குடியரசுத் தலைவர் முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கடிதம்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லியில் அண்மையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து அவர் சர்சைக்குரிய வகையில் பேசினார். இந்த வீடியோ நாடு முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சர்ச்சை கருத்துக்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மாநிலங்களவையில் மத்திய … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 20,408 பேருக்கு கொரோனா… 54 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 20,408 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,00,138 ஆக உயர்ந்தது.* புதிதாக 54 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

”என் குறிக்கோள் நிறைவேறாம செத்தாலும் குளிக்க மாட்டேன்” -பீகார் நபரின் விசித்திரமான சபதம்!

வார நாட்கள் முழுவதும் அலுவலகம், பள்ளி, கல்லூரி என சென்றுவிட்டு வார இறுதியில் தாமதமாக குளித்துக்கொள்ளலாம் அல்லது வேலை, படிப்புக்கு லீவ் விடுவது போல குளியலுக்கும் லீவ் கொடுத்து விடலாம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் ஏராளம்தாம். ஆனால், முக்கியமான குறிக்கோளை முன்வைத்து சபதமாக ஏற்று ஒரு நபர் 22 ஆண்டுகளாக குளிக்காமலேயே இருக்கிறார் என்றால் உங்களால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாதுதானே? உண்மையிலேயே பீகாரைச் சேர்ந்த 40 வயதான தர்மதேவ் என்பவர் கடந்த 22 ஆண்டுகளாக … Read more

உக்ரைன் மற்றும் சீன மருத்துவ கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்த இந்திய மாணவர்கள் எப்எம்ஜி தேர்வு எழுத அனுமதி

புதுடெல்லி: ரஷ்ய-உக்ரைன் போர் மற்றும் கரோனா காரணமாக உக்ரைன், சீனாவில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களுக்கான பயிற்சியை நிறைவு செய்யும் திட்டத்தை 2 மாதத்துக்குள் தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்த … Read more

2 வாரங்களாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வந்த நிலையில் விவாதத்துக்கு சம்மதித்தது ஒன்றிய அரசு

டெல்லி: விலைவாசி உயர்வு குறித்து ஆகஸ்ட் 1, 2, ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஒன்றிய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. விதி எண் 193-ன் கீழ் மக்களவையில் நாளை மறுநாளும், விதி எண் 176-ன் கீழ் மாநிலங்களவையில் செவ்வாய் அன்றும் விவாதம் நடைபெற உள்ளது. விலைவாசி உயர்வு பற்றிய விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலாக வாய்ப்புள்ளது.

மூதாட்டியை கொன்ற 'பிட்புல்' நாய் மீண்டும் உரிமையாளரிடமே ஒப்படைப்பு

உத்தரபிரதேசத்தில் மூதாட்டியை கடித்துக் கொன்ற பிட்புல் நாய் மீண்டும் அதன் உரிமையாளரிடமே ஒப்படைக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் அமித். அங்குள்ள பல ஜிம்களில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். அமித் தனது வீட்டில் பிட்புல் வகை நாயை வளர்த்து வந்தார். மிகவும் ஆபத்தானதாக கருதப்படும் பிட்புல் நாயை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டாம் என அக்கம்பக்கத்தினர் கூறிய போதிலும் அதனை அமித் சட்டை செய்யவில்லை. இந்த சூழலில், கடந்த 12-ம் தேதியன்று காலை வழக்கம் போல … Read more

மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல் | பணம், ஆவணங்கள் இருந்த நடிகை அர்பிதாவின் 4 சொகுசு கார்கள் மாயம்

கொல்கத்தா: மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் விவகாரத்தில், கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் 4 சொகுசு கார்கள், பணம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை தேடும் பணி நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, சட்டவிரோத ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனத்தில் பெற்ற லஞ்சப் பணத்தை தனக்கு … Read more

மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஐதராபாத்: மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி பகுதியில் மகா புண்ணிய சேத்திரம் கோயில் வெள்ளப்பெருக்கு நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கு – உச்ச நீதிமன்ற வாதங்கள் முழு விவரம்

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 3 வாரங்களில் விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜூலை 11-ம் … Read more

பாஜ நிர்வாகியை தொடர்ந்து மங்களூரு அருகே அடுத்த கொலை: 21ம் தேதி வரை ஊரடங்கு

பெங்களூரு: மங்களூருவில் பாஜ நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பிரிவை சேர்ந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கர்நாடகாவில், மங்களூரு மாவட்டம், சூள்யா தாலுகா, பெல்லாரே கிராமத்தை சேர்ந்த பாஜ இளைஞரணி பிரமுகர் பிரவீன் நெட்டார 2 நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். கேரளாவில் இருந்த வந்த கும்பல் இவரை கொன்றதாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவரின் இறுதி ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடியில், ஆர்எஸ்எஸ், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். இதற்கு காரணமான போலீசார் … Read more