வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றில் மணலை மூட்டை கட்டி நூதன முறையில் கடத்தல்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வேலூர்: வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்று மணலை மூட்டை மூட்டையாக கட்டி பைக்குகளில் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் பாலாற்றிலிருந்து இரவு, பகல் நேரங்களில் மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வந்தது. அதிகாரிகளின் கடும் நடவடிக்கை காரணமாக மணல் கடத்தல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் வாகனங்களில் மணல் கடத்தினால் அதிகாரிகளிடம் சிக்கி விடுவோம் எனக்கருதி நூதன முறையில் மணல் கடத்தல் சமீப காலமாக நடக்கிறது. அதாவது … Read more