ஹிஜாப் விவகாரம் – ஈரானை நம்ப மறுக்கும் உலக நாடுகள்

ஈரானில் ஹிஜாப் ‘அறநெறி காவலர்’ பிரிவு கலைக்கப்பட்டதை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் நம்ப மறுத்துள்ளன. ஈரானில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி காவலர்’ … Read more

தமிழகத்தில் 65.80 லட்சம் மின் இணைப்புகள் இதுவரை ஆதாருடன் இணைப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.6) வரை 65.80 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோரின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக, டிச.31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கவுன்ட்டர்களில் இதற்கான பணி கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும், தங்களது பகுதிகளில் உள்ள மின் … Read more

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற கட்டுமான நிதி… தமிழக அரசு மீது நீதிமன்றம் நம்பிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் செங்கல்பட்டில் செயல்பட்டு வருவதாகவும், அங்கு ஓய்வு அறைகள் நீதிமன்ற அறைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட முடிவு செய்தும், இதுவரை அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படாததால், நிதி … Read more

சுதந்திரம் பெற்றது முதல் பேருந்தே செல்லாத ஊருக்கு அரசு பேருந்து இயக்கம்! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

சுதந்திரம் பெற்ற நாள் முதல் பேருந்தே செல்லாத ஊருக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து, தங்கள் ஊரின் வழியாக வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கோட்டையேந்தல் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில் இந்த கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இருந்தது இல்லை. இவர்கள் சாயல்குடி அல்லது ராமநாதபுரம் செல்ல … Read more

திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா: ராஜபாளையம் மாணவர்கள் அசத்தல்

ராஜபாளையம்: திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா செய்து ராஜபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பதஞ்சலி யோகா மையம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு உலக அமைதி வேண்டி உடலில் தீபங்களை ஏற்றி மாணவர்கள் யோகாசனம் செய்தனர். இதில், ராஜபாளையம் பதஞ்சலி யோகா மையத்தை சேர்ந்த மாணவர்கள் நரேஷ், ராகவ், இசக்கிமுத்துபாண்டி, சஞ்சனா ஆகி நான்கு பேரும் தீபத் திருநாளாம் கார்த்திகை திருநாளை முன்னிட்டு 50 தீபங்களை உடலில் ஏந்தியவாறு பத்ம விரிஜ்சியாசனம், … Read more

மிரட்டும் மாண்டஸ் புயல்; தமிழகத்திற்கு ரெட் அலர்ட்; எங்கே கரையைக் கடக்கும்?

மிரட்டும் மாண்டஸ் புயல்; தமிழகத்திற்கு ரெட் அலர்ட்; எங்கே கரையைக் கடக்கும்? Source link

நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பெண்.! உடலை பீரோவில் வைத்துவிட்டு தப்பிச் சென்ற கொடூரம்.!

நகைக்காக மூதாட்டியை கொலை செய்து உடலை பீரோவில் வைத்துவிட்டு பெண் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள நெரலூரு கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் ரமேஷ். கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவரது தாய் பார்வதம்மா (வயது80) குடும்பத்தினரை பார்ப்பதற்காக சிரா என்ற ஊரில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே குடியிருப்பில் 3-வது மாடியில் தனியாக வசித்து வந்த பாவல் கான் என்ற பெண், இவர்களது … Read more

வெளிநாட்டு பெண்ணை வன்கொடுமை செய்து கொலை

கேரளாவில் வெளிநாட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவனந்தபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் லிதுவேனியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி சிகிச்சை மையத்தில் இருந்து அப்பெண் வெளியே சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் … Read more

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மருத்துவ பதிவு சட்டத்தையும், விதிகளையும் மூன்று மாதங்களில் முழுமையாக திருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை மருத்துவ கவுன்சில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரியும் … Read more

பற்ற வைத்த திருச்சி சூர்யா; பாஜகவில் பரபரப்பு; பாகம்-2

திமுக எம்.பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவா. தமிழக பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தார். பாஜவுக்கு சென்ற பிறகு திமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் குறித்து வேற லெவலுக்கு விமர்சித்து பேசி வந்தார். இந்நிலையில், தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரண் என்பவரை ஆபாசமாக பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒரு ஆடியோ வெளியாகி பாஜகவின் ஒட்டுமொத்த மானத்தையும் கப்பலில் ஏற்றியது. இந்நிலையில் திடீரென … Read more