ஓட்டுநர் இல்லாமல் ஓடப்போகுது மெட்ரோ ரயில்.. விரைவில் இயக்க அதிகாரிகள் முடிவு..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலும், நாகசந்திராவில் இருந்து அஞ்சனாபுரா வரையிலும் 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். தற்போது, மெட்ரோ ரயில்களை டிரைவர்கள் இயக்கி வருகின்றனர். டெல்லியில் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் பெங்களூருவிலும் விரைவில் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரயில்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மெட்ரோ ரயில்கள் இயக்கத்தை கட்டுப்பாட்டு அறையில் இருந்து … Read more

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..!!

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (22-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.சென்னையில் இன்று புதன்கிழமை (ஜூன்;22) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அண்ணாசாலை: பூதபெருமாள் கோயில் தெரு, கஸ்தூரி பில்டிங்ஸ், அண்ணாசாலை பகுதி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எல்.ஐ.சி பில்டிங் காம்பளக்ஸ், சாமி ஆச்சாரி தெரு, அண்ணாசாலை … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டி – எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க, பாஜகவின் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய … Read more

காதல் வலை விரித்து பாதுகாப்பு ரகசியங்களை பெற்ற ஐஎஸ்ஐ பெண்: ஐதராபாத்தில் டிஆர்டிஎல் ஊழியர் கைது

திருமலை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் குறியீடு உள்ளிட்ட பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யின் பெண் உளவாளிக்கு பகிர்ந்த டிஆர்டிஎல் ஊழியர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை ஆயுதக் கிடங்கு (என்ஏடி) குடியிருப்பை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனா ரெட்டி. இவரது தந்தை என்ஏடியில் சார்ஜ்மேன் சிவிலியனாகப் பணிபுரிந்து கடந்த 2014ல் ஓய்வு பெற்றார். மல்லிகார்ஜூனா விசாகப்பட்டினத்தில் பாலாபூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வகத்தின் ஆர்.சி.ஐ. வளாகத்தில் கடற்படை மேம்பாட்டு அமைப்பு திட்டத்தில் … Read more

21 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் குஜராத்தில் சிவசேனா அமைச்சர் முகாம் – மகாராஷ்டிர அரசுக்கு திடீர் நெருக்கடிக்கு ஏன்?

மும்பை: சிவசேனா கட்சியின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, 21 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் குஜராத்தில் முகாமிட்டுள்ளதால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகிக்கிறார். சிவசேனாவின் சட்டப்பேரவை கட்சித் தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, சமீபகாலமாக கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்துவந்தார். கடந்த திங்கட்கிழமை நடந்த … Read more

தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக்

ஐதராபாத்: சம்பள உயர்வு கோரி தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 3 வருடங்களுக்கு ஒருமுறை தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும். இந்த ஆண்டில் இதுவரையிலும் சம்பளம் உயர்த்தப்படவில்லை. இதைக் கண்டித்தும், சம்பள உயர்வு கோரியும் இன்று முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து ஆந்திரா, தெலங்கானாவில் நடைபெறும் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ் படங்களும் பாதிக்கும் என்று தெரிகிறது. 

நடிகை வேதிகாவுக்கு கொரோனா

மும்பை: தென்னிந்திய நடிகை வேதிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள வேதிகா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘முதல்முறையாக எனக்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதிகமான காய்ச்சலால் சிரமப்படுகிறேன். லேசான அறிகுறிகள் இருந்தாலும், உடனே உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். உடல் வலி மற்றும் அதிக காய்ச்சல் இருந்தால், அதை … Read more

'என்னால் நம்ப முடியவில்லை' – பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு

புதுடெல்லி: ‘எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு திரௌபதி முர்மு பெயர் அதிகாரபூர்வ குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் … Read more

அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக எங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கேவியட் மனு

புதுடெல்லி: ‘அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்கும் போது, எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது’ என ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. முப்படைகளில் இளைஞர்களை சேர்க்கும் புதிய அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இத்திட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் சேதமாவதை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக் கோரியும், அக்னிபாதை திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் … Read more

இந்தி நடிகைக்கு முக பக்கவாதம்

மும்பை: பாப் ஸ்டார் ஜஸ்டின் பைபரைப் போல் தனக்கும் முக பக்கவாதம் ஏற்பட்டதாக நடிகை ஐஸ்வர்யா சகுஜா கூறினார். இந்திப் படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ள அவர் கூறியது: சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை பூஜா சர்மாவுடன் தயாராகி, கண்ணாடியைப் பார்த்து மேக்கப் போட்டேன். என் முகத்தைப் பார்த்து, ஏதோ மாற்றம் தெரிகிறது என்று பூஜா சொன்னார். சில நாட்களிலேயே எனக்கு முகத்தில் ஒருபுறம் செயல் இழந்தது போல் தோன்றியது. டாக்டரிடம் சென்றேன். … Read more