’யார் பார்த்த வேலை இது’ வீட்டின் பின்புறம் திடீர் கஞ்சா தோட்டம்..ஷாக் ஆன முன்னாள் எம்எல்ஏ!

பெங்களூரு அருகே முன்னாள் எம்எல்ஏ வீட்டின் பின்புறம் மர்ம நபர்கள் கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே புலிகேசி நகர் பகுதியில், ஆர்டி நகர் மஞ்சுநாதா லேஅவுட் சாலையில் முன்னாள் எம்எல்ஏ பேளூர் கோபாலகிருஷ்ணா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் கோதுமை செடிகளை சிலர் பயிரிட்டு வளர்த்து வந்துள்ளனர். இதனைத் தாண்டி உள்ள நிலப்பரப்பில் சில மர்ம நபர்கள் ஏராளமான கஞ்சா செடிகளையும் சாகுபடி … Read more

‘டைம்’ இதழின் உலகின் சிறந்த 50 இடங்கள் பட்டியலில் கேரளா, அகமதாபாத்

நியூயார்க்: 2022-ம் ஆண்டில் உலகின் ஆகச் சிறந்த 50 இடங்கள் என்று டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியிலில் இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் அகமதாபாத் நகரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. உலகின் சிறந்த இடங்கள்: டைம் இதழால் வெளியிடப்பட்டும் உலகின் சிறந்த இடங்களுக்கான இந்தப் பட்டியல், உலகெங்கிலும் உள்ள டைம் இதழின் சிறப்பு நிருபர்கள் மற்றும் பங்களிப்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த இடங்களின் பட்டியலில், ஐக்கிய அரபு அமிரகத்தின் ராஸ் அல் கைமா, உட்டாவின் பார்க் … Read more

திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி: மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் அன்சாரி (35). ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். ஆகவே திருவனந்தபுரத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனா பரவலைத் தொடர்ந்து பரோலில் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு சிறைக்கு திரும்பவில்லை. இதையடுத்து போலீசார் சுபாஷ் அன்சாரியை … Read more

ம.பி: சிறுவனை விழுங்கியதாக முதலைக்கு டார்ச்சர் கொடுத்த கிராம மக்கள் – வீடியோ!

மத்தியப்பிரதேசத்தில் சிறுவனை முழுங்கிவிட்டதாக கருதி முதலையை பிடித்த மக்கள், சிறுவனின் பெயரைக் கூறி வெளியே வருமாறு அழைத்த விநோத நிகழ்வு நடந்துள்ளது. ஷியோபூர் பகுதியில் உள்ள சம்பல் ஆற்றுக்கு சென்ற 7 வயது சிறுவன் குறித்தநேரத்தில் வீடு திரும்பவில்லை. அவரை முதலை முழுங்கியிருக்கக்கூடும் என கருதிய கிராம மக்கள் 13 அடி முதலை ஒன்றை பிடித்தனர். மேலும் அந்த முதலையின் வாய் மூடாதபடி இரு தாடைகளுக்கு இடையே கம்பை வைத்த மக்கள், சிறுவனின் பெயரைக் கூறி வெளியே … Read more

லாட்டரியில் முதல் பரிசு 25 கோடி – கேரள அரசின் பம்பர் ஆஃபர்

கேரளாவில் அரசின் முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை உள்ளது. வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது . அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களில் சிறப்பு லாட்டரி சீட்டுகள், அதிக பரிசு தொகையுடன் அறிவிக்கப்படுகின்றது. ஓணம் பம்பர், விஷு பம்பர், கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கல்கள் என விதவிதமான ஆஃபர்கள் உள்ளன. அதிகபட்ச தொகையாக முதல் பரிசு ரூ.12 கோடி கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஓணம் … Read more

ஆடி மாத பூஜைகளுக்காக 16ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் … Read more

’திகார் சிறையிலிருந்து யாருக்கெல்லாம் பணம் கொடுத்தீங்க?’-சுகேஷ் சந்திரசேகருக்கு புது செக்!

திகார் சிறையில் இருந்தபடி எந்தெந்த சிறை நிர்வாக அதிகாரிகளுக்கு எல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை வழங்குமாறு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உட்பட ஏராளமான மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திகார் சிறை நிர்வாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதன் மூலமாக … Read more

வாஜ்பாய் அரசில் இதெல்லாம் கிடையாது: மோடி அரசை சாடிய யஷ்வந்த் சின்ஹா!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் இருவரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றனர். அதேசமயம், தேர்தல் ஆணையமும் தனது … Read more

சுகேஷ் சந்திர சேகர் வழக்கு: முழுவிவரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற கோரி சுகேஷ் சந்திர சேகர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த வழக்கு ஏற்கெனவே கோடைகால அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வேறு மாநிலத்திற்கு மாற்றும் பரிந்துரையை உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், சுகேஷ் சந்திரசேகர் மாதந்தோறும் ரூ.1.20 கோடி சிறை அதிகாரிகளுக்கு அளித்ததாகவும், சிறையில் செல்லிடைபேசியை பயன்படுத்திக் கொள்வதற்காக, தன்னை மிரட்டி இந்த பணத்தை பறித்ததாகவும் … Read more

2 மாநிலங்கள், 3 ஆன்மிக தலங்களை இணைக்கும் புதிய ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இணைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தக் கூடிய தரங்கா ஹில் அம்பாஜி அபுசாலை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ரூ.2798.16 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள தரங்கா இந்த புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 116.65 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படவுள்ள இந்த புதிய ரயில் பாதை பணிகள் 2026 – … Read more