ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

டெல்லி: ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

குழந்தை இறந்துவிட்டதாகக் கூறிய தந்தை – சந்தேகமடைந்த தாத்தா… அம்பலமானது குழந்தை விற்பனை

பிறந்த பெண் குழந்தையை வேறொருவருக்கு ரூ.6,000க்கு விற்ற தந்தை உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள கோஹ்பூர் மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி புதன்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக  அக்குழந்தையின் தந்தை குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவரது பேச்சில் சந்தேகமடைந்த குழந்தையின் தாத்தா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கோஹ்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். காவல் துறையினர் தீவிரமாக விசாரணை … Read more

இந்து மடாதிபதியை வீட்டுக்கு அழைத்து பாதப்பூஜை செய்த முஸ்லிம் தம்பதி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள ஹட்கோ நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் படே கான் (61). இவர் தார்வாடில் உள்ள ஓம்கார் மடாதிபதி ஸ்வரூபானந்தா சுவாமியின் பக்தர் ஆவார். ஓய்வு பெற்ற பேராசிரியரான சிக்கந்தர் படே கான் நேற்று ஸ்வரூபானந்தா சுவாமியை தனது வீட்டுக்கு வரவழைத்தனர். அவருக்கு சிக்கந்தர் படே கான் தன் மனைவியுடன் இணைந்து பாதப்பூஜை நடத்தி ‘ஓம் நம சிவாய’ என மந்திரத்தை கூறினர். இதையடுத்து அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை ஸ்வரூபானந்தா … Read more

அர்விந்த் கேஜ்ரிவாலை ஒழிக்க நினைக்கிறதா பாஜக? சிபிஐ ரெய்ட் ஏன்? ஆம் ஆத்மி கேள்வி

புதுடெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு, கலால்துறை ஆணையர் கோபிகிருஷ்ணாவின் அலுவலகம் உள்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகள்14 மணி நேரம் நீடித்தது. டெல்லியில் அரசின் புதிய மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த சிபிஐ, டெல்லி துணை முதலமைச்சரின் தொலைபேசி மற்றும் கணினியை கைப்பற்றியது. தான் தவறு செய்யவில்லை, அதனால் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும், சிபிஐ தவறாக … Read more

காஷ்மீரில் வாக்குரிமை அளித்ததால் ஆத்திரம் வெளிமாநிலத்தினர் மீதான தாக்குதலை அதிகரியுங்கள்: தீவிரவாதிகளுக்கு உத்தரவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், இங்கு வசிக்கும் வெளிமாநிலத்தினரும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் திடீரென அறிவித்தது. பாஜ.வை தவிர, காஷ்மீரை சேர்ந்த கட்சிகள் அனைத்தும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், நேற்று முதல் இதை கண்டித்து போராட்டங்களையும் தொடங்கி உள்ளன. இப்பிரச்னை பற்றி ஆலோசிப்பதற்காக, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா வரும் 22ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை … Read more

தலித் பெண்ணை எழுத்தாளர் தொட்டிருக்க வாய்ப்பில்லை – மற்றொரு பாலியல் வழக்கிலும் கேரள நீதிபதி கருத்தால் சர்ச்சை

கோழிக்கோடு: கேரளத்தில் பாலியல் வழக்கில் பெண்ணின் உடையை காரணம் காட்டி நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மற்றொரு பாலியல் வழக்கிலும் அந்த நீதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருப்பது தெரியவந்துள்ளது. கேரளத்தை சேர்ந்த 74 வயது மாற்றுத்திறனாளி எழுத்தாளர் சிவிக் சந்திரன். இவர் கடந்த 2020 பிப்ரவரியில் நடந்த புத்தக கண்காட்சியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு கோழிக்கோடு அமர்வு நீதிபதி … Read more

வங்கிகள் தனியார்மயம் ஆபத்துக்கு வழிவகுக்கும்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘பொதுத்துறை வங்கிகளை அவசர கதியில் தனியார்மயமாக்குவது ஆபத்துக்கு வழிவகுக்கும்’ என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆகஸ்ட் மாத இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், ‘பெருமளவு வங்கிகளை அவசர கதியில் தனியார் மயமாக்குவது நல்லதற்கு பதிலாக தீய விளைவுகளை ஏற்படுத்தும். அதே சமயம், ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள படிப்படியான தனியார் மயம் சிறந்த விளைவுகளையே ஏற்படுத்தும்,’ என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘ரிசர்வ் … Read more

குடும்ப சூழ்நிலையால் ராணுவத்தில் சேர முடியவில்லை – வீரர்களிடம் மனம் திறந்தார் ராஜ்நாத் சிங்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவும் சென்றுள்ளார். அங்கு அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினரை சந்தித்த ராஜ்நாத் சிங் அவர்களிடம் பேசியதாவது: நானும் ராணுவத்தில் சேர விரும்பினேன். இதற்காக குறுகிய கால சேவையில் பணியாற்ற தேர்வும் எழுதினேன். அந்த நேரத்தில் என் தந்தை இறந்தார். எனது குடும்பத்தில் நிலவிய சில சூழல் காரணமாக என்னால் ராணுவத்தில் சேர … Read more

கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

பனாஜி: ‘கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கோவா மாநிலத்தில் கிராமப்புற வீடுகளில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில், பனாஜியில் நடந்த விழாவில் காணொலி மூலமாக பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 70 ஆண்டுகளில் 3 கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் … Read more

மைத்துனருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிஹார் அமைச்சர் தேஜ் பிரதாப்

பாட்னா: பிஹாரில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த புதன்கிழமை தேஜ் பிரதாப் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க லாலு மகளும் மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதியின் … Read more