மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்க்கான நீர் திறப்பு 15,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஓரிரு நாட்களை தவிர தற்போது வரை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் முழுவதும் டெல்டாவிற்கு வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், அணைக்கு நேற்றுவரை விநாடிக்கு 10,400 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதில் 400 … Read more

துண்டு போட்ட தங்க தமிழ்செல்வன்; அப்போ ஒரு சீட் கன்ஃபார்ம் போங்க!

இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நியமிக்கப்பட்டு உள்ளார். துணை செயலாளர்களாக எஸ்.ஜோயல், ரகுபதி, இளையராஜா, அப்துல்மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மாநில மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி மாநில செயலாளராக ஹெலன் டேவிட்சன், இணை செயலாளர் குமரி விஜயகுமார், துணை செயலாளர்கள் … Read more

திட்டக்குடி அருகே வேகமாக நிரம்பும் வெலிங்டன் நீர்த்தேக்கம்: தண்ணீரை திறந்துவிட கோரிக்கை

திட்டக்குடி: திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் வேகமாக நிரம்புவதால் தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, ராமநத்தம், ஆவட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்செருவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்தேக்கத்தின் முழு கொள்ளளவான 29.72 அடியில், தற்போது பெய்த மழையினாலும், அணைக்கட்டில் இருந்து வரத்து வாய்க்கால் மூலம் … Read more

எம்எல்ஏ ரூபி மனோகரன் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிறுத்தி வைப்பு – தினேஷ் குண்டுராவ் அறிக்கை

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் Source link

#சென்னை | தமிழக அரசின் குளிர்சாதன பேருந்தில் புகை – அலறியடித்து தப்பிய பயணிகள்!

தாம்பரம் அருகே பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்தில் திடீரென புகை ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்து கொண்டு தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்று மாலை 6.45 மணிக்கு, தாம்பரம் பகுதியில் வந்து கொண்டிருந்த தமிழக அரசின் குளிர்சாதன பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்துள்ளது. புகை வருவதை கண்ட பயணிகள் அலறி கூச்சல் இடவே, உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மேலும், பேருந்தில் ஏற்பட்ட புகையை தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தாம்பரம் பகுதியில் … Read more

மதுரை அருகே கி.பி 16-ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை: மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே மோதகம் பகுதியில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான நடுகல் கண்டறியப்பட்டது. மோதகம் கரையாம்பட்டி பூசாரி முத்துசாமி, தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக அளித்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமணமூர்த்தி, ஆய்வாளர்கள் அனந்தகுமரன், தமிழ் செல்வம் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். இதில் கிபி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த … Read more

குட்டி சைக்கிளில் சிறுவன்.. தட்டி தூக்கிய எம்எல்ஏ வாகனம்!

தென்காசி சட்ட மன்ற தொகுதி உறுப்பினராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி நாடார் இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான டிராக்டர் அதேப் பகுதி கீழ சுரண்டை அருகே உள்ள குளங்களில் இருந்து மணல் எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தது. கீழ சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவில் வந்தபோது, தனது குட்டி காருடன் விளையாடிக் கொண்டு இருந்த 4 வயது சிறுவன் ராஜமுகன் திடீரென டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடி.. துடித்து உயிரிழந்தான். இதை பார்த்ததும் குழந்தையின் … Read more

மஞ்சூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை பலி

மஞ்சூர்: மஞ்சூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலியானது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல்குந்தா தாய்சோலை இடையே உள்ளது புலிசோலை வனப்பகுதி. இப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டுமாடு, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக சிறுத்தைகள் அதிகளவில் உள்ளதுடன் அவ்வப்போது இரை தேடி அவரை அருகில் உள்ள கிராமங்களுக்குள் ஊடுருவுகின்றன. இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 7 மணியளவில் புலிசோலை அருகே சாலையில் சிறுத்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. … Read more

"இடைதரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" – டின்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சமூக வலைதளங்களில் பரவும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தேர்வு முடிவுகளை நம்ப வேண்டாம். அதை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  கடந்த 2- 7- 2022 அன்று நடத்தப்பட்ட ஒருகிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இவ்வாறு பரப்பப்படும் போலியான் தகவல்களை நம்பி இடைதரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள … Read more