பில்கிஸ் பானோ வழக்கு: நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்? ராகுல் சாடல்

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் அவர்களே, உங்கள் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடு முழுவதும் பார்க்கிறது என்றும், நாட்டுப் பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப் போகிறீர்கள் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். கூட்டுப் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து … Read more

பீகார் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசனை; 35 லோக்சபா இடங்களுக்கு இலக்கு.! ஆள் தூக்கும் வேலையை கைவிட்டது பாஜக

புதுடெல்லி: பீகார் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்திய நிலையில், அம்மாநிலத்தில் 35 லோக்சபா இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இடைபட்ட காலத்தில் ஆளுங்கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை தூக்கும் வேலையில் பாஜக ஈடுபட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.  பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. நேற்று அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று டெல்லி பாஜக தலைமையகத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் … Read more

’45 கி.மீ.க்கு ரூ.3000 கட்டணமா?’.. உபர் சேவையால் புலம்பும் நொய்டா வாடிக்கையாளர்!

விமான நிலையத்திலிருந்து வீடு வரை 45 கிலோமீட்டர் செல்வதற்கு உபர் நிறுவனம் ரூ.3,000 கட்டணம் வசூலித்ததாக நொய்டாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நொய்டாவை சேர்ந்த ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு செல்ல உபர் காரை பயன்படுத்தினார். அவர் வீடு வந்து சேர்ந்தவுடன் அவருக்கான கட்டணத்தை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வெறும் 45 கிலோமீட்டர் மட்டுமே … Read more

“சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளரின் மகள் நான்…” – வைரல் ஆன சித்திக் கப்பன் மகளின் உரை

திருவனந்தபுரம்: தேசத் துரோக சட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்களாக சிறையில் இருந்து வரும் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள் பேசிய சுதந்திர தின உரை வைரலாகி வருகின்றது. 2020-ஆம் உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராசில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டார். தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திக் கப்பனுக்கு இரண்டு வருடங்களாக ஜாமீன் வழங்கப்படாமல் … Read more

Tirupati: அக்டோபர் சிறப்பு தரிசன டிக்கெட் – ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் 300 ரூபாய் தரிசன கட்டண டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ளது, திருப்பதி ஏழுமலையான் கோவில் . இந்தக் கோவில், உலகப் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை அடுத்து, கொரோனா பரவல் குறைந்ததை … Read more

அரசு நிலத்தை பொதுமக்களுக்கு விற்று ரூ.11 கோடியை ‘ஆட்டை’ போட்ட அதிகாரி கைது; 4 ஆண்டுக்கு பின் அதிரடி

லக்னோ: அரசு நிலத்தை பொதுமக்களுக்கு விற்று ரூ. 11 கோடி அளவிற்கு மோசடி செய்த ரியல் எஸ்டேட்  நிறுவன அதிகாரியை 4 ஆண்டுக்கு பின் போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனில் குமார் துல்சியானி (58) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக பிளாட் மற்றும் வீட்டு மனைகளை விற்பதாக கூறி ெபாதுமக்களிடம் ரூ.11 கோடி மோசடி செய்தார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட … Read more

கூடுதலாக 50,000 கோடி ரூபாய் கடன் வசதி.. கோவிட் நிவாரண வரம்பு அதிகரிப்பு.!

அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவிட் பெருந்தொற்றினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிறு, குறு தொழில்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசால் அவசர கால கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வரம்பை அதிகரிக்க இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் அவசர … Read more

பாஜக நாடாளுமன்றக் குழுவில் அதிரடி மாற்றங்கள் – நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் விடுவிப்பு

புதுடெல்லி: பாஜகவில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் ஆகியோர் நாடாளுமன்றக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுதான் பாஜகவின் முடிவெடுக்கும் மிகப் பெரிய அமைப்பாகும். கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா, மக்களவை எம்.பி. சத்யநாராயணன் ஜட்டியா, பாஜக தேசிய ஓபிசி மோர்சா தலைவர் கே.லட்சுமணன், தேசியச் செயலர் சுதா யாதவ் ஆகியோர் புதிதாக நாடாளுமன்ற … Read more

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்கை தேவை – உச்சநீதிமன்றம்

மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளதால், அத்தகைய தலையீடு எதுவும் இல்லாமல் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச கால்பந்து கவுன்சிலான FIFA தொடர்பான வழக்கை மத்திய அரசின் கோரிக்கையின் படி, அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. உரிமத்தை ரத்து செய்துள்ள ஃபிபா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசின் சார்பில் … Read more

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.! நீட் விலக்கு, காவிரி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பேச்சு

டெல்லி : பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். நீட் விலக்கு, காவிரி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்காக பிரதமருக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். இந்தநிலையில் மாலை 4 மணி அளவில் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more