டேன் டீ தேயிலை தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதை வாபஸ் பெறாவிட்டால் தொடர் போராட்டம்: எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

கோவை: டேன் டீ தேயிலை தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதை அரசு வாபஸ் பெறும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை வால்பாறை அருகே சின்கோனா பகுதியில் உள்ள டேன் டீ அரசு தேயிலை தோட்டம், நீலகிரி கூடலூர், நடுவட்டம், குன்னூர் டேன் டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. … Read more

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடக்கம்

முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது. 5 வனசாரகங்களில் 6 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் ஒரு குழுவுக்கு 3 பேர் வீதம் 50 குழுக்கள் ஈடுபடவுள்ளன.

ஆணவக் கொலை செய்து விடுவார்கள்: காதல் மனைவியை மீட்டுத் தாருங்கள் – கணவன் புகார்

ஈரோட்டில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை கொலை செய்துவிடுவதாக பெண் வீட்டார் மிரட்டுவதாக காதல் கணவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ஹரிஹரன் என்பவருக்கும் ஈரோட்டை சேர்ந்த சுகந்திக்கும் பணியிடத்தில் காதல் ஏற்பட்டுள்ளது. மாற்று ஜாதியைச் சேர்ந்த இருவரும் கடந்த ஜூலை மாதம் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டு ஓசூர் அருகே வசித்து வந்தனர். இந்நிலையில் சுகந்தி வீட்டார் இருவரையும் சமாதானப்படுத்தி சுகந்தியை அழைத்துச் சென்றதாகவும் ஆனால், தற்போது … Read more

Tamil news today live: கால்பந்தாட்ட வீராங்கனை உயிரிழப்பு: செல்போன் சிக்னல்களை வைத்து மருத்துவர்களை பிடிக்க முடிவு

Tamil news today live: கால்பந்தாட்ட வீராங்கனை உயிரிழப்பு: செல்போன் சிக்னல்களை வைத்து மருத்துவர்களை பிடிக்க முடிவு Source link

இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 9-ம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஓரிரு நாள்களில் வலுவிழந்தது.  இதன் காரணமாக சென்னை … Read more

கணவனை கொல்ல மனைவி ஸ்கெட்ச் – காட்டிக் கொடுத்த வாட்ஸ் அப்!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் முருகன் (32) ஒரு கட்டுமான தொழிலாளி. இவருக்கும் சுஜா(24) என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன் திடீரென வீட்டில் நினைவிழந்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சையில் நலம் பெற்று வீடு திரும்பினார். மீண்டும் சில நாள்கள் கழித்து வடிவேல் முருகனுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மனைவி சுஜாவின் செயல்பாடுகள் … Read more

ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பள்ளி வேன் 30 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வேன் 30 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. கோம்பு பள்ளம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை இறக்கிவிட்டு, வேன் பள்ளிக்கு திரும்பிக்கொண்டிருந்தது. இக்கரை நெகமம் புதூர் பகுதியில் சென்றபோது பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த வேன், பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். வேனில் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால் … Read more

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை நிறுவ ரூ.2.50 கோடி நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ ரூ.2.50 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கத்திடம் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்மொழியின் சிறப்பைப் பரப்பிடும் நோக்கில் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக, வரும் கோரிக்கைக்கு ஏற்ப நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த … Read more

நீலகிரி: நகை கடைகளில் மோசடி செய்து கடை நடத்திவந்த மூவரிடம் போலீசார் விசாரணை

கோவை நகை கடைகளில் நகைகளை வாங்கி ஏமாற்றிவிட்டு உதகையில் நகை கடை நடத்தி வந்த மூவரிடம் கோவை மாநகர காவல் துறையின் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயமுத்தூர் ராஜா தெருவில் உள்ள ஸ்ரீ சபரி நகைக்கடை உரிமையாளர் சபரிநாதனை என்பரை 2017 டிசம்பர் மாதம் அணுகிய உதகை லட்சுமி ஜூவல்லரி உரிமையாளர் முகேஷ்குமார் மற்றும் அவரது மூத்த சகோதரர் மகேஷ்குமார் மற்றும் அவர்களது தந்தை சுபாஷ் ஆகியோர் திருமண ஆர்டர் எடுத்துள்ளதாகவும், தங்கம் வேண்டும் … Read more