நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை கற்பிக்க கூடாது: ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் எச்சரிக்கை

வேலூர்: மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை ஏப்ரல் 1ம்தேதிக்கு முன்னதாக கற்பிக்கக் கூடாது என்று ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்துள்ளது. சிபிஎஸ்இயின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளையும், பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம்தேதியும் முடிகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களுக்கு இப்போதே சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு கற்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு … Read more

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் : முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..!!

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் அதில் இடம் பெற்றிருக்கும். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் 2 மணி நேரம் இந்த பட்ஜெட் உரையை வாசிப்பார். அதன்பிறகு இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் … Read more

செல்லப்பிராணிகள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைப்பு.. 13 செல்லப்பிராணிகள் தீயில் எரிந்து பலி

கோவை வடவள்ளி பகுதியில் செல்லப்பிராணிகள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தில் 13 செல்லப்பிராணிகள் தீயில் எரிந்து பலியாகின. வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியில் நவீன் மற்றும் பாபு ஆகியோர் விற்பனைக்காக 13 செல்லப்பிராணிகளை தனி கூண்டுகள் அமைத்து வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலாகி கிடந்ததும், கூண்டில் இருந்த செல்லப்பிராணிகள் அனைத்தும் இறந்த நிலையிலும் இருப்பது கண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: வீட்டு உரிமையாளர்கள் 91 லட்சம் பேர் வாடகைதாரர் பிரிவில் இணைத்தது கண்டுபிடிப்பு

சென்னை: சொத்தின் மீது ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று கருதி, வீட்டு உரிமையாளர்கள் 91 லட்சம் பேர் மின் இணைப்புடன் வாடகைதாாரர்கள் பிரிவி தங்களது ஆதார் எண்ணை இணைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியைதமிழக மின் வாரியம் கடந்த ஆண்டுநவ.15-ம் தேதி தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. டிச. 31-ம் தேதிகடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான மின் நுகர்வோர் தங்களது … Read more

திருச்சி அருகே கோர விபத்து: ஆம்னி வேன் மீது லாரி மோதி சிறுமி உட்பட 6 பேர் பலி: குடந்தை கோயிலுக்கு சென்றபோது பரிதாபம்

முசிறி: திருச்சி அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதி குடந்தை கோயிலுக்கு சென்ற சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே  சிலுவம்பாளையம் கோனார் பட்டியை  சேர்ந்த பழனிச்சாமி மனைவி  ஆனந்தாயி (57), இவரது மகன் திருமுருகன் (29), அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மனைவி சகுந்தலா (28), இவரது மகள் தாவனா ஸ்ரீ (9), நாமக்கல் மாவட்டம் உப்புக்குளத்தை சேர்ந்தவர்கள் திருமூர்த்தி (43), அப்பு (எ) முருகேசன்(55), குமாரபாளையத்தை … Read more

பெரம்பூரில் பரபரப்பு.! தூங்கிய அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற தங்கை.!

சென்னை பெரம்பூரில் சொத்து தகராறில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணனை பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (63). இவருடைய மனைவி அமுலு. இவர்களுடைய வீட்டின் கீழ்தளத்தில் முனிரத்தினத்தின் தங்கை தனலட்சுமி வசித்து வருகிறார். இந்நிலையில் முனிரத்தினத்திற்கும், தனலட்சுமிக்கும் இடையே சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முனிரத்தினத்தின் மீது தங்கை தனலட்சுமி, … Read more

நிதானம் இழந்து, விரக்தியின் உச்சத்தில் பேட்டி அளித்துள்ளார் ஓபிஎஸ்..!!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நிதானம் இழந்து, விரக்தியின் உச்சத்தில் கட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். பிக்பாக்கெட் என்று ஓ. பன்னீர் செல்வம் பேசுவது அரசியல் நாகரீகமா? கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதித்துறையை பறித்துக் கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக் கூடாது என்று சொன்னவரும் ஓ.பன்னீர்செல்வம் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  Source link

அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உடல் சொந்த ஊரில் தகனம்

பெரியகுளம்: அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்த்தின் உடல் பெரியகுளம் அருகே சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம்-மல்லிகா தம்பதியின் ஒரே மகன் ஜெயந்த் (33). மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்த இவர், என்சிசியில் சிறந்த மாணவராகத் தேர்வானார். பட்டப்படிப்பு முடித்ததும் 2010-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து மேஜர் பதவியை அடைந்தார். இவருக்கும், … Read more

கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 20,000 பேர் கைது டிஜிபி தகவல்

தென்காசி: டிஜிபி சைலேந்திர பாபு நேற்று தென்காசியில் அளித்த பேட்டி: போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் திட்டம். தற்போது கஞ்சா வேட்டை 1, 2, 3, 4 என்ற பெயரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 750 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 80 சதவீதம் கஞ்சா நடமாட்டம் குறைந்துள்ளது. சில … Read more

அதிமுக பொதுச்செயலாளர் வேட்புமனு தாக்கல் நிறைவு! இபிஎஸ்-யை எதிர்த்து எத்தனை பேர் வேட்புமனு தாக்கல்?! மொத்தம் இவ்வளவு பேரா?! 

அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. நேற்று காலை தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிவுடன் நிறைவு பெற்றுள்ளது. … Read more