ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்

ஸ்ரீநகர்: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததில் 7 வீரர்கள் பலியாகினர்.ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் ராணு வீரர்கள், அடிக்கடி முகாம்கள் மாற்றப்படுவது வழக்கம். இதன் காரணமாக, ஒரு முகாமில் இருந்து மற்றொரு  முகாமுக்கு வாகனங்களில் அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.இதுபோல், லடாக்கில் உள்ள பர்தாபுர் என்ற இடத்தில் இருந்து ஹனிப் என்ற இடத்தில் உள்ள எல்லை முகாமுக்கு நேற்று காலை 26 வீரர்கள் ராணுவ வாகனத்தில் … Read more

அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முந்தைய ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்ததால் ஏழைகள், நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர்’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.டெல்லியில், ‘பாரத் டிரோன் மகோத்சவ்’ என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய டிரோன் திருவிழா நேற்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:முந்தைய அரசாங்கங்கள், தொழில்நுட்பத்தை பிரச்னையின் ஒரு பகுதியாக பார்த்தன. இதை ஏழைகளுக்கு எதிரானவை என முத்திரை குத்த முயற்சிகள் செய்தன. இதன் காரணமாக, 2014ம் … Read more

பயங்கரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம்- இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு, இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக  2019-ல் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பளித்த  டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில்  யாசின் மாலிக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தனிப்பட்ட மனித உரிமைகள் ஆணையம் விமர்சனம் செய்திருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு … Read more

பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு

புதுடெல்லி: உத்தரகாண்ட்டில் தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருமகள் புகார் கொடுத்ததால் அவமானம் அடைந்த முன்னாள் அமைச்சர். வீட்டின் குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று, பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). இம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். கடந்த 2004 – 2005ம் ஆண்டில் என்.டி.திவாரி இங்கு முதல்வராக இருந்தபோது, அமைச்சர் பதவி வகித்தார். ஹல்ட்வானியில் உள்ள தனது வீட்டில் மகன் … Read more

இலங்கைக்கு இந்தியா ஆதரவு- நிர்மலா சீதாராமனுக்கு, ரணில் விக்கிரமசிங்கே பாராட்டு

கொழும்பு: அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மேலாளர்  கிரிசலினா ஜோர்ஜீவாவுடனான சந்திப்பின்போது, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஐஎம்எப்,  நிதி உதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில்  நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே  தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தொலைபேசி … Read more

கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி

புதுடெல்லி: ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு கியூட் எனும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுகளால் நடத்தப்படும் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எனினும், ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி பிற பல்கலைக்கழகங்களும் கியூட் … Read more

வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்

மும்பை: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று, தேசிய போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கான் விடுதலை செய்யப்படுகிறார். மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை விருந்து நடப்பதாக வந்த தகவலின்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 2ம் தேதி திடீர் ரெய்டு நடத்தினர். இதில் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் … Read more

அதிகபட்ச வேலைவாய்ப்புகளை கொண்டதாக ட்ரோன் துறை உள்ளது  – பிரதமர் மோடி

புதுடெல்லி: பொதுமக்களுக்கு தொழில்நுட்பம் செல்லும் போது அதன் பயன்பாட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான “பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022” –ஐ பிரதமர் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்து இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: இந்தியாவின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022-ஐபிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார். கிசான் ட்ரோன் விமானிகளுடன் கலந்துரையாடிய அவர் வான்வெளி ட்ரோன் செயல்விளக்க காட்சிகளை … Read more

நடிகையை கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உட்பட 3 நாளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காவல் அதிகாரி தகவல்

ஜம்மு: இன்று அதிகாலை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு காவல் அதிகாரி தெரிவித்தார்.  ஜம்மு – காஷ்மீரின் சோர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார், ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு நேற்று இரவு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட கட்டடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. … Read more

இந்தியாவின் பணக்கார எம்பியாக இருக்கும் பண்டி பார்த்தசாரதி.. சொத்து மதிப்பு ரூ.3909 கோடி என வேட்பு மனுவில் தகவல்..!

ஹைதராபாத்தை சேர்ந்த ஹிடேரோ (hetero)மருந்து தயாரிப்பு நிறுவன தலைவர் பண்டி பார்த்த சாரதி ரெட்டி (Bandi Partha Saradhi), இந்தியாவின் பணக்கார எம்பியாக இருக்கிறார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 3909 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டி பார்த்த சாரதியின் பெரும்பாலான சொத்துக்கள் … Read more