திருவாரூர் : ரூ.50 ஆயிரம் பணத்துடன் புதிய லேப்டாப் – நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு!

திருவாரூர் : ஆன்லைன் மூலம் வாங்கிய லேப்டாப் பழுதானதால், அதனை மாற்றி தரவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவும், பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்திற்கு, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கடந்த ஆண்டு பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்தில் 32999 ரூபாய்க்கு லேப்டாப் ஒன்றை வாங்கி உள்ளார். ஆனால் இவர் வாங்கிய அன்றே அந்த லேப்டாப் செயல்படாமல் இருந்துள்ளது. … Read more

திருவண்ணாமலை | கார்த்திகை தீபத் திருவிழா அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை நடவடிக்கை: டிஜிபி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் காவல்துறை செய்து வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு, வியாழன் அன்று மாலை ஆய்வு செய்தார். விஐபிக்கள் மற்றும் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு … Read more

அறுவடைக்கு தயாரான நெற்பயிரை பெட்ரோல் ஊற்றி எரித்த விவசாயி: இன்சூரன்ஸ் வழங்காமல் அலைக்கழித்ததால் ஆத்திரம்

பொன்னை: தொடர் மழையாலும் கடும் பனிப்பொழிவாலும் விளைச்சல் பாதித்த நெற்பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்காமல் விவசாயியை அலைக்கழித்ததால் ஆத்திரமடைந்த அவர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை கொண்டாரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் (35). இவருக்கு அதே கிராமத்தில் உள்ள நிலத்தில் கடந்த  ஆண்டு 5 ஏக்கர் நெற்பயிர் வைத்தார். கடந்த வருடமும் மழையால் பாதிக்கப்பட்டபோது  பயிர் காப்பீடு செய்தும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை … Read more

மசாஜ், உணவுகள் மூலமாக மார்பக அளவை மாற்ற முடியுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

மசாஜ், உணவுகள் மூலமாக மார்பக அளவை மாற்ற முடியுமா? நிபுணர்கள் கூறுவது என்ன? Source link

தலைக்கேறிய மதுபோதை அரசு பள்ளியை சேதப்படுத்திய இளைஞர்கள்.!

விழுப்புரம் மாவட்டம் வீரங்கிபுரம் கிராமத்தில் மதுபோதையில் இளைஞர்கள் அரசு பள்ளியை சேதப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே வீரங்கிபுரம் என்ற கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த நிலையில் கடந்து சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் மது போதையில் பள்ளி கட்டிடம் மற்றும் கதவுகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தி உள்ளனர். மேலும், வகுப்பறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மீதும் கருங்கற்களை வீசி … Read more

அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிச.15 இல் நூறு இடங்களில் சிறப்பு பொதுக் கூட்டங்கள்: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் 

சென்னை: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, டிசம்பர் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்த சென்னையில் நடைபெறும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக புதிய நிர்வாகிகளின் நியமனத்திற்குப் பின் முதல் முறையாக அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மொத்தமுள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 70 பேர் … Read more

சேத்துப்பட்டு ஏரிக்கு அடியில் ’டபுள் டமாக்கா’ சுரங்கம்… தடபுடலாக ரெடியாகும் CMRL!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தில் மூன்று வழித்தடங்களில் 118.9 கிலோமீட்டர் நீளத்திற்கு பாதை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 2026ஆம் ஆண்டு இந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3வது வழித்தடம் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோமீட்டர் தூரம் அமைகிறது. ஓட்டுநர் இல்லாத ரயில் இந்த வழித்தடத்தில் அடையாறு மற்றும் சேத்துப்பட்டு ஏரி ஆகியவற்றின் கீழ் இரட்டை … Read more

சேலம், ஏற்காட்டில் கடும் குளிர்: பொதுமக்கள் அவதி

சேலம்: சேலம், ஏற்காட்டில் இன்று காலை கடும் பனிமூட்டத்துடன் குளிர் நிலவியது. இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதியடைந்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகாலை வேளையில் கடும் குளிர் நிலவுகிறது. சேலத்தில் இன்று காலை, வழக்கத்தை விட மிக அதிகளவு பனிமூட்டம் காணப்பட்டது. சேலம் பை-பாஸ் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது. இதனால், … Read more

‘ராகிங் கொடுமை, +2வில் 899 மதிப்பெண் தான்.. ஆனாலும் இன்று ஐஏஎஸ்’ – திருச்சி ஆட்சியர்

கல்லூரிப் படிப்பில் ராகிங் கொடுமைக்கு ஆளானேன் என்றும், 899 மார்க் பெற்றும் இன்று ஐ.ஏ.எஸ். ஆக இருக்கிறேன் எனவும், கடவுளாக பார்க்கும் துறை மருத்துவத் துறை என மருத்துவ மாணவர்களிடம் மனம் திறந்து திருச்சி ஆட்சியர் பேசியுள்ளார். திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், புதிய மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி … Read more