வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கேரள ராணுவ கேப்டன் சடலம் மீட்பு: மனைவியை பார்த்துவிட்டு திரும்பிய போது சோகம்

போபால்: மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த ராணுவ கேப்டன் நிர்மல் சிவராஜன் சடலம் மூன்று நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த இளம் ராணுவ அதிகாரி கேப்டன் நிர்மல் சிவராஜன் (32), தனது சொந்த குடியிருப்பில் இருந்து பச்மாரிக்கு கடந்த 15ம் தேதி காரில் சென்றார். மீண்டும் பணியில் சேர்வதற்காக சென்ற அவர் திடீரென மாயமானார். அன்றைய தினம் அப்பகுதியில் கடுமையான மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கி … Read more

காங்கிரஸ் ஆட்சியின்போது பஞ்சாப் வேளாண் துறையில் ரூ.150 கோடி ஊழல் அம்பலம்

சண்டிகர்: பஞ்சாப் வேளாண் துறையில் ரூ.150 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில வேளாண் துறை அமைச்சர் குல்தீப் சிங், மாநில வேளாண் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்துவருகிறார். அப்போது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.150 கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த … Read more

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ ரைடு..! சிக்கிய பொருட்கள் விபரம் ..!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் இன்று சிபிஐ சோதனை நடத்திய நிலையில், அவரது வீட்டில் பென்சில்கள் மற்றும் ஜியோமெட்ரி பாக்ஸ்களைத் தவிர வேறு எதையும் சிபிஐ கண்டுபிடிக்காது என்று ஆம் ஆத்மி கட்சி கேலி செய்தது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி திட்டம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இடம் பெற்ற பிறகுதான் சிபிஐ மணீஷ் சிசோடியாவின் வீட்டிற்கு வந்ததாக குற்றம் சாட்டினார்.சிபிஐ கடந்த ரெய்டுகளில் எதையும் கண்டுபிடிக்கவில்லை, இன்று எதையும் … Read more

நாங்கள் நெருக்கமாக இருந்தால் டேட்டிங்கா?: நடிகருடனான உறவு குறித்து நடிகை பதில்

மும்பை: ஒருவருடன் நாம் நெருக்கமாக இருந்தால் அது டேட்டிங்கா? என்று நடிகை ஷெஹ்னாஸ் கில் கேள்வி எழுப்பி உள்ளார். பாலிவுட் நடிகை ஷெஹ்னாஸ் கில் – நடன இயக்குனரும், நடிகருமான ராகவ் ஜூயல் ஆகிய இருவரும் நெருக்கமாக இருப்பதாகவும், ‘டேட்டிங்’ செய்து வருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மும்பையில் ஷெஹ்னாஸ் கில்லின் சகோதரர் ஷெஹ்பாஸ் படேஷாவின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெஹ்னாஸ் கில்லிடம்,  ராகவ் ஜூயலுடனான உறவு … Read more

`ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக்கொள்வது போல நிதிஷ்குமாரும்…’- பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

வெளிநாடுகளில் ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக் கொள்வது போல், நிதிஷ்குமார் தனது கூட்டணியை மாற்றியிருப்பதாக பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் விலகினார். தற்போது மெகா கூட்டணியில் இணைந்து அவர் முதலமைச்சர் ஆகியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கைலாஷ் விஜய் வர்கியா, “நான் வெளியூர் பயணம் செய்யும் போது, அங்குள்ள பெண்கள் எப்போது வேண்டுமானாலும் … Read more

பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட எஸ்டிபிஐ எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என கல்வி அமைச்சர் சி.வி.நாகேஷ் தெரிவித்தார். இதற்கு எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக தொடக்கக் கல்வி அமைச்சர் சி.வி.நாகேஷ் கூறும்போது, “பள்ளிகளில் மாணவர்களுக்கு பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பயிற்றுவிக்கும் வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் தேசிய கீதம் பாட வேண்டும். தேசிய கீதம் பாடாத பள்ளிகளை கண்காணித்து வருகிறோம். அவற்றின் மீது விரைவில் நடவடிக்கை … Read more

'ராணுவத்தில் சேர விரும்பினேன்.. ஆனால்..!' – மனமுருகிய ராஜ்நாத் சிங்!

“ராணுவத்தில் சேர விரும்பியதாகவும், ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக, ராணுவத்தில் இணைய விரும்பவில்லை” என, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உருக்கமாகத் தெரிவித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்நாத் சிங் இருக்கிறார். இவர், அமைச்சரவையில் மூத்த அமைச்சர் மற்றும் கட்சியிலும் மூத்தத் தலைவர். பாஜக தேசியத் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு, … Read more

லே லடாக்கின் இயற்கை அழகை ஐஆர்சிடிசியுடன் இணைந்து பாதுகாப்பாக ரசியுங்கள்

புதுடெல்லி: லே லடாக்கின் இயற்கை அழகைப் பார்க்க விருப்பம் உண்டா? ஆனால் விமான கட்டணம், தங்கும் வசதிகள் என பல விஷயங்கள் உங்களை இயற்கையை ரசிக்க தடுக்கிறதா? லே லடாக்கின் இயற்கை அழகைக் காட்ட IRCTC மீண்டும் ஒரு டூர் பேக்கேஜை உருவாக்கியுள்ளது. இந்த சுற்றுப்பயணம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து தொடங்கும். 7 பகல் மற்றும் 6 இரவுகள் கொண்ட இந்த டூர் பேக்கேஜின். கட்டணம் ஒரு நபருக்கு ரூ 41,500/-லிருந்து தொடங்குகிறது. லே லடாக்கின் இயற்கை … Read more

மகாராஷ்டிராவில் ஆயுதங்களுடன் மிதந்த மர்ம படகு – ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல்

மும்பை: மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியை மர்ம படகு நேற்று நெருங்கியது. அந்த படகில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் ராய்காட் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கடல் பகுதியை நேற்று மர்ம படகு நெருங்கியது. இந்த படகு குறித்து போலீஸாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து படகை ஆய்வு செய்தனர். அதில் இருந்த பெட்டியில் … Read more

டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ ரெய்டு

டெல்லியில் அரசின் புதிய மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு, கலால்துறை ஆணையர் கோபிகிருஷ்ணாவின் அலுவலகம் உள்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுகுறித்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மணீஷ் சிசோடியா குறிவைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் தினசரி நாளிதழில், டெல்லியின் கல்வித்துறை குறித்தும், அத்துறையின் அமைச்சரான மணீஷ் சிசோடியாவை … Read more