கோக், பெப்சி குடித்தால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும்!?

கோக், பெப்சி குடித்தால் ஆண்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் என்று சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் மின்ஸு பல்கலைக்கழகத்தில், கார்பனேடட் குளிர்பானங்களால் கருத்தரித்தல் திறன் பாதிக்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஆண்களின் விதைப்பை வளர்ச்சி மேம்படுவதுடன், பொதுவான பாலியல் ஆரோக்கியமும் மேம்படுகிறது என்று தெரியவந்தது. இதற்கு முன்பு உலக அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், சோடா பானங்களை அருந்தினால் ஆண்களின் இனப்பெருக்க நலன் பாதிக்கப்படும் என்றும், விந்தணுக்களின் தரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. … Read more

அரசு விரைவு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.. அமைச்சர் சிவசங்கர்

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு அடுத்தடுத்த தொடர் பயணங்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுமென போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்துவதாகவும் மத்திய அரசு வழங்கும் 5 ஆயிரம் ரூபாயுடன், தமிழக அரசும் கூடுதலாக 5 ஆயிரம் … Read more

மதுரை மெட்ரோ ரயில் | விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்

சென்னை: மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மெட்ரோ ரயில் வெற்றிகர திட்டத்தைத் தொடர்ந்து மதுரை மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை … Read more

தொடங்கிவைத்த டாக்டர் இராமதாஸ்! #StopHindiImposition தெறிக்கும் டிவிட்டர் தளம்!

இந்தியாவில் உணவுப் பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (Food Safety and Standards Authority of India- FSSAI) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.  உன்னதமான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இப்போது இந்தியை திணிக்கும் நோக்கத்திற்காக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்களை உறையில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதற்காக உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.  இந்நிலையில், ஆவின் நிறுவனம் விற்பனை … Read more

வெளியானது பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர்!!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் எப்போதும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர். இந்நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை … Read more

விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கு.. கீழே விழுந்ததில் பல் உடைந்ததாகவும், காவல் அதிகாரி பிடுங்கவில்லை எனவும் பேட்டி..!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக கூறப்படும் நிலையில், தனது பல் காவல்துறையினரால் பிடுங்கப்படவில்லை எனவும் கீழே விழுந்ததில் பல் உடைந்துவிட்டதாகவும் சூர்யா என்ற இளைஞர் தெரிவித்துள்ளார். பல் பிடுங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் விசாரணை நடத்த சேரன்மகாதேவி சார் ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி முக்கிய சாட்சியான சூர்யா, இன்று சார் ஆட்சியர் முன்னிலையில் ஆஜராகி ஒரு மணி நேரம் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் … Read more

திருச்சியில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை: ஆய்வறிக்கைக்கு ஒப்புதல்

திருச்சி: திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கான விரிவான பொது போக்குவரத்து திட்டம் (சி.எம்.பி) குறித்த ஆய்வறிக்கை மாமன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. அப்போது, இத்திட்டம் தொடர்பாக தனியார் நிறுவன அலுவலர் அழகப்பன் விளக்கமளித்து கூறியதாவது: திருச்சி மாநகருக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவையான பொதுப் … Read more

பொதுபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு: ஜாக்கிகள் வரவழைக்கப்பட்டு வீட்டை நகர்த்திய உரிமையாளர்

விருதுநகர்: பொது பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக கூறி ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டை இடிக்காமல் 14 அடிக்கு நகர்த்தி வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் பனையூரை சேர்ந்தவர் லக்ஷ்மணன் இவரது மனைவி பஞ்சவர்ணம் 2001 முதல் 2006 வரை பிள்ளையார் நத்தம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்தார். அப்போது ஏற்பட்ட தேர்தல் பகை தான் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் … Read more