அக்கா தம்பியாக மாறிய சூர்யா – டெய்சி… அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா..!

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இவர் உள்ளார். பாஜவுக்கு சென்ற பிறகு திமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசி வரும் அவர், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியுடன் சமீபத்தில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில், டெய்சிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததுடன், காது கூசும் வகையில் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து மிகவும் … Read more

நான் அவருக்கு அக்கா; சூர்யா எனக்கு தம்பி – பலே விளக்கம் கொடுத்த சூர்யா, டெய்சி

பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசினார். மேலும் அந்த ஆடியோவில் நீ அமித்ஷாட்ட போ, மோடிட்ட வேணாலும் போ என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட … Read more

குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 2ம் நாளாக போராட்டம்: அலுவலகங்கள் மூடல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு விடுப்பு எடுத்து இன்று இரண்டாம் நாளாக போராட்டம் நடத்தியதால் அலுவலகங்கள் மூடப்பட்டன. வளர்ச்சி துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை தின, இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் ஆப் காணொலி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்புநிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் … Read more

”சூர்யா சிவா எனக்கு தம்பி மாதிரி; நாங்கள் பேசி தீர்த்துக்கொண்டோம்” – டெய்சி பேட்டி

பாரதிய ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா இருவரும் செல்போனில் பேசிக்கொண்டபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பா.ஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் பல்லடம் … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு: பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கு: பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு Source link

கள்ளக்குறிச்சி | தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து – 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம்!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் அருகே இன்று மாலை தனியார் பள்ளி வாகனம் ஒன்று சாலையின் நடுவேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மாவட்ட எஸ்.பி. ஆகியோர் நேரில் வந்து ஆய்வு … Read more

ஒரு வயது குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை..? மருத்துவர்கள் சொல்வதென்ன

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (23). இவரது மனைவி கார்த்திகா. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நாக்கு வளர்ச்சி பிரச்சனை இருந்ததாக மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு வருடம் கழித்து மறு பரிசோதனைக்காக அவர்கள் கடந்த 21-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு … Read more

ரூ.70 கோடி நிறுத்திவைப்பு: மழைநீர் தேக்கத்தால் ஒப்பந்ததாரர்களுக்கு ‘செக்’ வைக்கும் சென்னை மாநகராட்சி

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.70 கோடியை சென்னை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது. சென்னையில் 2021-ம் ஆண்டில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம்போல் நீர் தேங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவற்றை தவிர்க்க, முன்னுரிமை அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 … Read more

அண்ணாமலைக்கு முடிவு… ரீ என்ட்ரிக்கு காயத்ரி.. காத்திருக்கும் ரகுராம்கள்..?

கட்சியில் இருந்து ஆறு மாதத்துக்கு நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்தும், சாடியும் ட்வீட் போட்டு வருகிறார். அது அவரது எதிர்கால அரசியலை கேள்வி குறியாக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது. கட்சியில் உள்ளவர்களை குறித்து விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் காயத்ரி ரகுராம் தொடர்ந்து மனக்குமுறல்களை கொட்டி வருகிறார். அது, அவருக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லாததன் வெளிப்பாடாக இருக்கலாம் என்றும் விஷயத்தை வைத்து அண்ணாமலையை டார்கெட் … Read more

அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் வெல்டிங் செக்க்ஷனில் தீ விபத்து: இருவர் காயம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் வெல்டிங் செக்க்ஷனில் ஏற்பட்ட தீ விபத்தில்  இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டு முறை நடந்த சம்பவங்களால், தொழிலாளர்களிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது. குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடி பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 19 ஆம் தேதி  அதிகாலையில் தொழிற்சாலையில் உள்ள சிடி செக்சனில் பலத்த … Read more