கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்

டெல்லி: மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மணிப்பூர், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தடை பொருந்தும் என தகவல் வெளியாகியுள்ளது. 13 மாநிலங்களும் கூட்டாக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி பாக்கி வைத்துள்ளதால் நடவடிக்கை என விளக்கம் அளிக்கப்பட்டது. மின்கட்டமைப்பை நிர்வகிக்கும் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் முதல்முறையாக 13 மாநிலத்துக்கு எதிராக தெரிவித்துள்ளது.

டீ ஓகே… ரசகுல்லா ஓகே.. அது என்ன ரசகுல்லா டீ? இணையத்தை தெறிக்கவிடும் புது டிஷ்!

நமது அன்றாட வழக்கங்களில் ஒன்றாகவே கலந்திருக்கிறது டீ. கையில் ஒரு கப் டீ இல்லாமல் பலரின் நாளே தொடங்காது. அந்த அளவுக்கு இந்தியர்களும் நமது பாரம்பரிய டீயும் ஒன்றிப்போயுள்ளது. சிலருக்கு பால் அதிகமாக சேர்த்த டீ பிடிக்கும், சிலருக்கு சர்க்கரை குறைவான டீ பிடிக்கும். இப்படி டீயின் சுவையும் நபருக்கு நபர் வேறுபடும். அவ்வப்போது புதிய வகை முயற்சியில் உருவான உணவுப்பொருட்கள் சில இணையத்தை தெறிக்கவிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது ஒரு புதுவித டீ இணையத்தில் பலரின் கவனத்தையும் … Read more

கர்நாடகாவில் விளையாட்டு வீரர்களுக்கு 2% இட ஒதுக்கீடு – முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக அரசின் அனைத்து துறைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். அண்மையில் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உட்பட 61 பதக்கங்களை வென்றனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த பளுதூக்குதல் வீரர் குருராஜ் பூஜாரி வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா கலப்பு இரட்டை … Read more

ஆபாச உடை அணிபவர்களுக்கு சாட்டை அடி போன்ற தீ்ர்ப்பு… கேரள நீதிமன்றம் அதிரடி!

ஆண்களை ஒப்பிடும்போது இயல்பாகவே அழகாய் இருக்கும் பெண்கள், தாங்கள் அணியும் விதவிதமான உடைகளால் ஆண்களை கவர்ந்திழுக்கதான் செய்கின்றனர். இயற்கையாக அமைந்துள்ள இந்த ஈர்ப்பு ரசனை, அழகியல் என்பதை தாண்டி ஆபசமாக மாறும்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கின்றது. பிறர் முகம்சுளிக்காதபடி பெண்கள் ஆடைகள் அணியும் வரை அவர்களுக்கும் பிரச்னை இல்லை; அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் சிக்கல் இல்லை. மாறாக ஆடை சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் ஆபாசமாக உடை அணியும் தான் பிரச்னை தொடங்குகிறது. இப்படியொரு பஞ்சாயத்து தான் கேரளாவில் … Read more

ஜம்மு காஷ்மீரில் சுமார் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைய வாய்ப்பு – ஹிர்தேஷ் குமார்

ஜம்மு-காஷ்மீரில், சுமார் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக, ஜம்மு-காஷ்மீர் தலைமை தேர்தல் ஆணையர் ஹிர்தேஷ் குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டிற்கு பின், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சிறப்பு வாக்காளர் திருத்தம் வரும் நவம்பர் 25-ம் தேதி முடிவடையும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதோடு, வரும் செப்டம்பர் 15 முதல் … Read more

அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் மின்சார வாகனங்களை உருவாக்க முயற்சி: அமைச்சர் நிதின் கட்கரி

மும்பை; குறைந்த கார்பன்உமிழ்வு, அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் மின்சார வாகனங்களை உருவாக்க முயற்சியில் அமைச்சர் நிதின் கட்கரி ஈடுப்பட்டுள்ளார். மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசின் கொள்கைகள் உள்ளது. மும்பையில் அசோக் லேலண்ட் நிறுவன மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை தொடங்கி வைத்து பேசினார்.

அரசின் நலத்திட்ட உதவியை பெறுவதற்கு ஆதார் கட்டாயம்

புதுடெல்லி: மத்திய மற்றும் மாநில அரசுகளின் நல உதவிகள், மானியங்களைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் அவசியம் என்று இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஆகஸ்டு 11- ம் தேதி அனைத்து மத்திய, மாநில துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுவரையில் அரசின் நல உதவிகள், மானியங்களைப் பெறுவதற்கு, ஆதார் அட்டை இல்லாத நபர், அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதுமானது. ஆதார் சட்டப்பிரிவு 7-ல் இதற்கு … Read more

சி.எம்-ஐயே தூக்கிட்டாங்க… மாஸ்டர் மைண்ட் பாஜக… சும்மா சீண்டி பார்த்த காங்கிரஸ்!

வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் முன்கூட்டியே தயாராக தொடங்கியுள்ளது பாஜக. அதற்கு முன்னோட்டமாக தான் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு, மத்திய தேர்தல் குழு ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த விஷயம் கடந்த இரண்டு நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து இரண்டு முக்கியமான தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். மத்தியப் பிரதேச மாநிலத்தில் … Read more

இப்படிப்பட்ட அரசியல் செய்வதற்கு வெட்கமில்லையா பிரதமரே… ராகுல் காந்தி தாக்கு

புது டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இன்று வியாழக்கிழமை, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஒரு ட்வீட் மூலம் குஜராத்தில் பில்கிஸ் பானோ வழக்கு தொடர்பாக பிரதமர் மோடியை குறிவைத்துள்ளார். குற்றவாளிகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பது பெண்கள் மீதான அக்கட்சியின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற அரசியலில் ஈடுபடுவதற்கு வெட்கப்படவில்லையா என்று … Read more

ராஜஸ்தானில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையிலிருந்து ரூ.11 கோடி நாணயங்கள் திருட்டு

ராஜஸ்தான்; மெஹந்திப்பூர் பாலாஜி என்ற இடத்திலுள்ள எஸ்பிஐ வங்கி கிளையிலிருந்த ரூ.11 கோடி நாணயங்கள் திருடப்பட்டன. ரூ.11 கோடி நாணயங்கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ராஜஸ்தான் ஐகோர்ட்டை எஸ்பிஐ நிர்வாகம் அணிகியுள்ளது. ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவை அடுத்து சி.பி.ஐ. நாணயத் திருட்டு தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.