சென்னை வரும் மோடி! கருப்பு கொடி மட்டும் இல்லை! இதை செய்தாலும் தண்டனை!

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருவதையொட்டி, சென்னை காவல் எல்லையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களுக்கான முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு உந்துதலில், பிரதமர் மோடி ஏப்ரல் 8-9 தேதிகளுக்கு இடையே தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.  … Read more

எம்ஜிஆரின் சத்யா ஸ்டூடியோ நிலத்தை மீட்கும் விவகாரம்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சென்னை அடையாறில் நெப்டியூன் ஸ்டூடியோவாக இருந்து பின்னர் மறைந்த தமிழக முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் கரங்களுக்கு வந்த பின்னர் பிரபலமாக திகழ்ந்தது சத்யா ஸ்டுடியோ. அந்த நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு வரை தமிழக அரசுக்கு ரூ.31,09,79,000 வாடகை பாக்கியை செலுத்த‌தாதால் நிலத்தை திருப்பி எடுக்க 2008ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சத்யம் ஸ்டுடியோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் “பல வருடங்களாக … Read more

அதிர்ச்சி! நீட் பயிற்சி மாணவி தற்கொலை!!

நீட் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் உத்திராபதி என்பவரின் மகள் நிஷா தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இவர் கடந்தாண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். இந்நிலையில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்திய மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. … Read more

399 மதிப்பெண் எடுத்த மாணவியை மருத்துவ படிப்பில் சேர நிர்பந்தித்த பெற்றோர்..! நீட் பயிற்சி விரக்தியால் ரெயிலில் பாய்ந்தார்

நெய்வேலி ஆகாஷ் நீட் பயிற்சி மையத்தில் ஓராண்டாக படித்தும் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத விரக்தியில், பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற இயலாத ஏமாற்றத்தால் மாணவி ஒருவர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம் அரங்கேறி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 30ல் வசித்து வருபவர் உத்திராபதி. என்எல்சி ஒப்பந்த தொழிலாளியான உத்ராபதி, தனது மகள் நிஷாவை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். கடந்த ஆண்டு நெய்வேலியில் உள்ள பள்ளியில் … Read more

தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது: 9.76 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழக பள்ளிக்கல்வியில் இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (ஏப்.6) தொடங்கி ஏப்.20 வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வை … Read more

தலைமைச் செயலாளர் பதவி யாருக்கு? ஸ்டாலின் எடுக்கும் முடிவு!

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக பதவி வகிக்கும் வெ.இறையன்புவின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த தலைமைச் செயலாளார் யார் என்ற கேள்விக்கு தொடர்ந்து சில பெயர்கள் அடிபட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு இயந்திரம் எவ்வாறு இயங்க வேண்டும், எப்படி இயக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தலைமைச் செயலாளர் கையில் தான் உள்ளது. அனைத்து துறைச் செயலாளர்களுக்கும் தலைவர் எனும் போது தமிழ்நாடு அரசின் முகத்தை வடிவமைப்பதில் தலைமைச் செயலாளர் பதவிக்கு முக்கிய பங்கு … Read more

தஞ்சாவூர் : சிறுமியை கடத்தி திருமணம்… வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை…!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மருதாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (25). இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த திருவிழாவை பார்ப்பதற்காக நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு, சிறுமியை கடத்திச் சென்று கோவிலில் திருமணம் செய்தார். இதைத்தொடர்ந்து மருதாநல்லூரில் சிறுமியுடன் … Read more

சரிந்து விழுந்த மேடை… சட்டென குதித்த அன்புமணி ராமதாஸ்!!

பாமக கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நின்று கொண்டிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பாமக கட்சிக் கொடி ஏற்றும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அழைத்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அன்புமணிக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி கொடியினை ஏற்றிவிட்டு அன்புமணி மேடைக்கு வந்தார். அந்த மேடை மிகவும் சிறியதாக அமைக்கப்பட்டிருந்தது. அன்புமணி அதில் ஏறியதும் அவரோடு அதிக … Read more