நிதிஷ்குமாருக்கு புதிய சிக்கல்..! – அமைச்சர் பதவி கேட்கும் சட்டமன்ற உறுப்பினர்..!!

பாஜகவுடனான கூட்டணி ஆட்சியை முறித்துக்கொண்டு தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருள் ஆனது. பல்வேறு அரசியல் தலைவர்கள் நிதிஷ் குமாரை பாராட்டினார்கள். நிதிஷ் குமாரின் இந்த துணிச்சலான முடிவு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பதவியில் நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவி ஏற்றனர். இது பீகார் மட்டுமின்றி பல மாநில அரசியல் பிரமுகர்களை ஆச்சர்ய படவைத்தது. நிதிஸ் குமார் … Read more

ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஒருபோதும் இந்திய குடிமக்களாக கருதப்பட மாட்டார்கள் – அனுராக் தாக்கூர்

மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் ஒருபோதும் இந்திய குடிமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபட கூறியுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஏஎன்ஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர்,ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்ப வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். Source link

அதிமுக அலுவலக சாவி விவகாரம்: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: டெல்லி: அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உட்சபட்ச மோதல் எழுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அன்றைய தினம் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் உள்ளே நுழைந்தார். மேலும் அங்கு நடந்த வன்முறையில் பொதுமக்கள் வாகனங்கள் … Read more

14 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தனது காதலனின் பிறப்புறுப்பை வெட்டியெறிந்த தாய்!

தனது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தனது லிவ் -இன் பார்ட்னரின் பிறப்புறப்பை வெட்டியுள்ளார் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண். உத்தரபிரதேசத்திலுள்ள லகிம்பூர் கேரியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாவாகன்ஜ் பகுதியில் 36 வயது பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் குடிக்கு அடிமையாகி தன்னை துன்புறுத்தியதால் கடந்த 2 வருடங்களாக அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு 32 வயது … Read more

கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்…

திருவனந்தபுரம் : கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். விழிஞ்சம் துறைமுகம் என்பது சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்கும் பணி விழிஞ்சம் கடற்கரையில் துவங்கியுள்ளது. ஏற்கனவே, இந்த திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியில் அமைக்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்ட போது பெரும்பாலான மீனவர்கள் எதிரிப்பு தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து கேரளாவிற்கு இடம் பெயர்ந்தது. அங்கு விழிஞ்சம் பகுதியில் துறைமுகத்திற்கு ஆரம்ப … Read more

கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்

டெல்லி: மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மணிப்பூர், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தடை பொருந்தும் என தகவல் வெளியாகியுள்ளது. 13 மாநிலங்களும் கூட்டாக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி பாக்கி வைத்துள்ளதால் நடவடிக்கை என விளக்கம் அளிக்கப்பட்டது. மின்கட்டமைப்பை நிர்வகிக்கும் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் முதல்முறையாக 13 மாநிலத்துக்கு எதிராக தெரிவித்துள்ளது.

டீ ஓகே… ரசகுல்லா ஓகே.. அது என்ன ரசகுல்லா டீ? இணையத்தை தெறிக்கவிடும் புது டிஷ்!

நமது அன்றாட வழக்கங்களில் ஒன்றாகவே கலந்திருக்கிறது டீ. கையில் ஒரு கப் டீ இல்லாமல் பலரின் நாளே தொடங்காது. அந்த அளவுக்கு இந்தியர்களும் நமது பாரம்பரிய டீயும் ஒன்றிப்போயுள்ளது. சிலருக்கு பால் அதிகமாக சேர்த்த டீ பிடிக்கும், சிலருக்கு சர்க்கரை குறைவான டீ பிடிக்கும். இப்படி டீயின் சுவையும் நபருக்கு நபர் வேறுபடும். அவ்வப்போது புதிய வகை முயற்சியில் உருவான உணவுப்பொருட்கள் சில இணையத்தை தெறிக்கவிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது ஒரு புதுவித டீ இணையத்தில் பலரின் கவனத்தையும் … Read more

கர்நாடகாவில் விளையாட்டு வீரர்களுக்கு 2% இட ஒதுக்கீடு – முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக அரசின் அனைத்து துறைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். அண்மையில் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உட்பட 61 பதக்கங்களை வென்றனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த பளுதூக்குதல் வீரர் குருராஜ் பூஜாரி வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா கலப்பு இரட்டை … Read more

ஆபாச உடை அணிபவர்களுக்கு சாட்டை அடி போன்ற தீ்ர்ப்பு… கேரள நீதிமன்றம் அதிரடி!

ஆண்களை ஒப்பிடும்போது இயல்பாகவே அழகாய் இருக்கும் பெண்கள், தாங்கள் அணியும் விதவிதமான உடைகளால் ஆண்களை கவர்ந்திழுக்கதான் செய்கின்றனர். இயற்கையாக அமைந்துள்ள இந்த ஈர்ப்பு ரசனை, அழகியல் என்பதை தாண்டி ஆபசமாக மாறும்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கின்றது. பிறர் முகம்சுளிக்காதபடி பெண்கள் ஆடைகள் அணியும் வரை அவர்களுக்கும் பிரச்னை இல்லை; அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் சிக்கல் இல்லை. மாறாக ஆடை சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் ஆபாசமாக உடை அணியும் தான் பிரச்னை தொடங்குகிறது. இப்படியொரு பஞ்சாயத்து தான் கேரளாவில் … Read more

ஜம்மு காஷ்மீரில் சுமார் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைய வாய்ப்பு – ஹிர்தேஷ் குமார்

ஜம்மு-காஷ்மீரில், சுமார் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக, ஜம்மு-காஷ்மீர் தலைமை தேர்தல் ஆணையர் ஹிர்தேஷ் குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டிற்கு பின், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சிறப்பு வாக்காளர் திருத்தம் வரும் நவம்பர் 25-ம் தேதி முடிவடையும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதோடு, வரும் செப்டம்பர் 15 முதல் … Read more