ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்

புதுடெல்லி: மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் நேற்று முன்தினம் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மற்ற நாடுகளின் ராணுவ செலவு விவரங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சேகரிக்கவில்லை. எனினும் ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (எஸ்ஐபிஆர்ஐ) இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021-ம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவ செலவினங்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதன்படி அமெரிக்காவின் ராணுவ செலவு ரூ.63.4 லட்சம் கோடியாகவும் சீனாவின் ராணுவ செலவு … Read more

காரில் கட்டுக்கட்டாக பணம்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களின் காரில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, ராஜேஸ், கொங்காரி ஆகிய எம்எல்ஏக்கள், நேற்று மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவுக்கு காரில் வந்தனர். அவர்கள் ஏராளமான பணத்துடன் வருவதாக மேற்கு வங்க மாநில போலீசாருக்கு … Read more

கார்கில் வெற்றி நினைவாக 5140-ம் எண் முனைக்கு ‘துப்பாக்கி மலை’ பெயர்

புதுடெல்லி: கார்கில், டிராஸ் செக்டாரில் உள்ள 5140வது முனைக்கு, ‘துப்பாக்கி மலை’ என்று ராணுவம் பெயர் சூட்டியுள்ளது. இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘கடந்த 1996ம் ஆண்டு இந்திய  ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு எதிரி துருப்புக்கள் மற்றும் 5140வது முனை உட்பட அவர்களின் பிடியில் இருந்த பாதுகாப்பு நிலைகளில் கடும் தாக்குதல் நடத்தியது. இது, கார்கிலில் போரை விரைவாக முடிப்பதற்கான முக்கிய காரணியாக அமைந்தது. இதன் நினைவாக, இந்த 5140வது முனைக்கு, ஆபரேஷன் விஜய்யில் … Read more

தாயை ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து சென்று கௌரவித்த மகன்! நெகிழ்ச்சிப் பின்னணி

தாய் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை கொண்டாடும் விதமாக, அவருக்கு ஹெலிகாப்டர் பயணத்தை பரிசாக அளித்துள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த நபர். யோகேஷ் சவுகான் என்பவரின் தாய், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கு மறக்க முடியாத பரிசை வழங்க நினைத்த யோகேஷ் , ஹெலிகாப்டர் மூலமாக தாயை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தனது தாயுடன் யோகேஷ் சவுகான் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதை காண ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் தாய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பொதுமக்களின் மரியாதையை … Read more

அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் 676 மாவட்ட சட்டப் பணிகள் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆணையங்களின் தலைவராக அந்தந்த மாவட்ட நீதிபதிகள் செயல்படுகின்றனர். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தேசிய அளவிலான முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றியானார். அவர் பேசியதாவது: நாடு விடுதலை அடைந்து 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை … Read more

நான் துரோகி என்றால் நீங்கள் யார்? ஏக்நாத் ஷிண்டே சரமாரி கேள்வி!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மாநிலத்தை விட்டு வெளியேறினர். இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை உத்தவ் தாக்கரே நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும் பொறுப்பேற்றனர். நம்பிக்கை … Read more

5ம் நாள் ஏலம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி விற்பனை

புதுடெல்லி:  இந்தியாவில் இந்தாண்டு செப்டம்பரில் இருந்து 5ஜி அலைக்கற்றை சேவையை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏலம் கடந்த செவ்வாய் முதல் நடைபெற்று வருகிறது. நேற்றும் 5வது நாளாக ஏலம் நடைபெற்றது. நேற்று முன்தினம் ரூ.1.49,855 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதன்மூலம், 71 சதவீத அலைக்கற்றை விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்றும் 5ம் நாளாக ஏலம் தொடர்ந்து. இதில், ரூ.1,49,966 கோடிக்கு ஏலத்தொகை உயர்ந்தது. இன்றும் ஏலம் நடத்தப்படுகிறது. இந்த ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ … Read more

ஆக.,1 முதல் மதுபானங்களுக்கு பற்றாக்குறை.. 468 மதுக்கடைகள் மூடும் சூழல்.. எங்கு தெரியுமா?

புதிய மதுபானக் கொள்கையை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் நாளை ஆகஸ்ட் 1 முதல் மதுபானத்திற்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுக்கொள்கையை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி சில்லறை மதுக்கடைகளை அரசுக்கு பதில் தனியார் நடத்தும் என்றும், அதற்கான உரிமத்தையும் வழங்கி அறிவித்திருந்தது. அதன்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மதுபானங்களை விநியோகிக்க திருத்தப்பட்ட கலால் விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த புதிய மதுக்கொள்கை இந்த நடப்பாண்டு … Read more

அழுக்கு படுக்கையில் படுக்க வைத்த பஞ்சாப் அமைச்சர் – மருத்துவ பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

சண்டிகர்: அழுக்கான படுக்கையில் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை படுக்க வைத்த பஞ்சாப் மாநில அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜாவுக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன. அதே நேரத்தில் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் சேத்தன்சிங் ஜோரம்ஜா. இவர் நேற்றுமுன்தினம் சண்டிகர் அருகிலுள்ளஃபரீத் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த படுக்கைகள் சுகாதாரமற்றவையாகவும், சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் துணைவேந்தர் ராஜ்பகதூரிடம், அமைச்சர் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து துணைவேந்தர் … Read more

நித்யானந்தா பெயரில் மோசடி செய்தவருக்கு அடி உதை!

இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா, தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக அறிவித்தார். அதற்கு கைலாசா என பெயரிட்ட அவர், அவ்வப்போது வீடியோ மூலம் காட்சியளித்து வந்த அவர், அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார். மேலும், தனது சீடர்களுக்கு சத்சங்கங்களையும் வழங்கி வந்தார். இதனிடையே, அண்மைக்காலமாக அவர் பற்றிய தகவல் வெளி வராமல் இருந்தது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், தான் உயிரிழக்கவில்லை என்று தனது … Read more