மத வேறுபாடு இன்றி ஆலங்குடி சிவன் கோவிலில் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள இரண்டாவது குருஸ்தலமாக விளங்கக்கூடிய ஶ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத ஶ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நாளைய தினம் நடைபெற உள்ளது. இந்த கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. சுமார்  700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலான இந்தக் கோவிலின் குடமுழுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நாளை விமர்சியாக நடைபெற உள்ளது. இங்கு சிறப்பு என்னவென்றால், இந்த குடமுழுக்கிற்கு ஆலங்குடி நகரில் உள்ள அனைத்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் … Read more

ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி: ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ள நிலையில், நேற்று வெகு நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர். கோடை காலம் துவங்கிய நிலையில், சமவெளிப் பகுதிகளில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், பெரும்பாலான மக்கள் ஊட்டி, கொடைகானல் போன்ற குளிர் நிறைந்த மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல துவங்கியுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், வார விடுமுறை … Read more

‘இந்த ஷோ-ல பல்டி அடிக்கிறத தவிர எல்லாம் பண்றோம்’: விஜய் டி.வி பிரியங்கா- டி.ஜே பிளாக் வீடியோ

‘இந்த ஷோ-ல பல்டி அடிக்கிறத தவிர எல்லாம் பண்றோம்’: விஜய் டி.வி பிரியங்கா- டி.ஜே பிளாக் வீடியோ Source link

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பு.. முழு கட்டண விபரம்.!

சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாய்வு பணியில் தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள் பொறித்த பானை, ஓடுகள், கல் மணிகள், வெள்ளி முத்திரை காசுகள், கங்கை நகரத்துடன் தொடர்புடைய கருப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் உருக்கு உரைகள், சுடுமண் முத்திரைகள், கண்ணாடி, சங்கு மணிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 100க்கும் … Read more

மனைவி பிரிந்து சென்றதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கொலை!!

மனைவியும், குழந்தைகளும் பிரிந்து சென்றதால் ஆத்திரம் அடைந்த கணவன், பக்கத்துவீட்டுக்காரர் தான் இதற்கு காரணம் என்று அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் சேத்தன் கலா என்ற நபர் மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். அவர்களது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனைவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவி, தனது 24 வயது மகன், இரண்டு மகள்களை கூட்டிக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சேத்தன் தனியாக … Read more

தஞ்சாவூரில் கஞ்சா வியாபாரியை வெட்டி கொலை செய்த மூன்று பேர் கைது..!

தஞ்சாவூரில் கஞ்சா வியாபாரியை போதையில் வெட்டி கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜாராம் மடத்தெருவில் வசித்து வரும் பிரதீப் என்பவரின் வீட்டிற்கு வந்த கஞ்சா போதையில் வந்த சிவக்குமார், விக்னேஷ், சூர்யா ஆகியோர் வந்து அவரிடம் கஞ்சா கேட்டதாக கூறப்படுகிறது. அவர், கஞ்சா இல்லை என்று கூறியதால், தகராறு செய்தவர்களை பிரதீப் தன் வீட்டிலிருந்த கொடுவாளை எடுத்து வந்து வெட்டியதையடுத்து, அவரிடமிருந்து கொடுவாளை பறித்த மூன்று பேரும் திருப்பி அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். … Read more

பிரதமர் மோடியின் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை போராட்டம் ஓயாது: நாராயணசாமி

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை போராட்டம் ஓயாது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் கண்டன பேரணி நடைபெற்றது. நெல்லித்தோப்பு அண்ணா நகர் பகுதியில் தொடங்கிய பேரணி தொகுதி முழுவதும் சென்று ராஜிவ்காந்தி சிலை சதுக்கத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் … Read more

க்ரூப் 4 முடிவுகள்: ஒரே மையத்தில் இருந்து 2000 பேர் தேர்வு: தேர்வர்கள் குழப்பம்..!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7301 பேரை தேர்வு செய்வதற்கான க்ரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவித்து, கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடத்தியது. இதற்கு 2 லட்சத்திற்கும் மேலானவர்கள் விண்ணப்பம் செய்து அவர்களில் 18.50 லட்சம் பேர் எழுதினார்கள். தேர்வர்கள் குழப்பம் தேர்வு நடந்து 7 மாதங்கள் … Read more

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி விழா: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பங்குனிப் பெருவிழா: தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான், தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.  அங்கு முருகப் பெருமான் முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் பங்குனி … Read more

மன்னார் வளைகுடாவில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 ஆலிவ் ஆமைகள் மீட்பு

மன்னார் வளைகுடா: மன்னார் வளைகுடாவில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 ஆலிவ் ஆமைகளை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். மீன்பிடி வலையில் இருந்து 7 ஆமைகளையும் மீட்டு கடலோர காவல்படையினர் மீண்டும் கடலில் சேர்த்தனர்.