப்படக்கலைஞர்களின் பின்னணியில் ரோஜா செல்பியும் எடுத்துக்கொண்டார். இதுகுறித்த படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், ரோஜாவின் சாதனைக்கு ரசிகர்களும் தொண்டர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.     Source link

முதல்வர் பெயரையே மாற்றி சொன்ன பாஜக மாஜி அமைச்சரின் ‘டங்க் சிலிப்’: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

குவாலியர்: மத்திய பிரதேச மாநில முதல்வரின் பெயரையே மாற்றிச் சென்ன பாஜக முன்னாள் அமைச்சர், தனது நாக்கு நழுவிட்டதாக பின்னர் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் இமார்தி தேவி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற பாஜகவினருக்காக நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்றார். குவாலியர் அடுத்த டப்ராவில் பேசும்போது, ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர … Read more

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்திய ஹெச்.டி.எஃப்.சி வங்கி! எவ்வளவு தெரியுமா?

வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, கடனுக்கான வட்டியை கால் சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிதாக பெறப்படும் கடனுக்கு மட்டுமின்றி ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கும் பொருந்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஐந்தாவது முறையாக கடன் வட்டியை ஹெச்டிஎஃப்சி அதிகரித்துள்ளது. மே மாதத்தில் இருந்து இதுவரை 1.15 சதவிகிதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைய கால் சதவிகித வட்டி உயர்வு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகனக் கடன் வட்டி … Read more

யூடியூப் பார்த்து ஒயின் தயாரித்த சிறுவன்..! – காவல்துறை சொல்வது என்ன ..?

யூடியூப் பார்த்து சிறுவன் ஒருவன் கேரளாவில் ஒயின் தயாரித்துள்ளான். யூடியூபில் பார்த்து செய்முறைகளை கொண்டு அந்த சிறுவன் தயாரித்துள்ளான். பாட்டிலில் திராட்சைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த ஒயினை மண்ணில் புதைத்து பின்னர் அதை எடுத்து தனது நண்பனுக்கும் குடிக்க கொடுத்துள்ளான். அதை குடித்த அந்த சிறுவனின் நண்பனுக்கு உடல் சோர்வும் வாந்தியும் ஏற்பட்டதாக மருத்துவமனை கூறுகிறது. தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டது கேரள காவல்துறை, அப்போது சிறுவன் தயாரித்த ஒயினை கைப்பற்றி அதை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். … Read more

சர்வதேச புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரை கவுரவிக்கும் நிகழ்ச்சி ரத்து: சர்ச்சை கருத்துகள் உள்ளதாக போலீசில் புகார்

ஆக்ரா: சர்வதேச புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர்  கீதாஞ்சலி யை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஆக்ராவில் ரத்து செய்யப்பட்டது. இவ்விசயம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், ‘ரெட் சமாதி’ என்ற நாவல் எழுதி சர்வதேச புக்கர் பரிசு பெற்ற இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி யை கவுரவிக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அவரது அந்த நாவலில் ஆட்சேபனைக்குரிய குறிப்புகள் இருப்பதாகவும், அதனால் அவருக்கு பாராட்டு விழா நடத்தக் கூடாது எனக்கூறி ஆக்ராவை சேர்ந்த சந்தீப் … Read more