எதிர்ப்பை மீறி இலங்கை சென்ற சீனாவின் உளவுக்கப்பல் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங்-5, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றிருக்கிறது. அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட இந்தக் கப்பல் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. சீனாவின் மூன்றாம் தலைமுறை விண்வெளிக் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரும் 22-ஆம் தேதி வரை நிறுத்தப்படுகிறது. இந்தக் கப்பலில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலும், அணுசக்தி போர் கப்பல் அல்ல என்பதாலும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் கப்பலின் சிறப்பம்சங்களும், வருகையும் இந்தியா கவலைப்படுவதற்கான காரணங்களாக … Read more

தேசிய கீதம் ஒலித்ததால் ஸ்தம்பித்த தெலங்கானா – பொதுமக்களின் தேசப்பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு

ஹைதராபாத்: முதல்வர் சந்திரசேகர ராவின் அழைப்பை ஏற்று, நேற்று காலை 11.30 மணிக்கு தெலங்கானா மாநிலம் முழுவதும் சாலைகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இதனை கேட்ட பொதுமக்கள் இருந்த இடத்திலேயே நின்று ஒரு நிமிடம் வரை தேசிய கீதம் பாடலுக்கு மரியாதை செலுத்தி, பிறகு தங்களது பணிகளில் கவனம் செலுத்தினர். தெலங்கானா மாநிலத்தில் 75-வது சுதந்திர தின விழாவினை, வைர விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, நேற்று, முதல்வர் சந்திரசேகர ராவின் அழைப்பின் பேரில் தெலங்கானா … Read more

லஞ்சத்தை தடுக்கும் ஊழியர் கவுரவிப்பு: கண்காணிப்பு ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘அரசு அலுவலங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த உதவும் ஊழியர்கள் கவுரவிக்கப்படுவார்கள்,’ என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் லஞ்சத்தை தடுப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தில் நேர்மையை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆணையம் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளிலும் ஊழலை கட்டுப்படுத்த உதவும் ஊழியர்களை தேர்வு செய்து அனுப்பும்படி கேட்டு கொண்டுள்ளது. இது குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஊழலை கட்டுப்படுத்த உதவும் அதிகாரிகள் அல்லது … Read more

பிஹார் அமைச்சரவை விரிவாக்கம் – ஆர்ஜேடி கட்சியின் 16 பேர் உட்பட 31 பேர் அமைச்சராக பதவியேற்பு

பாட்னா: பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 31 பேர் நேற்று அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். பிஹாரில் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் கடந்த 10-ம் தேதி பதவியேற்றனர். இந்நிலையில், பிஹார் … Read more

தாத்ராவுக்கு குஜராத்தின் 4 கிராமங்கள் வழங்கப்படுமா?

புதுடெல்லி: குஜராத்தில் வல்சாத் மாவட்டத்தில் உள்ள மேக்வால், நாகர், ரேமால் மற்றும் மதுபான் ஆகிய 4 கிராமங்கள் மற்றும் சவுராஷ்டிராவின் கோகலாவின் ஒரு பகுதியை தாத்ரா யூனியன் பிரதேசத்துடன் இணைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 1989ம் ஆண்டு குஜராத்துக்கு டையூவால் வழங்கப்பட்ட இடத்துக்கு பதிலாக இந்த இடங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த கிராமங்களையும், சவுராஷ்டிராவின் அமைதிக்கான நிலத்தையும் தாத்ரா யூனியன் பிரதேசத்துடன் இணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஆனால், இதில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. குஜராத் … Read more

ஜம்மு காஷ்மீரில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து – பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் இந்தோ திபெத் எல்லை போலீஸார் 37 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சந்தன்வாரியில் இருந்து போலீஸ் வாகனத்தில் பஹல்காம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பஸ் பிரேக் செயல் இழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் உருண்டு ஆற்றில் விழுந்தது. இதில் இந்தோ திபெத் எல்லை போலீஸார் 6 பேரும், காஷ்மீர் போலீஸ்காரர் ஒருவரும் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயம் அடைந்தனர். மீட்புப் பணியில் எல்லை பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் … Read more

இம்மாத இறுதியில் அமைக்கப்படும் கியூட் தேர்வுடன் நீட், ஜேஇஇ இணைப்பதை திட்டமிட குழு: யுஜிசி தலைவர் தகவல்

புதுடெல்லி: ‘ஜேஇஇ, நீட் தேர்வுகளை கியூட் தேர்வுடன் இணைப்பதை திட்டமிட, இம்மாத இறுதியில் தனி குழு அமைக்கப்படும்,’ என யுசிஜி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார். ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, ‘கியூட்’ என்ற பெயரில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதனுடன் நீட் தேர்வு, ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வாக நடத்த இருப்பதாக பல்கலை மானியக் குழு (யுசிஜி) தலைவர் ஜெகதீஷ் குமார் சமீபத்தில் … Read more

மத்திய அரசின் மின்னணு சந்தையில் 2.36 கோடி தேசியக் கொடி ரூ.60 கோடிக்கு விற்பனை

புதுடெல்லி: மத்திய அரசின் மின்னணு சந்தையில் ஆன்லைன் மூலம் ரூ.60 கோடிக்கு 2.36 கோடி தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடி யேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதற்காக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள், தனியார் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு அளவுகளில் தேசிய கொடிகள் விநியோகம் செய்யப் பட்டன. மத்திய அரசின் https://gem.gov.in/ … Read more

இன்று முதல் அமல் அமுல் பால் விலை லிட்டர் ரூ.2 உயர்வு

அகமதாபாத்: அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் உற்பத்தியில் அமுல் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் பால் பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், அமுல் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு, அமுல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘பால் விலையில் 4 … Read more

மீனவர்கள் போராட்டம் பணிந்தது அதானி குழுமம்: விழிஞ்ஞம் துறைமுக பணி நிறுத்தம்

திருவனந்தபுரம்: மீனவர்கள் போராட்டம் தீவிரமானதால், விழிஞ்ஞம்  துறைமுகப் பணிகளை நிறுத்துவதாக அதானி குழுமம்  தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் வர்த்தக துறைமுகம் கட்டுமான பணிகளை சில வருடங்களுக்கு முன் அதானி குழுமம் தொடங்கியது. தற்போது, அது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இத்திட்டம் தொடங்கிய போதே தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக விழிஞ்ஞம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்பையும் மீறி பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், திருவனந்தபுரம் மாவட்ட மீனவர்கள் துறைமுகத்திற்கு எதிரான போராட்டத்தை மீண்டும் … Read more