கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!

புதுச்சேரி: கல்வி மற்றும் கலாச்சாரப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள துருக்கி மாணவர்களுக்கு சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலா வரும் மாணவர்கள், அம்மாநிலத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்கின்றனர். அந்த வகையில் துருக்கி நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ள 15க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள், பாரம்பரிய கலையான சுடு களிமண் பொம்மை செய்யும் பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு … Read more

மனைவியை வேறு பெண்ணுடன் ஒப்பிட்டு பேசுவது கொடுமை – கேரள உயர் நீதிமன்றம் கருத்து

கொச்சி: மனைவி கேட்ட விவாகரத்தை வழங்கிய குடும்ப நல நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து கணவர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில், கணவர் தொடர்ந்து, தனது மனைவியை, தனக்கு சரியான ஜோடி இல்லை என்றும், தனது எதிர் பார்ப்புகளுக்கு ஏற்றபடி … Read more

பெண்களின் உடை குறித்து கோழிக்கோடு நீதிமன்றம் சர்ச்சை கருத்து

கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளரும் மாற்றுத் திறனாளியுமான சிவிக் சந்திரன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அத்துடன், அந்தப் பெண் எழுத்தாளருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கோழிக்கோடு நீதிமன்றம், எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  தீர்ப்பின் போது நீதிமன்றம் கூறிய சில … Read more

இந்தியாவில் கடந்தாண்டில் 31 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி: வெயிலால் கோதுமை உற்பத்தி 3% சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் 2021-2022 பயிர் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 31.57 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டை விட இது அதிகம். நாட்டில் 2021-22 பயிர் ஆண்டுக்கான (ஜூலை 2021 – ஜூன் 2022 வரை) நான்காவது முன்கூட்டிய  மதிப்பீட்டை ஒன்றிய விவசாய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன்  2022ம் ஆண்டில்  முடிந்த பயிர் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய  உற்பத்தி 31 கோடியே 57 லட்சம் டன்களாக இருக்கும். கடந்த  பயிர் … Read more

வாக்காளர்கள் இலவச திட்டங்களை பெறுவதை விட கண்ணியமாக வருவாய் ஈட்டவே விரும்புவார்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: இலவசங்களுக்கு பதில் கண்ணியமாக வருவாய் ஈட்டக்கூடிய நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலின் போது அர்த்தமற்ற இலவச வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரிப்பதைத் தடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மாநில அரசுகள் ஏற்கெனவே கடனில் தத்தளித்து வரும் நிலையில், இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் கடன் வாங்க வேண்டி இருப்பதாக … Read more

திருப்பதியில் அக்டோபர் மாத த்திற்கான ரூ.300 தரிசன கட்டணம் ஆன்லைனில் வெளியீடு.!

திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசனம் டிக்கெட்கள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரையிலான 300ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது. எனவே தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 26 நாட்களுக்கான 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. … Read more

ஒடிசாவில் ஒரு வாரமாக பெய்யும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு: 4.67 லட்சம் பேர் பாதிப்பு.. உணவின்றி தவிக்கும் மக்கள்..!!

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் 4 லட்சத்து 67 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவார காலமாக நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாநதியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் மாகாணத்தில் தீரத்தில் அமைந்துள்ள சம்பல்பூர், ஜகத்சிங்பூர், கேந்திரபாலா, பூரே, குர்தா மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. சம்பல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிகவும் நீளமான அணையான ஹிராகுட் அணையில் … Read more

பிஹார் புதிய சட்ட அமைச்சருக்கு எதிராக ஆள் கடத்தல் வழக்கில் கைது வாரன்ட்

பாட்னா: பிஹாரின் புதிய சட்ட அமைச்சர் கார்த்திகேய சிங்குக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். பிஹாரில் பாஜக.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றனர். … Read more

இலவசங்களுக்கு எதிரான வழக்கில் இணைய ஆந்திர அரசு மனு

இலவசங்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் ஆந்திர அரசு தாமாக முன்வந்து இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு மனுதாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.எஸ்.ஆர்.கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் விஜய சாய் ரெட்டி, ஆந்திர அரசு அறிவித்துள்ள இலவசத் திட்டங்கள் சமூகத்திற்கான முதலீடுகள் என்று கூறினார். ஆந்திர அரசு விடுத்துள்ள அறிக்கையில் 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி, மத்திய அரசின் நிதியில் மாநில அரசுகளுக்கு 41 சதவீதப்பங்கு உள்ளது என்றும் கடந்த ஆண்டில் … Read more

அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி ரமணா அமர்வு உத்தரவிட்டுள்ளது.