‘‘மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள் காளி’’- திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கருத்தால் கடும் சர்ச்சை: ட்விட்டரில் நடந்த ‘வார்த்தைப் போர்’

கொல்கத்தா: காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியதற்கு மேற்கு வங்கத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அது அவரது தனிப்பட்ட கருத்து என திரிணமூல் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. இயக்குநர் லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட போஸ்டர் வெளியானது. அதில் காளியின் கையில் ஒரு சிகரெட் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் காளிதேவியின் கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் … Read more

அக்னிபத் திட்டம்: விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் … Read more

அலட்சியம் காட்டிய அதிகாரிகள்.. சாக்கடையில் இறங்கி போராட்டம் நடத்திய ஆளுங்கட்சி எம்எல்ஏ!

ஆந்திராவில், நிரம்பி வழிந்தோடும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யுமாறு பலமுறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் எம்எல்ஏ ஒருவர் சாக்கடையில் இறங்கி போராட்டம் நடத்தினார். நெல்லூர் தொகுதி எம்எல்ஏ வான கோத்தம் ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் சாக்கடை நீரில் இறங்கியதோடு மட்டுமல்லாமல் ஒருகட்டத்தில் அதன் மீது அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டார். Source link

2 நாள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை..வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை

மும்பை: மும்பையில் 2வது நாளாக பெய்து வரும் பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வுமையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் நேற்று காலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்தும் ஏற்பட்டிருக்கிறது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரின் பெரும்பாலான இடங்களில் ரயிகள் தாமதமாக இயக்கப்படுகின்றன. முக்கிய சாலைகளில் இடுப்பளவு வெள்ளம் … Read more

துடிதுடித்த பசுவை மீட்டு இதயத்தை வென்ற இளைஞனின் மனிதநேயம்.. பஞ்சாபில் நடந்த நெகிழ்ச்சி!

சுழன்று கொண்டிருக்கும் நவீன உலகத்தில் சக மனிதனுக்கு உதவுவதே பெரிய ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் மத்தியில், வாயில்லா ஜீவனுக்கு உதவியிருக்கிறார் கடைக்காரர் ஒருவர். பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையெங்கும் மழைநீர் தேங்கி இருக்கின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாது, கால்நடைகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அண்மையில் வைரலான வீடியோவின் மூலம் அறிந்துக்கொள்ளலாம். அந்த வகையில், மழை காரணமாக மான்சா பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கியிருந்ததோடு, மின்சார கம்பங்கள் மூலம் மின்கசிவும் ஏற்பட்டிருக்கிறது. … Read more

மும்பையில் கனமழை: பள்ளத்தில் விழுந்து இருசக்கர வாகன ஓட்டி பரிதாப பலி

மும்பை: மும்பையில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையமானது வரும் வெள்ளிக்கிழமை வரை மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று எச்சரித்துள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தானேவில் மழைநீர் தேங்கிய சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் பள்ளத்தில் வண்டியுடன் விழுந்த நபர் மீது பேருந்து ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனமழை தொடர்வதால் ராய்கட், … Read more

உத்தராகண்டில் தொடர் மழையால் நிலச்சரிவு.. சாலைகளில் நிறைந்த கற்குவியல்.. போக்குவரத்து பாதிப்பு.!

உத்தராகண்டில் தொடர் நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சிரோப்கத் பகுதியில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கற்குவியல் நிறைந்துள்ளது. இந்த சாலைக்கு மாற்று சாலையான கங்காரா சாட்டிகல் ஸ்ரீநகர் சாலையும் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிடைந்துள்ளனர். Source link

கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது.. ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் : உச்சநீதிமன்றம்

சென்னை: ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவை நடத்தலாம் ஆனால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானத்தின் மீதும் முடிவு எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வரும் 11ம் … Read more

உடலுறவின்போது மாரடைப்பால் இளைஞர் மரணம்.. இதய நோயை தடுக்க என்ன வழி?

காதலியுடன் உடலுறவில் இருந்த நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பகீர் சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியிருக்கிறது. நாக்பூர் பகுதியைச் சேர்ந்த அஜய் பர்தேகியின் (28), காதலி (23) மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இருவரும் ஃபேஸ்புக் மூலம் நட்பாக பழக தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். இருவரும் கடந்த ஞாயிறன்று (ஜூலை 3) நாக்பூரின் சனோர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு மாலை 4 மணியளவில் விடுதிக்கு … Read more

டெல்லியிலிருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்

புதுடெல்லி: டெல்லியிலிருந்து மும்பை வழியாக துபாய்க்கு நேற்று மதியம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் இடதுபுற எரிபொருள் டேங்க்கில் எரிபொருள் வழக்கத்துக்கு மாறாக குறைவாக இருப்பதாக இன்டிகேட்டர் காட்டியது. இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கிய பின் விமானத்தை சோதனை செய்தபோது, எரிபொருள் டேங்கில் எந்தவெளிப்புற கசிவும் இல்லை என தெரிந்தது. இதையடுத்து மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்பட்டு அதில் … Read more