சட்டவிரோத பண பரிமாற்றம் : அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நெருக்கமான மேலும் இருவர் கைது..!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நெருக்கமான மேலும் இருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்ற காவலில் உள்ள சத்யேந்தர் ஜெயின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் வர்த்தக கூட்டாளிகளான அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயினை, அமலாக்க துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். Source link

மராட்டியத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பாரதிய ஜனதாவை போல தொல்லை கொடுக்க மாட்டோம்: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேட்டி

மும்பை: மராட்டியத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பாரதிய ஜனதாவை போல தொல்லை கொடுக்க மாட்டோம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார். பத்ரா சாவல் நில மோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத் இன்று மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக காலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்த நாள் முதல் பாரதிய ஜனதா தொல்லை கொடுத்து வந்தது. அதேபோல நாங்கள் தற்போது அமைந்துள்ள ஷிண்டே தலைமையிலான … Read more

மணிப்பூர் நிலச்சரிவு – ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு; தேடும் பணி தீவிரம்

மணிப்பூர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்காட்டி வருகின்றனர். மணிப்பூரின் நோனி மாவட்டத்திலுள்ள துபுல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் கடந்த புதன்கிழமை இரவு அன்று இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் டெரிடோரியல் ராணுவ … Read more

4ம் தேதி பலப்பரீட்சை – மெஜாரிட்டியை நிரூபிப்பாரா ஏக்நாத் ஷிண்டே?

வரும் 4 ஆம் தேதி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டு உள்ளார். சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருந்த அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதை அடுத்து, பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, அண்மையில், முதலமைச்சர் … Read more

எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு உள்ளது: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தகவல்

டெல்லி: எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் உட்கட்சி மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஈபிஎஸ் அணியைப் பொறுத்தவரை ஜூலை 11-ல் பொதுக்குழு நடத்துவது; அதில் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளராக மகுடம் சூட்டுவது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்காக அத்தனை வியூகங்களையும் வகுத்து செயல்பட்டு வருகிறது எடப்பாடி பழனிசாமி கோஷ்டி. ஆனால் ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

இந்த போலீஸ் ஸ்டேஷனில் பூனைகள்தான் காவலர்கள்.. எங்கே தெரியுமா?

பழமையான அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள் எலிகளுக்கு உணவாகி வருவதால் அதனிடம் இருந்து எப்படிதான் ஆவணங்களை காப்பாற்றுவது என ஊழியர்கள் விழிப்பிதுங்கிப் போயிருப்பார்கள். ஆனால் கர்நாடகாவின் கவுரிபிதனூரில் உள்ள காவல் நிலைய போலீசாருக்கு அந்த கவலை இருக்காது. ஏனெனில் போலீசாருக்கே காவலாக பீரா என்ற பூனையை நியமித்திருக்கிறார்கள் கவுரிபிதனூர் போலீசார். பெங்களூருவில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிக்கபள்ளாப்பூரில் உள்ள கவுரிபிதனூர் காவல்நிலையம். இங்கு எலிகளின் தொல்லையை கட்டுப்படுத்த பூனையை வளர்க்கும் முறையை போலீசார் … Read more

ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் என மக்களவை செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து 25-ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் … Read more

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டிப் பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மருத்துவரும் விடுதலைப் போராட்ட வீரரும் மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சருமான பி.சி.ராயின் பிறந்த நாள் தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், உயிர்களைக் காக்கவும், உலக மக்களின் நலத்துக்கும் தம் கடின உழைப்பால் முக்கியப் பங்காற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களின் தொண்டு பற்றிய ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். Source link

புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

டெல்லி :புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு 2வது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி நேற்று மாலை 6 மணி 2 நிமிடத்தில் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ராக்கெட்டில் வணிக ரீதியாக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஓ செயற்கைக்கோள், 155 கிலோ எடை கொண்ட நியூசர் … Read more

'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' – உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதால், தான் எந்த கருத்தை கூறினாலும் அந்த அதிகாரம் தனக்கு கைக்கொடுக்கும் என நுபூர் ஷர்மா நினைத்தாரா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். பாஜகவின் நுபூர் சர்மா முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தியாவிலும் பல இடங்களில் போராட்டங்களும், கலவரமும், வன்முறையும் வெடித்தது. இதனை தொடர்ந்து நுபூர் சர்மாவிற்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் … Read more