’45 கி.மீ.க்கு ரூ.3000 கட்டணமா?’.. உபர் சேவையால் புலம்பும் நொய்டா வாடிக்கையாளர்!

விமான நிலையத்திலிருந்து வீடு வரை 45 கிலோமீட்டர் செல்வதற்கு உபர் நிறுவனம் ரூ.3,000 கட்டணம் வசூலித்ததாக நொய்டாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நொய்டாவை சேர்ந்த ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு செல்ல உபர் காரை பயன்படுத்தினார். அவர் வீடு வந்து சேர்ந்தவுடன் அவருக்கான கட்டணத்தை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வெறும் 45 கிலோமீட்டர் மட்டுமே … Read more

“சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளரின் மகள் நான்…” – வைரல் ஆன சித்திக் கப்பன் மகளின் உரை

திருவனந்தபுரம்: தேசத் துரோக சட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்களாக சிறையில் இருந்து வரும் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள் பேசிய சுதந்திர தின உரை வைரலாகி வருகின்றது. 2020-ஆம் உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராசில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டார். தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திக் கப்பனுக்கு இரண்டு வருடங்களாக ஜாமீன் வழங்கப்படாமல் … Read more

Tirupati: அக்டோபர் சிறப்பு தரிசன டிக்கெட் – ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் 300 ரூபாய் தரிசன கட்டண டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ளது, திருப்பதி ஏழுமலையான் கோவில் . இந்தக் கோவில், உலகப் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை அடுத்து, கொரோனா பரவல் குறைந்ததை … Read more

அரசு நிலத்தை பொதுமக்களுக்கு விற்று ரூ.11 கோடியை ‘ஆட்டை’ போட்ட அதிகாரி கைது; 4 ஆண்டுக்கு பின் அதிரடி

லக்னோ: அரசு நிலத்தை பொதுமக்களுக்கு விற்று ரூ. 11 கோடி அளவிற்கு மோசடி செய்த ரியல் எஸ்டேட்  நிறுவன அதிகாரியை 4 ஆண்டுக்கு பின் போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனில் குமார் துல்சியானி (58) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக பிளாட் மற்றும் வீட்டு மனைகளை விற்பதாக கூறி ெபாதுமக்களிடம் ரூ.11 கோடி மோசடி செய்தார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட … Read more

கூடுதலாக 50,000 கோடி ரூபாய் கடன் வசதி.. கோவிட் நிவாரண வரம்பு அதிகரிப்பு.!

அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவிட் பெருந்தொற்றினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிறு, குறு தொழில்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசால் அவசர கால கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வரம்பை அதிகரிக்க இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் அவசர … Read more

பாஜக நாடாளுமன்றக் குழுவில் அதிரடி மாற்றங்கள் – நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் விடுவிப்பு

புதுடெல்லி: பாஜகவில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் ஆகியோர் நாடாளுமன்றக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுதான் பாஜகவின் முடிவெடுக்கும் மிகப் பெரிய அமைப்பாகும். கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா, மக்களவை எம்.பி. சத்யநாராயணன் ஜட்டியா, பாஜக தேசிய ஓபிசி மோர்சா தலைவர் கே.லட்சுமணன், தேசியச் செயலர் சுதா யாதவ் ஆகியோர் புதிதாக நாடாளுமன்ற … Read more

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்கை தேவை – உச்சநீதிமன்றம்

மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளதால், அத்தகைய தலையீடு எதுவும் இல்லாமல் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச கால்பந்து கவுன்சிலான FIFA தொடர்பான வழக்கை மத்திய அரசின் கோரிக்கையின் படி, அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. உரிமத்தை ரத்து செய்துள்ள ஃபிபா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசின் சார்பில் … Read more

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.! நீட் விலக்கு, காவிரி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பேச்சு

டெல்லி : பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். நீட் விலக்கு, காவிரி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்காக பிரதமருக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். இந்தநிலையில் மாலை 4 மணி அளவில் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

“வெளிநாட்டில் நான் இந்திய அரசியல் பேசுவதில்லை” – தாய்லாந்து வாழ் தமிழருக்கு அமைச்சர் ஜெய்சங்கர் சமாளிப்பு பதில்

பாங்காக்: “வெளிநாட்டில் நான் இந்திய அரசியல் பற்றிப் பேசுவதில்லை” என்று கூறிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவுக்கு வந்து கேளுங்கள், இதே கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்” என்று சுவாரஸ்யமாக பதிலளித்தார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தாய்லாந்து சென்றிருந்தார். பாங்காகில் இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் ஒருவர் “நான் தமிழர், தற்போது மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறிப்பாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நிலவும் பிரச்சினைகள் … Read more

ரோஹிங்கியாக்கள் தடுப்பு மையத்தில் தான் இருப்பார்கள் -உள்துறை அமைச்சகம் விளக்கம்

புது டெல்லி: டெல்லி பக்கர்வாலாவில் உள்ள EWS (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான குடியிருப்பு) குடியிருப்பில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகள் குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரது அறிக்கைக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், ​​​​ரோஹிங்கியாக்கள் தடுப்பு மையங்களில் தங்கியிருப்பார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியது. சட்டவிரோதமாக குடியேறிய புதிய ரோஹிங்கியாக்கள் EWS குடியிருப்புகளை வழங்குவதற்கு உள்துறை அமைச்சகம் (MHA) எந்தப் பிரதிநிதித்துவமும் செய்யவில்லை என்று HMO … Read more