'ரயிலில் போகவே பயமா இருக்கு' – பீகார் முதல் சென்னை வரை நடக்கும் கொடூர குற்றம் – முழு விவரம்

Indian Railways: ரயில் விபத்துகள் தற்போது அடிக்கடி ஏற்படுவதே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துள்ள மற்றொரு சம்பவமும் அந்த பயத்தை பொதுமக்களிடம் இரட்டிப்பாக்கி உள்ளது.

இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்களில் 10% பேர் வெளிநாட்டினர்

புதுடெல்லி: இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள் வோரில் 10 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு பகிர்ந்துள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் 10 பேரில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவராக உள்ளார். 2023-ம் ஆண்டு நடைபெற்ற 18,378 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 42 பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி நாட்டில் மொத்தம் … Read more

வயநாட்டில் மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை

திருவனந்தபுரம்: வயநாட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. கடந்த வாரம் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அவரது மகள் ஜிசா மாயமானார். பல்வேறு கட்டத் தேடுதல் பணிக்குப் பிறகு ஜிசாவின் ஒரு கை மட்டும் கிடைத்தது. அவரது விரலில் திருமண மோதிரமும், அதில் அவரது கணவர் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இதை வைத்து அது தன் மகள் ஜிசாவின் கைதான் என்பதை தந்தை ராமசாமி உறுதி செய்தார். தன் மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்யும் ராமசாமியின் புகைப்படம் தற்போது சமூக … Read more

நிர்மலா சீதாராமன் மீது இன்போசிஸ் முன்னாள் சிஎஃப்ஓ மோகன்தாஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீண்டகால மூலதன ஆதாய வரியை உயர்த்தி மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டீர்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பை விமர்சித்துள்ளார். 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், பங்கு தொடர்பான குறுகியகால மூலதன ஆதாய வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 … Read more

‘வக்ஃப்’ அதிகாரத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள பல்வேறு சொத்துகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில், புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வக்ஃப் சட்டத்தில் 40 திருத்தங்களை செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 2-ம் தேதி ஒப்புதல் அளித்ததாகவும், நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த … Read more

ஒரே குடும்பத்தில் 16 பேரை இழந்த பெண்: உடல்களை அடையாளம் காண தவிப்பு – வயநாடு சோகம்

மேப்பாடி (வயநாடு): கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 16 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் குடும்பத்தை சேர்ந்த கலதிங்கல் நவ்ஷீபா (40), கடந்த 4 நாட்களாக கதறியபடி இருக்கிறார். நிலச்சரிவில் நவ்ஷீபாவின் தந்தை. தாய், அண்ணன், அண்ணி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல் கணவர் குடும்பத்தில் மாமியார், 2 நாத்தனார்கள். அவர்களுடைய 2 குழந்தைகள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மொத்தம் 16 பேர் … Read more

திரைப்படங்களை திருடுவதை தடுக்க நடவடிக்கை: ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா வலியுறுத்தல்

புதுடெல்லி: திரையரங்கில் திரைப்படங்கள் வெளியானதும் ரகசியமாக பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடும் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் உண்டு. மறுபுறம், ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களையும், வெப் தொடர்களையும் திருடி வேறொரு ஆன்லைன் தளத்தில் வெளியிடுவது பெருகி வருகிறது. இந்த பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் நேற்று பேசிய ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறியதாவது: திரைப்படங்கள் திருடப்படுவதால் கலைஞர்களின் பல வருட கடின உழைப்பு பாழாய் போய்விடுகிறது. இதனால் திரைத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ. 20,000 கோடி வரை … Read more

உலகின் உணவு பாதுகாப்புக்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: உலகின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது என்று வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டு புதுடெல்லியில் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “65 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற மாநாடு இந்தியாவில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் அனைவரும் … Read more

இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கிராமம்

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு, மண்டி மற்றும் சிம்லா பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமேஜ் கிராமத்தைச் சேர்ந்த அனிதா தேவி கூறும்போது, “இரவில் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென … Read more

பிஹாரில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்

பாட்னா: தனது மனைவியை காதலனுக்கு கணவர் திருமணம் செய்து வைத்தசம்பவம் பிஹார் மாநிலம் லக்கிசராயில் நடந்துள்ளது. பிஹார் மாநிலம் லக்கிசராய் மாவட்டம் ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (26). இவரது மனைவி குஷ்பூ குமாரி (22). கடந்த 2021-ல் திருமணமான இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குஷ்பூ குமாரி, அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார் (24) என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். ஆனால் அதற்கு முன்னதாக, ராஜேஷ் குமாருக்கு … Read more