அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

டெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் அக்னிபாதை திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17 முதல் 23 வயதுக்கு உட்பட்ட அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒன்றிய அரசின் இத்திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், ராணுவத்தில் சேர முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தன. … Read more

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீர் புகை: டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து ஜபல்பூருக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென்று புகை கிளம்பியதால் விமான அவசரமாக மீண்டும் டெல்லிக்கே திரும்பியது. விமானத்தில் திடீர் புகை கிளம்பியபோது விமானம் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன செய்தித்தொடர்பாளர், டெல்லியில் இருந்து இன்று காலை ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று இன்று காலை ஜபல்பூர் நோக்கி புறப்பட்டது. விமானம் மேலெழும்பிய சில நிமிடங்களிலேயே உள்ளே கேபினில் இருந்து புகை கிளம்பியது. இதனையடுத்து … Read more

எகிப்து போர்க்கப்பல்களுடன் இந்திய கடற்படைக் கப்பல் பயிற்சி..!

எகிப்தின் கடற்படைக் கப்பல்களுடன் இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சியும் செங்கடல் பகுதியில் நடைபெற்ற ஒத்திகையில் பங்கேற்றது. எகிப்தின் இஎன்எஸ் அல் ஜூபேர் மற்றும் அபு உபாதா ஆகிய போர்க்கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. கடல் பாதுகாப்பு, பறிமுதல் பயிற்சிகள், தகவல் தொடர்பு, கொடி அணிவகுப்பு உள்ளிட்ட பயிற்சியில் இருநாட்டு கப்பல்களும் பங்கேற்றன. கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சிகளின் போது இந்திய கடற்படை உயர் அதிகாரிகள் … Read more

ஐதராபாத் வரும் பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பு

ஐதராபாத்: ஐதராபாத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மீண்டும் புறக்கணிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 மாதங்களில் 3வது முறையாக பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் நிலச்சரிவு:15 ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் பலி; 44 பேர் மாயம்

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 44 பேரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மணிப்பூரில் கடந்த புதன்கிழமை இரவு ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலரும் சிக்கிக் கொண்டனர். இதுவரை 13 வீரர்களும் பொதுமக்களில் 5 பேரும் மீட்கப்பட்டுள்ளன. 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் ராணுவ வீரர்கள். விபத்து பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சற்று … Read more

மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு.!

மணிப்பூர் நோனி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இதில் சில ராணுவ வீரர்களும் பலியாகினர். மேலும் 55 பேர் உடல்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 20 உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் முடிய இன்னும் 2 அல்லது 3 நாட்களாகலாம் என்றும் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அனுப்பிய தேசியப் பேரிடர் படையினர், ராணுவத்தினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் Source link

இந்தியாவில் சற்றே அதிகரித்த கொரோனா; நேற்று ஒரே நாளில் 17,092 பேருக்கு பாதிப்பு.! மேலும் 29 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக 18 ஆயிரத்து 819 ஆக உயர்ந்தது. நேற்று இது சற்றே குறைந்தது. இதன்படி நேற்று 17 ஆயிரத்து 70 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை ஏறத்தாழ 1,750 குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக … Read more

கடனை கட்ட முடியவில்லை: கடிதம் எழுதி வைத்துவிட்டு கேரள தம்பதியர் எடுத்த விபரீத முடிவு

பழனியில் தனியார் தங்கும் விடுதியில் கடன் தொல்லை காரணமாக கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று கேரளாவைச் சேர்ந்த சுகுமாரன் – சத்தியபாமா தம்பதியர், அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சாமி தரிசனம் செய்ய வந்திருப்பதாகக் கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த தனியார் விடுதி முன்பு கேரள தம்பதியினரின் உறவினர்கள் அழுது கொண்டே வந்தனர். அப்போது விடுதியில் … Read more

ஜிஎஸ்டி மூலம் ஒரே நாடு ஒரே வரி லட்சியம் நிறைவேற்றம் – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி இந்தியாவின் தொழில் செயல்பாட்டை எளிதாக்கியுள்ளது என்றும் ஜிஎஸ்டி மூலம் ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற லட்சியம் நிறைவேறியுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியா முழுமைக்கும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 2017 ஜூலை 1 அன்று சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்தது. ஜிஎஸ்டி விகிதம் 5%,12%,18%,28% என நான்கு … Read more

தையல்கடைக்காரரைக் கொன்ற நபரின் பைக் நம்பர் 2611.. மும்பைத் தாக்குதலை நினைவுபடுத்தும் எண்ணைப் பெற RTO அதிகாரிகளுக்கு கூடுதலாக பணம் தந்தது அம்பலம்..!

உதய்பூரில் தையல்கடைக்காரரைக் கொன்ற கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி தமது பைக்கிற்கு 2611 என்ற எண்ணைப் பெற RTO அதிகாரிகளுக்கு 5000 ரூபாய் கூடுதலாக பணம் கொடுத்துள்ளார். மும்பைத்தாக்குதல் சம்பவத்தை நினைவுபடுத்தும் இந்த எண் விசாரணையில் புதிய கோணத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த பைக்கை பறிமுதல் செய்துள்ள போலீசார் உதய்பூர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதனிடையே ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க இணைய சேவைகள் 24 மணி நேரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. Source … Read more