சமயநல்லூர் அருகே பரிதாபம்.! திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை பலி.!

மதுரை மாவட்டத்தில் திருமணமான ஒரு மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). இவருக்கும், திவ்யா என்று இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கார்த்திகேயன் ஆனையூரில் இருந்து நிலக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சென்றபோது, திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் … Read more

வாழப்பாடி அருகே அவசர அவசரமாக பேருந்தை முந்தியதால் ஏற்பட்ட விபரீதம்..!! 2 மாணவர்கள் பலி..

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் வசந்த பிரசாத் (22). இவரும், வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்த பூமலை என்பவரின் மகன் யுவராஜ் (22) என்பவரும் உடையாப்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மாலை, வாழப்பாடியில் இருந்து வைத்தியகவுண்டன்புதூரில் உள்ள யுவராஜின் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். இருசக்கர வாகனத்தை யுவராஜ் ஓட்டினார். வசந்த பிரசாத் பின்னால் … Read more

என்எல்சி நிறுவனம் இனியும் நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம் – சீமான்

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் இனியும் நிலத்தை கையகப்படுத்த விட மாட்டோம் என்றும் பாகுபாடு இன்றி உரிய இழப்பீடும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீட்டிற்கு ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணியை மீண்டும் துவங்கினால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிட்டார். Source link

சென்னை வெள்ள அபாய குறைப்புக்கான ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருப்புகழ் வழங்கினார்

சென்னை: சென்னை பெருநகரில் வெள்ளஅபாய குறைப்பு மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், குழுவின் தலைவர் வெ.திருப்புகழ் நேற்று வழங்கினார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக வெ. திருப்புகழ் நியமிக்கப்பட்டார். சென்னையில் மழைநீர் தேங்காத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் … Read more

ஹெச்.ராஜா கைது : சட்டம் ஒழுங்கு பிரச்சினை- காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

பாஜக சார்பில் திண்டிவனத்தில் இன்று (மார்ச் 14) நடைபெற இருந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். எனினும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காரைக்குடியிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கடலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே கடலூர் மாவட்ட போலீசாரும், பெரம்பலூர் மாவட்ட போலீசாரும் ஹெச்.ராஜாவின் காரை தடுத்து நிறுத்தினர். திண்டிவனத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அனுமதி வாங்கவில்லை எனவே அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் … Read more

பெருமாளேரி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: மனு நீதி முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.  இதுகுறித்து கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை: ‘அரசு சார்பில் நடத்தக் கூடிய மனுநீதிநாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மார்ச் 2023 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் நெ.51 பெருமாளேரி கிராமத்தில் வரும் 24ம் தேதி, காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்து … Read more

அழகான ஆண் குழந்தை இறந்தது… அதன்பிறகு வந்த சோதனை… அனிதா குப்புசாமி இருண்ட பக்கம்

அழகான ஆண் குழந்தை இறந்தது… அதன்பிறகு வந்த சோதனை… அனிதா குப்புசாமி இருண்ட பக்கம் Source link

முக்கிய செய்தி : இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000… யாருக்கெல்லாம் கிடைக்கும்…? யாருக்கு கிடைக்காது?

2023 – 2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யப்பட உள்ளது. அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் நாள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான பல்வேறு நிபந்தனைகளை, தமிழ்நாடு அரசு வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோலவே திட்டத்திற்கான பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி அடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் … Read more

வீடியோ காலில் ‘பாவம்’.. நேரில் வந்தால் ‘மன்னிப்பு’.. இளம் பாதிரியார் ‘ஓட்டம்’..! ஆதாரங்களுடன் பெண் பரபரப்பு புகார்..!

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்கு பாவமன்னிப்பு கொடுப்பதாக அத்துமீறிய இளம் பாதிரியாரை தட்டிக்கேட்ட சட்டகல்லூரி மாணவர் மீது பொய்யான புகார் அளித்து போலீசில் சிக்க வைத்திருப்பதாக மாணவனின் தாய் ஆதாரங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமா நகரை சேர்ந்த இளம் பாதிரியார் பெனடிக் ஆன்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த ஆண்டோ, சட்டக் கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜியோ தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக … Read more