ஏலம் எடுத்தவர்களுக்கு கடிதம், 5ஜி சேவைக்கு தயாராகுங்கள்; ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: சமீபத்தில் நடந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்த நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டு கடிதத்தை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.நாட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படக் கூடிய 5ஜி சேவை, விரைவில் தொடங்கப்பட உள்ளது. 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் சமீபத்தில் நடந்தது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இதை ஏலத்தில் எடுத்தன. இதில், ஏர்டெல் நிறுவனம் இந்த மாதமே 5ஜி சேவையை தொடங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. முதலில் ஒரு … Read more

இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு தொடர்புகள், பொதுஒழுங்கை சீர்குலைக்கும் தவறான தகவல்களை பரப்பிய 8 யூடியூப் சேனல்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், 2021 தகவல் தொடர்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 8 யூடியூப் செய்தி சேனல்கள், 1 முகநூல் கணக்கு, 2 முகநூல் பதிவுகளை தடை செய்வதற்கான உத்தரவுகளை செவ்வாய்க்கிழமை (ஆக.16) அன்று பிறப்பித்தது. தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் மொத்தமாக, … Read more

கேரளாவில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் முதல் வங்கிக் கிளையைத் திறந்தது எச்டிஎப்சி..!

எச்டிஎப்சி வங்கி கேரளத்தின் கோழிக்கோட்டில் மகளிர் மட்டும் பணியாற்றும் முதல் வங்கிக் கிளையைத் திறந்துள்ளது. 4 ஊழியர்கள் பணியாற்றும் இந்தக் கிளையைக் கோழிக்கோடு மாநகர மேயர் பீனா பிலிப் புதனன்று திறந்து வைத்தார். மார்ச் 31 நிலவரப்படி வங்கியில் பெண் ஊழியர்கள் 21 புள்ளி 7 விழுக்காட்டினர் உள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் இதை 25 விழுக்காடாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  Source link

மகாராஷ்டிராவில் ஏகே 47 துப்பாக்கி, குண்டுகளுடன் கரை ஒதுங்கிய படகு தீவிரவாதிகள் நுழைந்து விட்டதாக பீதி

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த தீவிரவாதிகள், மும்பையில் நடத்திய தாக்குதலில் ஏராளாமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த மாநிலத்தில் ராய்கட் கடற்கரைக்கு அருகில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் நேற்று சந்தேகத்துக்கு  இடமாக ஒரு நவீன படகு நின்றது. இதை பார்த்து மக்கள் அதிர்ந்தனர். படகில் யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ராய்கட் போலீஸ் எஸ்பி அசோக் துதே உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று, படகில் சோதனை … Read more

வெளிநாடுகளில் ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றுவது போல் நிதிஷ் மாற்றியுள்ளார் – ம.பி முன்னாள் அமைச்சர் சர்ச்சை கருத்து

புதுடெல்லி: வெளிநாடுகளில் ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக் கொள்வது போல், நிதிஷ் தன் கூட்டணியை மாற்றியிருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கருத்து கூறியது சர்ச்சையை கிளம்பியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா. இவர், பாஜகவின் தேசிய ஜனநாயக முன்னணியிலிருந்து விலகிய பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீது கருத்து கூறியுள்ளார். இதுதொடர்பாக விஜய்வர்கியா, ‘‘அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். அங்கு ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக் கொள்வது போல் … Read more

கெட்ட வார்த்தைகள் லைகர் படத்துக்கு 7 ‘கட்’

ஐதராபாத்: கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றதால் லைகர் படத்துக்கு 7 இடத்தில் கட் தரப்பட்டது. விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லைகர். புரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார். கரண் ஜோஹர், நடிகை சார்மி தயாரித்துள்ளனர். இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வரும் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஆகியோர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று … Read more

”அவர்கள் பிராமணர்கள்; நல்லவர்கள்”-குஜராத் கலவர குற்றவாளிகள் குறித்து பாஜக எம்.எல்.ஏ பேட்டி

குஜராத் கலவரத்தின்போது கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்துவந்த 11 பேர் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டநிலையில், அவர்கள் பிராமணர்கள் என்பதால் விடுதலை செய்யப்பட்டதாக அம்மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி, கரசேவகர்கள் வந்த சபர்மதி ரயில் கோத்ரா ரயில்நிலையத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த கலவரத்தின்போது, ஏராளமான அப்பாவி மக்கள் … Read more

பில்கிஸ் பானு வழக்கு | “11 பேரும் நல்ல சன்ஸ்காரம் கொண்டவர்கள்” – குஜராத் பாஜக எம்எல்ஏ கருத்து

கோத்ரா: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேரும் “பிராமணர்கள்” என்றும் “நல்ல சன்ஸ்காரம்” உடையவர்கள் என்றும் பாஜக எம்எல்ஏ பேசியுள்ளார். கோத்ரா தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர், சி.கே. ரவுல்ஜி. அவர் தான் இந்தக் கூற்றைத் தெரிவித்துள்ளார். 11 குற்றவாளிகளை விடுவிக்க ஒருமனதாக முடிவு செய்த குஜராத் அரசின் குழுவில் அங்கம் வகித்த இரண்டு பாஜக தலைவர்களில் சிகே ரவுல்ஜியும் ஒருவர். இதையடுத்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “11 பேரும் ஏதாவது … Read more

“ஆப்பிள்களை ஆரஞ்சு பழங்களுடன் ஒப்பிடுகிறீர்கள்” – நிதி அமைச்சர் பிடிஆருக்கு பாஜக துணை பதில்…!

இன்று இந்திய பொருளாதாரம் குறித்தும் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச திட்டங்கள் குறித்தும் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார் “ “நான் ஏன் யாருடைய நிலைப்பாட்டையோ எடுக்க வேண்டும்? என் முதல்வர் எனக்கு ஒருபணியை கொடுத்துள்ளார் , நான் அதை நன்றாகச் செய்கிறேன். நான் மத்திய அரசை விட அதிகமாக செயல்படுகிறேன். நாங்கள் மத்திய அரசுக்கு மிகப்பெரிய பங்களிப்பாளர்களாக இருக்கிறோம் . 1 ரூபாய் எங்களிடமிருந்து பெற்று அதை 33 … Read more

நிதிஷ்குமாருக்கு புதிய சிக்கல்..! – அமைச்சர் பதவி கேட்கும் சட்டமன்ற உறுப்பினர்..!!

பாஜகவுடனான கூட்டணி ஆட்சியை முறித்துக்கொண்டு தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருள் ஆனது. பல்வேறு அரசியல் தலைவர்கள் நிதிஷ் குமாரை பாராட்டினார்கள். நிதிஷ் குமாரின் இந்த துணிச்சலான முடிவு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பதவியில் நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவி ஏற்றனர். இது பீகார் மட்டுமின்றி பல மாநில அரசியல் பிரமுகர்களை ஆச்சர்ய படவைத்தது. நிதிஸ் குமார் … Read more